🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏

திருநீற்றுச் சுவடு
4.8K views
10 days ago
#💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # ஶ்ரீவித்யையின் மறைந்த மஹா ரகசியம் சித்தர்கள் மற்றும் தாந்த்ரீக மரபில் நவாக்கரி மந்திரம் என்பது மிக உயர்ந்த ரகசியமாகவும், சக்திவாய்ந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஶ்ரீவித்யா உபாசனையில் இந்த நவாக்கரி மந்திரத்தின் முக்கியத்துவத்தை பின்வரும் நிலைகளில் காணலாம்: ━━━━━━━━━━━━━━━━━━━ #ஒன்பது_சக்திகளின்_சங்கமம் நவாக்கரி என்பது ஒன்பது எழுத்துக்களைக் கொண்டது (நவ + அக்ஷரம்). இது பிரபஞ்சத்தின் ஒன்பது நிலைகளையும், ஒன்பது கிரஹங்களையும், ஒன்பது துவாரங்களையும் ஆளக்கூடிய சக்தியை உபாசகருக்கு வழங்குகிறது. ஶ்ரீவித்யா உபாசனையில் லலிதா மகா திரிபுரசுந்தரியை வழிபடும்போது, அவளது ஒன்பது வடிவங்களும் இந்த மந்திரத்திற்குள் அடங்குகின்றன. ━━━━━━━━━━━━━━━━━━━ #பிந்து_மற்றும்_திரிகோண_ரகசியம் ஶ்ரீசக்ர வழிபாட்டின் மையப்புள்ளியான பிந்து நிலையை அடைய, இந்த நவாக்கரி மந்திரம் ஒரு திறவுகோலாகச் செயல்படுகிறது. ஶ்ரீவித்யாவின் அங்க தேவதைகளான வராஹி, மாதங்கி போன்றோரின் அருளை ஒருசேரப் பெறவும், குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா சக்ரம் வரை தடையின்றி கொண்டு செல்லவும் இது மிக அவசியம். ━━━━━━━━━━━━━━━━━━━ #சித்தர்களின்_பார்வை (வாசியோகம்) சித்தர் மரபில், குறிப்பாக திருமூலர் போன்ற பெரியோர்கள் நவக்கரி சக்கரத்தையும் அதன் மந்திரத்தையும் "சர்வ வல்லமை பொருந்தியது" எனக் குறிப்பிடுகின்றனர். **🔥பஞ்ச பூதத் தூய்மை🔥** உடலிலுள்ள பஞ்ச பூதங்களைச் சமநிலைப்படுத்தி, தேகத்தைச் சுத்திகரிக்கிறது. **🔥வாசி யோகம்🔥** மூச்சுக் காற்றை (வாசி) முறைப்படுத்தி, உள்ளொளியைக் காண இது துணைபுரிகிறது. ━━━━━━━━━━━━━━━━━━━ #ஏன்_இது_முழுமை_பெறுகிறது? ஶ்ரீவித்யா என்பது ஒரு முழுமையான அறிவியல். மந்திரம், எந்திரம், தந்திரம் ஆகிய மூன்றும் இணையும்போதுதான் உபாசனை பலன் தரும். இதில் நவாக்கரி என்பது "மந்திர சித்தி" அளிப்பதில் முதன்மையானது. ━━━━━━━━━━━━━━━━━━━ "நவாக்கரி மந்திரத்தைச் சித்தி செய்த பின்பே, ஒரு உபாசகன் முழுமையான ஆன்மீக ஆற்றலைப் பெற்று, பரப்பிரம்ம நிலையை உணரத் தகுதியுடையவன் ஆகிறான்." ━━━━━━━━━━━━━━━━━━━ உபாசகர்கள் இதனை முறையான குருவின் மூலம் உபதேசம் பெற்று ஜபிக்கும்போது, அது வாலைத் தாய் முதல் மகா திரிபுரசுந்தரி வரையிலான அனைத்து அருளையும் ஒருங்கே பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
திருநீற்றுச் சுவடு
2.4K views
13 days ago
#💥ஓம் ந ம சி வா ய💥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 திருக்கோவில்... வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய ஸ்தலம் தலைவிதியை மாற்றி எழுதும் சிவ தலம்..! வாழ்க்கையில் பலவிதமான துன்பங்கள், தோல்விகள் ஏற்படும் போது, நெருக்கடியான சூழலில், ஒரு கட்டத்திற்கு மேல் அவற்றை தாங்க முடியாத போது, "கடவுள் நினைத்தால் தான் நம்மை காப்பாற்ற முடியும்" என நினைக்க துவங்குகிறோம். கடவுள் நம்முடைய வாழ்க்கையில் அதிசயம் நிகழ்த்தி, நம்மை இந்த துன்ப நிலையில் இருந்து விடுவித்து, ஆசி வழங்க வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் மனம் சோர்வாக உணரும் போது கோவில்களுக்கு செல்கிறோம். அப்படி நாம் செல்லும் போது இந்தியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றால் நம்முடைய தலைவிதி மாற்றி எழுதப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு அதிசய கோவில் தான் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அமைந்துள்ள திரியம்பகேஷ்வரர் கோவில். சிவ பெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவிலில் சிவ பெருமான் மூன்று முகங்களுடன் காட்சி தருகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் முகங்களும் ஒரே லிங்கத்தில் இருப்பது போன்ற லிங்க வடிவமாக சிவ பெருமான் காட்சி தரும் இடம். இது பிரபஞ்ச சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக கருதப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களுக்கு உள்ள தெய்வங்கள் ஒன்றாக அமைந்த இடம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் நம்முடைய தலைவிதி எவ்வளவு மோசமாக இருந்தாலும் அது மாற்றி எழுதப்படும் என சொல்லப்படுகிறது. இக்கோவிலுக்குள் குஷவர்த்த குண்ட் என்ற தீர்த்தம் உள்ளது. இது கோதாவரியில் இருந்து உருவானது சொல்லப்படுகிறது. அதனால் இதை தென்னகத்து கங்கை என்றும் அழைக்கிறார்கள். இங்கு காலஷர்ப்ப தோஷ பூஜை செய்து வழிபட்டால் நவகிரகங்களில் எந்த கிரகத்தால் பாதிப்பு இருந்தாலும் அது நீங்கி விடும் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் நடைபெறும் மற்றொரு பிரபலமான பூஜை நாராயண் நக்பலி பூஜை. துர்மரணம் அடைந்த குடும்ப உறுப்பினர்களின் ஆன்மாக்களால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக செய்யப்படும் பூஜையாகும். இக்கோவிலில் உள்ள மூலவர் லிங்கம் எப்போதும் தண்ணீருக்கு அடியிலேயே உள்ளது. அந்த அளவிற்கு கருவறையில் தண்ணீர் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். இந்த நீரூற்ற பெருகி வருவது மும்பெரும் தேவர்களின் பேராற்றலை குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவில் குளமான கோதாவரி ஆற்றில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சத்தை அடைய முடியும் என சொல்லப்படுகிறது. அவர்கள் பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.