#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் இன்று வெள்ளிக்கிழமை
இன்று மூன்றாம் பிறை
( சந்திர தரிசனம் )
மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி, செல்வத்திற்கான கடவுள் என அனைவராலும் சொல்லப்பட்டாலும், மகாலட்சுமி 16 வகையான செல்வங்களை வழங்கக்கூடிய தெய்வமாகும். குழந்தை பேறு, வெற்றி, தைரியம், பதவிகள் உள்ளிட்ட 16 வகையான செல்வங்களையும் வழங்கக் கூடியவர்கள் தான் அஷ்டலட்சுமிகள். இவர்களை முறையாக வழிபட்டு வந்தாலே வாழ்வில் எந்தவித குறையும் இல்லாமல், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.
மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்க வெள்ளிக்கிழமை ஒரு சிறந்த நாளாகும். மற்ற கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டாலும் சிறப்பு தான். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தினந்தோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடுங்கள்.
உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரத்தில் அடிக்கடி பிரச்சனைகள் வந்து, பண கஷ்டத்தால் கவலைப்படுபவர் கள், 5 ரூபாய் நாணயத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
5 ரூபாய் நாணயத்தில் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவவும். அதை மஞ்சள் நிற துணியில் வைத்து கட்டவும். அந்த நாணய முடிச்சை வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யுங்கள். மறுநாள் காலையில் அந்த பொட்டலத்தை எடுத்து உங்களுடைய அலுவலகம் அல்லது வியாபார இடத்தில் பணத்தை வைக்கும் லாக்கரில் வைக்கவும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும், தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கும்.
சில நேரங்களில் நிறைய சம்பாதித்தாலும், பணம் கையில் தங்காமல் போகலாம். வீட்டில் எப்போதும் பண பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இதற்கு வெள்ளிக்கிழமை அன்று ஒரு 5 ரூபாய் நாணயத்தை கங்கை நீரால் சுத்தம் செய்த பிறகு, அதை சில ரோஜா பூக்கள் மற்றும் அரிசியுடன் சேர்த்து லட்சுமி தேவியின் காலடியில் வைத்து அவளை வணங்கவும்.
அந்த பொருட்களை இரவு முழுவதும் பூஜை அறையில் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த பொருட்களை எடுத்து சிவப்பு துணியில் கட்டி, அதை உங்களுடைய பணப்பெட்டியில் வைக்கவும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூக்களை மாற்றி, இப்படி மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பண கஷ்டத்தில் இருந்து விடுபடலாம். உங்களுடைய வீட்டில் பொருளாதார நிலை உயரும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு பண சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றுங்கள். ஒரு சிறிய மண் கலசத்தில் மஞ்சள் கலந்த அரிசியை போடவும். அதில் கங்கை நீரால் சுத்தம் செய்த 5 ரூபாய் நாணயத்தை போடவும். அந்த கலசத்தை எடுத்து பூஜை அறையில் வைக்கவும்.
தினமும் இறைவனை வழிபடும் போது அந்த கலசத்தையும் சேர்த்து வழிபடுங்கள். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் கெட்ட சக்திகள் நீங்கும். நல்ல சக்திகள் உண்டாகும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் சந்தோஷம், அமைதி ஆகியவை நிலவும். வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க இந்த பரிகாரத்தை செய்து வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
இன்று மூன்றாம் பிறை
( சந்திர தரிசனம் )
சந்திர தரிசனம் என்பது அமாவாசைக்கு மறுநாள் (வளர்பிறை) தோன்றும் முதல் நிலவுப் பிறையை (மூன்றாம் பிறை) மாலை நேரத்தில் காண்பது ஆகும்.
இது மன அமைதி, ஆயுள் விருத்தி மற்றும் செல்வச் செழிப்பைத் தருவதாகவும், முற்பிறவி பாவங்களைப் போக்கும் எனவும் நம்பப்படுகிறது. இத்தினத்தில் விரதமிருந்து சந்திரனை வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
வழிபாட்டு முறை: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, வான்வெளியில் தோன்றும் மெல்லிய பிறை நிலவை தரிசித்து, நீர், வெள்ளை மலர்கள் மற்றும் அரிசி நிவேதனமாகப் படைத்து வழிபட வேண்டும்.
இந்த தரிசனம் நோய்களை நீக்கி, மன அழுத்தம் குறைத்து, கண் பார்வையை மேம்படுத்துவதோடு, மாங்கல்ய பலம் கூட்டும் என நம்பப்படுகிறது
நன்றி இனிய காலை வணக்கம்
வாழ்க வளமுடன்
#திங்ககிழமை செவ்வாய் கிழமை புதன் கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ... #SHARE CHAT STATUS TAMIL REELS #daily BGM status #🌻🌻காலை வணக்கம்🌻🌻