செய்திகள் புதுசு

Makkal Mugam
741 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஈரோட்டு மாவட்டம், சம்பத் நகர் பகுதியில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103 - வது பிறந்த தின விழா நடைபெற்றது. திமுக கழகத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். பிறந்தநாள் விழாவை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக கழக இளைஞரணி திருவாசகம் தலைமையில் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் சு முத்துசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் அமைப்புசாரா அணி சார்ந்த ராஜா மற்றும் தமிழ் இலக்கிய அணியை சார்ந்த பாலாஜி பொது சேவைக்கான ஆர்வலர் ராமதாஸ் மற்றும் ஈரோடு மாவட்ட பொற்கிலே பெற்ற அம்மையார் மூதாட்டி மறுத்தவச்சி லட்சுமி குப்புசாமி திரு.ஆனந்த், திரு.ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
565 காட்சிகள்
23 நாட்களுக்கு முன்
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 *செய்தி வெளியீடு* *செ.வெ.எண்: 296* | *நாள்: 15.05.2026* *இளைஞர் நீதிக் குழும மாணவர் கல்வி பயில ரூ. 24,000/- கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்* விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், இளைஞர் நீதிக் குழுமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது கல்வியைத் தொடர்வதற்காக, 2026-2027 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூ. 24,000/- க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் *மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப.,* அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த மாணவர், தான் இளைஞர் நீதிக் குழுமத்தைச் (Juvenile Justice Board - JJB) சார்ந்த இளஞ்சிறார் பிரிவில் உள்ளதாகவும், தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தனது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதால், மேல்படிப்பைத் தொடர கல்வி உதவித்தொகை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். அம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையாக ரூ. 24,000/- வழங்கப்பட்டது. இதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவரின் பெற்றோரிடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில், இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் திருமதி முனியம்மாள், கல்லூரி முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்.