*யார் இவர் வைகோ?
ஆண்டு 2005..
நாள் செப்டம்பர் 22..
நேரம் மதியம் 2:00 மணி..
வைகோ அவர்களின் கைபேசி ஒலிக்கிறது..
மறுமுனையில்,"அய்யா..என் பெயர் மகிழன்..அமெரிக்காவில் கரீபியன் கடலில் அமைந்திருக்கும் கிராண்ட் கேமரூன் தீவிலிருந்து பேசுகிறேன்;
அய்யா..கடந்த நான்கு நாட்களாக இந்த தீவில் கடுமையான கடல் கொந்தளிப்பு;
கடல் மட்டம் ஏகமாக மேலேறி வந்து விட்டது;
எந்த நேரமும் இந்த தீவு கடலில் முற்றிலுமாக மூழ்கிவிடும் நிலையில் உள்ளது;
இந்திய தூதரகத்தின் கதவை தட்டினோம்;
டெல்லிக்கும் செய்தி அனுப்பினோம்;
எந்த பலனும் இல்லை;
இறுதியாக ஜலசமாதிதான் என்ற முடிவோடு இருக்கும்போதுதான் எனது நண்பனிடம் பேசினேன்;
நிலைமையைச் சொல்லி அழுதேன்;
அவன்தான் வைகோ அவர்கள் நிச்சயம் உங்களைக் காப்பாற்றுவார் என்றுகூறி உங்களது கைபேசி எண்ணை கொடுத்து முறையிடச் சொன்னான்..
அய்யா..! நாங்கள் மொத்தம் 153 பேர் இருக்கிறோம்..
எப்படியாவது எங்களை காப்பாற்றுங்கள் அய்யா.."
என்று கூறி அழுகிறார்..
வைகோ அவர்கள் அவருக்கு ஆறுதல் கூறிய கையுடன் அப்போது பிரதமராக இருந்த திரு.மன்மோகன்சிங் அவர்களை உடனடியாக கைபேசியில் தொடர்பு கொள்கிறார்;
அப்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார்;
அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்படப்போகும் பரபரப்பான சூழல்;
பிரதமரின் உதவியாளர் போனை எடுக்கிறார்;
"நான் தமிழ்நாட்டிலிருந்து வைகோ பேசுகிறேன்..
பிரதமருடன் பேசவேண்டும்"
என்கிறார்;
"இப்போது பிரதமர் தூங்கிக்கொண்டிருக்கிறார்..காலையில் பேசுங்கள்" என்கிறார் உதவியாளர்;
"முடியாது..மிக அவசரம்..அவரை எழுப்பி நான் வைகோ என்று சொல்லுங்கள்.." என்கிறார்;
இறுதியில் பிரதமரிடம் நிலையை வைகோ அவர்கள் விளக்குகிறார்..
அடுத்து பிரதமரிடமிருந்து அமெரிக்காவிற்கான இந்திய தூதருக்கு போன் பறக்கிறது;
அங்கேயிருந்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ரொனால்ட் சென்னுக்கு தகவல் வருகிறது;
அவரிடமிருந்து பென்டகனுக்கு தகவல் செல்கிறது;
உடனடியாக சிறிய ரக போர் விமானங்கள் நான்கு புறப்படுகின்றன;
சாவின் விளிம்பிலிருந்த அந்த 153 தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்படுகின்றனர்;
வைகோ அவர்களிடம் உதவி கேட்டு மகிழன் போன் செய்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்..
**இவர்தான் வைகோ..
#தலைவர் வைகோ