gopura tharisanam.

saravanan.
541 views
11 hours ago
#gopura tharisanam. ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை தென்கங்காபுரிஸ்வரர் திருக்கோயில்,* *மூலவர் : தென்கங்காபுரிஸ்வரர்.* *அம்மன்/தாயார் : பிரகன் நாயகி.* *சின்ன நரிமேடு. 607 102,* *எடையார்குப்பம்,* *பண்ருட்டி தாலுக்கா,* *திருவஹீந்திரபுரம் அருகில்,* *கடலூர்.* *காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 98947 03148, 96009 20767.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : பவுர்ணமி தோறும் நிலவொளி மூலவரின் மீது படுவது சிறப்பு. உடலில் உள்ள வெப்பநோயை போக்கும் தலம். வைத்திடவரராகவும், மருந்தீட்சரராகவும் இருந்து அருள்புரிகிறார். திருஅதிகையில் முப்புரம் அழித்து அம்மை அப்பர் இருவரும் உய்வெடுத்த சிறந்த மூலிகைகள் கலந்த பூந்தோட்ட வனமான இங்கு உய்வெடுத்து உடல்வெப்பத்தை போக்கிக் கொண்ட நதியும். குளுமையைப் போக்கி கொண்ட பூந்தோட்டமான திருக்கோயிலும் ஆகும். வெப்ப நோயை நோக்கி ஆரோக்கியம் தந்த தலம். இறைவனுக்கே உரிய அற்புதத் திருத்தலமாகும்.* *கருவறைக்குள் மிக பிரம்மாண்டமான ஈசன். வற்றை ஆடையில் எவ்வித அலங்காரமும் இன்றி அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளார். அர்த்த மண்டபத்தில் ஒரு திரிசூல கல்வெட்டுடன் பெரியவர் கண்ணன் சுவாமிகளின் புகைப்படம் உள்ளன. இக்கோயில் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருந்தாலும், இங்கு கிடைக்கப்பட்ட கல்வெட்டு சற்று பிற்காலத்தியது. 14 ம் நூற்றாண்டில் ஆறாம் மாறவர்ம விக்கிரம பாண்டியரின் அமைச்சராக இருந்த அபிமான துங்க பல்லவராயர் இக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் குறித்த கல்வெட்டாகும்.* *கோயிலின் நிலை : ஒரு காலத்தில் மிக பிரம்மாண்டமாக விளங்கி இருந்திருக்கும் நதி. அதன் நீளமும் அகலமும் இப்பொழுதும் பிரமிக்க வைக்கின்றது. இன்று நீரின்றி புதர் மண்டி பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றது. சுற்றிலும் இயற்கையின் பாழ் கோலம் நதி மட்டுமல்ல; ஒரு காலத்தில் மிகப்பெரும் கோயிலாக இருந்திருக்கூடிய கோயில் இன்று ஒற்றை சன்னிதியுடன் பாழடைந்து கிடக்கிறது. ஒரு பிரம்மாண்டமான ஆவுடையார் தரையில் சாய்ந்து கிடக்கிறது. உடைந்த கூரையின் கீழ் ஒரு சிலை, வானம் பார்த்த விநாயகரும் நந்தியும் உள்ளன. மேலும் பல ஆண்டுகள் உருண்டோடின. அன்னியர் படையெடுப்பில் அறந்தாங்கி நல்லூர் உருத் தெரியாமல் போயிற்று. வீடுகளும் மாளிகைகளும் தரைமட்டம் ஆயின. கோயிலும் பெருமளவில் பழுதுபட்டது. எஞ்சி இருந்த மக்களும் புலம் பெயர்ந்து செல்ல, நரிகள் மட்டுமே மிஞ்சிய நரிமேடு ஆனது இவ்வூர். இன்றும் வெறும் ஐம்பது வீடுகளையே கொண்ட சிற்றூராக விளங்குகிறது.* *மேற்கண்ட இந்த மரபுச்செவிவழிச் செய்திகள் உண்மைதான் என்பது போன்ற சுவடுகளைக் காட்டுவது போன்று கி.பி. 6-ஆம் மற்றும் 7-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இங்கு காணப்படுகின்றன. இவை இங்கு காணப்படும் தொன்மைத் தடயங்கள் சிற்பங்கள், கருங்கற்கள் மூலம் அறியப்படுகின்றன. பின்னர் அரசு புரிந்த சேர, சோழர், பாண்டியர் மற்றும் விஜய நகர மன்னர்களின் காலங்கள் வரை அதாவது 200 ஆண்டுகள் வரை போற்றி வணங்கப்பட்டு வந்த இக்கோயில், காலப்போக்கில், தோற்றமும் மறைவும் உலகநியதி எனும் நிகழ்வுகளுக்கேற்ப இக்கோயில் தோற்றமும், வளர்ச்சியும் பெற்று அந்நிய நாட்டவரின் படையெடுப்பால் அழிந்து போயிற்று. இவ்வூரின் அழிவிற்குப் பின்னர் இப்பகுதியில் இருந்த வீதிகளும், மாடமாளிகைகளும் மறைந்து மண் மேடிட்டு மேடாக மாறி மொத்தம் ஏழுமேடுகள் இருந்ததாகவும் அங்கு ஊளையிடும் நரிகளின் இருப்பிடமாக மாறியதால் ஏழுமேடு, எழுமேடாகவும், நரிகளின் வாழ்விடங்களாக இருந்ததால் பின்னாட்களில் பெரியநரிமேடு, சின்னநரிமேடு எனப் பெயர் மாற்றம் பெற்றன. சின்ன நரிமேட்டில் ஒரு சில வாழ்விடங்கள் பெருகி இருந்ததால் பெரியநரிமேடு என்றும் அழைத்தனர்.* *மற்றோர் பகுதியில் துறவிகளும், முனிவர்களும் வந்து தங்கி, தென்கங்காபுரீட்வரரை வணங்கி வேள்விகள் செய்து வாழ்ந்ததால் சன்னியாசிப்பேட்டை எனவும் பெயர் பெற்றது. 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு இருந்த ஊரும், கோயிலும் அழிவுற்ற பிறகு மக்கள் தங்களின் வாழ்விடங்களை வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்றிக் கொண்டனர் என்பதை இங்கு காணப்படும் வரலாற்றுத் தடயங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறியப்பட்டுள்ளது.* *சின்ன நரிமேடு தல அமைப்பும்- தலசிறப்பும்: இங்குள்ள மகாகணபதி அமர்ந்த கோலத்தில் மூஷிகவாகனத்துடன் தனி சன்னிதியில், அருளுகிறார். இங்கு பலிபீடம் உள்ளது. விமானம் சிறிய அமைப்பில் உள்ளது. விமானத்தில் கலசம் உள்ளது. கிழக்கு நோக்கிய சன்னிதி. கோபுரம் இல்லை. அம்பாள் சன்னிதானம் உள்ளது. கலசம் இல்லை. தென்கங்காபுரீட்சுவரர். அனைத்து சீவராசிகளையும் அருளுகிறார்.* *(ஆவுடையார் அகண்டும், பாணம் சிறுத்து மெலிந்தும் உள்ளது.)* மாசிலாம்பிகை, பெரியநாயகி, பிரகண்நாயகி கிழக்கு நோக்கி அனைத்து உயிர்களையும் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். நந்திதேவர் மேற்கு நோக்கிய நிலையில் சுவாமியின் அருள் பார்வையில் அமர்ந்து அருளுகிறார். பலிபீடம் உள்ளது.* *பாலமுருகன் : அருள்மிகு பாலமுருகன் நின்ற கோலத்தில் அருளுகிறார்.* *தட்சிணாமூர்த்தி : அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தி குருஅருள் வழங்குகிறார்.* *குளம் : திருக்குளம்- கங்கா தீர்த்தம் தலநதி: கெடிலநதி உள்ளன.* *பெரிய நரிமேடு பரிவாரத் தெய்வங்கள்: ஊரின் முகப்பில் சிகைக்காய்களைப் போல் சடைச்சடையாக கருத்தபழுத்த பழங்கள்: மஞ்சளும், இளஞ்சிகப்பு. இளம்பச்சை வண்ணங்களில் சடைச்சடையாக கொத்து கொத்தாக பழங்கள் கருப்பு நிறத்தில் காய்த்து பழுத்து தொங்குகிறது. இம்மரத்தை தூங்குமூஞ்சி, யானைக்கால், யானைச்சுருட்டி என்று பல்வேறு பெயர்களால் வழங்குகிறார்கள். இம்மரம் அழகும், கம்பீரமும் கொண்டு இவ்வூருக்கு அழகு சேர்க்கிறது. ஊரின் உள்புறம் வருவோரை வரவேற்கும் விருட்சமாக உள்ளது. இங்கு முத்துமாரியம்மன் அருளுகிறாள். நவகிரகசன்னிதி: அருள்மிகு நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கிறார்கள். செல்வவிநாயகர் சன்னிதி, செல்வவிநாயகர், சுப்பிரமணியர் சன்னிதி. சுப்பிரமணியர், பாலகணபதி சன்னிதி, பாலமுருகன் போன்ற தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள். மேலும், காசிவிஸ்வநாதர், காசிவிசாலாட்சி அருள்புரிகிறார்கள். ஊரில் வெளியேறும் பாதையில் அருள்மிகு ஐயனார் தனிச்சன்னிதியில் பொற்கிலை- பூரணி சமேத திருகாட்சி தருகிறார். வயல்வெளிகளின் எல்லைமுகப்பில் வெட்டவெளியில் கோயில் உள்ளது. பித்தளை சூலத்தினுள் முனேஸ்வரர் கிழக்கு நோக்கிய சன்னிதி. தாடி மீசையுடன் அமர்ந்த நிலையில் உள்ளார். தென்திசை நோக்கிய ஐயனார் முனேசுவரரை எதிர்கொண்டு உள்ளார். பெரியநரிமேடு: 600 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஊரில் ஆறு வீதிகள் உள்ளன. சின்னநரிமேடு: 80 வீடுகள் (400 மக்கள் தொகை) கொண்ட ஊர். ஒரே ஒரு வீதி மட்டும் உள்ளது.* *சின்ன நரிமேடு திருக்கோயில் அமைப்பு: ஊரின் முகப்பின் மெயின்ரோட்டிலிருந்து இறங்கியவுடன் கிழக்கு முகப்பு திசையில் சோதிடப் பண்டிதர்கள் குழுமிய (ஊரின் சிறிய வீதியில்) குடும்பங்கள் உள்ளன. அம்பாள் கோயில் உள்ளது. ஊரின் முகப்பில் 50 மீட்டர் தென்திசை நோக்கி. மேற்கு திசையில் மேட்டுப்பகுதியில் இருந்து மகா அகண்ட திருக்குளம் உள்ளது. தென்திசை மேட்டுப்பகுதியில் தண்ணீர்தொட்டி உள்ளது. அதை ஒட்டிய நிலையில் பெரிய சிமெண்ட்டால் ஆன களம் உள்ளது. விவசாயத்திற்கும், திருக்கோயிலுக்கும் இம்மகா களத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். திருக்கோயில் முன்பு கிழக்குதிசையில் ஓர் சுவாமி உள்ளது. கிழக்கு நோக்கிய நிலையில் அருளுகிறார். எட்டுத்திக்கும் நான்கு திசைகளிலும் பச்சைக் கம்பளம் விரித்தார் போன்று மிக மிக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கண்ணுக்கு புத்தொலி வழங்கும் பசுமைக் காட்சிகள். மையப் பகுதியில் எம்பெருமான் திருக்கோயில் திருக்கோயில் சிறிய விமானத்தின் கீழ் (கருவறையில்) சுவாமி உள்ளார். மகா (பெரிய) சிவலிங்கத் திருமேனி. ஆவுடையார் பெரியதாகவும், பாணம் சிறிய கூம்பு வடிவத்திலும் உள்ளார்.* *நூறு ஆண்டுகளைக் கடந்து வள்ளுவ பண்டார இனத்தைச் சார்ந்த சந்ததியினர் 17 குடும்பங்களாக 90 தொகை உள்ள குடும்பமாக ஓர் சிறிய வீதியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சோதிடத்தை மூலாதாரமாகக் கொண்டு வழி வழியாக வாழ்ந்து வருகிறார்கள்.* *உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்யலாம்.* *சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்யலாம்.* *பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கு முன்பிலிருந்தே (2000 ஆண்டுகளுக்கு முன்பு) திருப்பாதிரிப்புலியூருக்கும், திருவதிகைக்கும் பெருவழிச்சாலை இக்கோயிலை ஒட்டியே அமைந்திருந்தது. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப் பெற்றிருந்த இக்கோயிலை பின்வந்த பாண்டிய மன்னர்களும், நன்கு பராமரித்துப் போற்றி வந்தனர் என்பதை இப்பகுதியில் காணப்படும் பாண்டியர் காலக் கல்வெட்டு மூலம் அறியப்பட்டுள்ளது. திருச்சுற்றுடன் பெரியகோயிலாக இருந்த இக்கோயில் சிதைந்து அழிவுற்ற பிறகு, இங்கிருந்த கடவுளர் சிலைகளும், சிற்பங்களும், கருங்கற்தூண்களும் மக்களால் பற்பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபடப்பட்டன. அதுபோன்ற எடுத்துச் செல்லப்பட்ட கற்களில் பொறிக்கப்பட்டுள்ள பாண்டியர் காலக்கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தி. இந்த வரலாற்று உண்மையை நமக்குத் தெரிவிக்கிறது. சர் பலகைக் கல்லில் முன்னும் பின்னுமாக இரண்டு புறங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முன் பகுதியின் நடுவில் திரிசூலம் வடிக்கப்பட்டுள்ளது.* *கல்வெட்டில் உள்ள வரிகள் : ஸ்வஸ்திஸ்ரீ எழுமேட்டில் உடையார் மன்றில் குனிக்கும் பெருமாள் திருநாமத்துக்காணிக்கு எல்லை தென்பார்க்கெல்லைக்கு இடைநாழி எல்லைக்கு வடக்கும் மேல்பார்க்கெல்லை இந்நாயனார் திருவாசலுக்கு மேற்கு போகிற தெருவுக்கும், கெடிலக்காலுக்கு கிழக்கும். வடபார்க்கெல்லை கெடிலத்துக்கு தெற்கு, கீழ்ப்பார்க்கெல்லை அறந்தாங்கிநல்லூர் எல்லைக்கு மேற்கு உள்பட நிலத்து நஞ்சை புஞ்சை திருமடை வளாகம். அந்தராயம் இறையும் முதல்வாங்க இறையிலி திருநாமத்துக்காணி சிமா தென்கங்கை என்று காணப்படுகிறது.* *கல்வெட்டின் விளக்கம் : பாண்டியர் ஆட்சிக்காலத்தில் எழுமேடு என்று கூறப்படுகின்ற பகுதியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் திருக்கோயிலுக்கு இறையிலி எனப்படும் கோயிலுக்குரிய நிலமாக பதிவு செய்யப்பட்டது. இந்நிலங்களின் எல்லைகளைக் கூறும்போது தெற்கில் இடைநாழி எனும் பெயர் கொண்ட எல்லைக்கு வடக்கிலும், மேற்கிலும் இக்கோயில் வாசலுக்கு மேற்கில் செல்லும் வீதிக்கும். கெடில ஆற்றிலிருந்து நீர்கொண்டு செல்லப்படும் வாய்க்காலுக்குக் கிழக்கிலும், தெற்கில் கெடிலநதிக்கு கிழக்கில் முடியும் அறந்தாங்கிநல்லூர் எல்லைக்கு மேற்கிலும் எல்லைகளாகக் கொண்ட நன்செய், புன்செய் நிலம் அனைத்தும், அதாவது இக்கோயில் அமைந்திருந்த நான்கு எல்லைப் பகுதிகளிலும் சுற்றியிருந்த கோயிலுக்குரிய நிலமாக பதிவு செய்யப்பட்டது என்கிற செய்தியை இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது, மேலும் இப்பகுதியில் செக்காடுவோர் மூலம் பெறப்பட்ட அரசு வரிகள் மற்றும் பற்பல தொழில்வரிகள் உட்பட அனைத்து வரிப்பணத்தையும் கோயில் நிர்வாகச் செலவுகளுக்கு அளிக்கப்பட்டதாக இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.* *மேற்கண்ட தானங்களை நிறைவேற்றியவர் அபிமான துங்கப் பல்லவராயர் என்பவராவார். இவருக்கு மன்றில் குனிக்கும் பெருமாள் என்கிற சிறப்பு விருதுப் பெயரும் உண்டு. இவர் கி.பி. 14-ம் நூற்றாண்டில் ஆறாம் மாறவர்ம விக்கிரம பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியின் அமைச்சராக பணியாற்றியவர். இப்பாண்டியரின் ஆட்சி அதிகாரம் திருமுனைப்பாடி நாட்டில் கி.பி. 1337-ல் இருந்து 1343 வரை இருந்தது. அப்போது இந்த அபிமானதுங்கப் பல்லவராயரின் பெயரால் பல்லவராயநத்தம் என்கிற ஊர் உருவாக்கப்பட்டது. இக்கோயிலில் இருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. மேலும் இவரது இறைப்பணிகளைக் கூறும் கல்வெட்டுகள் திருமுனைப்பாடி நாட்டில் திருவதிகை, திருவந்திபுரம், திருக்கண்டேசுவரம் போன்ற பற்பல ஊர்களில் காணப்படுகின்றன.* *பல நூற்றாண்டுகளாக பல்வேறு மன்னர்களாலும், அரசு அதிகாரிகளாலும், முனிவர்களாலும், துறவிகளாலும் போற்றிப் பூசிக்கப்பட்டு வேத மந்திரங்களாலும் யாகக் குண்டங்களின் நறுமணப் புகையாலும் சூழப்பட்டு மிக உன்னதமான புகழினைப் பெற்றிருந்த இக்கோயிலின் இன்றைய நிலை, கால மாற்றங்களாலும், வேற்று மதத்தவர் படையெடுப்பாலும், இதன் பெருமையை அறியாதவர்களாளும் நான்குமாட வீதிகளை இழந்து சுற்றிச் குழ்ந்திருந்த மக்களின் வாழ்விடங்களை இழந்து அறந்தாங்கிநல்லூர் என்ற அழகிய பெயரினையும் இழந்திருந்தாலும், இன்றைக்கும் கருவறை விமானத்துடன் இக்கோயில் எஞ்சி நிற்கிறது என்றால் இதற்கு இறையருளும் மக்களின் இறையுணர்வுமே காரணம்.* *நரிமேடு, எழுமேடு பகுதிகளின் தெற்கே உள்ள கெடில நதியை தென்கங்கை என திருநாவுக்கரசுப் பெருமான் தாம் பாடிய திருவதிகை வீரட்டானத் தேவாரப்பதிகங்களில் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின்படி ஓர் புராண வரலாறு இப்பகுதிக்கு உண்டு.* *கங்கை நதி: கங்கை சொர்க்கத்தில் மந்தாகினி எனவும்; பூமியில் கங்கை எனவும், பாதாளத்தில் போகவதி எனவும் பெயர் பெற்றவள். இவள் உலகிலுள்ள மூன்றரைக்கோடி தீர்த்தங்களுக்கு உண்டான பலன்களை கொடுக்கக்கூடிய புனிதமானவள் என்பதை புராணங்கள் வழியே அறிகிறோம். இவள் பகீரதச் சக்கரவர்த்தியின் தவத்தாலும், சிவபெருமானின் திருவருளாலும் ஏழுதுளிகளாய் பூமியில் விழுந்து ஆறாகப் பெருக்கியவள் என்றும் உமையவள் தமது திருக்கரங்களால் விளையாட்டுக்காகச் சிவபெருமானின் கண்களை மூடியபோது அம்மையின் கரங்கள் வழியே பெருகிய நீர் வெள்ளமாகப் பெருகிவர, அதைச் சிவபெருமான் தன் சடைமுடியில் தரித்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. மேலும் கங்கையானவள் சிவபெருமானை மணக்க விரும்பியதை உமையவள் குறிப்பால் உணர்ந்து இரேணு என்பவனுக்கு மகளாகப் பிறக்க சாபமிட்டார். அந்த சாபத்தின் கோபத்தால் அமங்கலம் பெற்றதாகவும், பின்பு கங்கையானவள் உமையவளைக் குறித்து செய்த தவப்பயனால் மங்கலம் பெற்றாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.* *கங்கையைப் பற்றி இதுபோன்ற பற்பல புராணங்கள் கூறப்பட்டாலும், திருஅதிகையில் சிவபெருமான் முப்புர அசுரர்களின் கோட்டைகளை முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எரித்துச் சாம்பலாக்கியபின் சிவபெருமானும், உமையவளும் தனிமையில் ய்வெடுக்க விரும்பி கெடில நதியைப் படைத்து அதில் குளித்து மேனியைக் குளிர்வித்தார்கள் எனவும், இவ்வாறு நீராடும் போது சிவபெருமானின் சடைமுடியில் இருந்த கங்கையானவள் கெடில நதியில் கலந்ததால் இந்நதி தென்கங்கை பெயர் பெற்றது எனவும், அதன்பிறகு நரிமேடு- எழுமேடு எனும் பகுதி அக்காலத்தில் அபூர்வமான மூலிகைகள் நிறைந்த பசுஞ்சோலையாக இருந்தால் தங்களது உடல் வெப்பத்தைத் தணிக்க இங்கு எழுந்தருளி உய்வெடுத்தனர் என்றும் இப்பகுதி மூத்தகுடிமக்களால் வழிவழியாக கூறப்பட்டு வந்த செவிவழிச் செய்தியாகும். எனவே வெப்பத்தின் மூலம் நம் உடலில் உண்டாகின்ற நோய்கள் பலவும் இங்கு எழுந்தருளிய அம்மை அப்பனை வழிபடப்பெற்ற திருத்தலமாக இக்கோயில் சிறந்து விளங்கி இருந்தது என்பதும் மரபு வழிச் செய்தியாகும். இந்த புராணத்தை அறிந்த வெம்மை நோயுற்ற மன்னர் ஒருவர் பிற்காலத்தில் அந்த நந்தவனப் பகுதிக்கு மூலிகைகளைப் பறிக்க அரண்மனை வைத்தியருடன் வந்தபோது, தாம் தேடி வந்த மூலிகைச் செடிகளின் புதரின்கீழ் சிவலிங்கம் என்று இருப்பதைக் கண்டு வணங்கி அந்த இடத்தில் கோயில் எழுப்பி, கெடில நதியில் இருந்து வாய்க்கால் வழியாக நீரைக்கொண்டு வந்து திருக்குளம் அமைத்து குடமுழுக்குத் திருப்பணியைச் செய்து தென்கங்காபுரீச்சுவரர் என்று பெயர் சூட்டியதாகவும் அதன்பிறகு அரசருக்கு வெம்மைநோய் குணமாகியது என்பதும் செவிவழிச் செய்தியாகும்.* *திரிபுரங்களை சிறு சிரிப்பால் எரித்து நிற்கிறார் சிவபெருமான் தேவர்கள் பூமாரி பொழிகின்றனர். சிவனாரைக் குளிர்விக்க எண்ணி கெடில நதியை உருவாக்குகிறார் உமையம்மை. இருவரும் ஏகாந்தமாக நீராடுகையில் சிவனாரின் முடியிலிருந்த கங்கை கெடில நதியில் கலக்க அந்நதி தென்கங்கை என்ற பெயர் பெறுகிறது. இந்த தென்கங்கை நதிக்கரையில் மிக அரிதான மூலிகைகள் இருப்பதைக்கண்டு இங்கு சிவனாரின் திருமேனியை லிங்கத்திருமேனியாய் அமைத்து தென்கங்கை நீரினால் அபிஷேகித்து மகிழ்ந்தாள் அம்பிகை. சிவனாரும் உடல் வெப்பம் குளிர்ந்து மனமகிழ்ந்து அருளினார். காலங்கள் உருண்டோடின. இப்பகுதியை ஆண்ட ஒரு மன்னனுக்கு வெம்மை நோய் கண்டது. அரண்மனை வைத்தியர்கள் பல மருந்துகளைக் கொடுத்தும் பயனளிக்கவில்லை. அப்போது அறந்தாங்கி நல்லூர் என அழைக்கப்பட்ட இப்பகுதியிலுள்ள மூலிகைகளைப் பற்றி கேள்விப்பட்ட அரசன், இங்கு வந்தான். புதர் மண்டிய இடத்தில் ஈசனைக் கண்டு வணங்கினான். தென் கங்கை நீரில் குளித்து, மூலிகைகளை உட்கொண்டு நோய் தீர்ந்தான். நோய் தீர்த்த இறைவனுக்கு கோயில் ஒன்றை அமைத்து தென்கங்கை நீர் அதன் வாசல் வரை வர வாய்க்கால் அமைத்தான். வெம்மை நோய் தீரும் அற்புதத்தை அறிந்த மக்கள் பலரும் தென்கங்காபுரிஸ்வரர் வணங்கி பலன் பெற்றனர்.* *பவுர்ணமி தோறும் நிலவொளி மூலவரின் மீது படுவது சிறப்பு. உடலில் உள்ள வெப்பநோயை போக்கும் தலம். வைத்தீட்வரராகவும், மருந்தீட்சரராகவும் இருந்து அருள்புரிகிறார். திருஅதிகையில் முப்புரம் அழித்து அம்மை அப்பர் இருவரும் ஒய்வெடுத்த சிறந்த மூலிகைகள் கலந்த பூந்தோட்ட வனமான இங்கு ஓய்வெடுத்து உடல்வெப்பத்தை போக்கிக் கொண்ட நதியும், குளுமையைப் போக்கி கொண்ட பூந்தோட்டமான திருக்கோயிலும் ஆகும். வெப்ப நோயை நோக்கி ஆரோக்கியம் தந்த தலம். இறைவனுக்கே உரிய அற்புதத் திருத்தலமாகும்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🔵🟠🟥🌈🟥🌈🟥🌈🟣
saravanan.
557 views
1 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்,* *மூலவர் : கயிலாசநாதர்.* *அம்மன்/தாயார் : காமாட்சியம்மன்.* *அண்ணாமலை நகர் அஞ்சல்,* *சிதம்பரம் வட்டம்,* *முத்தையா நகர்-சி.* *கொத்தங்குடி,* *கடலூர்-608002.* *காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 94435 38084, 78715 85728.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* 🌟    *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்*     *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம், நவராத்திரி உள்ளிட்டவை முக்கிய திருவிழாக்களாகும்.* *கிழக்குப்பக்கம் வாயில் நுழைவு வாயில் முன் வேம்பு, அரசன் மற்றும் வில்வம் தல விருட்சம் மரம் உள்ளது. மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். தெற்குப் பக்கம் பார்த்து அம்பாள் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் பலி பீடம் மற்றும் நந்தி மேற்கு பக்கம் தலை சாய்ந்த நிலையில் படுத்துள்ளது. கிரானைட் தரை தளம், வலது பக்கம் சுப்பிரமணியர், இடபக்கம் விநாயகர் அருள்பாலிக்கின்றனர். உள்பிரகாரத்தில் கயிலாயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஈசன் அருள்பாலிக்கின்றார். வெளிபிரகாரத்தில் தெற்கு பக்கம் பார்த்த வண்ணம் நந்தி வணங்கும் கோலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியும், வடக்கு பக்கம் பார்த்த வகையில் விஷ்ணு துர்க்கையும், தெற்கு பக்கம் பார்த்த வகையில் சண்டிகேஸ்வரரும், அவரை வணங்கி சென்று நவக்கிரகங்களை வணங்கி சென்றால் கோயில் நுழைவு வாயிலை சென்றடையலாம்.* *கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விளங்குவதால் பக்தர்கள் ஏராளமானோர் வந்து பிரார்த்திக்கின்றனர்.* *நெய் தீபம் ஏற்றி, பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.* *சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. மேலும் இக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, காயிலாயத்தில் இருந்து மூலவரை காணிக்கையாக வழங்கி 2010 ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சங்கராச் சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தியது பெருமைக்குரியதாக அமைந்துள்ளன.* *நகரில் 1995ம் ஆண்டு புதியதாக கட்டப்பட்ட செல்வ முத்துவிநாயகர் கோயில் 2008 இல் கும்பாபிஷேகம் நடத்த நகர் வளர்ச்சிகுழுத் தலைவரும், ஊராட்சித் தலைவருமான கண்ணன் வேணுகோபால் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அந்தக்கூட்டத்தில் தற்போதுள்ள விநாயகர் கோயில் தவிர சிவன் கோயில் அமைக்கவும், விநாயகர் கோயிலை புரணமைத்து கும்பாபிஷேகம் நடத்தலாம் என முடிவு செய்தனர். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின் ரூ.16 லட்சம் செலவில் கைலாசநாதர், காமாட்சியம்மன், கஜலட்சுமி, வினாயகர், முருகன், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வ மூர்த்திகளுடன் புதிய கோயில் கட்டப்பட்டது.* *கோயில் கட்ட முதற்கட்டமாக பூஜ்ய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்ரீசரணர்கள் அனைத்து தெய்வமூர்த்தி சிலைகளையும் இவலசமாக வழங்கி, பொருளாதார வசதி அமோகமாக வளர்சிக்க வேண்டுமாய் அருளாசி வழங்கினர். அவர்களின் ஆசிபடி வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடந்தேறியது. செல்வந்தர்கள் பலர் தானே முன்வந்து நன் கொடை வழங்கிய நிலையில், நிர்வாக குழுத்தலைவர் கண்ணன் வேணுகோபால் தன் சொந்த வருவாய் பல செலவிட்ட நிலையில், செயலர் பழனியப்பன் தன் பங்கிற்கு உதவியுள்ளார். கோயில் இதர செலவினங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் உரியத்தொகை இறைவன் ஈசன் அருளால் விரைவில் கிடைக்க கோயில் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் 2010 ஜூன் 10ம் தேதி திரயோதசி திதியும், அனுஷ நட்சத்திரமும், சித்தயோகமும், சாத்யயோகமும் கூடிய சுபயோக தினத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தி வைத்தனர்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*.         *+918072055052* 🌻🌹🌻🌹🌻🌹🌻
saravanan.
591 views
2 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு செல்வ முத்துவிநாயகர் திருக்கோயில்,* *மூலவர் : செல்வ முத்துவிநாயகர்.* *உற்சவர் : செல்வ முத்துவிநாயகர்.* *அண்ணாமலை நகர் அஞ்சல்,* *சிதம்பரம் வட்டம்,* *கடலூர்-608 002.* *காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 94435 38084, 78715 65728.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* 🌟 *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாத விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது,சித்திரை 1-10 தேதிக்குள் விநாயகர் மீது சூரிய ஒளி விழும் காட்சி சிறப்புக்குரியதாகும்.* *கிழக்குப்பக்கம் நுழைவு வாயில் இடபக்கம் தீர்த்த கிணறு மற்றும் தலவிருட்சமான வன்னிமரம் மற்றும் வெள்ளெருக்கு உள்ளது. கோயில் வலபக்கம் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். விமானத்தில் ஒரு கலசம் இடம் பெற்றுள்ளது. கிரானைட்டில் தரை அமைக்கப்பட்டுள்ளதுடன், 75 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். கருவறையில் செல்வ முத்து விநாயகர் அருள்பாலிக்கிறார். கோயிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் மற்றும் மகாலட்சுமி சிலைகளும் ஒரு கலசமும் அமைக்கப்பட்டுள்ளது.* *கல்வி, மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விநாயகர் அருள்பாலிப்பதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.* *நெய் தீபம் ஏற்றி, எருக்கு மாலை சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.* *சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கேயில் அருகில் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.2 010 ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி கோயில் புதுப்பிக்கப்பட்டு நடந்த கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தியது பெருமைக்குரியதாகும்.* *சிதம்பரத்தில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது கொத்தங்குடி கிராமம். இப்பகுதியில் இருந்த நஞ்சை நிலத்தில் இடம் வாங்கி அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தார் முத்தையா செட்டியார் பெயரில் நகர் அமைத்தனர். துவக்கத்தில் 25 குடும்பங்கள் மட்டும் வசித்தனர். 1995 ஆம் ஆண்டு கல்வி கற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் அரசு ஊழியர்கள் சேர்ந்து ஊரும் பேரும் இல்லாததது பரம்பொருள். எங்கும் வியாபித்திருப்பது. சாதாராண மனிதருக்கு எளிதில் அறிந்து கொண்டு வழிபட இயலாத படி உள்ளது.* *அத்தகைய பரம்பொருளுக்கு ஊரையும் பெயரையும் சூட்டி ஒரிடத்தில் திரட்டி தங்கள் உணர்வுகளை மனமுருகி சொல்ல ஏதுவான இடமாக நிறுவியதே கோயில் செல்வங்களையும், வளங்களையும், கல்வியையும் வழங்கும் முதற் கடவுளான விநாயகரை வணங்க திட்டமிட்டு யோசித்ததின் விளைவால் இக்கோயில் உருவாகியது. அதற்கு செல்வமுத்து விநாயகர் என்ற பெயர் சூட்டினர். உள்ளங்கனிந்து உருகி வழிபடுவோரின் வேண்டுதல்களை கருணையோடு நிறைவேற்றி வருகிறார். கமிட்டித் தலைவர்கள் கோயிலை பராமரித்து வருகின்றனர். 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர்.* *சித்திரை 1-10 தேதிக்குள் விநாயகர் மீது சூரிய ஒளி விழும் காட்சி சிறப்புக்குரியதாகும்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*.                *+918072055052* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🌲🌷🌲🌷🌲🌷🌲🌷🌲
saravanan.
805 views
5 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு புற்றுமாரியம்மன், நாககாளியம்மன் திருக்கோயில்,* *மூலவர் : புற்றுமாரியம்மன், நாககாளியம்மன்.* *உற்சவர் : புற்றுமாரியம்மன், நாககாளியம்மன்.* *அம்மன்/தாயார் : புற்றுமாரியம்மன், நாககாளியம்மன்.* *அண்ணாமலை நகர் அஞ்சல்,* *இருபது அம்சநகர் கொத்தங்குடி,* *சிதம்பரம் வட்டம்-608002.* *கடலூர்.* *காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.* *+91 9003850026.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : ஆடி மாதம் 15 நாள் திருவிழாவிற்கு பின் தீமிதி உற்சவம், மாதம் தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி வழிபாடு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன,இங்கு அம்மன் சுயம்புவாக உருவானவர்.* *கிழக்குப் பக்கம் வாயில், விமானத்தில் ஒரு கலசம், நுழைவு வாயில் முன் உள்ள மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். கொடிமரம், நந்தி, பலிபீடம் உள்ளது. இடபக்கம் சுப்ரமணியர், வலப்பக்கம் விநாயகர், தெற்கு பக்கம் பார்த்து தட்சிணாமூர்த்தி, வள்ளலார் மற்றும் பேச்சியம்மன் அருள்பாலிக்கின்றனர். வெளி பிரகாரத்தில் இடபக்கம் ஆஞ்சநேயர் நின்ற நிலையில் மேற்குப் பக்கம் பார்த்தும், சப்த கன்னிகள், அங்காளம்மன், கருமாரியம்மன், துர்கை, சமயபுரத்து அம்மன், திரவுபதி, கிருஷ்ணன், வடக்கு பக்கம் பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். கருவறைக்கும் பின் பக்கம் கீற்றுக் கொட்டகையில் துவக்கத்தில் உருவான புற்று சுமார் 10 அடி உயரத்தில் 40 ஆண்டுகளாக உள்ளது. புற்றுக்கும் கீழ் நாககாளியம்மன் அருள்பாலிக்கிறார் வலப்பக்கம் ஐயனார் கிழக்குப் பக்கம் பார்த்து அருள்பாலிக்கிறார். காவலாளி குதிரையுடன் நிற்கிறார். அனைத்தும் சுதையால் வடிவமைக்கப்பட்ட சிலைகளாக உள்ளன.* *புத்திரபாக்கியம், திருமணத்தடை, தீராத நோய்களுக்கு சிறந்த கோயிலாக விளங்குவதால் பிரார்த்திக்கின்றனர்.* *பிரார்த்தனை நிறைவேறியதும், சுதை சிற்பங்கள், ஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள் செலுத்துகின்றனர்.* *குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் உள்ளதால் பெருமைமிக்கதாக அமைந்துள்ளது. 40 ஆண்டுகள், 2001 மற்றும் 2015 இல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.* *சிதம்பரம் அருகே பெருமாத்தூரில் வாழ்ந்த திருவேங்கடம் பிள்ளை வள்ளலார் பக்தர் இவர் மகள் மாதரசியும் தந்தையுடன் ஈடுபட்டு வள்ளலாரை வணங்கி வந்துள்ளார். திருமணம் வேண்டாம் என மறுத்தவரின் கனவில் ஒருவர் தோன்றி திருமணத்திற்குப் பின் அதிசயம் காண்பாய். அற்புதம் நிகழ்த்துவாய் என சொல்லி மறைந்தார். அதன் பின் 60 நாட்களில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. மாதரசி தந்தை குறிப்பிட்ட நாளில் தான் இறந்து விடுவாக கூறியவர் அப்படியே இறந்தார்.* *திருமணம் முடிந்த 30ம் நாள் இரவு மீண்டும் அதே உருவம் மாதரசி கனவில் தோன்றி அதிசயத்தை காண்பிக்க அழைத்து சென்றார். தூக்கத்தில் இருந்து விழித்தவர்கள் மற்றும் கணவர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் முட்புதற்களை வெட்டிக்க கொண்டு நடு காட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு புற்று வடிவில் அம்மன் காட்சிக் கொடுத்தார். அதன் பின் கீற்றுக் கொட்டகையில் கோயில் கட்டினர். படிப்படியாக கோயில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 10 அடி உயரத்தில் புற்றும் வளர்ந்துள்ளது. தற்போது மாதரசி அம்மையார் கோயிலை பராமரித்து பாதுகாத்தும் அருள் வாக்கும் அளித்து வருகிறார். பல்வேறு பகுதியில் இருந்து குல தெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர்.* *இங்கு அம்மன் சுயம்புவாக உருவானவர்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🪴 🪴🪴 🪴🪴 🪴🪴 🪴
saravanan.
750 views
9 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில்,* *மூலவர் : செல்வவிநாயகர்.* *சி.முட்லூர் அஞ்சல் கிள்ளை வழி,* *சிதம்பரம் வட்டம்,* *கடலூர்-608102.* *காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 75983 02955.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*                                                              *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்*     *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : விநாயகர் சதுர்த்தி, மாதம்தோறும் சங்கர சதுர்த்தி, மாசிமகம், தை அமாவாசை நடராஜ மூர்த்தி எழுந்தருளல் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது, ஆவணி மாதம் தொடக்கத்தில் சூரிய ஒளி விநாயகர் மீது படுகிறது.* *கிழக்குப் பக்கம் வாயில், மகாமண்டபத்தில் 50 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். விமானத்தில் ஒரு கலசம், தரை தளம் டைல்ஸ், தலைகீழ் 'ப வடிவில் தரை தளம் உள்ளது. நிலைப்படி முன் கஜெலெட்சுமி நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார். சிமெண்ட் சுதையில் ஆறு பூதகனங்கள். நான்கு காளை வாகனம் இடம் பெற்றுள்ளது. நுழைவு வாயில் தலைப்பில் சிவன், முருகன், விநாயகர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் மூலவரான செல்வ விநாயகர் சிரித்த கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். 1964 ல் கும்பாபிஷேகம் அதன் பின் 2014 ல் கும்பாபிஷேகம் நடந்தது.* *ஆண்டியப்ப முதலியார் அன்னசத்திரம் கட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது அனைத்து மக்களும் செல்வ வளம் பெருக இக்கோயிலை கட்டியுள்ளார். இவரை வணங்கினால் செல்வ வளம்பெரும் அதனால் செல்வ விநாயகராகவே அருள்பாலிக்கிறார். திருமணத்தடையை போக்கும் மாப்பிள்ளை கோலத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.* *நெய் தீபம். எருக்கு. அருகம்புல்லில் மாலை சார்த்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.* *இக்கோயிலில் இருந்து 4 கி.மீ., தொலைவில் சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளதுடன், இக்கோயிலுக்கு தை அமாவாசை மற்றும் மாசி மகத்தில் நடராஜர் வருகையும், புவனகிரி ராகவேந்திரர் கோயில், மருதூர் வள்ளலார் பிறந்த இடம் என்பதாலும், இக்கோயிலில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரத்தையும் தரிசிக்கும் இடமாக இருப்பதால் கோயிலுக்கு பெருமையாக உள்ளது.* *சிதம்பரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆ.மண்டபத்தில் வாழ்ந்த ஆண்டியப்ப முதலியார் செல்வ களிப்பில் ஏழைகளுக்கு பொருளுதவி செய்தார். மற்ற மக்களும் நலம் பெற வேண்டும் என்ற நோக்கில் முதன் முதலில் கீற்றுக் கொட்டகையில் கோயில் நிறுவி செல்வ விநாயகர் என்று அழைத்து வழிபாடு நடத்தினர். அப்பகுதியில் அதிகளவில் திருமணம் நடக்காமல் இருந்த ஆண்களுக்கு திருமணத்தடையை போக்க மாப்பிள்ளை கோலத்தில் கல்யாண சுந்தரேஸ்வர் சிலை அமைத்து வழிபாடு நடத்தியதால் இன்றளவும் திருமணமாகாத முதலியார் உள்ளிட்ட பிற சமூகத்தினர்கள் வந்து செல்கின்றனர். கல்யாண சுந்தரேஸ்வரர் இன்றளவும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆண்டியப்பமுதலியார் இறந்த பின் அவரின் புத்திரர்கள் திருஞானம் மற்றும் தியாகராஜன் இக்கோயில் கட்டினர். இக்கோயிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டியப்பமுதலியார் சந்ததியினர்கள் கோயிலை பராமரித்து வருகின்றனர்.* *ஆவணி மாதம் தொடக்கத்தில் சூரிய ஒளி விநாயகர் மீது படுகிறது.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
saravanan.
751 views
10 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில்,* *மூலவர் : திரவுபதியம்மன்.* *உற்சவர் : திரவுபதியம்மன், விநாயகர், முருகன்.* *அம்மன்/தாயார் : திரவுபதியம்மன்.* *நக்கரவந்தன்குடி மற்றும் அஞ்சல்,* *சிதம்பரம் வட்டம்,* *கடலூர்-608102.* *காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : ஆடி மாதம் திருவிளக்கு பூஜை, புரட்டாசி மாதம் அம்மன் படியிறங்குதல், ஆனி மாதம் தீ மிதி திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.* *கிழக்குப் பக்கம் வாயில், தலவிருட்சம் மகிழம் மரம் கோயில் இடபக்கம் உள்ளது. கொடிமரம் 12 அடி உயரத்திலும், அருகில் ஐந்தடி உயரத்தில் பலி பீடமும் உள்ளது. மகா மண்டபத்தில் 200 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். விமானம் தரை மட்டத்தில் இருந்து 30 அடி உயரத்தில் 3 கலங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஈசான மூலையில் 200 கிலோ எடையில் ஆலய பித்தளை மணியும், சற்று உள்ளே சென்றால் இடபக்கம் விநாயகர், நக்கீரரும் வலப்பக்கம் முருகன் மற்றும் ஐயப்பனும் அருள்பாலிக்கின்றனர்.* *கருவறையில் ஐந்தே கால் அடி உயரத்தில் திரவுபதியம்மன் (கருங்கல் விக்ரகம்) நின்ற நிலையில் வலதுகையில் கிளி, இடது கையை கீழே தொங்க வைத்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் உற்சவமூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். வெளி பிரகாரத்தில் இடபக்கம் தெற்கு பக்கம் பார்த்து சரஸ்வதியும், மேற்கு பக்கம் அன்னபூரணியும், வலது பக்கத்தில் தெற்கு பக்கம் பார்த்த வகையில் தனி சன்னிதியிலும், நவக்கிரங்களும் உள்ளது. நுழைவு வாயில் வலது பக்கத்தில் மேற்குமுகம் பார்த்த கோணத்தில் ஆஞ்சநேயரும், காலபைரவரும் தனி, தனி சன்னிதியில் ஒரு சிறு கலசம் அமைக்கப்பட்ட சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.* *தீராத நோய், திருமணத்தடை, புத்திரபாக்கியம் மற்றும் விவசாய அபிவிருத்திக்காக பிரார்த்திக்கின்றனர்.* *நெய் தீபம், திருவிழா காலத்தில் அங்கபிரதட்சணம், மாவிளக்கு ஏற்றுதல், தீமித்தல், எடுப்பு சுவாமிகள் பக்தர்கள் காணிக்கையாக வைத்துள்ளனர்.* *சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதுôர் உள்ளதுடன், சிதம்பரம் நடராஜர் தரிசனத்திற்கு நக்கரவந்தன்குடி கட்டளை உபயம் செய்வது கோயிலுக்கு பெருமையாக கருதுகின்றனர்.* *வன்னியர்கள் தங்கள் குடியின் காவல் தெய்வமாக வணங்குவதல் வன்னியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் திரவுபதியம்மன் கோயில் அதிகளவில் உள்ளதாகவும் அந்த வகையில் இப்பகுதியில் கோயில் அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் வசித்த நிலக்கிழார் சந்திரசேகர் என்பவரின் தாத்தா ஏகாதசி விழா நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். அப்போது ஒரு பெண் தலைவிரி கோலமாக வந்து உணவு கேட்டார். அதற்கு அவர் மற்றவர்களை போல் அந்த பெண்ணை தரையில் அமர்ந்து உணவு உண்ண வைத்துள்ளார். அதன் பின் அந்த பெண் பிரசன்னமாகி தான் திரவுபதியம்மன் என்பதை உணர்த்தி காட்சியளித்து தான் வேண்டியதை தருவதாக கூறி மறைந்துள்ளார். அதன் பின் அவர் அப்பகுதியினர் உதவியுடன் சிறு கோயில் கட்டி வழிபாடு நடத்தியுள்ளார். அவருக்குப் பின் அவரது உறவினர்கள் மற்றும் வழித் தோன்றல்கள் வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருவிழாவின் போது ஒரே குடும்பத்தில் இருவர் இறந்தனர். அதன் பின் கோயிலில் எந்த விழாவும் நடக்கவில்லை.* *கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் கோயில் கட்டி புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி தற்போது சந்திரசேகர் வம்சத்தை சேர்ந்த குலசேகர் தலைமையில் பராமரிப்பு நடந்து வருகிறது.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
saravanan.
646 views
12 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு வில்வவனேஸ்வரர் கோவில்,* *மூலவர் : வில்வவனேஸ்வரர்.* *அம்மன்/தாயார் : பிரஹன்நாயகி, பாலாம்பிகை.* *நல்லுார், 606 602.* *வேப்பூர் தாலுகா,* *கடலுார் மாவட்டம்.* *காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 4143 230 232, 94436 16639.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : 10 நாட்கள் மாசி மகப் பெருவிழா, பிரதோஷம், பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் வழிபட்ட மணல் லிங்கம், வடக்கு நோக்கி சிவனை வழிபடும் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிப்பது. கோவிலுக்கு மேற்கிலிருந்து வரும் மணிமுக்தா, மயூரா-கோமுகி நதிகள் வடக்காகவும், தெற்காகவும் வலம் வந்து கிழக்குப்புறமாக சங்கமிப்பது சிறப்பு.* *விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் தனித்தனியாக உற்பத்தியாகும் கோமுகி - மயூரா காட்டு மயிலுார் பகுதியில் ஒன்றாகி கோவிலின் தெற்கு புறமாகவும்,அதே கல்ராயன் மலையில் உற்பத்தியாகி வரும் மணிமுக்தா வடக்குப்புறமாகவும் ஓடி கோவிலின் கிழக்குப் புறத்தில் சங்கமிக்கிறது.* *ஸ்ரீபிரஹ்ஹன்நாயகி, பாலாம்பிகை உடனுறையும் ஸ்ரீவில்வவனேஸ்வரர் எழுந்தருளியுள்ள மிகப்பெரிய பழம்பெரும் சிறப்புகள் வாய்ந்த சிவாலயம். மணிமுக்தா, மயூரா நதிகளுக்கிடையே அமைந்துள்ளது.* *கங்கை,யமுனை கூடுமிடம் உத்திரப்பிரயாகைபோல கோமுகி, மணிமுக்தா, மயூரா நதிகள் சங்கமிக்கும் திருவேணிசங்கமம் (தட்சிணப்பிரயாகை) என தலவரலாறு கூறுகிறது.* *கோவில் வாயில், பிரகாரம் என இரண்டு கொடிமரங்கள், இரண்டு தேர்கள் உள்ளன. தருமர், பீமன், தனஞ்செயன், நகுலன், சகாதேவன் இவர்கள் பூஜைசெய்த சிவலிங்கங்கள் அவர்கள் பெயர்கொண்டே இன்றும் விளங்குகிறது. இதில், அந்தரங்க பக்தியில் சிறந்த பீமன் பூசித்த மணல் லிங்கம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. மேலும், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை சொக்கநாதர், மீனாட்சியம்மை, சுவேதனன் பூசித்த பிராணதியாகேசுவரர், சந்திரன் பூசித்த சோமலிங்கேசுவரர், காசிபிந்துமாதவப் பெருமாள், வடபுறத்திலிருந்து சிறுதொண்ட நாயனார் கொண்டு வந்த வாதாபி விநாயகர், வேறெங்கும் இல்லாத பெருமை கொண்ட கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான முருகப்பெருமான், சிவபெருமானை பூசித்த திருக்கோலத்தில் இரு தேவியர்கள் புடைசூழ அருள்வழியும் ஆறு திருமுகஙங்களுடன் இராறு கரங்களுடன் வேலும், மயிலுமாக வடக்கு நோக்கி வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈயும் அருள் வள்ளலாக விளங்குகிறார். கோவிலின் தெற்கு புறத்தில் 63 நாயன்மார்கள், கணபதியுடன் அமைந்துள்ளனர். வில்வ மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட இத்தலத்திற்கு வில்வாரண்ய மேஷத்திரம் என்ற பெயரும் உண்டு.* *முருகப் பெருமான் அசுரனை கொன்ற வீரகத்தி தோஷம் நீங்க வழி என்ன என்று சிவனை கேட்க, நிலவுலகில் வில்வாரண்யம் சென்று என்னை பூஜித்தால் நீங்கும் என்றார். அதன்படி, வில்வராயண்யத்தில் மயூரா நதியில் நீராடி லட்சம் வில்வங்களால் அர்ச்சனை செய்த முருகனுக்கு தோஷம் நீக்கி, சிவன் காட்சி கொடுத்து, இத்தலத்தில் வடக்கு நோக்கி என்னை பூஜித்த கோலத்தில் பக்தர்களுக்கும் அருள்வள்ளலாக விளங்க வேண்டும் என்று மறைந்தார். அன்று முதல் வள்ளி தெய்வாணை சமேதராக சுப்ரமணியராக வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பஞ்சபாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் வந்தபோது, நாரதர் அறிவுரைப்படி வில்வாரண்யம் ஸ்ரீநல்ல நாயகரை வழிபட்டதால், போரில் வென்று அரசுரிமையைப் பெற்றனர். பீமன் வழிபட்ட மணல் லிங்கம் இன்றும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னன் தன் தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்கச் செல்லும் வழியில் நல்லுார் சிவாலயம் வந்து விருத்தப்பிரயாகை நதியில் குளித்து புனித நீரை அஸ்தியில் தெளித்தவுடன் அது தங்க தாமரை மலர்களாக காட்சி கொடுத்தது. உடனே, மன்னன் கங்கை செல்லாது, இங்கேயே அஸ்தியை கரைத்தான். கோமுகி, மயூரம், மணிமுத்தா ஆகிய நதிகள் ஒன்று சேர்வதால் தட்சிணப்பிரயாகை எனப் புகழ்ந்தான். பின், ஸ்ரீநல்ல நாயகருக்கு ஏராளமான திருப்பணிகள் செய்து பிரியா விடை பெற்று தன் நாடு சென்றான்.* *27 மனைவியருடன் வாழ்ந்த சந்திரன் காமவெறி கொண்டு, தன் குரு வியாழன் மனைவியை விரும்பி கொடிய பாவத்துக்கும், ரோக நோய்க்கும் ஆளானான். அது தீர பிரம்மதேவன் கட்டளைப்படி நல்லுார் வல்வாரண்ய தலம் வந்து நதியில் குளித்து கார்த்திகை நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடிய நன்னாளில் பசு நெய்யினால் லட்சம் திருவிளக்குகள் ஏற்றி காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க வழிபாடு செய்து கொடிய நோய் நீங்கப்பெற்றான். இவர், பூசித்த லிங்கம் ஸ்ரீசோமலிங்கேஸ்வரர் என்ற பெயரில் இன்றும் விளங்குகிறது.* *நைந்துவம் எனும் நாட்டை ஆண்ட மன்னன் ஏமாங்கதன் மன்னன் புத்திர பேறு இல்லாமையால் தன் குருவான வசிட்டர் ஆணைப்படி, இங்கு வந்து நீராடி சிவ ஆகமவிதிப்படி அம்மையருக்கு அபிேஷக ஆராதனை செய்தான். அதன் பயனாக இறைவன் அருளால் பிறந்த மகனுக்கு பானு எனும் பெயர் சூட்டினான். காஷ்மீர் தேசம் கோளகன் சாரமதி ஆகியோர் மகள் குணநிதி எனும் நற்குணமுள்ள பெண் இருந்தாள். இவளை சுபிச்சனுக்கு மணம் செய்து கொடுத்தனர். கோதாவரியில் குளிக்கச் சென்றவன், பாம்பு கடித்து இறந்தான். குணநிதி அழுது புலம்பும்போது அவ்வழியாக வந்த துருவாச முனிவர் அறிவுரைப்படி வில்வாரண்யத்தலம் வந்து ஸ்ரீபிராணதியாகேசுவரர், பெரியநாயகியை ஐம்புலன்களார வழிபட்டார். பெருமான் குணநிதிக்கு காட்சி கொடுத்து நீ நம் உலகம் அடைந்து அரம்பை என்னும் பெயருடன் நித்திய சுமங்கலியாக வாழ்வாய் என்றருளினார். இதனால், பூத உடம்பை நீர்த்து தேவ உடம்பை பெற்று இன்றும் நித்தி சுமங்கலியாக சிவலோகத்தில் வாழ்வதாக தலபுராணம் கூறுகிறது.* *பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் வழிபட்ட மணல் லிங்கம், வடக்கு நோக்கி சிவனை வழிபடும் படும் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிப்பது. கோவிலுக்கு மேற்கிலிருந்து வரும் மணிமுக்தா, மயூரா- கோமுகி நதிகள் வடக்காகவும், தெற்காகவும் வலம் வந்து கிழக்குப்புறமாக சங்கமிப்பது சிறப்பு.* *இனிய காலை வணக்கம்.🙏💐* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052.* 🔵🟠🟥🌈🟥🌈🟥🌈🟣
saravanan.
684 views
15 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் கோவில்,* *மூலவர் : வேத நாராயணபெருமாள்.* *உற்சவர் : வேத நாராயணபெருமாள்.* *அம்மன்/தாயார் : வேதவல்லி தாயார்.* *மேற்கு ரதவீதி,* *பெண்ணாடம் 606105,* *திட்டக்குடி தாலுக்கா,* *கடலுார் மாவட்டம்.* *காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை மணி 4:30 முதல் இரவு 7:30 மணி வரை திறந்திருக்கும்.* *+91 9659206577.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*    *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்*     *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பான : மார்கழி மாத திருக்கல்யாண உற்சவம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி திருவிழா; ஸ்ரீராமநவமி; அனுமன் ஜெயந்தி விழா.பெண்ணாடத்தில் ஒரே நேர்க்கோட்டில் நின்றகோலம், அமர்ந்தகோலம், சயன கோலம் ஆகிய நிலைகளில் பெருமாள் கோவில்கள் உள்ளது. அதில் நின்ற கோலத்தில் உள்ள பெருமாள் கோவில் சிதிலமடைந்துள்ளது. அதில், வீற்றிருந்த பெருமாள் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.* *மூலவர் வேத நாராயணபெருமாள் கிழக்கு திசை நோக்கியும், மகா மண்டபத்தில் உள்ள ராமர் சீத்தா லட்சுமண சமேத ஆஞ்சநேயர் சுவாமிகள் தெற்கு திசை நோக்கியும், ஆஞ்சநேயர் சன்னதிக்கும் ராமர் சீத்தா லட்சுமண சன்னதிக்கும் இடையே ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்புஆகும்.* *வேதம் கற்றுக்கொள்வோர் இங்கு வழிபட்டு துவங்குவது சிறப்பு. மூலவர் கல்விச் செல்வம் தரும் என்பதால் மாணவர்கள் வழிபட்டு செல்கின்றனர்.* *குழந்தை, கல்வி, கடன், திருமண தடை நீங்க மஞ்சள் துணியில் தேங்காய் கட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும். பின்னர் பூஜைகள் நடத்தி அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.* *தேவ கன்னியர், காமதேனு, வெள்ளை யானை ஆகியோர் இங்குள்ள அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரை பார்த்து மயங்கி பூலோகத்தில் தங்கிக்கொண்டனர். இவர்கள் ஏன் தேவ லோகத்திற்கு வரவில்லை என பெருமாள் பூலோகத்திற்கு வந்து இறங்கிய இடமாக இத்தலம் உள்ளது.* *வீற்றிருந்த பெருமாள் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.* *இனிய காலை வணக்கம்.🙏💐* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* ✮✮ ✮ ✮ ✮✮ ✮ ✮ ✮✮ ✮ ✮
saravanan.
638 views
16 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு பிடாரி அரசியம்மன் கோவில்,* *மூலவர் : அரசியம்மன்.* *காட்டுக்கூடலுார் ரோடு,* *இருப்பு 607 805,* *விருத்தாசலம்.* *காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை.* *+91 9751093220.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*    *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்*     *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : சித்திரைப் பெருவிழா (16 நாட்கள்)கடலுார் மாவட்டத்தில் நடைபெறும் பெருவிழாக்களில் அம்மன் திருக்கல்யாண பெருவிழா முக்கியமானது.* *கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் நுழைவு வாயிலில் கொடிமரம், பலிபீடம் உள்ளன. எதிரில் அருள்மிகு பிடாரி அரசியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பின்புறத்தில், தனித்தனி சன்னதிகளில் விநாயகர், முருகன்அருள்பாலிக்கின்றனர்.* *திருமணம், குழந்தைப் பேறுக்காக வேண்டுதல்.* *திருமணமானவர்கள் மாங்கல்யத்தை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஆடு, கோழி விடுவர்.* *ஆதி காலத்தில் சிவபெருமானும், பார்வதியும் திருமணம் முடிந்து சுகபோகங்களை அனுபவித்து வரும்போது, ஒரு நாள் சிவபெருமானிடம் சூரியன், சந்திரன் யார் என பார்வதி கேட்டார். அப்போது, இருவரும் எனது இரு கண்கள் என்றதும்; பார்வதி சிவனின் இரு கண்களையும் தன்கைகளால் மூடினாள். அப்போது, உலகம் முழுவதும் இருளில் மூழ்கி இயக்கம் தடைபட்டது. இதைக் கண்ட தேவர்கள் சிவபெருமானிடம் வந்து கண்ணைத் திறவுங்கள், உலக இயக்கம் முடங்கியுள்ளது என்றனர். தேவர்களின் வேண்டுகோளையேற்று சிவபெருமான் கோடி சூரிய ஒளியுடைய தன் நெற்றிக்கண்ணை திறந்தார். உலக இருள் நீங்கி ஒளிவீசத்தொடங்கியது. பரமசிவனின் கண்ணை பொத்திய இரண்டு கைகளையும் பார்வதி நீக்கினார். இதனால், பரமசிவனின் மூன்று கண்களும் தீ பிழம்பாக சிவந்து காணப்பட்டது.* *இதனால், பார்வதி பரமசிவனின் கோபத்திற்கு ஆளானார்.* *பரமசிவனின் கண்களை மூடிய பாவத்திற்கு கடல் சூழ்ந்த பூமியில் கடும் தவமியற்றி எனது இடபாகம் வந்தடைவாய் என உரைத்தார். இதைக்கேட்ட பார்வதி அம்மை தவமியற்ற இடம் தேடி அலைந்தபோது காஞ்சியைத்தாண்டி, தென்திசையில் வரும்போது பட்டமரங்கள் தளிர்த்து செழித்து தேனோடு மலர்களை சொறியும் அடர்ந்த கானகமாக விளங்கிய இடத்தில் தவம் ஏற்றாள் அதாவது யுக முடிவில் தாவரம் முதல் ஜீவராசிகள் வரை எல்லாம் அழிந்து பஞ்ச பூதங்கள் (ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று) மட்டும் அழியாமல் ஒன்றிணைந்து இருந்த அடர்ந்த காட்டில் பார்வதி சிவனை நோக்கி கடும் தவமிமியற்றினாள். நீண்ட நாள் அசைவின்றி பார்வதி தவமியற்றியதால், அவரை சுற்றி வளர்ந்து, மறைந்து விட்டது.* *பார்வதி தவமியற்றி அடர்ந்த காடுகளின் ஒரத்தில் புல்வெளிகள் நிறைந்து காணப்பட்டது. அந்த இடத்தில் தற்போதைய வடக்கிருப்பு கிராம மக்களின் மாடுகளை அரசன் எனும் அரிஜனன் மேய்த்து வந்தான். அப்போது, மேய்த்து வரும் ஒரு மாட்டில் மடி வற்றி காணப்படுவது குறித்து உரிமையாளர் அரசனை எச்சரித்தனர். அதையடுத்து மாட்டை தொடர்ந்து கண்காணித்து அரசன் பின் தொடர்ந்து சென்றபோது, காட்டிலுள்ள பார்வதி தவம் இயற்றும் புற்றின்மீது பசு பால் சொறிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். பின்னர். வீடு திரும்பிதும் தான் கண்ட காட்சிகளை அனைவரிடமும் கூறினான். அந்த காட்சியைக் கண்ட மக்கள் அரசன் கண்ட அம்மை என்பதால் அரசன் அம்மை என பக்தியுடன் வழிபட்டனர். இத்திருக்கோவிலைச் சுற்றி எட்டு திசைகளிலும் கிழக்கிருப்பு, தெற்கிருப்பு, வடக்கிருப்பு, நாச்சிவெள்ளையன் குப்பம், நெல்லடிக்குப்பம், நண்டுகுழி, செடுத்தாங்குப்பம் ஆகிய கிராமங்களுக்கும் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் பிடாரி அரசியம்மன் அருள்பாலிக்கிறாள். இவ்வாறு வழிபட்டு வரும் காலத்தில் ஒரு நாள் காட்டுவழியாக வளையல் வியாபாரி ஒருவன் சென்றான். அவனை அம்மன் கூவி அழைத்தார். சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல அங்கு அம்மன் அசரீரியாக தனக்கு வளையல் போடுமாறு தெரிவித்தார். வளையல்போட்டதற்கான பணத்தை மேற்கிருப்பில் உள்ள மணியக்காரர் பொன்னப்பபடையாட்சி வீட்டை அடையாளம் கூறி, அங்கு வாங்கிக் கொள்ளுமாறு கூறியது. அதன்படி, அம்மன் சொன்ன வீட்டிற்கு சென்று பணத்தை பெற்றுக் கொண்ட வளையல்காரன், அம்மனை அடைய மீண்டும் கோவிலுக்கு வந்து அம்மனை அழைத்தான். அம்மன் வெளியில் வராமலும், குரல் கொடுக்காமலும் இருந்ததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, கோபாவேசத்துடன் தன் திரிசூலத்தால் வளையல்காரனை அழித்து, கல்லாகுமாறு சபித்தது. அன்று முதல் அரசியம்மன் பிடாரி அரசியம்மன் (திரிசூலம் என்பது பிடாரி என்றழைக்கப்படுகிறது). இன்றும் இக்கோவிலில் வளையல்காரன் கல்உருவத்தை காணலாம். இந்த பாவம் தீரவே, அம்மனின் திருக்கல்யாண உற்சவத்தன்று வளையல்காரர்கள் வளையல் சீர்செய்வர்.* *கடலுார் மாவட்டத்தில் நடைபெறும் பெருவிழாக்களில் அம்மன் திருக்கல்யாண பெருவிழா முக்கியமானது.* *இனிய காலை வணக்கம்.🙏💐* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🪴 🪴🪴 🪴🪴 🪴🪴 🪴
saravanan.
933 views
21 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்,* *மூலவர் : காமாட்சியம்மன்.* *உற்சவர் : காமாட்சியம்மன்.* *அம்மன்/தாயார் : காமாட்சியம்மன்.* *நஞ்சை மகத்து வாழ்கை மற்றும் அஞ்சல்,* *சிதம்பரம் வட்டம்* *கடலூர்-608102.* *காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 94424 26225.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* 🌟 *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : மாசி மகம், சித்திரா பவுர்ணமி மற்றும் ஆடிகடைசி வெள்ளி சிறப்பு திருவிழாவாக கொண்டாடப்படுகின்றன.* *கிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது. விமானத்தில் ஒரு கலசம், முகப்பில் சூலம், பலிபீடம் அமைந்துள்ளது.* *புத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கு சிறந்த கோயிலாக விளங்குவதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.* *தானியங்கள், காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்திக்கின்றனர்.* *குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமிகோயில், மேற்கே வள்ளலார் பிறந்த மருதூர் உள்ளதுடன், கிழக்கே முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக வரும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி வருகையால் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.* *விவசாயத்தை பாதுகாக்கும் காவல் தெய்வமாக விளங்கிய காளியம்மன் கோயில் அருகில் இக்கோயில் உள்ளது. இக்கோயில் விவசாய அபி விருத்திக்காக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பொற்கொல்லர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர்களும் குலதெய்வ வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். அம்மன் நோய் நொடிகளை நீக்கி நலம் காக்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.* *சுற்றுப்பகுதி கிராமங்களில் நவக்கிரகம் உள்ள கோயிலாக விளங்கும் காளியம்மன் கோயில் அருகில் குடிகொண்டுள்ள விவசாயிகளுக்கு செல்வவளம் பெருக்குவதுடன், திருமணத்தடையை நீக்கி, புத்திரபாக்கியத்தை அளிக்கும் வல்லமைபடைத்தவராக விளங்குகின்றார்.* *இனிய காலை வணக்கம்.🙏💐* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹