thannambikkay vaasagam

raja
651 views
4 days ago
https://way2.co/MTk4MDE2Mzc=_lng2/1000 #thannambikkai.
saravanan
397 views
8 days ago
#thannambikkay vaasagam ஒரே வழி தன்னம்பிக்கை! தன் வீட்டின் சாவியைத் தொலைத்த ஒருவர் அதை ஊருக்கு வெளியே தேடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மற்றொரு நபர், “என்ன தேடுகிறீர்கள்?” எனக் கேட்டிருக்கிறார். நான் “என் சாவியைத் தேடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர். “உங்களது சாவியை எங்கேத் தொலைத்தீர்கள்?” என்று அவர் கேட்டதற்கு, “எனது வீட்டுக்கருகில்” என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர். ஆச்சர்யமடைந்த அந்த நபர், “வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்து விட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?” என்றாராம். அதற்கு சாவியைத் தொலைத்தவர், “இங்கே தானே வெளிச்சமாக இருக்கிறது?” என்று சொன்னாராம். இது போலத்தான், நம்மில் பலர் லட்சியத்தை எட்டுவதற்கான திறமை தமக்குள் உண்டு என்பதை உணராமல் அதை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம். பல லட்சியங்கள் இருந்தும் நமக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரத் தெரியாமல், அதை அடைவதற்கான முயற்சியில் தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம் தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக் கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமான ஒன்று தன்னம்பிக்கை. அது ஒன்றே அதற்கான வழி. நம் பலம் நமக்கே தெரியாதததால் தான் வெற்றி கைநழுவிப் போகிறது; நம்மை நாம் உணர்ந்தால் மட்டுமே வெற்றியை எளிதில் அடைய முடியும். 😊
saravanan
460 views
12 days ago
#thannambikkay thulirgal நீண்டு கொண்டே போனால் சலிப்பு ஏற்படும் என்பதாலே நிறைய கதாபாத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது விதி.*_ _ஒரு மனிதர் ஒரு கலைஞரிடம் கேட்டார்,_ _கல்லிலிருந்து இவ்வளவு அழகான பொருட்களை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள்_ _*அதற்கு அவர் பதிலளித்தார். அழகு ஏற்கெனவே அங்கே மறைந்துள்ளது.*_ _*நான் தேவையற்ற கல்லை மட்டும் அகற்றுகிறேன்.*_ _அதுபோல உங்கள் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே மறைந்துள்ளது._ _உங்கள் கவலைகளை மட்டும் நீக்கி விடுங்கள்._
saravanan
534 views
17 days ago
#thannambikkay vaarthaygal *_வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி எது தெரியுமா?_* _வாழ்க்கையில் மகிழ்ச்சியின் அருமையை உணர சோகமும், உறவுகளின் மேன்மையை உணர தனிமையும் எத்தகைய பாடங்களைக் கற்றுத் தருகின்றன என்பதை இது விவரிக்கிறது._ * 🌹🌹🌹ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய வெற்றி எது தெரியுமா? சூழ்நிலையை கற்பூரம் மாதிரி பற்றிக்கொள்ள வேண்டும். அதனை இறை நம்பிக்கையோடு வணங்குவது போல் நம்முடைய செயல்கள் அனைத்தும், மற்றவர்கள் மதிக்கும்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாழவேண்டும். அதேமாதிரி உங்கள் வாழ்க்கையில் தினமொரு விடியல் நமக்கானது, தினமொரு வாய்ப்பு நமக்கானது என்று நினைத்து சிந்தனையை தூண்டிவிடுங்கள். அதற்காக தினமொரு வெற்றி அடைய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் காலம் பொன் போன்றது என்று உணர்ந்து, அன்றைய தினத்தை வீணாக்கி, தோல்வி அடைந்து விடாதீர்கள். அதுமாதிரி வாழ்க்கையில் ஆயிரம் பேரைக் கூட துணிவோடு எதிர்த்து நிற்பது தவறில்லை. ஆனால் ஒருநாளும் யாரையும் எதிர்பார்த்து நின்று விடாதீர்கள். அதேபோல் முடியாது என்பதை கடைசியில் யோசியுங்கள். எப்படி முடிப்பது என்பதை முதலில் யோசிக்கப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி அடைவதோடு, நேர்மறை எண்ணங்கள் உங்கள் இதய வாசலை வந்து தட்டும். உங்கள் மனதில் விதைக்கப்படும் எண்ணங்களுக்கும், நீங்கள் செயல்படுத்த நினைக்கும் செயலுக்கும் எந்தவித மாற்றத்தையும் செய்து, குழம்பிய குட்டைபோல், மாறாமல், தெளிந்த நீரோடை போல் இருங்கள். அப்போதுதான் உங்கள் இலக்கு வெற்றி அடையும். வாழ்க்கையில் ஒருபோதும் தன் புகழ்ச்சிக்காக வாழாதீர்கள். ஏனென்றால், அப்படி வளர்ந்துக் கொண்டால், அடுத்தவன் நம்பிக்கையை நாட வேண்டி வரும். தன்னுடைய போராட்டத்தில் வாழும் யவருக்கும் தன்னுடைய நம்பிக்கை ஒருபோதும் கைவிடாது. அதேபோல் சில சமயங்களில் சோகப்படுவது தவறில்லை. அப்போதுதான் ஆனந்தத்தின் அருமை உங்களுக்கு புரியும். அதேபோல் நம்மோடு பழகியவர்கள் யாருக்காவது கவலைபடும் சூழ்நிலை வரும்போது கண்ணீர் விடுங்கள். அப்போதுதான் புன்னகையின் மகிமையை உணர முடியும். அதேபோல் மொழி புரியாத தேசம் செல்லுங்கள். அப்போதுதான் பலமொழிகள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் புரியும். அதேபோல் அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகிப் பாருங்கள். தனிமையில் வேதனை அறிய முடியும். அதேபோல் குற்றவாளிகளின் கதறல்களை கேட்டுப்பாருங்கள். முன் கோபத்தின் பின்விளைவுகள் எப்படிப்பட்டது என்று தெரியும். ஒருபோதும் நீங்கள் யாருக்கும் ஞானியாக இருக்க நினைக்காதீர்கள். மனம் தலைக்கனத்தை தூண்டில் போட்டு உள்ளே இழுக்கும். ஆகவே எப்போதும் மனிதனாக இருக்க பயற்சி செய்யுங்கள். நீங்கள் எப்படிப்பட்ட உயரத்தில் இருந்தாலும், ஒரு நாளாவது சாதாரண மனிதனாக ஊர் சுற்றிப் பாருங்கள். வறுமையின் கொடுமை தெரியும். மண்குடிசைப் பக்கம் போய் வாருங்கள். அன்றாடம் காய்ச்சியின் அழுகுரல் கேக்கும். இதுதான் மனித வாழ்க்கை என்பது புரியும் போது, தானாக உங்களுக்குள் தன்நலமற்ற சிந்தனையும், மனிநேயம் என்கிற மனபக்குவமும் வரும். வாழ்க்கையில் எதையும் உழைத்து பெறவேண்டும் என்ற நிலையே மிகப்பெரிய நமக்கான வரம். அதேபோல் எல்லாம் நமக்கு இருக்கிறது என்று மனம் நிறைவாக இருக்கும் மனநிலையே மிகப்பெரிய நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான அஸ்திவாரம் என்பதை உணர்ந்து வாழ்வதே சாலச் சிறந்தது. வாழ்க்கையில் நெல்முனை அளவுகூட பிணக்கு இல்லாமல் வாழ நினைக்கும் மனோ நிலையே மிகச்சிறந்த பண்பின் வெளிப்பாடு. யாரைப் பற்றி நினைக்கிறபோதும், உங்களை அறியாமல் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான தருணம். பேசுவதை விட செயலில் துடிப்பாக இருங்கள். உங்கள் வெற்றி மற்றவர்களைப் பேச வைப்பதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். வாழ்க்கைப் பாதையை சரியாக அமைத்தூக் கொண்டால், வேகமாக அல்ல, நிதானமாக சென்றாலும் இலக்கின் முடிவில் வெற்றிதான் என்பது எழுதப்படாத உண்மை! 🌹🌹🌹
saravanan.
544 views
2 months ago
#thannambikkay vaarthay. பத்தாவது முறையாக கீழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது — “நீ ஒன்பது முறை எழுந்தவன்” என்று! வாழ்க்கை விழுதல்களை எண்ணும். ஆனால் இயற்கை எழுச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ளும். நீ பத்தாவது முறையாக விழுந்திருந்தாலும், அதற்கு முன் ஒன்பது முறை எழுந்திருக்கிறாய். அதுதான் உன் அடையாளம். வீழ்வது பலவீனம் அல்ல. மீண்டும் மீண்டும் எழுவது — அதுவே வலிமை. --- 🔟 10 விரிவான விளக்கங்கள் --- 1️⃣ உலகம் விழுதலைப் பார்க்கும், ஆனால் உன் வலிமை எழுச்சியில் இருக்கிறது மக்கள் உன் தவறுகளை விரைவாக கவனிப்பார்கள். ஆனால் உன் முயற்சிகளையும் எழுச்சிகளையும் இயற்கை கணக்கில் வைக்கும். --- 2️⃣ ஒவ்வொரு எழுச்சியும் உன்னை பலப்படுத்துகிறது முதல் முறையாக விழுந்த போது நீ பலவீனமாக இருந்தாய். ஒன்பதாவது முறையில் எழுந்த போது நீ முன்பைவிட பலமானவன். --- 3️⃣ விழுவது இயல்பு — எழுவது தேர்வு வீழ்வு ஒரு சம்பவம். எழுச்சி ஒரு முடிவு. அந்த முடிவு தான் உன் வாழ்க்கையை நிர்ணயிக்கும். --- 4️⃣ தோல்வி உன்னை வரையறுக்காது ஒரு தோல்வி உன் முழு வாழ்க்கையை நிர்ணயிக்காது. தொடர்ந்து எழுந்து நின்றால் உன் பயணம் தொடரும். --- 5️⃣ பூமி உன் பொறுமையை அறியும் நீ எத்தனை முறை விழுந்தாய் என்பது அல்ல முக்கியம். நீ எத்தனை முறை தாங்கி மீண்டும் முயன்றாய் என்பதே உண்மை. --- 6️⃣ எண்ணிக்கை விழுதலின் அல்ல, எழுச்சியின் பத்து முறை விழுந்திருந்தாலும், ஒன்பது முறை எழுந்தாய். அதுவே பெருமை. அதுவே மனவலிமை. --- 7️⃣ மீண்டும் முயற்சிக்கும் மனம் வெற்றியின் விதை விழுந்த பிறகு “இது முடிவு அல்ல” என்று சொல்லும் மனமே வெற்றியை உருவாக்கும். --- 8️⃣ சோர்வான தருணம் உன் சக்தியை சோதிக்கும் பத்தாவது முறையில் விழும் போது தான் மனம் களைப்படையும். ஆனால் அப்போது கூட எழும் மனமே அசாதாரணம். --- 9️⃣ எழும் பழக்கம் உருவாகும் மீண்டும் மீண்டும் எழும் போது அது உன் குணமாக மாறும். பிறகு விழுந்தாலும் பயமில்லை. --- 🔟 ஒருநாள் விழுதலே நிற்கும் நீ தொடர்ந்து எழுந்தால், ஒருநாள் விழுவது குறையும். ஏனெனில் அனுபவம் உன்னை வழிநடத்தும். --- 🌄 முடிவுரை நீ இன்று பத்தாவது முறையாக விழுந்திருக்கலாம். ஆனால் நினைவில் கொள் — நீ ஒன்பது முறை எழுந்தவன். அதுவே உன் அடையாளம். அதுவே உன் வலிமை. பத்தாவது முறையாக கீழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது — “நீ ஒன்பது முறை எழுந்தவன்” என்று. இன்னொரு முறை எழு. இந்த முறை — நீ பத்து முறை எழுந்தவன் ஆகுவாய். 🌍🔥✨ 🌹🌹🌹