🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ்

திருநீற்றுச் சுவடு
616 views
24 days ago
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 சக்கர மத்தா லலிதாம்பாள். அனைத்து தெய்வங்கள் பசுவில் உள்ளது பசுவிற்கு உணவளித்தால் வரும் பலன் திங்கள்தோறும் வாழைப்பழம், புல், அகத்திக்கீரை பசுவிற்கு அளித்தால் தாய் மற்றும் தகப்பன்வழி நமக்கு வந்த தோஷங்கள் நீங்கும். செவ்வாய்தோறும் தண்ணீருடன் புல் கொடுத்தால் இடம், நிலம் வீடு அமையும் புதன் தோறும் பசுவிற்கு புல் கொடுத்துவந்தால் நல்ல வேலை கிடைக்கும் வியாழன் தோறும் அரிசிக்கஞ்சி அளித்தால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும் வெள்ளிதோறும் பசுவிற்கு உணவளித்து பூஜை செய்தால் மஹாலட்சுமியின் அருள் கிடைக்கும் சனிதோறும் அகத்திக்கீரையுடன் புல் மற்றும் தண்ணீர் அளித்தால் இந்த ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் தொலையும் ஞாயிற்றுக்கிழமை தோறும் பசுவிற்கு உணவளிக்க நல்ல கண் பார்வை கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும். அஷ்டமி தோறும் பசுவினை ஒருமுறை வலம் வந்து உணவளித்தால் கொடுத்த கடன் / வாராக்கடன் கிடைக்கும் துவாதசி தோறும் பசுவிற்கு உணவளிக்க ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிட்டும். தினமும் பசுவினை குளிப்பாட்டி பராமரித்து உணவளித்து நோய்களில் இருந்து காத்து கன்றுக்கு அளித்த பால் போக மீதமுள்ள பால் கறந்து தெய்வத்திற்கு.🙏🌹
திருநீற்றுச் சுவடு
587 views
26 days ago
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 இறைவனது நாமத்தால் நமது நாக்கு புனிதம் அடைகிறது.🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 பேதை நெஞ்சே! கேளாய்! வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல் நஞ்சனிந்த கண்டனுக்கே ஆளாகி அன்பு செய்வாயாக. கோளிலி எனும் தலத்தில் உறையும் பெருமானின் திருநாமம் தான் நம் பல தலைமுறைக்கும் நன்மையை அளிக்க வல்லது. "சிவாய நம" எனும் அவரது நாமத்தையே செபித்து வருவாயாக.🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 திருக்கோளிலியில் எழுந்து அருள் பாலித்து வரும் இறைவி வண்டார்பூங்குழலியம்மை உடனுறை இறைவன் கோளிலி நாதேசுவரர் அருளுடன் ஆனந்தமான திங்கட்கிழமை காலை வாழ்த்துக்கள் .🙏🏻🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க ஆனந்தமுடன்.🙌🏻🙌🏻🙌🏻*
திருநீற்றுச் சுவடு
2.4K views
1 months ago
💐💐💐💐🙏27 நட்சத்திரத்தில் பிறந்த கடவுள்கள்.உங்கள் நட்சத்திர தெய்வம்.!!!💐💐💐💐💐🙏 🌟அசுவினி💐 அஸ்வத்தாமன்பிறந்தார். அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீசரஸ்வதிதேவி 🌟பரணி💐 துரியோதனன்பிறந்துள்ளார். அதிர்ஷ்ட தெய்வம்: துர்காதேவி 🌟கிருத்திகை💐 கார்த்திகேயன் பிறந்துள்ளார் அதிர்ஷ்ட தெய்வம்: முருகப்பெருமான் 🌟ரோகிணி💐 கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ கிருஷ்ணர் 🌟மிருகசீரிஷம்💐 புருஷமிருகம் பிறந்துள்ளது. அதிர்ஷ்ட தெய்வம்: சிவபெருமான் 🌟திருவாதிரை💐 கருடன் ருத்ரன் ஆதிசங்கரர் மற்றும் ராமானுஜர் பிறந்துள்ளனர் . அதிஷ்ட தெய்வம் : சிவபெருமான் 🌟புனர்பூசம்💐 ராமன் பிறந்துள்ளார் அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீராமர் 🌟 பூசம்💐 பரதன் பிறந்துள்ளார் , அதிஷ்ட தெய்வம்: ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 🌟ஆயில்யம்💐 தர்மராஜ,லட்சுமணன் சத்ருக்கனன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். அதிர்ஷ்டதெய்வம் : ஆதிசேஷன் 🌟மகம்💐 சீதை ,அர்ச்சுனன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ சூரிய பகவான் 🌟பூரம்💐 பார்வதி, மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளனர் அதிர்ஷ்ட தெய்வம்: ஆண்டாள் தேவி 🌟உத்திரம்💐 மகாலட்சுமி மற்றும் குரு பிறந்துள்ளனர் அதிர்ஷ்ட தெய்வம்: மகாலட்சுமி தேவி 🌟அஸ்தம்💐 நகுலன், சகாதேவன் மற்றும் லவ குஷ பிறந்துள்ளனர் அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ காயத்திரி தேவி. 🌟சித்திரை💐 வில்வம் மரம் பிறந்துள்ளது அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 🌟சுவாதி💐 நரசிம்மர், அதிஷ்ட தெய்வம்: ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 🌟விசாகம்💐 கணேசர் அதிர்ஷ்ட தெய்வம் : முருகப் பெருமான் 🌟அனுசம்💐 நந்தனம் அதிர்ஷ்ட தெய்வம் : லட்சுமி நாராயணர் 🌟கேட்டை 💐 தர்மன் அதிர்ஷ்ட தெய்வம் : ஸ்ரீ வராக பெருமாள் 🌟 மூலம்💐 அனுமன்மற்றும் ராவணன் அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ ஆஞ்சநேயர் 🌟பூராடம்💐 பிரகஸ்பதி அதிர்ஷ்ட தெய்வம் : ஜம்புகேஸ்வரர் 🌟உத்திராடம் 💐 சல்யன், அதிர்ஷ்ட தெய்வம் : ஸ்ரீ விநாயகப் பெருமான் 🌟திருவோணம்💐 வாமனன், விபீஷணன் மற்றும் செவ்வாய் பிறந்துள்ளார் அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ ஹயக்ரீவர் 🌟அவிட்டம் 💐 தந்துபி வாத்தியம் பிறந்துள்ளது அதிர்ஷ்ட தெய்வம்: அனந்த சயனப் பெருமாள் 🌟சதயம்💐 வருணன் அதிர்ஷ்ட தெய்வம் : ஸ்ரீவிஷ்ணு 🌟பூரட்டாதி💐 கர்ணன் மற்றும் குபேரன் பிறந்துள்ளார். அதிர்ஷ்ட தெய்வம் : ஸ்ரீ மிருத்யுஞ்சஜேஸ்வரர் 🌟உத்திரட்டாதி💐 ஜடாயு மற்றும் காமதேனு அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ மஹஈஸ்வரர் 🌟ரேவதி💐 அபிமன்யு மற்றும் சனி பகவான் அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ அரங்கநாதன் 💐💐💐💐🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
திருநீற்றுச் சுவடு
1.9K views
1 months ago
#✡️ஜோதிட பரிகாரங்கள் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🔍ஜோதிட உலகம் 🌍 *பாலாம்பிகை* *தேவி* : ஸ்ரீ பாலாம்பிகை தேவி சக்தி வழிபாட்டில் மிக உயர்ந்த தெய்வமாகக் கருதப்படும் பராசக்தியின் (ஆதி பராசக்தி) ஒரு அரிய மற்றும் கருணைமிகு குழந்தை வடிவமாகும். “பாலா” என்பது குழந்தை, “அம்பிகை” என்பது தாய்தெய்வம் என்று பொருள். அதனால், குழந்தை வடிவில் அருள்புரியும் அம்பாள் என்ற அர்த்தம் கிடைக்கிறது. ஸ்ரீ பாலாம்பிகையின் தத்துவம் ஸ்ரீ பாலாம்பிகை தேவி நிர்மலமான (தூய்மையான) சக்தியின் வடிவம். குழந்தை போன்ற எளிமை, பாசம், அன்பு கொண்ட தெய்வம். பக்தர்களுக்கு விரைவாக அருள் வழங்கும் அருள் வடிவம். இந்த அம்மன் வடிவம் நமக்கு சொல்லும் முக்கிய கருத்து “தூய மனதுடன் வேண்டினால், கடவுள் உடனே அருள்புரிவார்” என்பதாகும். உருவ வடிவம் ஸ்ரீ பாலாம்பிகை பொதுவாக 9 வயது குழந்தை வடிவில் காணப்படுவார். கையில் ஜபமாலை, புத்தகம், அபய ஹஸ்தம் (அஞ்ச வேண்டாம் என்று அருள்), வரத ஹஸ்தம் (வரம் அளிக்கும் கையே). அவள் முகத்தில் எப்போதும் புன்னகை, கருணை, சாந்தம் இருக்கும். புராண சம்பந்தம் ஸ்ரீ பாலாம்பிகை என்பது ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் குழந்தை வடிவம். இந்த வடிவம் ஸ்ரீவித்யா உபாஸனையில் மிக முக்கியமானது. • லலிதா அம்பாள் → முழுமையான சக்தி • பாலாம்பிகை → அந்த சக்தியின் குழந்தை பருவம் இந்த வடிவத்தில் அம்பாள் எளிதில் அணுகக்கூடியவர். பக்தர்களின் வேண்டுதல்களுக்கு உடனடி பதில் அளிப்பவர். பாலாம்பிகை வழிபாட்டின் முக்கியத்துவம் ஸ்ரீ பாலாம்பிகையை வழிபட்டால்: ✓ கல்வியில் சிறப்பு (மாணவர்களுக்கு மிக உகந்தது) ✓ புத்திசாலித்தனம் மற்றும் நினைவாற்றல் ✓ குழந்தைப்பேறு ஆசீர்வாதம் ✓ மன அமைதி ✓ விரைவான விருப்ப நிறைவேற்றம்
திருநீற்றுச் சுவடு
778 views
1 months ago
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் _*ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தைப்பூசத் திருவிழாவின்போது தனது தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு பட்டுப்புடவை, மாலை, வளையல், மஞ்சள், குங்குமம், பழங்கள் மற்றும் கரும்பு போன்ற மங்கலப் பொருட்களைச் சீர்வரிசையாக வழங்குகிறார்.*_ * _*இந்தச் சீர், ஸ்ரீரங்கத்திலிருந்து கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்டு, மாரியம்மனுக்குச் சிறப்புப் பூஜைகளுடன் சமர்ப்பிக்கப் படுகிறது.*_ 🪔 _*முக்கிய அம்சங்கள் :*_ * _*வழங்குபவர்: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் (ரங்கநாதர்).*_ * _*பெறுபவர்: சமயபுரம் மாரியம்மன்.*_ * _*நேரம்: தைப்பூசத் திருவிழா (பொதுவாக தை மாதம்).*_ * _*சீர் பொருட்கள்: பட்டு வஸ்திரம் (புடவை), மாலை, வளையல், மஞ்சள், குங்குமம், பழங்கள், கரும்பு, மற்றும் மங்கலப் பொருட்கள்.*_ * _*இடம்: கொள்ளிடக்கரை (திருச்சி).*_ * _*சமயபுரம் மாரியம்மன், ரங்கநாதரின் தங்கை என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த அண்ணன்-தங்கை உறவை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.*_ 🙏🙏🙏🙏🙏🙏🙏 #🔍ஜோதிட உலகம் 🌍
திருநீற்றுச் சுவடு
1.5K views
1 months ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔍ஜோதிட உலகம் 🌍 அம்பாள் இருக்கும் பச்சை பட்டினி விரதம்! சமயபுரம் மாரியம்மன் உலக மக்களின் நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம். மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பச்சை பட்டினி விரதம் மிகவும் சிறப்புக்குரியது. அன்றைய தினம் முதல் பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிறு வரை இந்த விரதத்தை அனுஷ்டித்து அம்மன் கடும் தவத்தில் இருப்பதாக ஐதீகம். இந்த விரதம் 28 நாட்கள் கொண்டது. இந்த விரத காலத்தில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியமாகப் படைக்கப்படாது. அதற்கு பதிலாக துள்ளுமாவு, திராட்சை, இளநீர், பானகம், ஆரஞ்சு பழம் போன்றவை அம்மனுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படும். அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் அம்மனை மனதில் கொண்டு அந்த ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைபிடிப்பது வழக்கம். அடுப்பு தீயில் தாளிக்காமல், காலில் செருப்பு அணியாமல் இளநீரும் நீர் மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருக்கும் விரதம் இது. அம்மனின் பச்சை பட்டினி விரதம் இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக கருவறையில் உள்ள அம்மனுக்கு பூக்கள் அபிஷேகம் செய்யப்படும். இதனை பூச்சொரிதல் என்பார்கள். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது சமயபுரம் மாரியம்மன் சுதையிலான சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து  மகாமாரியம்மன் அருள் பாலிப்பது தனி சிறப்பாகும். சுயம்பு திருமேனியாக, நவகிரக ஆதிக்கத்தோடு அருளும் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் பக்தர்களின் நவகிரக தோஷம் அகலும் என்பது ஐதீகம். இந்தத் தலத்தின் உற்சவர் திருமேனியில் ஆயிரம் கண்களும், அஷ்ட புஜங்களுடனும் விளங்குவது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடையாது அரிய காட்சியாகும். தட்சனின் யாகத்துக்குச் சென்ற தாட்சாயணி வேள்வி குண்டத்தில் தனது உயிரை மாய்த்தபோது அந்த உடலை தூக்கி வைத்துக்கொண்டு சிவன் ருத்ர தாண்டவம் ஆடியதில் அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் சமயபுரத்திற்கு கண்ணனூர் என்ற பெயரும் உண்டு. மும்மூர்த்திகளின் வேண்டுகோளை ஏற்று மாயாசுரணையும் அவனுடைய சகோதரர்களையும் வதம் செய்து தலைகளை தன் உடலில் ஒட்டியாணமாக அணிந்து மக்களை காப்பாற்றிய அம்பிகையின் சிறப்பு மிக்க கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில்  அசுரர்களை வதம் செய்த பாவத்தைப் போக்கவும் உலக நன்மைக்காகவும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து வருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தன்னை வழிபடும் பக்தர்களின் நலனுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்கும் சமயபுர மாரியம்மனை வணங்கி அவளின் பேரருளைப் பெறுவோம்.