தைப்பூச விரதம்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.4K views
2 months ago
தைப்பூசம் 2026, பிப்ரவரி 1, ஞாயிறு அன்று வருகிறது. இந்த நாளில் நீங்கள் கேட்க வேண்டிய அல்லது பாட வேண்டிய முருகன் பாடல், வரிகள் இங்கே. தைப்பூசம் 2026 முருகன் பாடல் வரிகள் - Thaipoosam 2026 Murugan Song Lyrics in Tamil அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகாஎன்று ஓதுவார் முன். வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் தொளைத்த வேலுண்டே துணை. விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே. சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே. திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப் பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும் மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும் குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே. கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே. மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல் கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுர பூபதி மேருவையே. ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல் ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்! இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்! #🙏தைப்பூசம்🕉️ #தைப்பூச விரதம்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.2K views
2 months ago
வீட்டில் முருகர் விக்கிரகம் வைத்து இருப்பவர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். படம் மட்டும் வைத்து இருப்பவர்கள் ஒரு டம்ளர் பாலை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். இது காலை வழிபாடு. அதன் பிறகு விரதத்தை ஆரம்பிக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு விசேஷமாக பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் வருவதால் நாள் முழுக்க விசேஷம் தான். அதனால இது சிறப்பான வழிபாடாக அமையும். வழிபாட்டுக்கு உகந்த நேரம் இதுதான். தைப்பூசம் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தான் வருது. இந்த ஆண்டு அதிகாலையிலேயே பிரம்ம முகூர்த்தத்துல கும்பிடலாமா என்றால் தாராளமாக வழிபாடு செய்யலாம். 1.2.2026 தைப்பூசத்தன்று அதிகாலை 4.41 மணி முதல் ஆரம்பித்து 2.2.2026 அன்று அதிகாலை 4.43 அன்று பௌர்ணமி முடிகிறது. பூச நட்சத்திரம் 1.2.2026 அன்று அதிகாலை 1.54மணிக்கு ஆரம்பித்து 2.2.2026 அன்று அதிகாலை 1.01 மணிக்கு முடிகிறது. ஆக 1ம் தேதி முழுநாளும் பௌர்ணமியுடன் பூசம் இணைந்துள்ளது. அதனால் அன்று அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை வழிபடலாம். அல்லது காலை 8 மணி முதல் 9.30 மணி வரை வழிபடலாம். மதியம் இலை போட்டு படையல் போடுபவர்கள் 1.35 மணி முதல் 2.35 மணி வரையும், மாலை 6 மணிக்கு மேலும் படையல் போடலாம். மாலையில் விரதம் விடுபவர்கள் இலை போட்டு படைக்கலாம். அல்லது பால் வைத்து விரதம் ருக்கலாம். அவர்கள் 6மணிக்கு மேல் இந்த நேரத்தை வழிபட பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாளில் மாலை 6 மணிக்கு மேல் நெய் விளக்கு அல்லது சாதாரணமாக எண்ணை ஊற்றி விளக்கேற்றுங்க. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார். #தைப்பூச விரதம் #🙏தைப்பூசம்🕉️