ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)#காமராசரைப் பார்க்க.... "சோ" அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது #காமராசர் சோ-வைப் பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் நான் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக் கிறேன், #ஒருநாளாவது உன்னைச் சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா என்று கேட்டுள்ளார். #அதற்கு சோ பரவாயில்லைங்க ஐயா நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி உள்ளார். ஆனால் காமராசர் விடவில்லை. இல்லை இல்லை சொல்லு ஒருநாளாவது சொன்னேனா சொல்லு என்று அதட்டலாகக் கேட்க, இல்லைங்க...சொல்லலை என்று கூறியுள்ளார். அதற்கு #காமராசர் சொன்னாராம்... ஏன் சொல்லலை தெரியுமா? நான் சாப்பிடுற இந்தச்சோறே தமிழக மக்கள் எனக்குப்போடும் பிச்சைச்சோறப்பா... இதில் நான் என்னத்த உனக்கு கொடுக்க...என்றுதான் சொல்லாமலிருந்தேன். நீ தப்பா #நினைச்சுக்காதே என்றாராம். இதைக்கேட்ட சோ அவர்கள் தன்னையறியாமல் அழுதுவிட்டாராம். எப்படிப் பட்ட #தலைவர் என்று எண்ணிப்பாருங்கள். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஒரு மாமனிதர் கிடைப்பாரா? படித்ததில் பிடித்தது. #கர்ம வீரர் காமராஜ்
கர்ம வீரர் காமராஜ் - ShareChat