மண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

alxstma
590 views
19 hours ago
#தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க"வாக்காளர்களுக்கு ரூ.1,000 அண்ணாமலை கிட்ட இத கேட்டு சொல்லுங்க"- செந்தில்பாலாஜி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதால் தான் அண்ணாமலை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு தான் இருக்கிறார் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் வி கே கே மேனன் சாலையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வி கே கே மேனன் சாலையிலிருந்து சித்தாபுதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு நடந்து சென்றேன் வாக்குகளை சேகரித்த செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு அண்ணாமலை ரூ.1000 கொடுத்தாரா? என நீண்ட நாட்களாக கேட்டு வருகிறேன். இதுவரை பதில் இல்லை. இப்போது நாமும் கேட்பதில்லை. 2021 தேர்தலில் அரவக்குறிச்சியில் பணம் கொடுத்தாரா? இல்லை? நேர்மையான அரசியல்வாதி எனக் கூறும் அவர் பதில் சொல்லட்டும். தேர்தலில் சுயட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது அவரவர் விருப்பம் இதில் அரசியல் கட்சி பங்கு என்ன உள்ளது?. என்னுடன் வந்தவர்களில் கரூரை சேர்ந்த 10 பேரை காட்டுங்கள். நாடாளுமன்ற தேர்தலின் போது கோவையில் அவருடன் பணியாற்றிவர்கள், அவர் அமைத்த "வார் ரூமில்" இருந்தவர்கள் கோவையை சேர்ந்தவர்களா? அனைத்திற்கு ஒரு அளவு உள்ளது. நேரலையில் காட்டுவதால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? இதனால் தான் அவர் எங்க இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறார். சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கடைசியாக தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று முதல் பிரச்சாரம் துவங்கியுள்ளனர். விரைவில் செயல் வீரர் கூட்டம் நடைபெற உள்ளது. மக்களிடம் வாக்கு கேட்க வரும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஒன்றிய அரசு கோவைக்கு கொடுத்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். எதுவும் செய்யாமல் மெட்ரோ திட்டத்தையும் புறக்கணித்தவர்கள், கோவை வளர்ச்சியில் என்ன அக்கறை செலுத்த போகிறார்கள். பாஜக அரசு அமைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கோவைக்கு என்ன செய்தார்கள்? கோவையில் வளர்ச்சி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் அந்த அளவிற்கு முதல்வர் கொடுத்துள்ளார். திராவிட மாடல் அரசு கோவைக்கு செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம், ஜி.டி.நாயுடு மேம்பாலம், மேற்கு புறவழிசாலை, ஹாக்கி மைதானம், என திட்டங்களை அடுக்கி சொல்கிறேன். அண்ணாமலை பட்டியலிட்ட ஒரு திட்டத்தையாவது சொல்லுங்கள். மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளுக்கு மெட்ரோ கொடுத்த அரசுக்கு கோவை, மதுரைக்கு கொடுப்பதில் என்ன பிரச்சனை. இங்கு மக்கள் பயணிக்க கூடாதா? இதுவரை 5 தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளேன். இது 6 வது தேர்தல் எதிர் கட்சி வேட்பாளர் அல்லது கட்சியை விமர்சித்து வாக்கு கேட்டது இல்லை. நாங்கள் என்ன செய்வோம், என்ன செய்துள்ளோம் என சொல்லி தான் வாக்கு கேட்பேன். அது மக்களிடையே நம்பிக்கை உருவாக்கும், தனிப்பட்ட விமர்சனம் என்னிடம் இருக்காது" என்றார். #தெரிந்துகொள்வோம் #
praba
661 views
2 days ago
உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் சொத்து மதிப்பு 3.30 கோடி மட்டுமே #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #📺வைரல் தகவல்🤩 படம் தயாரிக்க கோடி கணக்கான பணம் எங்கிருந்து வருது #துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் #திமுக இளைஞரணி செயலாளர்.. எம்.எல்.ஏ.. அமைச்சர்.. துணை முதலமைச்சர்..!
alxstma
605 views
4 days ago
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? விஜயகாந்த் என்ற ஆளுமையின் நிழலில் இருந்து வெளியே வந்து, இன்று தேமுதிகவின் கேப்டனாகவே கிட்டத்தட்ட பிரேமலதா விஜயகாந்த் உருவெடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் பிரேமலதாவின் வருகை திமுக கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக சென்னையில் அவர் மேற்கொண்ட சூறாவளிப் பிரச்சாரம், அறிவாலய வட்டாரங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையை சுழற்றியடித்த பிரச்சாரப் புயல் தனது கட்சி வேட்பாளர்களுக்காக மட்டும் உழைக்காமல், 'கூட்டணி தர்மம்' காப்பதில் பிரேமலதா காட்டும் வேகம் வியப்பாக உள்ளது. வட சென்னை முதல் தென் சென்னை வரை, தி.மு.க வேட்பாளர்களுக்காக அவர் மைக்கை பிடிக்கும்போது தொண்டர்களிடையே ஒரு புது உற்சாகம் பற்றிக்கொள்கிறது. தொடக்கத்தில் தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இணைந்தபோது, 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர் பதவி என்பது "அதிகப்படியான தாராளம்" என்றும், தேமுதிகவின் தற்போதைய வாக்கு வங்கிக்கு இது மிதமிஞ்சிய ஒதுக்கீடு என்றும் அரசியல் விமர்சகர்கள் முணுமுணுத்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரேமலதா மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரம் அந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கியுள்ளது. கூட்டணி வேட்பாளர்களுக்காக அவர் காட்டும் அர்ப்பணிப்பு.. குறிப்பாகப் பெண்களிடம் அவருக்குக் கிடைக்கும் பெரும் வரவேற்பும், தி.மு.க. தலைமை எடுத்த முடிவு ஒரு "மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. வெறும் இடங்களைப் பெற்றதோடு நின்றுவிடாமல், கூட்டணிக் கட்சிகளுக்கான வெற்றியை உறுதி செய்யும் ஒரு சக்தியாக மாறி, தான் ஒரு "மேக்னட்" என்பதை பிரேமலதா நிரூபித்து வருகிறார். "கேப்டன் வழியில் வந்தவர்கள் நாங்கள்... சொன்னால் சொன்னபடி செய்வோம்!" என்ற பாணியில் அவர் பேசும் பேச்சுகள், கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சாமானிய மக்களை எளிதில் சென்றடைகிறது. பெண்கள் ஆதரவு: ஒரு சைலண்ட் புரட்சி பிரேமலதாவின் பிரச்சாரக் கூட்டங்களில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் - பெண்களின் வருகை. குடும்பத் தலைவிகளிடம் அவர் உரையாடும் விதம், அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசுவது எனப் பெண்களின் 'வோட் பேங்க்'கைக் கவரும் வித்தையை அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார். தி.மு.க-வின் நலத்திட்டங்களையும், தேமுதிகவின் உறுதியையும் இணைத்து அவர் முன்வைக்கும் வாதங்கள் அடிமட்ட அளவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கிரவுண்ட் ஒர்க்: பக்கா பிளான்! வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், களப்பணிகளிலும் தேமுதிகவினர் காட்டும் தீவிரம் தி.மு.க நிர்வாகிகளையே வியக்க வைத்துள்ளது. பூத் கமிட்டி வேலைகள் முதல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது வரை, தி.மு.க மற்றும் தேமுதிக தொண்டர்கள் இடையே ஒரு சுமூகமான ஒருங்கிணைப்பு தெரிகிறது. இந்தத் தேர்தலில் பிரேமலதா ஒரு 'மேக்னட்' போலச் செயல்படுகிறார். கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும், அதே சமயம் மக்களிடம் ஒரு நம்பிக்கையை விதைப்பதிலும் அவர் வெற்றி பெற்று வருகிறார். தி.மு.க கூட்டணிக்குத் தேமுதிக ஒரு பலமான சேர்க்கை என்பதைத் தனது உழைப்பால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் பிரேமலதா. கேப்டன் இல்லாத முதல் பெரிய தேர்தல் களம் இது என்றாலும், அந்தப் பொறுப்பைத் தோளில் சுமந்து செயல்படுகிறார் 'பிரேமலதா'. இந்த உழைப்பு வாக்கு எண்ணிக்கையில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! #💪தி.மு.க #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #தெரிந்துகொள்வோம் #
alxstma
626 views
6 days ago
#தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் # நேரம் 2.05 am இன்று மாலை கரூரில் கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் பிரச்சாரக் கூட்டத்தை சிறப்புடன் முடித்துவிட்டு, தலைவரோடு ஈரோடு சென்று அங்கே நாளை காலை தலைவர் பிரச்சார பணிகளை பார்த்துவிட்டு இரவு 12.05 க்கு கோவை கொடிசியா திடலுக்கு வந்தார் அண்ணன் #செந்தில்பாலாஜி இங்கே நாளை மாலை நடைபெறவுள்ள தலைவர் பிரச்சாரக்கூட்ட பணிகளை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கி புறப்படும் போது மணி 2.05 …. ஆம், அதனால் தான் சொல்கிறேன் அண்ணன் #உழைப்பால்_உயர்ந்தவர்