👪 cute family members 👪

🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
620 views
7 days ago
சிந்தனை*.( 09.05.2026).. ……………………………………………................... *" பிறரை மகிழ வைத்து மகிழுங்கள்''* ........................................................ வாழ்க்கைப் பற்றிய புதிர்கள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று மகிழ்ச்சியைத் தேடி மனிதனின் நீண்ட போராட்டம். ஏழை, பணக்காரன், அதிகாரம் படைத்தவர், பாமரன், அறிவாளி என எத்தனை விதமானவர்களை அழைத்து வந்தாலும் அவர்களுக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும் மகிழ்ச்சியை அவர்கள் தேடி அலைவது மட்டும் ஒரே பொதுக்காரணியாக இருந்து வருகிறது. வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை. உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதிலே தான் இருக்கிறது... மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல. அது ஒரு பயணம்... மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை. அது நிகழ்காலம்... மகிழ்ச்சி என்பது ஏற்றுக் கொள்வது அல்ல. அது ஒரு முடிவு... ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச் சென்றாள். அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு..எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணருகின்றேன். அர்த்தமே இல்லாமல், இலக்கே இல்லாமல் வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது. என்னிடம் அளவு கடந்த பணமும்,சொத்தும் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும், மகிழ்ச்சியும் மட்டுமே. என் மகிழ்ச்சிக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றாள். "கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலகத்தில் தரையை கூட்டிக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண்ணை அழைத்தார். அந்த பணக்காரப் பெண்ணிடம், " நான் இப்பொழுது பணிப்பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் அவர் பேசுவதை மட்டும் கேளுங்கள் என்றார். பணிப்பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்.. "என் கணவர் இறந்த மூன்றாவது மாதம் என் ஒரே மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்லை. யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் போது ஒரு பூனை என்னைப் பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக் கொண்டு இருந்தது , எனக்கு பூனையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வரச் செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனைப் பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது. கடந்து போன மூன்று மாதத்தில் நான் முதல் முதலாகப் புன்னகைத்தேன். நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு செயல் என்னை மகிழ்ச்சி அடையச் செய்கிறது எனில், ஏன் இதைப் பலருக்கு செய்து நான் ஏன் மனநிலையை மாற்றிக் கொள்ளக் கூடாது என யோசித்தேன். அடுத்த நாள் நோய் வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி, அவர்தம் மகிழ, நானும் பெரு மகிழ்வு உற்றேன். இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா? என்பதே ஐய்ப்பாடு தான்.. மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை இந்த செயல்கள் கண்டு கொண்டேன்." இதைக் கேட்ட அந்தப் பணக்காரப் பெண் ஓலமிட்டுக் கத்தி அழுதாள். அவளிடம் பணத்தைக் கொண்டு வாங்கக் கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத மகிழ்ச்சி மட்டும் அவளிடம் இல்லை. *ஆம்.,நண்பர்களே..,* மரங்கள் கனிகளை தருவது போல, தங்களிடம் உள்ளதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும். "பிறரை மகிழ வைத்து நாம் மகிழ வேண்டும். உலகம் உங்களைக் கண்டு மகிழும்" உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்கும். (ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐🙏🏻🌹🌹🌹 .* #⏱ஒரு நிமிட கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
579 views
8 days ago
*_உங்களை யாரும் பாராட்டுவதில்லையா? இந்த ஒரு ரகசியத்தைச் செய்தால் உலகம் உங்கள் பின்னால் வரும்!_* * 🌹🌹🌹வாழ்க்கைப் பயணத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் மற்றவர்களிடமிருந்து கைதட்டலையும் பாராட்டையும் எதிர்பார்ப்பது மனித இயல்பு. ஆனால், பல நேரங்களில் நம்முடைய உழைப்பும் திறமையும் மற்றவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால் ஏற்படும் ஏமாற்றமும், 'நமக்குத் திறமை இல்லையோ?' என்ற சந்தேகமும் நம்மைப் பின்னோக்கித் தள்ளக்கூடும். மற்றவர்களின் பாராட்டுக்காகக் காத்திருப்பதை விட, நம்மை நாமே அங்கீகரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் ஒரு உன்னதமான கதை இது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்திடம் நீங்கள் காட்டும் அன்புதான், உங்கள் வாழ்வின் வெற்றிக்கான முதல் படி. 'நான் திறமைசாலியாகத் தான் இருக்கிறேன்; ஆனால் யாருமே என்னை பாராட்டியதில்லை' என்று வருத்தப்படுகிறீர்களா? இந்தக் கவலையை உடைக்கத்தான் இந்த கதை. ஒரு ஊரில் ஒரு நபர் இருந்தார். அவர் மிகவும் திறமைசாலிதான். ஆனால் என்னவோ தெரியவில்லை, அவரை யாருமே பாராட்டியதில்லை. ஆரம்பத்தில் இதை அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றாலும், போகப் போக அவருக்கு மனதில் இந்த வருத்தம் ஏற்பட்டது. அந்த நபர், தன் மனக்குறையை ஆசிரியரிடம் பகிர்ந்துகொண்டார். அதற்கு அந்த ஆசிரியரோ, "உன்னைச் சுலபமாகப் பாராட்டக்கூடியவர் ஒருவர் உள்ளார். அவருக்கு உன்னை பாராட்டக்கூடிய மனம் இருக்கிறது. நீ அந்த நபரிடம் தினமும் பாராட்டை வாங்கிவிட்டால் போதும்; அதன் பிறகு இந்த உலகமே உன்னை பாராட்டத் தொடங்கிவிடும். நீ அந்த நபரின் பாராட்டை மட்டும் வாங்குவாயா?" என்று கேட்டார். அந்த நபருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. "அப்படி ஒரு நபர் இருக்கிறாரா? யார் அது?" என்று கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர் சொன்னார், "நீ நேராக உன் வீட்டிற்குச் சென்று, அங்கிருக்கும் நிலைக்கண்ணாடியில் பார்; உன் உருவம் தெரியும். அந்த உருவத்திடம் பாராட்டை வாங்கு. உன்னை நீயே தினமும் பாராட்டிக்கொள். இந்த உலகத்துடைய பாராட்டு தானாக உன்னிடம் வந்து சேரும்," என்று கூறினார். இன்றைய வேகமான உலகில், மற்றவர்கள் ஒருவரின் திறமையைக் கண்டுபிடித்துப் பாராட்டும் மனநிலையில் பெரும்பாலும் இல்லை. அதற்காக உங்களுக்குத் திறமையில்லை என்று அர்த்தம் இல்லை. நேரம் வரும்போது உங்களுக்கான பாராட்டும் அங்கீகாரமும் உங்களை வந்து சேரும். அதுவரை உங்களுடைய மனம் தளராமல் திடமாக இருக்க, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டியது அவசியம். 🌹🌹🌹 #⏱ஒரு நிமிட கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #உற்சாக பானம்# #👪 cute family members 👪
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
12.2K views
23 days ago
*இன்று மக்களிடம் ஒரு தவறான கெட்ட பழக்கம் பரவியுள்ளது.* *அதாவது நாம் நல்ல வார்த்தைகளைப் பேசினால் நல்லதே நடக்கும், நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமோ அதுதான் நடக்கும் என்கின்றார்கள்.* *சரி... நான் தெரியாமல்தான் கேட்கின்றேன்...?* *குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவிப்பதற்குப் பதிலாக ஒருமுறை பயன்படுத்தும் டயாப்பர் பயன்படுத்துகிறீர்கள்...?* *அப்படியென்றால்.... அந்த டயாப்பரைத் தூக்கி எறிவது போன்று அந்தக் குழந்தையையும் தூக்கி எறிகிறீர்கள் என்றுதானே பொருள்...?* *சரி அதையெல்லாம் விடுங்கள்....* *அந்த டயாப்பரில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கின்றன? என்கின்ற விடையாமாவது தெரியுமா?* *ஒரு மண்ணும் தெரியாது.* *விளம்பரதில் பார்த்தேன். பெரிய பணக்காரர்கள் இதைத்தான் பயன்படுத்துவார்கள். அதனால் வறட்டு கவுரவத்திக்காக நாங்களும் இதைத்தான் எங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்துகின்றோம். அப்புறம் இப்போதெல்லாம் யாருங்க வீட்டில் துணி துவைக்கின்றார்கள்? துணி துவைத்தால் நல்ல குடும்பம் கிடையாது. கவுரவக் குறைச்சல் ஆமாம்...!* *அப்போதுதானே பார்ப்பவர்கள் எங்களை educated பேமுழி ன்னு நெனச்சு மதிப்பாங்க.?* *எங்களுடைய பேமுழிக்குன்னு ஒரு கவுரவம் அந்தஸ்து இருக்கிறதா? இல்லையா?* *ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.... நோய்க்கும், மரணத்திற்கும் காசு பணம் கவுரவம் அந்தஸ்து எதுவுமே பார்த்து வாராது மகனே....!* *அடிச்சா ஒரே அடி...! தூக்கி வீசிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்.* *காசு பணம் இருக்கிறது என்பதற்காக இன்று குழந்தைகளின் அப்பனும் ஆத்தாளும் என்ன ஆட்டம் ஆடுறாங்க?* *குழந்தைகளை வெளிநபர்கள் யாருமே பார்க்கவே கூடாது, வெளிநபர்களின் மூச்சுக் காற்று நிழல் குழந்தையின் மீது விழவே கூடாது.* *அய்யயையோ.....* *சூரிய ஒளி குழந்தையின்மீது விழக்கூடாது....* *பூமியில் இந்த மண்ணில் குழந்தையின் கை கால் படவே கூடாது....* *மழை நீர் பனி குழந்தையின் மீது விழவே கூடாது.* *அட.... அந்த வீட்டில் இருக்கின்ற கிழடுகள் இருக்கின்றார்கள் பாருங்கள்.... அவர்கள் பெயரன் பெயர்தியை ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்த திருட்டுப் பொருள் போன்று யாருக்குமே தெரியாமல் பாத்துக்கொள்கின்றேன் என்ற பெயரில்.... அய்யய்யோ....* *இப்படி பொத்திப் பொத்தி வளர்த்து கடைசியில் என்ன நடக்கும் தெரியுமா?* *இவர்களே குழந்தைகளுக்கு விசத்தைக் கொடுப்பார்கள். அதுவும் தெரிந்தேதான் கொடுப்பார்கள்.* *எப்படி?* *கைசீனிக் என்ற பெயரில் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா பீடியாசுயர் மால்டோவா சத்துமாவு லொட்டு லொசுக்குன்னு வாங்கிக் கொடுப்பாங்க.* *சரி... நாளைக்கு அந்தப் பிள்ளைங்க பெரியவர்கள் ஆனதும் எங்கு வாழ்வார்கள்?* *கண்ணாடிக் கூண்டிற்குள்ளா?* *அல்லது வேற்று கிரகத்திலா?* *கடைசியில் இந்த மண்ணில்தானே?* *இங்கதான் டுவிஸ்ட்டே ஆரம்பம்.* *குழந்தைகளுக்கு தங்க பஸ்பம் எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து கடைசியில் இந்த பூமியில் இந்த மண்ணில் (அது எந்த நாடாகவும் இருக்கட்டும்) இங்கு வாழ விடுகிறீர்கள்...?* *அந்தக் குழந்தை மண்ணில் விளையாடியிருந்தால்தானே அந்த மண்ணிலுள்ள கிருமிகளை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருக்கும்?* *அந்தக் குழந்தையின் உடலிலுள்ள தோலில் சூரிய ஒளி பட்டிருந்தால்தானே உடல் நலமாக வளமாக இருந்திருக்கும்?* *டேய் சோணை முத்தான்....!?* *போச்சா....? என்ற கதையாக ஆகிவிட்டபின்....* *அழுது புலம்பி என்ன பயன்?* *அடுத்த மக்களின் மூச்சுக்காற்று நிழல் வாசம் படாமல் வளர்த்தபின் அந்த மக்களின் மத்தியில் உங்கள் பிள்ளைகளை வாழவிட்டால்...? அப்போது பிற மனிதர்களின் இருமல் காற்றுக் கிருமிகளை எதிர்கொள்ள உங்களின் குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி இருக்காதே?* #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #உற்சாக பானம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
721 views
1 months ago
சிந்தனை."*.( 02.04.2026) .............................. *''நிகழ்காலம் மட்டுமே...''* ................................ யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ, படித்தவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே.. இச்சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்கள், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத ஏழைகள், படிக்காத பாமரர்கள், வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்துக் களைப்பவர்கள் (ஆண், பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி,பசி, உறக்கம்,இழி சொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு. மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள். . உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள்.அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், ''உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. *ஆம்.,நண்பர்களே..,* மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர்,, ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம்..இனி ஒரு புதிய உலகம் அமைப்போம்.. சக மனிதர்களை மதிப்போம்.. மனிதனாக வாழ்வோம்.. ( ஆக்கம். உடுமலை சு. தண்டபாணி..)💐💐💐💐💐💐 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
648 views
1 months ago
ஒரு ஊக்குவித்தல்.. சின்னதாய் ஒரு நன்றி கூறல்.. சின்னதாய் ஒரு பாராட்டு.. சின்னதாய் ஒரு மன்னிப்புக் கோரல்.. சின்னதாய் ஒரு அரவணைப்பு.. சின்னதாய் ஒரு சமாதானம் என.. இத்தனை எளியவை தான் இந்நேசத்தில்.. நம் எதிர்பார்ப்பெல்லாம்.. இத்தனை எளியவைக் கூட முக்கியமற்று அலட்சியப்படுத்தப்படுகையில் தான்.. பிரிவெனும் பெரும் பெரும் முடிவுகளையெல்லாம் சுலபமாய் எடுத்து விடுகிறோம்.. சிறு கீறலுக்காக எத்தனை கண்ணாடிக் கோப்பைகளைத் தான் தூக்கி வீசுவது..? சின்னஞ்சிறு அலட்சியங்களால் எத்தனை உறவுகளைத் தான் விலக்கி வைப்பது..?? 😊😊😊 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
1.4K views
2 months ago
நிலவாத வீட்டிலே குழந்தைக்கு அமைதி இராது. கடுகடுப்பும் சினமும் வெறுப்பும் பொறாமையும் குடிகொண்ட வீட்டில், குழந்தைகள் அமைதியாக இரா. அன்பு மொழிகள் பேசா. இன்பமாக விளையாடா. அன்பு மறைந்த இடத்தில் பொறாமை நிறையும். அந்தப்பெறாமையைப் போக்காவிட்டால் இன்பம் குடிகொள்ளாது. அந்தப் பொறாமைப் பேயோடு, ஆறு குட்டிப் பேய்களும் சேர்ந்து கூத்தாடி இன்பத்தைப் பாழாக்கி விடும். அன்பை அழித்து ஒழித்துவிடும். ஆணவம், படபடப்பு, ஐயம், பழி, பேராசை, பகை என்ற ஆறு பேய்களும் பொறாமைப் பிசாசோடு குலாவத் தொடங்குமானால், பொன்னகரத்தையும் வென்னரகமாக்கிவிடும்! படபடப்பு என்ற பேயை அடக்கி விரட்டாவிட்டால் சிந்தனை ஓட்டம் செவ்வையாக நடைபெறாது. மனதைப் புட்டு விடும் இந்தப் பேய்! அறிவையும் தக்க ஞானத்தையும் உண்மைகளையும் தொலைவில் விரட்டி விடும். தொல்லை தரும் படபடப்பு இந்தப் பேய்! பழியும் பேராசையும் இரட்டைப் பேய்கள். பேராசைப் பிடித்துக் கொண்டால், பழியும் பற்றிக் கொள்ளும். பழி புகுந்துகொண்டால், பேராசை வளைத்துக் கொள்ளும். மனித மூளையை உருக்கிக் குழம்பாக்கித் தொலைத்து விடும். பேராசை என்ற பேய், எவரையும் நெருங்க விடாது. கொடுமை என்ற வேலி போட்டுவிடும். தனக்கும் பயன்படாத, தானும் பயன்படுத்தாத கோடிக்கணக்கான பொருளைக் குவித்து வைத்துக் குமைந்து சாகும்படி மனிதனைத் தூண்டுகிற கொடிய வனவிலங்கு இந்தப் பேராசை! தன்னைப் போன்ற மனிதனின் உடலில் மிஞ்சும் ஒரு சொட்டு இரத்தத்தையும் உறிஞ்சும் வன்நெஞ்சனாக மனிதனை மாற்றி விடும் மலைப்பாம்பு இந்தப் பேராசை ! இதனோடு இதன் இரட்டைப் பிறவியான பழியும் சேர்ந்து கொண்டால், மனிதனின் பொருளை மட்டுமல்ல, அருளையும் அழித்து விடும். பழியும் பேராசையும் புரிந்துள்ள சதிகளை அறிய வேண்டுமானால், சரிந்த பேரரசுகளின் சரித்திரங்கள் கழறுமே! வெட்டுண்ட தலைகள் விளக்கம் தருமே ! ஆணவமும் ஐயமும் மற்றொரு இரட்டைப் பேய்கள். 😊😊😊 #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
829 views
2 months ago
பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்து விடாதீர்கள்.. *அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்..!! #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#