aalayam arivom.

saravanan.
1.1K views
1 days ago
#aalayam arivom. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,* *மூலவர் : ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்).* *அம்மன்/தாயார் : காமாட்சி (ஏழவார்குழலி).* *தல விருட்சம் : மாமரம்.* *தீர்த்தம் : சிவகங்கை.* *ஊர் : காஞ்சிபுரம்.* *மாவட்டம் : காஞ்சிபுரம்-631501.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:00 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.* *+91-44-2722 2084.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.* *இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.* *பொது தகவல் : மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.* *அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.* *பிரார்த்தனை : இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.* *இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.* *நேர்த்திக்கடன் : சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.* *தலபெருமை : காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.* *சுந்தரரருக்கு அருள் : கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார்.* *எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.* *பிருத்வி தலம் : பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.* *சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.* *தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.* *சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் ஊன்றுகோல், காஞ்சி - இடக்கண், திருவாரூர்-வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.* *ஒற்றை மாமரம் : ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.* *அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் -ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.* *இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.* *நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்) : திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.* *தல வரலாறு : கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.* *இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் -இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.* *சிறப்பம்சம் : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது.* *நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.* *இருப்பிடம் : காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்றுவிடலாம்.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை.* *அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை.* *தங்கும் வசதி : காஞ்சிபுரம்.*
saravanan.
615 views
1 days ago
#aalayam arivom. திருநாராயணர் திருக்கோயில்,* *மூலவர் :திருநாராயணர்.* *உற்சவர் : செல்வநாராயணர்.* *அம்மன்/தாயார் : திருநாராயணி.* *தல விருட்சம் : இலந்தை.* *தீர்த்தம் : கல்யாணி தீர்த்தம்.* *ஊர் : மேலுக்கோட்டை, திருநாராயணபுரம்,* *மாவட்டம் : மைசூரு.* *மாநிலம் : கர்நாடகா.* *நாராயணபுரம் : காலை 8:30- மதியம் 1:30 மணி, மாலை 4:00 - 6:00  மணி, இரவு7:00 -9:00  மணி, மேல்கோட்டை மலைக்கோயில்: காலை9:30- மதியம் 2:00  மணி, மாலை 5:00 -இரவு8:00  மணி.* *+91 8236-299 839.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*    *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்*                        *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்கு படிகளாக இருப்பதாக ஐதீகம்.* *பொது தகவல் : கல்யாணி தீர்த்தத்தில் இருந்து 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டை யோகநரசிம்மர் கோயிலை அடையலாம். இவரிடம், என்ன வேண்டினாலும் ஓர் ஆண்டிற்குள் நிறைவேற்றி வைப்பார். இவரது சன்னதிக்குச் செல்ல ஒன்பது படிக்கட்டுகள் உள்ளன. யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்கு படிகளாக இருப்பதாக ஐதீகம் நரசிம்மரைத் தரிசித்தவர்க்கு கிரகதோஷம் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மலையில் ராமானுஜரின் பாதம் உள்ளது. இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்த தீர்த்தத்துக்கு வருவதாக ஐதீகம் என்பதால், அப்போது இங்கு நீராடுவர். தீர்த்தக்கரையில் பிந்துமாதவன், நாராயணன், லட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன.* *பிரார்த்தனை : இவரிடம், என்ன வேண்டினாலும் ஓர் ஆண்டிற்குள் நிறைவேற்றி வைப்பார்.* *நேர்த்திக்கடன் : நாராயணருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.* *தலபெருமை : பத்ரி சென்ற புண்ணியம்: மூலவர் திருநாராயணர் மேற்கு நோக்கி, சங்கு, சக்கரத்துடன் நிற்கிறார். ஒரு கையில் கதாயுதம் உள்ளது. பத்ரி என்னும் இலந்தை மரமே இங்கு தலவிருட்சம். திருநாராயணப் பெருமாளை தரிசித்தவர்கள் பத்ரிநாத் சென்றுவந்த புண்ணியத்தை அடைவர். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரதநந்தினி என்னும் பெண் மூலவரின் பாதத்தில் வீற்றிருக்கிறாள். சாண்டில்ய மகரிஷி இத்தலத்தில் தவமிருந்து பெருமாளை பத்ரிநாராயணராகத் தரிசிக்கும் பேறு பெற்றார்.* *பேசும் ராமானுஜர் : ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், திருக்கோஷ்டியூரில் ராமானுஜருக்கு முக்கியத்துவம் இருப்பது போன்று, திருநாராயணபுரத்திலும் உண்டு. இங்கு ராமானுஜர் உபதேச முத்திரையுடன் காட்சி தருகிறார். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்திசெய்யும் பாவனையில் இருப்பதால் இவரை பேசும் யதிராஜர்(ராமானுஜர்) என்று சொல்கின்றனர். புதர்கள் மண்டிக் காடாக இருந்த இத்தலம் ராமானுஜர் காலத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு, விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னன் பொருளுதவி செய்திருக்கிறான்.* *உடையவர் தாலாட்டு : ஜெயந்தி விழாவில் ராமானுஜர், செல்வநாராயணர் விக்ரகத்தை தாலாட்டுவது போல பாவனை செய்து அர்ச்சகர்கள் பாடுவர். இதற்கு உடையவர் தாலாட்டு என்று பெயர் அபிநயத்தோடு பாடும் இத்தாலாட்டு கேட்பதற்கு இனிமையாக இருக்கும். பெருமாளின் திருக்கல்யாண வைபவத்தில் திருநாராயணரும், யதுகிரித்தாயாரும் பவனிவரும்போது, ராமானுஜரும் மணமக்களைப் பின்தொடர்ந்து வருகிறார். இந்நிகழ்ச்சி, ராமாவதாரத்தில் சீதாராமரைத் தொடர்ந்து வந்த லட்சுமணரைக் குறிப்பதாக உள்ளது. யதுகிரிதாயார் தாமரை மலரைக் கையில் ஏந்தி நிற்கிறாள். உற்சவருக்கு செல்வநாயகி என்பது திருநாமம்.* *மலைக்கோட்டை நரசிம்மர் : திருநாராயணபுரத்தில் உள்ள மலைக்கோட்டையில் யோகநரசிம்மர் உள்ளார். மகாவிஷ்ணு பிரகலாதனுக்காக நரசிம்மராக வந்து இரண்யனைக் கொன்றார். தன் தந்தை இறக்க காரணமாக இருந்ததால் பிரகலாதனுக்கு பிதுர்ஹத்ய தோஷம் உண்டானது. அதனைப் போக்குவதற்கு விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவருக்கு நரசிம்மர் யோகநிலையில் காட்சியளித்தார். அவர் தனக்கு தந்த காட்சியைப் போல் சிலைவடித்த பிரகலாதன், அதை அங்கு பிரதிஷ்டை செய்தார்.* *தல வரலாறு : திருநாராயணபுரம் கோயில் உற்சவர் செல்வநாராயணரின் சிலை, ஒரு சமயம் டில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருந்தது. பாதுஷாவின் மகள் நாராயணர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். ராமானுஜர் உற்ஸவரை மீட்க வடநாட்டுக்குப் புறப்பட்டார். இளவரசி அரண்மனையில் இல்லை. பாதுஷாவின் அனுமதியுடன் இளவரசியின் அந்தப்புரத்தில் செல்வநாராயணர் விக்ரஹத்தைக் கண்டார். அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. இதோ! என் செல்வப்பிள்ளை என்று உரக்க அழைத்தார். அந்தச்சிலை சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது. தன் சின்னஞ்சிறு பாதங்களில் சலங்கைகள் ஒலிக்க, ராமானுஜரின் மடியில் வந்து அமர்ந்தார். மீண்டும் விக்ரகமாக மாறிவிட்டார். அதை திருநாராயணபுரம் கோயிலுக்கு கொண்டு வந்தார். அவ்வாறு அவர் திரும்பிய நாளான மாசிகேட்டையன்று டில்லி உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. பாதுஷாவின் மகள் பெருமாளைத் தேடி நாராயணபுரம் வந்துவிட்டாள். செல்வநாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள். இவள், மூலவரின் பாதத்தில் வரநந்தினி என்ற பெயரில் இருப்பதாக ஐதீகம். நாட்டுப்புறங்களில் வரநந்தினியை பீபிநாச்சியார் என்று குறிப்பிடுவர்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*.                *+918072055052* *திருவிழா : பங்குனியில் பிரம்மோற்ஸவம், நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, பங்குனி பூசத்தில் வைர முடிசேவை.* *சிறப்பம்சம் : யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்கு படிகளாக இருப்பதாக ஐதிகம்.* *இருப்பிடம் : மைசூருவில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் திருநாராயணபுரம் மலைக்கு செல்லவும் வாகனவசதி உண்டு.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநாராயணபுரம்.* *அருகிலுள்ள விமான நிலையம் : மைசூரு.* *தங்கும் வசதி : மைசூருவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.*
saravanan.
590 views
2 days ago
#aalayam arivom. யோகநரசிம்மர் திருக்கோயில்,* *மூலவர் : யோகநரசிம்மர்.* *ஊர் : விஜய்நகர்.* *மாவட்டம் : மைசூரு.* *மாநிலம் : கர்நாடகா.* *காலை 6:00 மணி முதல் 1:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 81-256 3646.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : மூலவர் நரசிம்மர். குறுக்காக குத்துக் காலிட்டு, அதில் கைகளைத் தொங்கவிட்டபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள சுதர்சனர் அஷ்டபுஜ சுதர்சனராக எட்டுக்கைகளுடன் காட்சி தருவது இத்தலத்தின் தனி சிறப்பு.* *பொது தகவல் : 1998, மே 25ல் யோக நரசிம்மர் சிலை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 25ல் லட்சார்ச்சனையும், 26ல் சகஸ்ர கலசாபிஷேகமும். 27ல் சுதர்சன ஹோமமும் நடக்கிறது. அமாவாசை நாட்களில் இரவு 12மணிவரை விசேஷ பூஜை உண்டு. 300லிட்டர் பால், 300லிட்டர் தயிர் யோகநரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்படும். அமாவாசை வழிபாட்டில் எதிரிகளின் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி உண்டாகவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.* *பிரார்த்தனை : எதிரிகளின் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி உண்டாகவும், கல்வி கலைகளில் முன்னேற்றம் உண்டாகவும் யோக நரசிம்மரையும், சனி தோஷம் விலக சுதர்சனரையும் வழிபடுகின்றனர்.* *நேர்த்திக்கடன் : இங்குள்ள நரசிம்மருக்கு வெண்ணெய், செந்தூரம், துளசி, எலுமிச்சை. நவபுஷ்பங்கள் சாற்றியும், சுதர்சனருக்கு துளசி அணிவித்து நெய்தீபம் ஏற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.* *தலபெருமை : மைசூரு விஜய நகரில் மூலவர் நரசிம்மர், குறுக்காக குத்துக் காலிட்டு, அதில் கைகளைத் தொங்கவிட்டபடி யோகநிலையில் காட்சி தருகிறார். மேல் இரண்டு கைகள் சங்கு சக்கரம் தாங்கியுள்ளன. கால்களில் யோகப்பட்டை குறுக்காக செல்கிறது. லட்சுமித்தாயார் மார்பில் வீற்றிருக்கிறாள். இச்சிலை சாளக்ராமம் என்னும் கல்லினால் ஆனது கால்கட்டை விரலில் அதர்வன வேதம் அடங்கி இருப்பதால் இவரைத் தரிசிப்பவருக்கு எவ்வித தீயசக்தியும் அணுகாது என்பது ஐதீகம். தசாவதார சிற்பங்கள் கருவறை நுழைவாயிலிலும், அஷ்டலட்சுமி சிற்பங்கள் கதவிலும் இடம்பெற்றுள்ளன.* *ஒன்பது அலங்காரம் : புரட்டாசி நவராத்திரியின் ஒன்பது நாளும் ஒன்பது விதமாக யோகநரசிம்மர் அலங்கரிக்கப்படுகிறார். வெண்ணெய், செந்தூரம், துளசி, எலுமிச்சை, நவபுஷ்பம் அலங்காரங்கள் பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும் விஜயதசமியன்று யோகநரசிம்மரைத் தரிசித்தால் கல்வி கலைகளில் முன்னேற்றம் உண்டாகும். உற்சவர் சீனிவாசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கல்யாணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.* *வித்தியாசமான சுதர்சனர் : சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வார் சன்னதி இங்கு விசேஷமானது. இவர் பதினாறு கைகளோடு காட்சி தருவது வழக்கம். ஆனால், இங்கு அஷ்டபுஜ சுதர்சனராக எட்டுக்கைகளுடன் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வாருக்குப் பின்புறம் நரசிம்மர் யோகநிலையில் வீற்றிருப்பார். இங்கு நரசிம்மரும் இடம்பெறவில்லை. இவருக்கு, சனிக்கிழமையில் துளசி அணிவித்து நெய்தீபம் ஏற்றிவழிபட சனிதோஷம் விலகி நன்மை உண்டாகும்.* *தல வரலாறு : விஷ்ணு என்றால் சர்வ வியாபி அல்லது எங்கும் நிறைந்தவர். விஷ்ணுவை தியானித்து ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை ஜெபித்து வந்தான் இரண்யனின் மகனான பிரகலாதன். அசுர குலத்தில் பிறந்த அவனை, தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் பாடம் கற்க அனுப்பினான் இரண்யன். குருகுலத்தில் படித்த பிள்ளைகள் அனைவரும் பிரகலாதனால் விஷ் பக்தர்களாக மாறினர். அசுரனான தனக்கு இப்படி ஒரு குழந்தையா என்று பிரகலாதனின் மீது இரண்யனுக்கு கோபம் வந்தது. அவனைக் கொல்லத் துணிந்தான். விஷம் கொடுத்தான். மலையில் இருந்து உருட்டினான். யானையைக் கொண்டு மிதிக்கச் செய்தான். எதுவும் பலனளிக்கவில்லை. கடைசியாக, பிரகலாதனிடம், எங்கே உன் ஹரி? என்று ஆவேசமாகக் கத்தினான். அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், என்று பதிலளித்தான் பிரகலாதன், பிரகலாதனின் வாக்கை காப்பதற்காக விஷ்ணு, தூணைப் பிளந்து கொண்டு சிங்கமுகத்துடன் காட்சி அளித்தார். ஹரி என்றால் சிங்கம் என்றும் பொருளுண்டு. அவர் இரண்யனைச் சம்ஹாரம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : நரசிம்மர் ஜெயந்தி.* *சிறப்பம்சம் : மூலவர் நரசிம்மர், குறுக்காக குத்துக்காலிட்டு, அதில் கைகளைத் தொங்கவிட்டபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள சுதர்சனர் அஷ்டபுஜ சுதர்சனராக எட்டுக்கைகளுடன் காட்சி தருவது இத்தலத்தின் தனி சிறப்பு.* *இருப்பிடம் : மைசூரு- மங்களூரு மெயின்ரோட்டில் 4கி.மீ., தொலைவில் விஜய்நகர் உள்ளது. பஸ், ஆட்டோ உண்டு.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மைசூரு.* *அருகிலுள்ள விமான நிலையம் : மைசூரு.* *தங்கும் வசதி : மைசூருவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.*
saravanan.
1.4K views
5 days ago
#aalayam arivom. மதனகோபாலசுவாமி திருக்கோயில்,* *மூலவர் : மதனகோபாலசுவாமி.* *அம்மன்/தாயார் : பாமா, ருக்மணி.* *தல விருட்சம் : வாழை.* *ஆகமம்/பூஜை : வைகானஸ ஆகமம்.* *ஊர் : மதுரை - 625 001.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:40 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும்.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர்.* *பொது தகவல் : கோயிலில் நுழைந்தவுடன் இடதுபக்கம் அரசமரத்தடியில் முழுமுதற்கடவுளாக விநாயகர் அமர்ந்திருக்கிறார் மூலவர் மதனகோபால சுவாமி. வாழை தல விருட்சம், மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர்.* *மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர். நவநீதகிருஷ்ணன், சேனை முதல்வர், கருடாழ்வார், நம்மாழ்வார், உடையார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரை இத்தலத்தில் நாம் தரிசிக்கலாம். கருவறையை கடக்கும் வழியில் ராமர் தனிசன்னதியில் காட்சி தருகிறார்.* *மேலும் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹரி ஹர ஸர்ப்ப ராஜா, பஞ்ச முக ஆஞ்சநேயர் என ஒவ்வொருவரும் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கின்றனர். குழலூதும் கண்ணன், ராமானுஜர் சன்னதியும் உண்டு.* *பிரார்த்தனை : மேலும் இசையில் நாட்டம் உடையவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வதால் இசை மேதை ஆகலாம் என்றும், இத்திருத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.* *இங்குள்ள நாக தேவி, ஹரி ஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் ராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.* *நேர்த்திக்கடன் : சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.* *தலபெருமை : ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரை தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.* *தல வரலாறு : ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்து விட்டு சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் லிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவன், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவனின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததை கூறி இந்த உலகைகாக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம் சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவன் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது.* *சிவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்" என்றார். மகாவிஷ்ணுவும் சிவனின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவனையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : இத்தக்கோயிலில் மாதம் தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவை நோன்பு சிறப்பானவை.* *சிறப்பம்சம் : மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர்.* *இருப்பிடம் : மதுரை நகரின் மத்திய பஸ் ஸ்டாண்டின் மிக அருகில் கோயில் உள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
620 views
5 days ago
#aalayam arivom. வரதராஜ பெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : வரதராஜ பெருமாள்.* *அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி பூதேவி.* *ஊர் : எஸ்.ஆர்.வி.நகர், திருப்பரங்குன்றம்,* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:00 மணி முதல் 10:30 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 98425 08447.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : கருப்பண்ண சுவாமி சங்கு சக்கரம், நாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.* *பொது தகவல் : இக்கோயில் மூலஸ்தானத்தில் மூன்றரைஅடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். முகப்பில் துவார பாலகர்கள், மூலவர் சன்னதி எதிரே கருடாழ்வார், வளாகத்தில் ஆஞ்சநேயர், தும்பிக்கையாழ்வார்(விநாயகர்), நவக்கிரகங்கள், நாகம்மாள், கருப்பணசுவாமி, விஷ்ணு துர்க்கை, வீரசின்னம்மாள், முத்தம்மாள் பேரட்டாள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர்.* *பிரார்த்தனை : திருமண தடைகள் நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, படிப்பில் மந்தமாக உள்ளவர்கள் சிறந்த கல்விச் செல்வம் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.* *நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு துளசிமாலை சார்த்தியும், காரியசித்தி பெற்றவர்கள் பெருமாளுக்கு வேஷ்டி, துண்டு, ஸ்ரீதேவி, பூதேவிக்கு சேலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.* *தலபெருமை : வளாகத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமி சங்கு சக்கரம், நாமத்துடன் அருள்பாலிக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் விஷ்ணு துர்க்கைக்கு அரளிமாலை, எலுமிச்சம்பழம் மாலை அணிவிப்பவர்களுக்கு, காரியத்தடைகள் நீங்கி வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துப்படி இங்கு சிறப்பு. கோயிலில் மூலவர்கள் கிடையாது. 27 அடி உயர கொடிமரம் உண்டு. மகாலட்சுமிதாயாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.* *தல வரலாறு : மருமகன் முருகன் திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகிலேயே மாமன் பெருமாளும் திருப்பரங்குன்றத்தில் தனி கோயிலில் அருளுகிறார்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : மாசி மாதம் மகா சிவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழிமாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடக்கிறது. பங்குனி உத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருக்கல்யாணம் விழா நடக்கும்.* * சிறப்பம்சம் : கருப்பண சுவாமி சங்கு சக்கரம், நாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.* *இருப்பிடம் : இக்கோயில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகரில் அமைந்துள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை, திருப்பரங்குன்றம்.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
642 views
8 days ago
#aalayam arivom. சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில்,* *மூலவர் : சந்தானகோபாலகிருஷ்ணன்.* *ஊர் : இரட்டை அக்ரஹாரம் சோழவந்தான்.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.* *+91 87546 11993.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : பெருமாள் ஆலயத்தில் நவகன்னியர் அருள்பாலிப்பது சிறப்பு.* *பொது தகவல் : அர்த்த மண்டபத்தில் மேய்கண்ட ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், கூந்தாழ்வார், நம்மாழ்வார் எழுந்தருளியுள்ளனர். கோயில் வளாக பின்புறம் கன்னிமார் தெய்வங்கள் வரமளிக்கின்றனர்.* *பிரார்த்தனை : வேண்டும் பக்தர்களுக்கு திருமணம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, உடல் ஆரோக்கியம், குடும்ப சுகம், வியாபார விருத்தி, சந்தனபாக்கியம் கிட்டும்.* *நேர்த்திக்கடன் : கன்னிமார்களை வேண்டி நெய்விளக்கேற்றி, சந்தனம் பன்னீர் பூ தெளித்தால் அனைத்து வளங்களும் பெறலாம்.* *தலபெருமை : இக்கோயிலில் மூலவர் சந்தானகோபாலகிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா தேவியருடன் அருள்பாலிக்கிறார்.* *தல வரலாறு : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இக்கோயில் பலரின் முயற்சியால் 2012ல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : வைகுண்டஏகாதசி, ஆவணியில் ராதாகிருஷ்ணன் திருக்கல்யாணம், பங்குனியில் சீதாதிருக்கல்யாணம், நவராத்திரி போன்ற விழாக்கள் நடக்கும்.* *சிறப்பம்சம் : பெருமாள் ஆலயத்தில் நவகன்னியர் அருள்பாலிப்பது சிறப்பு.* *இருப்பிடம் : சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் சந்தானகோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை, சோழவந்தான்.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
633 views
13 days ago
#aalayam arivom. ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : நாராயணன்.* *அம்மன்/தாயார் : ஜெனகைவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி.* *ஆகமம்/பூஜை : பாஞ்ராத்ரம்.* *புராண பெயர் : ஜனகையம்பதி.* *ஊர் : சோழவந்தான் - 625 214.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:00  மணி முதல் 11:00  மணி வரை, மாலை 4:00  மணி முதல் இரவு 8:00  மணி வரை திறந்திருக்கும்.* *+91-4543-258987, 94867 31155.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகன் தவம் இருந்ததற்கு நினைவுச் சின்னமாக விளங்கும் தலம்.* *பொது தகவல் : அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியில் வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம். அழகிய ஆஞ்சநேயர் தனி சன்னதியாக வீற்றிருக்கும் தலம். இங்கு ஆண்டாள் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.* *பிரார்த்தனை : கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியன இத்தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைகள் ஆகும்.விவசாய விளைச்சல் செழிக்க இத்தலத்தில் பலர் வேண்டிக் கொள்வர்.* *இத்தலத்து பெருமாளை வேண்டிக் கொண்டால் தொழில் வளம், கல்வி விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியன நிறைவேறுகின்றன.* *நேர்த்திக்கடன் : கோட்டை நெல் தருதல் இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த நேர்த்திகடனாகும். இத்தலத்து வரும் ஏராளமான பக்தர்கள் ஜெய வீர ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துகின்றனர். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தல், துளசிமாலை சாத்துதல், நெய் தீபம் ஏற்றுதல், மாலை சாற்றி வழிபடுதல் ஆகியனவும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு பக்தர்கள் செய்கின்றனர். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.* *தலபெருமை : இத்தலத்தின் மிகவும் விசேஷம் இங்கு அருள்பாலிக்கும் ஜெயவீர ஆஞ்சநேயர் ஆவார். அர்த்தமண்டபத்தின் வலதுபக்கம் தனி சன்னதியாக வீற்றிருக்கும் இவரை வணங்கினால் நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தருவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆஞ்சநேயரின் வால் பின்புறம் சுற்றி நூனியில் மணி கட்டியிருக்கும் அழகு பார்ப்பவரை மயங்க வைக்கும். இந்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு எந்த காரியத்தை தொட்டலும் ஜெயம் ஆகும் என்பதால் இவர் ஜெயவீர ஆஞ்சநேயர் என்ற பெயர் விளங்குகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை பெருமளவிலான பக்தர்கள் வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள்.* *பெரிய அளவிலான ராமன் சீதை லட்சுமணன் ஆகியோரது வார்ப்பு விக்ரகம் உள்ளது இக்கோயிலில், புராதன காலத்தில் இருந்தே இருக்கும் கோயில். வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் ஜனகையம்பதி என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள அழகிய கோயில் இங்குள்ள ராமனது விக்ரகம் மிக அழகிய வடிவில் மிக நேர்த்தியாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.* *தல வரலாறு : ஜனகனின் மகள் சீதையாக மகாலட்சுமியே பிறந்து பெருமை சேர்த்தாள். மகரிஷியான ஜனகனுக்கோ தம்மிடம் வளரும் இந்தக் குழந்தை யார் என்பதை உணரவே முடிந்தது. மகாலட்சுமியை எந்த மனிதனுக்கு மணம் முடிப்பது என்பது பெரிய பாரமாகவே இருந்தது. சாதாரணமான பெண்ணைப் பெற்றவனுக்கே மாப்பிள்ளை கிடைக்க பாடாய் பட வேண்டியிருக்க திருமகளுக்கு எப்படி மாப்பிள்ளை தேடுவது என்ற கவலையில் ஜனகன் துடித்தார்.* *இதற்காகவே நாராயணனே பிறப்பெடுத்து வந்து இந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் பாரம் நீங்குமே என்று கவலைப்பட்டு சோழவந்தானில் வந்து தவமிருந்தான். அதுவே இத்தலம் அமைய காரணமாக உள்ளது. ஸ்ரீமன் நாராயணனுக்கே மாப்பிள்ளையாக வேண்டி தவமிருந்த ஜனகனுக்கு நினைவுச் சின்னம் ஒன்று இருக்கிறது என்றால் அது சோழவந்தான் ஜனகை நாராயணன் கோயில்தான். ஜனகனின் தவப்பயனால் ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்து சீதையை கைபிடித்தார். இந்த பெரும் செயல் செய்த ஜனகனுக்கு நன்றி உணர்வோடு உள்ள கோயில்தான் இது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : சித்திரை - சித்ரா பவுர்ணமி - 3 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும, -ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தசாவதாரத்தில் 9 அவதாரங்கள் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். புஷ்ப பல்லக்கில் அலங்கரித்து சுவாமி வலம் பங்குனி பிரம்மோற்சவம் - 11 நாட்கள் ஸ்ரீ ராம நவமி, மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும் தினமும் சுவாமி பள்ளியறை புறப்பாடு நடக்கும். தைமாதப்பிறப்பு, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். நவராத்திரி, ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரத்தில் விசேஷமாக இருக்கும்.* *சிறப்பம்சம் : ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகன் தவம் இருந்ததற்கு நினைவுச் சின்னமாக விளங்கும் தலம்.* *இருப்பிடம் : மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ள சோழவந்தான் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : சோழவந்தான், மதுரை.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
625 views
15 days ago
#aalayam arivom. நீலமேகப் பெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : நீலமேகப் பெருமாள்.* *ஊர் : கச்சைகட்டி.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 5:00  மணி முதல் 9:00  மணி வரை, மாலை 4:00  மணி முதல் இரவு 9:00  மணி வரை திறந்திருக்கும்.* *+91 97893 17916.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.* *பிரார்த்தனை : கேட்ட வரம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.* *நேர்த்திக்கடன் : சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.* *தலபெருமை : இக்கோயில் கச்சைகட்டி, குட்லாடம்பட்டி, செம்மினிபட்டி, ராமையன்பட்டி, ஒட்டுப்பட்டி, மலப்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் உட்பட எட்டு கிராம மக்களுக்கு பாத்தியப்பட்டது. இக்கோயில் தற்போது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது.* *தல வரலாறு : மதுரையை குலசேகரப்பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்த காலத்தில், இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சேர, சோழ, பாண்டியர் காலத்திற்கு பின் கோயில்கள் முழுமையாக சிதிலமடைந்தன. பின், மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் காலத்தில் கச்சைகட்டியில் பூமியில் இருந்து கல் ஒன்று சிறிது... சிறிதாக... வளர்ந்துள்ளது அதை தோண்டி பார்க்கையில் நான்கு அடி உயரத்தில் பெருமாள் சிலை சுயம்புவாக தோன்றியது. அந்த இடத்தில் ராணி மங்கம்மாள் முயற்சியால் நீலமேகப்பெருமாள் கோயில் கட்டப்பட்டது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : ஆண்டு தோறும் சித்திரை முதல் நாள் திருவிழா நடக்கும். தவிர மாதம்தோறும் நடக்கும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருமாள் அருள்பாலிக்கிறார்.* *சிறப்பம்சம் : இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.* *இருப்பிடம் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : வாடிப்பட்டி.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
575 views
16 days ago
#aalayam arivom. நீலமேகப் பெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : நீலமேகப் பெருமாள்.* *ஊர் : கச்சைகட்டி.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 5:00  மணி முதல் 9:00  மணி வரை, மாலை 4:00  மணி முதல் இரவு 9:00  மணி வரை திறந்திருக்கும்.* *+91 97893 17916.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.* *பிரார்த்தனை : கேட்ட வரம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.* *நேர்த்திக்கடன் : சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.* *தலபெருமை : இக்கோயில் கச்சைகட்டி, குட்லாடம்பட்டி, செம்மினிபட்டி, ராமையன்பட்டி, ஒட்டுப்பட்டி, மலப்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் உட்பட எட்டு கிராம மக்களுக்கு பாத்தியப்பட்டது. இக்கோயில் தற்போது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது.* *தல வரலாறு : மதுரையை குலசேகரப்பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்த காலத்தில், இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சேர, சோழ, பாண்டியர் காலத்திற்கு பின் கோயில்கள் முழுமையாக சிதிலமடைந்தன. பின், மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் காலத்தில் கச்சைகட்டியில் பூமியில் இருந்து கல் ஒன்று சிறிது... சிறிதாக... வளர்ந்துள்ளது அதை தோண்டி பார்க்கையில் நான்கு அடி உயரத்தில் பெருமாள் சிலை சுயம்புவாக தோன்றியது. அந்த இடத்தில் ராணி மங்கம்மாள் முயற்சியால் நீலமேகப்பெருமாள் கோயில் கட்டப்பட்டது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : ஆண்டு தோறும் சித்திரை முதல் நாள் திருவிழா நடக்கும். தவிர மாதம்தோறும் நடக்கும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருமாள் அருள்பாலிக்கிறார்.* *சிறப்பம்சம் : இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.* *இருப்பிடம் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : வாடிப்பட்டி.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
632 views
17 days ago
#aalayam arivom. அபூர்வ தரிசனம்: ஆடு வாகனத்தில் அருள்பாலிக்கும் மோகனூர் துர்க்கை அம்மன்! 🚩 பொதுவாக ஆலயங்களில் துர்க்கை அம்மன் சிம்மம் (சிங்கம்) மீது அமர்ந்தோ அல்லது மகிஷாசுரனின் தலை மீது நின்ற கோலத்திலோ காட்சி தருவதையே நாம் பார்த்திருப்போம். ஆனால், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அமைந்துள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் (குமரீஸ்வரர்) திருக்கோயில் பிரகாரத்தில், ஆடினை (மேஷம்) வாகனமாகக் கொண்டு மிக அபூர்வமான திருக்கோலத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்! 🙏✨ 🌸 இத்தல துர்க்கையின் ஆன்மீகச் சிறப்புகள்: 🐐 அபூர்வ வடிவமைப்பு: தமிழ்நாட்டின் மிகச்சில திருத்தலங்களில் மட்டுமே காணப்படும் ஆடு வாகன துர்க்கை வடிவம் இதுவாகும். கொங்கு மண்டல பழமை வாய்ந்த கொற்றவை வழிபாட்டு மரபின் சான்றாகவும் இது திகழ்கிறது. 🔴 செவ்வாய் தோஷ நிவர்த்தி: ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசியின் குறியீடு ஆடு. செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையான துர்க்கை இங்கு ஆடு வாகனத்தில் வீற்றிருப்பதால், செவ்வாய் தோஷம், திருமணத் தடைகள் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. 🕯️ ராகு கால வழிபாடு: குறிப்பாக செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் (மாலை 3:00 - 4:30) இத்துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி, அரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட, குடும்பத்தில் உள்ள சகல தோஷங்களும், எதிரி பயமும் விலகும் என்பது நம்பிக்கை. ✨ மன அமைதி பெறவும், தொழில்/வியாபார தடைகள் நீங்கி வெற்றி பெறவும் மோகனூர் சென்று அசலதீபேஸ்வரரையும், அபூர்வ ஆடு வாகன துர்க்கையையும் தரிசித்து அருள் பெறுவோம்! 📍 அமைவிடம்: அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம் (காவிரி ஆற்றின் கரை). 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.