sidha ayurvedic

Dr.Ganapathi - siddha doctor
542 காட்சிகள்
22 மணி நேரத்துக்கு முன்
*#மதுமேகநோய்* - 9 1. மகேந்திர வர்ணி சிறுநீர் நெய் போல் வடியும். துணியில் நனைத்து தீ எரித்தால் விளக்கு போல் எரியும். உடல் மெலியும். தாகம் அதிகரித்து அத்தியில் சூடுண்டாகி 1 நாள் 7.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 2. இந்திர வர்ணி சிறுநீர் பசுவின் சிறுநீரின் நிறம் போல் காணப்படும். பசுவின் சிறுநீரின் வாசமும் காணும். அதைக் காய்ச்சி தீ எரித்தால் தீ எரியும். உடம்பு அசதி உண்டாகி முகம் மெலிந்து கன்னம் ஒட்டும். ஒரு வேளைக்கு 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும் என சித்தர்கள் கூறியுள்ளனர். 3. ருத்திராங்க வர்ணி சிறுநீர் பசுவின் சிறுநீர் போல் நிறம் உடையதாகவும், மாமிச வாடை உடையதாகவும், அதை காய்ச்சினால் தேன் போல் வாடையும் வரும். இளம் வயது வாலிபனுக்கு இந்நோய் வந்தால் கிழவன் போல் ஆவான். அத்தி வெந்து சுரம் உண்டாகி 1 வேளைக்கு 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 4. சூத்திர வர்ணி சிறுநீர் ஆட்டின் கொழுப்பு போல் வெளியேறும். காய்ச்சினால் ஆட்டின் நெய் போல் வாடை உடையதாகவும், இன்னும் வற்றினால் கரும்பின் சாறு போல் வாடை உடையதாகவும் காணும். லிங்கத்தில் எரிவு, குத்து, சுரம், தாகம், குமட்டல், வாந்தி காணும். ஒரு நாளில் 15 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 5. விசுவ பிறபன் சிறுநீர் யானையின் சிறுநீர் போல் நிறத்தில் காணும். மணமும் அதுபோல இருக்கும். காய்ச்சி பார்த்தால் உப்பு உறையும். மனம் தளரும். உடல் அயரும். உடல் மெலியும். ஒருவேளை 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 6. துர்கந்த வாகினி சிறுநீர் கற்றாழைச்சாறு போல் நாறும். சிறுநீரை காய்ச்சினால் பிணம் போல் நாற்றமெடுக்கும். உடல் சக்தி குறையும். கண்ணின் ஒளி மங்கும். 1 வேளை 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 7. சம்பீர வர்ணி சிறுநீரில் சுண்ணாம்பின் வாசம் வரும். தெளிய வைத்து பார்த்தால் அடியில் சுண்ணாம்பு போல் வீழ்படிவு காணும். துர்வாசம் வீசும். வெளியிடங்களில் சிறுநீர் கழித்தால் எறும்பு அரிக்கும். காய்ச்சினால் அடியில் சுண்ணாம்பு போல் படியும். 1 வேளை 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 8. மது பிறவாகினி சிறுநீர் மஞ்சள் நிறம் போல் வெளியேறும். பீசமுடன் கோசம் வலிக்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அந்நீரை சிறிது நேரம் வைத்திருந்தால் அடியில் மாவு போல் உறையும். உடல் விளறும். உடம்பின் அழகு மாறி 1 வேளை 375 மில்லி அளவு சிறுநீர் வெளியேறும். 9. சலப்பிறவாகினி சிறுநீர் படிக நிறமாக இருக்கும். பீசம் முதல் கோசம் வரை வலிக்கும். சிறுநீர் தாழை விளிர் சாற்றின் நிறம் உடையதாக இருக்கும். சிறுநீரை காய்ச்சினால் சீழ் நாற்றம் உருவாகும். 1 வேளை 750 மில்லி சிறுநீர் வெளியேறும். முகம் வாடும். மேனி குன்றும். அத்தி காயும். 10. இரத்த சலாக்கினி சிறுநீர் முயலின் சிறுநீர்போல் காணும். காய்ச்சினால் இறைச்சி நாற்றம் வரும். பீசமுடன் கோசம் வலிக்கும். உடல் மெலியும். சூடு மீறும். 1 வேளைக்கு 1.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 11. சுக்கில பிறவாகினி சிறுநீர் நிணம் போல் வெளியேறும். சிறுநீரில் வாடை காணும். காய்ச்சினால் நிண வாடை காணும். உடல் உலரும். மேனி குன்றும். உடல் தள்ளாடும். 1 வேளைக்கு 2.25 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 12. உதக வர்ணன் சிறுநீர் தெளிந்த நீர் போல் வெளியேறும். அசதி, மயக்கம், மூர்ச்சை காணும். உடல் அயர்ந்து போகும். 1 நாள் 7.5 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும். 13. மல்சிய வர்ணி சிறுநீருடன் நிணநீர் வெளியேறும். சிறுநீரை காய்ச்சினால் மீனின் வாடை உண்டாகும். உடல் உலர்ந்து உடல் வலிமை குன்றி எலும்பு காயும். 1 வேளை 2.25 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 14. தூல வர்ணன் சிறுநீர் இளநீர் போல் வெளியேறும். இளநீரின் வாசமும் இருக்கும். உடல் மெலிந்து உடல் நொந்து மன கலக்கம் காணும். அசதி, தளர்வு ஏற்படும். 1 வேளை 750 மில்லி சிறுநீர் வெளியேறும். 15. சுராரி வர்ணன் சிறுநீர் கள்ளின் நிறத்தில் வெண்மை நிறமாக நுரையோடு வெளியேறும். இதை காய்ச்சினால் கள்ளின் வாசம் வீசும். இடுப்பு பொருத்து, குறுக்கு வலிக்கும். பெண் போகம் குறையும். உடல் பலம் குறையும். 1 வேளை 750 மில்லி சிறுநீர் வெளியேறும். 16. அஸ்தி வர்ணன் சிறுநீர் சுக்கிலத்தின் நிறத்தில் வெளியேறும். சிறுநீர் வெளியேறும் போது நு}ல் போல கட்டுக்கொடியை தண்ணீரில் கலக்கினாப்போல் கட்டியாக வெளியேறும். காய்ச்சினால் புகைந்து துர்நாற்றம் காணும். 17. கசாய பிறபன் சிறுநீர் காடிநீர் போல் வெளியேறும். அதை காய்ச்சி வற்ற வைத்தால் அடியில் சுண்ணாம்பு படியும். உடம்பிலிருந்து துர்வாசம்; வீசும். அதிகமான சிறுநீர் வெளியேறும். உடம்பு உலரும். 18. நீல வர்ணன் சிறுநீர் தேனின் நிறமாக வெளியேறும். தெளிய வைத்தால் மெழுகு போல் கட்டியாகும். எறும்பரிக்கும். உடம்பிலிருந்து தேன் வாடை உருவாகும். 1 நாள் 7.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 19. லவண பிறவாகினி சுண்ணாம்பு நீர் போல் சிறுநீர் வெளியேறும். காய்ச்சினால் சுண்ணாம்பு போல் காரம் காணும். உடல் எரிந்து கடுத்து சூடு காணும். அத்திச்சூடுண்டாகி 1 வேளை 3 லிட்டர் சிறுநீர் வெளியேறும். 20. சுக்கில வர்ணன் இறைச்சி கழுவின நீர் போல் சிறுநீர் வெளியேறும். காய்ச்சினால் மாமிச வாடை காணும். நீர்த்தாரை முறுகும். உடல் பலம், உடல் வலு குறையும். உடல் தள்ளாடும். 1 வேளை 2.25 லிட்டர் சீறுநீர் வெளியேறும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
591 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
இன்றைய மருந்து தயாரிப்பு *#பிரண்டைபற்பம்* பிரண்டையின் கணு வெட்டி நீக்கி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடல் நீரில் தீட்சை செய்த சோற்றுப்பு சேர்த்து கல் செக்கில் இட்டு நன்றாக மெழுகு பதத்திற்கு ஆட்டி அடை தட்டி வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். உலர்ந்த பின் அகலில் இட்டு மேலகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்த பின் புடமிட வேண்டும். ஆறிய பின் பிரித்துப் பார்க்க வில்லைகள் வெந்து பற்பமாகி இருக்கும். *#உஷ்ணபேதி*, *#சீதபேதி* *#உடல்பருமன்* *#ஊளைச்சதை* *#ஆஸ்துமா*, *#எலும்புருக்கி*, *#மதுமேகம்*, *#நீரிழிவு* *#சூதகவலி* *#தாது நட்டம்* சிறு குழந்தைகளுக்கு அசீரணத்தால் ஏற்படும் பேதி, வயிறு உப்புசத்தினால் வேகமாகப் பீச்சி அடிக்கும பேதி, நுரைத்து பச்சையாக போகும் பேதி, சீதபேதி, தயிர் போல் கட்டி கட்டியாக வாந்தி எடுத்தல்,எது சாப்பிட்டாலும் வயிற்றில் தங்காமல் உடனே வாந்தி எடுத்தல் பெரியவர்களுக்கு வாயில் காணும் புண், வாய் நாற்றம்,*#உதடுவெடிப்பு*, *#நாக்குவெடிப்பு* (அச்சரம்) *#நாக்குபுண்*, உணவு குழல் புண், வயிற்றுப் புண், வயிற்றுக் கட்டி (குன்மக் கட்டி) கருப்பைக் கட்டி, கருப்பை புண், வெள்ளைப்படுதல், மாதவிலக்கு இல்லாத நிலை, மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி, அதிக உதிரம் , சிறுகுடல் புண், பெருங்குடல் புண்,ஆசனவாய் அரிப்பு, மலத்துடன் சீழ், ரத்தம் வருதல், சதை வளருதல் போன்ற அனைத்து வகையான *#மூலம்* *#முதுகுவலி*, *#கழுத்துவலி* சிலருக்கு மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டை பற்பம் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
533 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
*#கிரியேட்டினின்* (*#Creatinine*) கிரியேட்டினின் என்பது சாதாரண தசைச் செயல்பாட்டின் போது உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும், இது சிறுநீரகங்களால் உடலில் இருந்து வடிகட்டப்படுகிறது. கிரியேட்டினின் அளவைக் கண்காணிப்பது முக்கியமானது, ஏனெனில் இது உங்கள் சிறுநீரகங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை மதிப்பிட உதவுகிறது. கிரியேட்டினின் அளவுகளில் ஏற்படும் மிகச் சிறிய அதிகரிப்புகள்கூட, சிறுநீரகத்தில் உள்ள அடிப்படை அழுத்தம் அல்லது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகளைக் குறிக்கலாம். எனவே, முன்கூட்டியே தடுப்பதும், வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியமாகும். சிறுநீரகங்கள் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அவை கழிவு நீக்கம் மற்றும் சிறுநீர் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன, இதன் மூலம் நச்சுக்களை வெளியேற்றி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. சமீபத்திய போக்குகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின்படி, பலர் சீரம் கிரியேட்டினின் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குப் பல காரணிகள் காரணமாக இருக்கலாம். இயல்பான கிரியேட்டினின் அளவுகள் வயது, பாலினம் மற்றும் தசை அளவைப் பொறுத்து மாறுபடலாம். வரம்பிற்கு மேலான அளவுகள், சிறுநீரகச் செயல்பாட்டில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் குறிக்கலாம். சிறுநீரகங்கள், உடலில் சீரம் கிரியேட்டினின் அளவைப் பராமரிக்கும் இன்றியமையாத உறுப்புகளாகும். இந்த அளவுகள் ஒரு தனிநபரின் வயது, பாலினம், பால்நிலை மற்றும் பிற பழக்கவழக்கங்களைப் பெரிதும் சார்ந்துள்ளன. வயதில் ஏற்படும் ஒவ்வொரு 10 வருட அதிகரிப்பிற்கும், கிரியேட்டினின் அளவு நிமிடத்திற்கு 6.5 மில்லி லிட்டர் என்ற அளவில் குறையும். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்கள் உள்ளவர்களுக்கு கிரியேட்டினின் அளவைக் கண்காணிக்க வேண்டும். - சிறுநீரக செயலிழப்பு அல்லது நோய் - நீரிழப்பு - அதிக புரத உட்கொள்ளல் - தீவிரமான உடல் செயல்பாடு - சில மருந்துகள் சில சந்தர்ப்பங்களில், உயர்ந்த அளவுகள் தீவிர நோயைக் குறிக்காமல் இருக்கலாம், ஆனால் அவற்றுக்கும் கண்காணிப்பு தேவைப்படுகிறது. - சிறுநீரக வடிகட்டலுக்கு உதவ, உடலில் நீரை நன்கு தக்க வைத்துக் கொள்ளுங்கள் - கட்டுப்படுத்தப்பட்ட புரத உட்கொள்ளலுடன் சமச்சீரான உணவைப் பின்பற்றுங்கள் - மருத்துவ ஆலோசனையின்றி துணை உணவுகளை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் - இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளைக் கண்காணிக்கவும் - பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக சோடியம் உள்ள உணவுகளைக் குறைக்கவும் - உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள், ஆனால் அதிகப்படியான உழைப்பைத் தவிர்க்கவும். இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் சிறுநீரகங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கிரியேட்டினின் அளவை நிலையாகப் பராமரிக்கவும் உதவுகின்றன. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
610 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
இன்றைய மருந்து தயாரிப்பு *#உப்பு_செந்தூரம்* புலிப்பாணி – 500 ஆகாச தாமரை சாற்றில் உப்பை அரைத்து புடமிடும் பணி எல்லாவித *#அசீரணம்* (செரியாமை) *#சூலை* எல்லாவித *#குன்மம்* *#வாதகுன்மம்* *#விஷங்கள்* ஆகியவை தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக் கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3, வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்