ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)திமுக - அமெரிக்க கூட்டு சதி காமராசரின் ஆட்சி கவிழ்ப்புக்கு காரணம் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. இது அனுமானம் அல்ல. ஆழ்நிலை ஆதாரம் (circumstantial evidence)இதை உறுதி செய்கிறது. "நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், இந்திய சுதந்திர போராளிகளுக்கு ஒத்துழையாமை செய்து, பிரிட்டிஷ் சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி அந்த சர்க்காருக்கு அனுகூலமான நிலையை உண்டாக்க உதவி செய்ததும், பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப் படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன் பட்டு விட்டது." 1944 ல் சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் அண்ணாதுரை அவர்கள் பேசிய இந்த பேச்சு, நீதி கட்சியில் இருந்த காலம் முதல் கிருத்துவ கைக் கூலியாக திராவிடர் இருந்த சம்பவத்தை உறுதி செய்வதாக உள்ளது. இதை அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த TN சேசன் அவர்கள் பின்னாளில் அவர் எழுதிய நூலில் குறிப்பிட்டு உள்ளார். காமராசர் வீழ்ந்து விடவில்லை.. இந்திய நாட்டில் அமெரிக்க கைக் கூலிகள், உள் நாட்டு கூலிப் படைகளை வைத்தே சதி திட்டம் தீட்டி, சாதித்து காட்டினார்கள். காமராசர் வீழ்த்தப்பட்டார். கூட்டு சதியின் பின்னணி : 1967 க்கு முந்தைய காமராசர் ஆட்சி காலத்தில், தொழில் துறை மந்திரியாக இருந்த வெங்கட்ராமனை சோசலிச நாடான ருசியா அனுப்பி, அங்கு உள்ள தொழில் சாலைகளை பார்வை இட்டு, அதன் அடிப்படையில் மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள் (INDUSTRIAL ESTATE) அமைக்கப் பட்டது. இலவச கல்வி, தொழில் கல்வி இவற்றுக்கு முதல் இடம் கொடுக்கப் பட்டது. 1967. அமெரிக்க, ருசியா இடையேயான பனிப்போர் காலம். தமிழகத்தில் தேர்தல் நேரம். காமராசர் சோசலிஸ்ட் ருசியா மீது நட்பு பாராட்டி இருப்பதை விரும்பாத அமெரிக்கா, அவரை அரசியல் அதிகாரத்தில் இருந்து ஒழித்துக் கட்ட இது தான் சரியான நேரம் என்று கணித்து, அதற்கான ஒரு வியூகம் வகுத்து செயல்படுகிறது. ஏற்கெனவே, காமராஜர் பற்றிய உளவு தகவல்களை, அவரது பிறந்த ஊரான விருதுநகரில் தங்கி இருந்த உளவாளி அமெரிக்காவிற்கு கொடுத்து கொண்டே இருக்கிறான். இப்போது தேர்தல் நேரத்தில், விருதுநகரில் இருக்கும் உளவாளிக்கு, காமராஜரை என்ன விலை கொடுத்தாவது தோற்கடிக்க வேண்டும் என்றும் கட்டளை வருகிறது. அவன் தனித்து நின்று இந்த வேலையை செய்ய முடியாது. அதற்கு உள்நாட்டு தொடர்பு ஒன்று தேவை. அதற்கு அவன் கண்டு எடுத்த உள்நாட்டு ஏஜெண்டு திமுக. இன்றைக்கு மோடி அரசை வீழ்த்த, உள் நாட்டு ஏஜண்டாக ராகுல் காந்தியை தேர்ந்து எடுத்து, அமெரிக்க பண‌ முதலைகள் செய்யும் சதி திட்டங்கள் போன்ற ஒரு சதி திட்டம் அது. உள் நாட்டு ஏஜன்ட்கள் அண்ணா துரையையும் (திமுக founder), கருணாநிதியும், தாய் நாடான பிரிட்டனில் இருந்து இந்தியா வந்து, தமிழ்நாட்டில் மதம் பரப்பும் செயல்படுகளில் மும்முரமாக இருந்த CSI தென்னிந்திய திருச்சபையையும் (வெளிநாட்டு ஏஜெண்டு) கொண்டிருந்த நட்பை மேலும் பலப் படுத்துகிறான் அமெரிக்க உளவாளி. இந்த உள் நாட்டு, வெளி நாட்டு ஏஜெண்டுகள் தேர்தல் களத்தில் இறங்குகிறார்கள். தென் இந்திய கிருத்துவ திரு சபைக்கு காமராசர் மீது ஏன் வெறுப்பு வந்தது? முதலில் காமராசர் ஒரு இந்து என்று நம்பினார்கள். இரண்டாவதாக, அவர்கள் பாரம்பரிய திண்ணை பள்ளிகளை அழித்து விட்டு, ஆங்கில கல்வியை புகுத்தி (macauley கல்வி), சர்ச்கள் நடத்தும் கல்விக் கூடங்கள் மூலம், பால் பவுடர் கொடுத்து செய்து வந்த மத மாற்றத்தை, ஊர்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கட்டி இலவச கல்வி கொடுத்து, மதிய உணவு கொடுத்து கெடுத்திட்ட காமராஜரை தோற்கடிக்க வேண்டும் என்று கருதினார்கள். தேர்தல் செலவினம் செய்யும் அளவுக்கு திமுக அன்று பண பலம் பெற்று இருக்கவில்லை. அதன் தலைவர்கள் அன்றாட சாப்பாட்டுக்கு நாடக கம்பெனிகளைத்தான் நம்பி இருந்தனர். தேர்தலுக்கு செலவாகும் கோடிகணக்கான பணம் செலவழிக்க அந்த அன்னிய சதி கும்பல் உடன்பட்டு இருந்ததாக பேசப்‌ பட்டது. மேலும், இன்றைக்கு நடப்பது போல், அன்றைக்கும், கிறிஸ்துவ ஓட்டுக்களை திருசபைகள் மூலம் திமுக விற்கு திசை திருப்பவும் சம்மதிக்கிறது தென் இந்திய திருச்சபை. இன்று வரை அந்த கூட்டு தொடர்கிறது. தி.மு.க ஆட்சி நாங்கள் போட்ட பிச்சை என்று கிருத்துவ பாதிரி ஜார்ஜ் பொன்னையா பேசும் அளவுக்கு, இது உங்கள் ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிருத்துவ மேடையில் பேசும் அளவுக்கு, அது வளர்ந்து உள்ளது. அதன் அடிப்படையில் பல பொய் மூட்டைகள் திமுக வால் காமராசருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப் படுகிறது. யார் அந்த அமெரிக்க உளவாளி? நாடார்கள் வரலாறு புத்தகம் எழுதிய Prof. Emeritus Robert Hardgrave தான் அந்த அமெரிக்க உளவாளி. நாடார்கள் வரலாறு எழுதுகிறேன் என்ற பெயரில் இந்தியாவின் கல்விக் கண் திறந்த இமயத்தையே சாய்த்த கொடுங்கோலன் அமரிக்க உளவாளி ராபர்ட் ஹார்டு கிரீவ் தான். அப்போது திமுக திரை படங்கள் மூலம்தான் அரசியல் கருத்துக்களை பரப்பியது. இந்த படங்களுக்கு பண உதவி செய்தது யார் தெரியுமா? அமெரிக்க உளவாளி ராபர்ட் ஹர்டு கிரீவ்தான் என்று கருதும் அளவுக்கு சூழ்நிலை ஆதாரம் இருந்தது. சினிமா பட வேலை என்ற பெயரில் அடிக்கடி அமெரிக்க உளவாளி ராபர்ட் ஹார்டு கிரீவ் சந்தித்த முக்கிய திமுக நபர்கள் கருணாநிதியும், அண்ணாதுரையும்தான். அமெரிக்கா திராவிட கூட்டு சதி கும்பல். காமராசர் வீட்டுக்கு தீ கூட வைத்தார்கள். பசு வதை சட்ட போராட்டம் டெல்லியில் நடந்த போது, அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி இ‌ந்த கும்பல் காமராசர் வீட்டுக்கு தீ வைத்தார்கள். அந்த பழியை இன்று திமுக வின் octopus பிடியில் சிக்கி உள்ள print மற்றும் டிவி ஊடகங்கள் செய்வது போல் ஊடக உதவியுடன் RSS மீது போடும் முயற்சியும் அன்று நடந்தது. இது குறித்து காமராஜர் பேசியதாக நவசக்தி துணுக்கில் வெளி வந்த இந்த வரிகளை தெளிவாக கவனியுங்கள்👇 "குறிப்பாக அவர்களுக்கு, பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமாராஜ் தான் சோஷியலிஸ சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன்தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைக்கிறார்கள். (காமராசரின் அப்போதயருசிய பயணம் கவனத்தில் கொள்ளவும்). என் வீட்டுக்கு தீ வைக்கின்றார்கள். ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன் " பின்னணி என்ன? சோசியலிச நாடான ருசிய நாட்டுடன் காமராசர் நட்பு பாராட்டி இருந்ததை பிடிக்காத அந்த அமெரிக்கா - பிரிட்டன் - திராவிடன் கூட்டணி தான் இந்த சதி வேலையில் ஈடுபட்டது என்பது வெட்ட வெளிச்சம். சோசலிஸ நாடான ரஷியாவுடன் காமராசர் நட்பு கொண்டு, அந்த நாட்டுக்கு சென்று வந்தபின்னர்தான் இந்த சதி நடந்தது என்பது கூடுதல் ஆதாரம். அதுமட்டும் அல்ல, காமராசருக்கு அமெரிக்க நாட்டுக்கு வருமாறு அந்த நாடு விடுத்த அழைப்பை அவர் நிராகரித்து விட்டார் என்பது கூடுதல் தகவல். அதனால் அந்த நாடு காமராசர் மீது நல் எண்ணம் கொண்டு இருக்கவில்லை. சம்பவத்துக்கு பின் காமராசர் பேசியதில், 'குறிப்பாக அவர்களுக்கு' என்ற வார்த்தைக்கு பக்கத்தில் 'ஆர்எஸ்எஸ், பார்ப்பனர்' என்று எழுதி, திரிபு வேலை செய்தார்கள். RSS என்று இடை சொருகல் செய்து, அமெரிக்க agent - திராவிடர் கூட்டு சதியை இந்துக்கள் மீது போடும் முயற்சி செய்யப்பட்டது. இன்று வரை பேசப்பட்டும் வருகிறது. இப்போதுகூட தேர்தல் களத்தில் ஸ்டாலின் அவர்கள் இதை பேசுவதை கேட்க முடிகிறது. ஆர்எஸ்எஸ் என்றால், தேசிய தொண்டர் படை என்று பொருள் படும். இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று நிறுவப் பட்டது. இந்த தேசத்தை தாயாக தெய்வமாக நினைத்து வழிபடும் தேசபக்தர்களைக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமே ஆர்எஸ்எஸ். தேசியம், தெய்வீகம் இரண்டும் இரு கண்கள் என்ற கொள்கை கொண்டது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் காமராசர் வீட்டுக்கு தீ வைக்கும் அளவுக்கு தீவிரவாத இயக்கம் அல்ல. ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டு ஒழுகும் நன் நடத்தை கொண்ட படை (disciplined army) தான் ஆர்எஸ்எஸ். இஸ்லாமியரும் இந்த இயக்கத்தில் உள்ளனர். எல்லா சாதி மக்களும் இதில் சேர்ந்து பணியாற்ற தடை இல்லை. எல்லா சாதி மக்களும் ஒன்றே குலம் என்ற பார்வையில் இங்கு பார்க்கப் படுகிறார்கள். காமராசர் கொண்டு இருந்த தேசியம் தான் ஆர்எஸ்எஸ் கொள்கையும் கூட. அத்துடன் தெய்வீகம் கொள்கைக்கு காமராசர் எதிரானவர் அல்ல. RSS கோட்‌பாடுகளுக்கு எதிராக காமராசர் இல்லாத போது அவரை கொல்ல RSS ஏன் நினைக்க வேண்டும்? மதத்தால் நீ...இஸ்லாமியனாக இரு, கிருஸ்தவனாக இரு, ஹிந்துவாக இரு, ஆனால் மனதால் இந்தியனாக இரு. இந்தமண்ணின் பாரம்பரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை மதிக்கும் இந்தியனாக இரு... இதைதான் இந்துத்வா என்கிறது ஆர்எஸ்எஸ்..! அன்று காமராசர் அன்னிய சதி கு‌றி‌த்து அறிந்திருக்கவில்லை. இந்திய நாட்டில் அமெரிக்க கை கூலிகள், உள் நாட்டு கூலிப் படைகளை வைத்தே சாதித்து காட்டினார்கள். காமராசர் வீழ்த்தப்பட்டார். இன்றைக்கும் அதே மாதிரி சூழ்ச்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது அமெரிக்க பிரஜைகளான ஹிண்டன்பர்க் விவகாரம் எ‌ன்றாலு‌ம் ச‌ரி, ஜா‌ர்‌ஜ் சோரஸ் விவகாரம் என்றாலும் சரி, கானடா உதவியுடன் டெல்லியில் நடத்தும் விவசாய போராட்டங்கள் ஆனாலும் சரி, உள்நாட்டு வெளி நாட்டு கூட்டு சதி எதுவாக இருந்தாலும் முறியடிக்கும் திறமை மிக்க அரசியல் சாணக்கிய‌ர்க‌ள் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியில் உள்ளனர். அதனால் அவர்களின் பருப்பு இனியும் வேகாது. #கர்ம வீரர் காமராஜ்
கர்ம வீரர் காமராஜ் - காமராசர் வீழ்ந்து விடவில்லை கருணாநிதி அவர்கள் தனது இரண்டாவது மனைவியுடன் சென்று வாட்டிக்கன் ஆசிபெற்ற போது: காமராசரை தேர்தலில் வீழ்த்திய பின் வாட்டிக்கன் சென்று போப் காலடியில் பெற்ற ஆசி ஆயிரம் ஆண்டுகள் அண்ணாதுரை பழைமையான கோவில் களை இடித்தேன் என்று பெருமை பேசும்TR பாலு காமராசர் வீழ்ந்து விடவில்லை கருணாநிதி அவர்கள் தனது இரண்டாவது மனைவியுடன் சென்று வாட்டிக்கன் ஆசிபெற்ற போது: காமராசரை தேர்தலில் வீழ்த்திய பின் வாட்டிக்கன் சென்று போப் காலடியில் பெற்ற ஆசி ஆயிரம் ஆண்டுகள் அண்ணாதுரை பழைமையான கோவில் களை இடித்தேன் என்று பெருமை பேசும்TR பாலு - ShareChat