ஆன்மீக வாழ்க்கை

N Murugesan
669 views
21 days ago
ஸ்ரீராமநவமிக்கான என் விரதம் முதல் மூன்று நாட்கள் வெற்றி; நான்காவது நாள் காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு சென்று வந்தேன்; ஏதோ பயங்கர டார்ச்சர் பற்றிக் கொண்டு விட்டது. அடுத்த நாள் அந்த தலை டார்ச்சரால் காய்ச்சல், சளி என்று 3 நாட்கள் விரதம் இருந்த தடயமே இல்லாமல் உருக்குலைத்து விட்டது. ஆகையால், ராமநவமி வழிபட கூட முடியவில்லை (கோபத்தில் விருப்பமும் இல்லை - ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதற்கும் போகவில்லை). ஸ்ரீராமர் ரிஷிகளின் தவத்தை காப்பவர். நான் சனாதன ரிஷி அளவுக்கு பெரிய ஆள் இல்லையாகையால் என் தவத்தை காப்பாற்ற அவர் முயலவில்லை போலும்!!😄 ********************************************** எனக்கு இது மாதிரி டார்ச்சர் வருவது 15 வருடங்களாக நடக்கிறது; ஆனால், இந்த முறை மிக அதிகம். வழக்கமாக காமத்தில் விழுவது பற்றிய கர்மம் இப்படி டார்ச்சராக வருகிறது என்று மேலும் காமத்திற்கு எதிராக இருப்பேன். ஆனால், இது விரதம் இருப்பதற்கே எதிராகவோ என்று கூட குழப்பத்தில் தோன்றியது; அப்படியிருக்க வாய்ப்பில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால் , அப்படிப்பட்ட காரணம் உண்மையானால் இதை மிக சீரியஸாக எடுத்துக் கொண்டு, நாத்திகத்தை முற்றிலுமாக வேறறுக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். தமிழகத்தில் சற்று பாஜக, சனாதனம் வந்தாலும் பரவாயில்லை; இத்தகைய கடவுளுக்கு எதிரான நாத்திகத்தை நாம் முற்றிலும் விலக்க வேண்டும். என் வாழ்க்கை அனுபவத்தில் கூறுகிறேன். மேலும், இன்று ஒரு பிரயாண விலாக் ஒன்று பார்த்தேன் - https://youtu.be/RrR33NVoChQ?si=0v9qHZ1D7uGOoz5K - அதனால் கம்போடியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி விவரமாக படிக்க நேர்ந்தது - மிக மிக மிக மிக மிக மிக மிக கொடூரம் - எதனால்?! ஏழைகளின் வாழ்வு; கம்யூனிசம்; சோசியலிஸம் என்ற பெயரால்!!! ஆனால், உண்மையை ஆராய்ந்தால் அது கடவுளுக்கு எதிரான சக்தியால் என்று எளிதாக கூறலாம்!! நாத்திகம் ஓரளவிற்கு மேல் சென்றால், இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது!! ஆகையால் சனாதனம் கூட பரவாயில்லை; பிஜேபி பரவாயில்லை; கடவுளுக்கு எதிரான நாத்திகத்தை அறவே ஒழிக்க வேண்டும். ************************************************ சரி, எழுத வந்த விஷயத்திற்கு வருகிறேன். பல காலம் ஸ்ரீராமரை பிரத்யேகமாக (exclusively) ஒரு 15-20 நாட்கள் வழிபட வேண்டும் என்று தோன்றுவதுண்டு. ஆகையால் தான் ரொம்ப பிளான் பண்ணி (அந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு உடல்நிலை வேறு சரியில்லை) பத்ராசலம் சென்று அங்கே ஒரு வாரமாவது தங்கி தினமும் விரதம் கோவில் என்று இருக்க வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு சென்றேன். ஆனால், ஏனோ இரண்டு நாட்களில் திரும்பி விட்டேன். அதேபோல் ஸ்ரீராமரை மும்மூர்த்திகளில் முதல்வராக வழிபட வேண்டும் என்று (அவருக்கோ) யாருக்கோ பல நாள் ஆசை!!😄 பத்ராசலம் செல்ல பல காலம் ஆசை கொண்டிருந்த நான், இந்த விஷயம் ஒரு முறை பூஜா நேரத்தில் தோன்றிய போது உடனே மறுத்து விட்டேன். என்ன தான் எனக்கு ராமபக்தி இருந்தாலும் என் பூஜையறையில் சிவபெருமானுக்கு தான் முதலிடம்; ராமரை நடுநாயகமாக வைத்து வணங்க முடியாது என்று கூறிவிட்டேன்!! 😄😂 (ஆனால் , ராமர் விடவில்லை; என்றாவது ஒரு நாள் இவனுக்கு என் பெருமை பற்றிய உண்மை தெரியவரும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது!! 😄😂) *********************************************** ஒரு முறை இந்த எண்ணம் மீண்டும் தோன்றிய போது, நான் அதிகம் யோசிக்கக் கூட இல்லை; உடனே "ராமரால் எப்படி உலகை ஆள முடியும்?! அவர் உத்தம குணத்திலும், சாத்வீகத்திலும் உயர்ந்து தோய்ந்தவர்; அவரால் இந்த உலகை ஆளவெல்லாம் முடியாது; உலகை ஆள்வதென்றால் சிவபெருமான் போல் பலபடி மக்களுக்காக கீழே இறங்கி வர வேண்டியிருக்கும்; அது அவருக்கு ஒத்து வராது" என்று கூறிவிட்டேன். உடனே, "ராமரை பற்றி நீ என்ன நினைத்தாய்?! ரிஷிகளின் தவத்தை காப்பாற்ற அம்பு விட்டவர்; தீமையை எதிர்க்க அவர் தயங்குவதில்லை.." என்றெல்லாம் பதில் தோன்றியது!! ஆகையால் தான் இப்போது தோன்றியது - ஏன் என் தவத்தை காப்பாற்ற எதுவும் செய்யவில்லை?!😄😂 சரி, அவர் தான் சனாதன ரிஷிகளின் பங்காளன்; நம்முடைய அந்த "ஏழை பங்காளன்" அவன் எங்கே போனான்?! ஆம், எனக்கும் தான் தெரியவில்லை!! அவன் எங்கே போனான்?! (ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்திற்கோ?!) ஸ்ரீராமரை வழிபட்டால் வரமாட்டான் என்றால் பிறகு எதற்கு சிதம்பரத்தில் பெருமாள் சன்னதி?! ********************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
677 views
27 days ago
ஸ்ரீராமநவமி 26 மார்ச் வருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்றிலிருந்து 5 நாட்களுக்கு நான் விரதம் இருக்கப் போகிறேன்!😄 முதல் மூன்று நாட்கள் மூன்று வேளையும் சாப்பாடு கட் (கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யக் கூடும்!!). பிறகு இரண்டு நாட்கள் மதியம் மட்டும். டிவி, நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் எதுவும் கிடையாது. பெண்கள் முகத்தை கூட இந்த நாட்களில் பார்க்கக் கூடாது. தியானம் மற்றும் சாத்திர நூல்கள் மட்டும்....... என்று வழக்கமான விரத விதி முறைகள். 26ம் தேதி கும்பகோணம் செல்லாம் என்று நினைத்திருக்கிறேன். ********************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
617 views
27 days ago
அனைவருக்கும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள்!! ********************************************* சமீபத்தில் கேட்ட கதீஜா ரஹ்மானின் பாடிய பாடல்!! *************************************************. ஓ அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் மதீனாவின் அரசரும், மலாக்குகளின் அன்புக்குரியவரும் ஆவீர். என் இதயத்தின் வணக்கத்தையும், வாழ்த்துகளையும் அல்லாஹ்வின் நபிக்கு தெரிவிக்கிறேன். நீங்கள் கவ்சர் ஊற்றின் அதிபரும், நியாயத் தீர்ப்பு நாளில் எங்களுக்கு பரிந்துரை செய்யப்போகும் ஒருவரும் ஆவீர். எல்லாவற்றிலும் உங்கள் தெய்வீக ஒளியும் சாரமும் நிறைந்துள்ளது. உங்கள் வெளிப்பாடு அனைத்திலும் தெளிவாகத் தெரிகிறது. ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் கருணை காட்டுங்கள். தொலைவில் துன்பத்தில் இருக்கும் மக்களை காத்து ஆறுதல் அளியுங்கள். மிஅராஜ் நிகழ்வின் அதிபரே, முழுமையின் உரிமையாளரே, நீங்கள் எல்லாரிலும் தனித்துவமானவர். அரபுகளின் மகத்தான அரசரே, எங்கள் பணிவான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு வேண்டுதலையும் கேட்கிறான், மேலும் அவர் உங்களின் மகத்துவத்தை சாட்சியாகக் கூறுகிறார். இந்த உலகம் அமைதிக்காக ஏங்குகிறது, அது துன்பங்களாலும் குழப்பங்களாலும் நிரம்பியுள்ளது. எங்கள் ஒவ்வொரு அடியும் ஒரு சோதனையாகும்; எங்கள் வெற்றி அல்லாஹ்வின் விருப்பத்திலும் வழிகாட்டுதலிலும் உள்ளது. https://youtu.be/n7e3fb65Gao?si=zdT5TGVmIsjbDtzK **************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
628 views
28 days ago
ஞானபீட விருது என்பது ஒரு தனியார் டிரஸ்ட் வழங்கும் விருதாம் (டைம்ஸ் ஆஃப் இந்தியா). அரசாங்கம் வழங்கும் விருது இல்லையாம்!! பிறகு எதற்கு அதைப்பற்றி சர்ச்சை?! இந்த விருது 60 முறை இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய செம்மொழி என்று பெருமைப் பேசப்படும் தமிழுக்கு இதுவரை எத்தனை முறை வழங்கப் பட்டுள்ளது தெரியுமா?! வெறும் இரண்டு முறை தான்!! என்னவொரு அக்கிரமம்!! இதைப்பற்றி ஜெயமோகன் இதற்கு முன் ஏன் பேசவில்லை?! தமிழில் இருந்து வந்த மொழி என்று கருதப்படும் கன்னட மொழி இது வரை 8 முறை பெற்றுள்ளது. மலையாளம் 6 முறை பெற்றுள்ளது; ஆனால் தமிழ் 2 முறை தான் (அதில் ஒன்று தமிழ் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத "சித்திரப் பாவை" என்ற "முற்போக்கு" கதை எழுதிய யாரோ அகிலனாம்!!). இந்த அளவிற்கு தமிழ் மொழி "பாரதீய வித்யா பீடத்தால்" புறக்கணிக்க பட்டுள்ளது!! ஏன் யாரும் இதுவரை குரல் கொடுக்கவில்லை?! வைரமுத்து இந்த விருதை புறக்கணித்தால் தமிழுக்கு பெருமை!! 😄😂. ********************************************** மாறாக, ஏன் பாடலாசிரியருக்கு கொடுக்கப் பட்டது என்ற வாதம் சரியல்ல! கன்னடத்தில் நான்கு முறை கவிஞர்களுக்கு தான் கொடுக்கப் பட்டுள்ளது!! ஏன் தமிழுக்கு 2 முறை தான்?! புதுமைப்பித்தனில் ஆரம்பித்த "முற்போக்கு கலாச்சார சீரழிவை போற்றும், பெண்ணியம் பேசும்" வகையான "இலக்கியங்கள்" தமிழில் அதிகம்!! இவற்றுக்கு ஞானபீட விருது வழங்கப் படாதது எனக்கு சந்தோஷமே!! 😄 இலக்கியம் என்றால் அந்த சமூகத்தின் நல்ல விஷயங்களை வெளிப்படுத்தி அவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் (reinforce unique cultural values). சமூகத்தின் அவலங்களை படம் பிடித்து காண்பிப்பது மட்டும் தான் இலக்கியம் என்று யார் வரையறை செய்தார்கள் என்று தெரியவில்லை!! அவையும் கூட உண்மையான கலாச்சாரத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அப்படிப் பட்ட‌- "முற்போக்கு", "பெண்ணுரிமை", "வட்டார வழக்கு" - தவிர்த்த எழுத்தாளர்கள் யாரும் தமிழில் இல்லை என்றும் சொல்ல முடியாது!!😄😂😂 . சரி, அப்படி கன்னடத்தில் என்ன தான் எழுதினார்கள் என்று பார்த்தால், எல்லாம் "பாரதீய" மயமாக இருக்கிறது!!😄. கன்னட கலாச்சாரத்தை விட "வேத கலாச்சார" நூல்களாக இருக்கிறது!! கன்னத்தில் பரிசு பெற்ற சிலர் படைப்பை பார்ப்போம்!! குவெம்பு என்பவர் எழுதியது நவீன ராமாயணம். கோகக் என்பவர் எழுதியது வேத காலத்தை பற்றிய கவிதைகள்!! யூ ஆர் அனந்தமூர்த்தி எழுதியது ஆச்சாரமான பிராமணர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்!! வெங்கடேச ஐயங்கார் எழுதியது பிரிட்டிஷ்க்கு எதிரான மன்னர் பற்றியது! சிவராம் கரந்த் என்பவர் எழுதியது மனித வரலாற்று தொன்மம், கிரீஷ் கர்னாட் துக்ளக் பற்றிய வரலாற்று கதை - ஆக இவை எவையும் கன்னட கலாச்சாரத்தை புரிந்து கொள்ள உதவாது!! இது போன்ற "இலக்கிய படைப்புகள்" தமிழில் இல்லை தான்!! இப்போது "பாரதீய சனாதனத்துடன்" தமிழை இணைக்க இந்த விருது!! எனக்கு வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியம் போன்றவை இலக்கியமாக தோன்றியதும் இல்லை - தமிழை வலுப்படுத்தாமல் வட்டார கொச்சை மொழிகளை உபயோகக்கும் நாவல்கள்!! ஆக, வைரமுத்து தகுதியானவர் என்றாலும் ஜெயமோகன் கூற்றிலும் சிறிது உண்மை உள்ளது!!! ஆனாலும், ஜெயமோகன் சற்று வரம்பு மீறி பேசி விட்டார் என்றே கூற வேண்டும். #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
732 views
1 months ago
எனக்கு உலகியலில் எந்த கள்ளக் காதலியோ, வைப்பாட்டியோ இப்போதோ, எப்போதோ கிடையாது - திருநீலகண்டத்தின் மீது ஆணை!! 😄😂. (ஏன், மனைவியே கூட இல்லை!!) ஆன்மீகத்தில் சிவ பக்தர்கள் திருமாலையும் வழிபடுவது கள்ளக் காதல் ஆகாது!😄 தமிழகத்தில் சைவ-வைணவ ஒற்றுமை ஏற்பட்ட பிறகு, இரண்டு கடவுளரையும் வழிபடுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம். ஆன்மீகத்தில் காதல் - ஊடல் பாவனையை இந்த அளவுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று ஏற்கனவே எழுதினேன். போன பதிவிலும் ஒரு விஷயத்தை எழுத இருந்தேன்; ஆனால், எழுதும் போது எப்படியோ மறந்து விட்டு விட்டேன். வழக்கமாக அப்படியே விட்டு விடுவேன். இந்த முறை அதை இந்த பதிவில் எழுதி விடலாம் என்று நினைக்கிறேன். *********************************************** மாணிக்கவாசகர் "சீலமின்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி கூத்தாட்டுப் பாவையாக இருந்தேன்" என்று பாடியது பலரும் அறிந்தது. ("தமிழ் இனி மெல்லச் சாகும்" என்று பாரதியார் பாடினார் என்று பட்டிமன்றங்களில் பேசுவார்கள். ஆனால், அதற்கு அடுத்த வரி அவர் என்ன பாடினார் என்று அவர்கள் படிப்பது கூட இல்லை என்று பாரதியார் வழிவந்த ஒருவர் எழுதிய பதிவில் படித்தேன். அது போல் தான் இதுவும்!😄). அடுத்த வரியில் மாணிக்கவாசகர் பாடுகிறார் - "மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி" . சீலம் (ஒழுக்கமான வாழ்க்கை) கூட இல்லாமல் இருந்த எனக்கு "வழி காட்டி ஆண்டான்" என்று பாடுகிறார். அதாவது ஒழுக்கமில்லாத வாழ்க்கை; காமக் களியாட்டம் ஆன்மீகம் அல்ல என்று வழிகாட்டினான் என்று பொருள். இது எல்லாரும் எழுதும் விளக்கம் தான். ஆனால், நான் முதல் முறை இந்த பாடலை கேட்ட போது எனக்கு ஒரு விளக்கம் மனதில் தோன்றியது. மாலுங்காட்டி என்று சொல்லி விட்டு பிறகு வழியும் காட்டி என்று பாடுகிறார்; இதில் "மால்" என்ற சொல்லுக்கு பொருள் என்ன?! அன்பு என்று ஒரு விளக்கம் எழுதப் பட்டுள்ளது. ஆனால், எனக்கோ மால் என்றவுடன் திருமால் தான் ஞாபகத்துக்கு வந்தது. திருமால் தான் ஒழுக்க நெறி, அறநெறியை வகுப்பவர்; உலகை காக்கும் கடவுளான அவர் உலகில் அறநெறியை காப்பதன் மூலமே உலகை காக்க முடியும். அந்த அறநெறியில் வாழ்வது தான் சிவபெருமானை அடைவதற்கும் வழி என்பதால் தான் "மால் காட்டி வழிகாட்டி" என்று பாடியதாக எனக்கு தோன்றியது. (அதனால் தான் கோவிந்தராஜ பெருமாள் சன்னதி சிதம்பரத்தில் பிரதானமாக உள்ளதோ?!). பின்னாளில் உரை ஒன்றை படித்த போது, உரையாசிரியர்கள் ஏனோ அப்படி உரை எழுதவில்லை என்று தெரிய வந்தது!! எனக்கென்னவோ பாடலின் பொருள் எனக்கு தோன்றியது தான் என்று படுகிறது!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
628 views
1 months ago
இவர்கள் திருந்தவே மாட்டார்களா?! இன்னமும் சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, பரிகாரம் எல்லாமுமா..!! இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் ஆதினத்துக்கு அழைப்பு வந்ததாம்; அப்போது யாரோ கிரக நிலை பற்றி ஏதோ கூற, கோளறு பதிகம் பாடினால் போதும் என்று இந்திய பாராளுமன்றத்தில் கோளறு பதிகம் பாடி விழா நடைபெற்றதாம் (இப்படி ஏதோ படித்த ஞாபகம்). இன்றைய நிலையில் கோளறு பதிகம் எல்லாம் போதாது என்று நினைக்கிறார்களோ?!😄😂 #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
642 views
1 months ago
உங்களுக்கு மனிதனை நாயாக்கும் கடவுள் வேண்டுமா? அல்லது நாய் போன்றவனை கடவுள் நிலைக்கு உயர்த்தும் கடவுள் வேண்டுமா?! நம்பினால் நம்புங்கள்; இரண்டு வகையானவர்களும் இருக்கிறார்கள்; ஆனால், இருவருமே தங்களை கடவுள் என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள்!! 😄 நமக்குத் தெரியும் யார் உண்மையான கடவுள் என்று!! நமக்கு நாய்ச் சிவிகை ஏத்தும் சிவபெருமான் தான் வேண்டும். நாய் போன்ற கீழான என்னையும் கூட சிவிகையில் அவ்வபோது ஏத்துவதும் செய்கிறான்!!😄 மாணிக்கவாசகர் பாடியது உண்மை தான். ஆனாலும் கூட சைவத்தில் இது குறித்த ஊடல் ஒன்றும் உண்டு!! 😄. **************************************************** ஏன் பிரம்மா, விஷ்ணு போன்றோர் நம்மை கடவுள் நிலைக்கு ஏத்த மாட்டார்களா?! பிரம்மா தன்னையே கடவுள் என்ற நிலையில் பார்ப்பதில்லை. பெருமாளை வணங்கினால் நம்மை ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்கு உயர்த்தி, "இந்த அடியவன் என்னை விட உயர்ந்தவன்" என்று பிறர் நினைக்கும் அளவுக்கும் செய்வார். ஆனால், ஒரு முக்கியமான விஷயம். நம்மை கடவுள் நிலைக்கு உயர்த்த - அதற்காக நாம் தவம் செய்து, தூய்மை அடைந்து, ஆன்மீக சாதனைகள் பல புரிந்து - பிறகு சிவிகையில் (அதாவது கடவுள் பல்லக்கில்) ஏற்றுவார். ஒருவன் கடவுள் நிலைக்கு உயர்ந்த பிறகு, அவன் எனக்கு இணையானவன் என்று அங்கீகரிப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?! அதில் இறைவனின் சாதனை என்ன இருக்கிறது?! மற்ற கடவுள்களின் வழியில் சென்றால் நாம் அந்த நிலைக்கு உயர நாம் படாதபாடு பட்டு முயல வேண்டும். அதற்கு அந்த கடவுள்களும், அவர்கள் வகுத்த பாதையும் துணை செய்வர். ஆனால், நமது சிவபெருமானின் வழி வேறு. நமது பெருமான் நினைத்தால், நீங்கள் நாய் நிலையிலிருந்து மனித நிலைக்கு கூட உயர தேவையில்லை; அப்படியே நாயாகவே சிவிகையில் சிவமாக ஏத்துவான்!!😄 இது தான் சைவத்தின், சிவபெருமானின் சிறப்பு. அப்படியென்றால் பெரும் தவம், ஆன்மீக சாதனை எதுவும் தேவையில்லையா?! அப்படியில்லை. அனைத்தும் தேவை தான். ஆனால், அவை எதற்கு?! அவை நம் ஆணவ, கர்ம, மாயா மலங்களை கலைந்து, உள்ளம் தெய்வீக நிலைக்கு உயர வழி செய்வதற்கு. ஆனால், அதற்கு தகுதியிருந்தும் விடாமல் நம்மை நாய் போல் கீழ் நிலையில் வைத்திருந்தால் என்ன செய்வது?! பெருமாளாக இருந்தால், "அது உன் கஷ்டம் - நான் வகுத்த தகுதியை அடையும் வரையில் எதுவும் செய்ய இயலாது" என்று நம்மை மேலும் மேலும் உயர்த்தத் தான் வழி செய்வார். ஆனால், சிவபெருமானோ, அப்படியே நாயாகவே சிவிகை ஏத்துவான்!! ஏனென்றால் அவன் வெளிப்புற துறவை, ஆடம்பர தூய்மையை பார்ப்பதில்லை. அவன் நம் உள்ளத்தை தான் பார்க்கிறான். காதாலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கினால் நம் கர்மத்தை கரைப்பதையும் எளிமையாக்குகிறான். உயிர்களிடம் விளையும் அன்பினால் பெருகும் தூய்மையான பக்தியால் அவனை கட்டிப் போடவும் முடியும். ஆகையால், சிவபெருமானிடம் பக்தி கொண்டு வணங்குபவர்கள் அனைவரும் பெரும் பேறு பெற்றவர்கள் தான்!! பிறகு இதிலும் கூட ஊடல் ஏன் என்றால் - அப்படியே நாயாக இருந்தால் போதுமா?! நமக்கு வெளிப்புற தூய்மையும் நல்கி, உலகில் வாழ்வாங்கு வாழ வழிசெய்ய வேண்டாமா?!! உலகில் கோடானுகோடி இன்பங்கள் இருக்கிறதாம் - அப்படியே நாய் சிவிகையிலிருந்து முக்தி கொடுத்து விட்டால் நாம் என்ன செய்வது?!😄 நாமும் உலகியலிலும் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டாமா?! 😄. ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
655 views
1 months ago
சென்னைக்கு செல்ல தத்காலில் டிக்கெட் எல்லாம் புக் செய்து கடைசியில் போகவில்லை. இப்போது திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நான் வாங்கிய புத்தகங்கள்!! (தமிழ் நாவல், இலக்கியம் எல்லாம் படிக்க இப்போதைக்கு நேரமில்லை) #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
611 views
2 months ago
இன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை பூஜித்து வழிபடும் நாள்!! மற்ற பௌதீக எண்ணங்கள் அனைத்தையும் உதறி, மனம் முழுவதும் சிவ தத்துவத்தில் நிறைந்து, பக்தியில் நனைந்து இரவை கழிக்கும் நாள். அவ்வாறு காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்க சிவபெருமானை வழிபட அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்!!😄 ஓம் நமசிவாய!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
686 views
2 months ago
காதலை பக்தியுடன் இணையாக பேசுவது இல்லற ஆன்மீகம் செழிக்க வேண்டும்; இல்லறத்தில் இருந்தாலும் இறைவனை அடைய முடியும் என்பது போன்ற உண்மைகளை வலியுறுத்துவதற்காக மட்டுமல்ல. உண்மையாகவே காதலும், பக்தியும் ஒரு போன்ற தன்மையை உடையவையே. இதை மேலும் ஆராய்வதற்கு பதிலாக காதலியிடம் நமக்கு ஏற்படும் ஈர்ப்பும், இறைவனிடம் நாம் கொள்ளும் ஈர்ப்பும் ஒரு தன்மையானதே என்று புரிந்து கொண்டால் போதுமானது. ஆனால், மனிதர்களின் காதலும், இறைவனிடம் கொள்ளும் பக்தி / காதலும் எல்லா விதத்திலும் ஒன்றாகாது. ****************************************†*********. நான் முன்பு எழுதியது போல் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அதை பயன்படுத்தி பெறக்கூடிய புலன் இன்பம் ஓரளவிற்கு தான். பணக்காரர்கள் தமக்கு பிடித்த உணவை பத்து மடங்கு அதிகம் சாப்பிட முடியுமா என்ன?! ஆனால், அந்த இன்பத்தை அதிகரிக்க ஒரு வழி இருக்கிறது. அது தான் அந்த அதிக பணத்தை மற்றவர்களுக்கு உதவ உபயோகப் படுத்தி அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து நாமும் மகிழ்வது. இன்பத்தை நம் புலன்களுக்கு அப்பால் அதிகப்படுத்தும் வழி மற்றவர்களையும் மகிழ்ச்சிப் படுத்தி பார்ப்பது தான். ஒரு முறை நான் கோவிலுக்கு அதிகாலை சென்று கொண்டிருந்த போது, வழியில் ஒரு பெரிய ஏழைகள் க்யூ! என்னவென்று பார்த்தால் யாரோ அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஏழைகள் அவ்வளவு சந்தோஷமாக, ஆர்வமாக க்யூவில் நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் ஏதோ நானே அவர்களுக்கு அன்னதானம் அளிப்பது போன்ற ஒரு சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. அந்த காலத்தில் பணம் அதிகம் சம்பாதிப்பதே அதனால் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற எண்ணத்தில் தான் என்று ஒரு திருக்குறள் கூட இருக்கிறது. வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை அதிகம் பெறுவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது தான்!! ************************************************* மேற்கூறிய உண்மை பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், பலரும் உணராத ஒரு உண்மை இருக்கிறது. அது என்னவென்றால் மேற்கூறியது பக்திக்கும் பொருந்தும்!! ஒரு முறை உறையூர் சிவன் கோவிலில் பக்தியுடன் இருந்த போது இது எனக்கு தோன்றியது: "இந்த பக்தி உணர்வை, அதனால் வரும் மகிழ்ச்சியை எப்படி அதிகப் படுத்துவாய்?! இதற்கு ஒரு வழி இருக்கிறது; உண்மையான பக்தியில் ஆழ்ந்த அனைவரும் இதை இயற்கையாகவே செய்வர்; ஆனால், காரணம் இதுதான் என்று அவர்களுக்கு தெரியாது! அது தான், மற்றவர்களையும் பக்தியில் ஈடுபட செய்வது!! மற்றவர்களுக்கு இறை நம்பிக்கையை ஊட்டுவதும், அவர்களுக்கு பக்தியை மேலும் பெருகச் செய்வதும் நம்முடைய பக்தியையும் அதிகரிக்கும்!!' இதை பக்தியில் ஆழ்ந்த பலர் புரிந்து கொள்வர்! (பகவத் கீதையில் அர்ஜுனன்: "இறைவனை அடைந்தவர்கள் எப்படி காலம் கழிப்பர்? உலக இன்பத்தை துறந்த அவர்களுக்கு இன்பம் தான் ஏது?" என்று கேட்க, கிருஷ்ணர் கூறுவது இதைத்தான்: "அவர்கள் என்னுடைய புகழை மற்றவர்களிடம் கூறி அதனால் இன்பம் பெறுவர்"!!). இதனால் தான் அடியவர்கள் மத்தியில் இருப்பதும் மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு அவனருளால் அவன் தாள் வணங்கி உண்மையான பக்தி கிடைத்து விட்டால், இயற்கையாகவே மற்றவர்களுக்கும் அந்த நம்பிக்கையை, பக்தியை ஊட்டுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உண்மையான இறையருள் பெற்ற பலருடைய வாழ்க்கை வரலாறு இதற்கு சான்று!!************************************************** இப்போது பக்தி = காதலுக்கு வருவோம். மேற்கூறியது தான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!!. உலகியல் காதலில் என்னுடைய காதலியை மற்றவர்கள் பார்க்கக் கூட நான் அனுமதிக்க மாட்டேன்!!😄 அப்படியிருக்க மற்றவர்கள் நம் காதலியை கொஞ்சுவதற்கு அனுமதிப்போமா?! ஆனால், ஆன்மீகத்தில் இது ரிவர்ஸ்!! ஆன்மீகத்தில் என் காதலியை மற்றவர்களையும் கொஞ்ச செய்வதில் மேலும் இன்பம்!! எல்லோரும் என்னுடைய இறைவனை வழிபட வேண்டும்; அவன் புகழ் பாட வேண்டும்; அதனால் நன்மை பெற வேண்டும் என்று நினைப்பது உண்மையான பக்தி உணர்வு!! ஆக, இது போன்ற விஷயங்களில் பக்தியும், காதலும் ஒன்று என்ற உவமை பொருந்தாது! அது போல் தான் சிவபெருமானை மட்டும் தான் வணங்க வேண்டும்; வேறு கடவுளை வணங்கக் கூடாது என்பதும் இந்த பக்தி=காதல் என்ற ஒற்றுமையில் அடங்காது. அனைத்து கடவுள்களும் ஒன்றே - ஒரே பொருளில் தோன்றியவர்களே என்பதால் இந்த விஷயத்தில் தவறாகாது. சைவ சித்தாந்தம் சிவபெருமானே அனைத்து கடவுள்களுக்கும் ஆதாரம் என்று கூட கூறுகிறது!! (ஆனால், முக்தி நிலையடைய இது அவசியம் - முக்தி என்பது இறைவனுடன் இரண்டற கலப்பது; அதற்கு நிஷ்டா பக்தி தேவை தான். அதே வேளையில் மற்ற கடவுள் கள்ள காதலி என்ற உவமை பொருந்தாது!! 😄😄) ******************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம