சினிமா🎤தகவல்

ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
678 views
2 months ago
8 ஆண்டுகளுக்கு முன்பு TRஆல் ஏற்பட்ட அவமானம் பற்றி மனம் திறந்த சாய் தன்ஷிகா #சினிமா🎤தகவல் #📢பிப்ரவரி 5 முக்கிய தகவல் 🫠
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
729 views
2 months ago
பாக்யராஜ்: சினிமாவை தனது திரைக்கதையால் திரும்பி பார்க்க வைத்த பாக்யராஜ், நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். சாந்தனுவும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இதே போன்று மகள் சரண்யா, பாக்யராஜ் இயக்கி தயாரித்த 'பாரிஜாதம்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், இந்தப் படம் பெரியளவில் ரீச்சாகவில்லை. இந்தப் படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். சரண்யா பாக்யராஜ்: அந்த படத்திற்கு பிறகு சரண்யா வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை, வெளியில் தலைகாட்டவும் இல்லை. அவர் காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக அப்போது பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. இந்த தகவலை, பாக்யராஜ் தரப்பில் இருந்தோ, சரண்யா தரப்பில் இருந்தோ எந்தவிதமான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. பல ஆண்டுகளாக வெளியில் தலைகாட்டாமல் இருந்தார் சரண்யா. பல ஆண்டுக்கு பிறகு: அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் அந்த குழந்தை தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பதாக கூறினார். ஆனால் சரண்யாவுக்கு எப்போது திருமணமானது? அவருடைய கணவர் யார் என்பதை அவர் கூறவில்லை. தற்போது சரண்யா வீட்டில் இருந்த படியே காஸ்ட்யூம் டிசைனர் வேலையை பார்த்து வருகிறார். பல ஆண்டுகளாக வெளிஉலகத்திற்கு தலைகாட்டாமல் இருந்த இவர்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது அம்மாவுடன் கலந்து கொண்டார். தற்போது சரண்யா தனது இன்ஸ்டாகிராமில், கையில் பூவுடன் இருக்கும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீயோவை பார்த்த அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். #தகவல் களஞ்சியம் (TSK) #சினிமா🎤தகவல் #பாக்கியராஜ் ஸ்டேட்டஸ்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
727 views
2 months ago
இயக்குனர் மணிரத்னம், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனாக பணியாற்றி, 2008-ம் ஆண்டு ஆந்திரா ஆந்தகாடு என்ற தெலுங்கு படத்தன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பிறகு 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான துரோகி என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான இவர், படத்தன் தோல்வியால் 6 வருடங்கள் படம் இயக்காமல் இருந்தார், தொடர்ந்து 2016-ம் ஆண்டு மாதவன் - ரித்திகா சிங்க நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஒரே நேரத்தில் இந்தி - தமிழ் என இரு மொழிகளில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் குரு என்ற பெயரில் இந்த படத்தை ரீமேக் செய்த சுதா கொஙகரா, 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கினார். நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சூரரைப்போற்று திரைப்படத்தை இந்தியில் அக்ஷைகுமார் நடிப்பில் இயக்கி தோல்வி கண்ட இவர், தற்போது பராசக்தி என்ற படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 10-ந் தேதி வெளியாக இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சுதா கொங்கரா இயக்குனர் பாக்யராஜ், பாண்டியராஜன், மற்றும் பி.வாசு ஆகியோர் குறித்து மேடையில் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பாக்யராஜ் சார் அவர்கள் என் உயிர் போன்றவர். இன்று ஒரு இயக்குநராக அமர்ந்து கொண்டு, அவர் அன்று அப்படிப் பண்ணாரே, இப்படிப் பண்ணாரே என்று வியந்து பேசும் நிலையில் நான் இருக்கிறேன். அவருடைய மகன் சாந்தனு ஒரு மிகச்சிறந்த நடிகர், மிக அழகாகவும் இருக்கிறார். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.(பாவக்கதைகள்: ஆந்தாலஜி படம்) அந்தச் சமயத்தில்தான் பாக்யராஜ் சாரைப் பற்றி நிறையப் பேசினேன். என் பள்ளி நாட்களில் நடந்த சில சுவாரசியமான நினைவுகள் இப்போதும் பசுமையாக இருக்கிறது. பாக்யராஜ் சார் இயக்கி நடித்து ஏ.சான்றிதழுடன் வெளியாக முந்தானை முடிச்சு படத்தை பள்ளிக்குச் செல்லாமல் 'கட்' அடித்துவிட்டுச் சென்று பார்த்தது இப்போதும் நினைவிருக்கிறது #சினிமா🎤தகவல்
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
945 views
3 months ago
உங்கள் நிலம் யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் நடிகைகளின் பரிதாப வாழ்வை குறிப்பிட்டு பேசுகிறார்.. அதில், நடிகை கனகா, கேஆர்விஜயா, காஞ்சனா போன்ற நடிகைகளை பற்றி விரிவான தகவல்களை பகிர்ந்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது: "60-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவிகா.. தன்னுடைய அம்மாவின் கண்டிப்பிலிருந்து தப்பிக்கவும், ஒரு துணை வேண்டியும் தேவதாஸ் என்ற உதவி இயக்குநரை தேவிகா திருமணம் செய்து கொண்டார்.. ஆனால், அவர்களுக்குள் சரியான புரிதல் இல்லாததால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு, இறுதியில் பிரிந்தனர்.. தேவிகா மகள் கனகா தேவிகா-தேவதாஸ் தம்பதியின் மகளான கனகா, 'கரகாட்டக்காரன்' படத்தின் மூலம் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார்.. கனகாவின் அம்மா உயிருடன் இருந்தவரை அவரது திரைவாழ்க்கையை மிகச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டார்.. தாயின் மறைவுக்கு பிறகு கனகா தனிமைப்படுத்தப்பட்டார். அப்பா மீதும் அவருக்கு பெரும் கசப்பு இருந்தது.. தனக்கு துணையாக இருப்பார் என்று நம்பி ஒருவரை திருமணம் செய்தார், ஆனால் அந்த நபர் ஏமாற்றியதால் 15 நாட்களிலேயே அவரை விட்டுப்பிரிந்தார்.. தனிமையில் கனகா 2002ல் அவரது தாய் தேவிகாவின் மறைவுக்கு பின் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் தனிமை காரணமாக சினிமாவை விட்டு கனகா விலகினார். பல ஆண்டுகளாகவே தனது வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்.. வெளி உலகத் தொடர்பின்றி வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டார்.. அவரது போட்டோ ஒன்று வெளியாகி வைரலானது.. அப்போது அவரது உடல் தோற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.. கடந்த 2023ல் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து பேசியபோது எடுத்த போட்டோ வெளியானது. அதில் கனகா உடல் எடை கூடி, அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது ரசிகர்களை வருத்தமடைய செய்தது. ஆரோக்கியமாய் கனகா கடந்த 2024ல் சென்னையில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ரசிகர் ஒருவருடன் கனகா எடுத்துக் கொண்ட போட்டோவும் இணையத்தில் வைரலானது. இதிலும் கனகா மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்பட்டார். ஆனால், இதற்கு முன்பெல்லாம், கனகா அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார், இறந்துவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவியபோது, அவரை பற்றின போட்டோக்கள் வெளிவந்தது அனைத்துக்கும் பதிலாய் அமைந்தது.. அவர் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார்.. ஆனால் தனிமையையே விரும்புகிறார். நடிகை கனகாவைப் போலவே, கே.ஆர். விஜயாவும் தனது ஆரம்பகால வாழ்க்கையில் உறவினர்களிடம் இருந்து பெரும் டார்ச்சரை அனுபவித்தவர்.. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் உறவினர்களாலும், சூழலாலும் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்துள்ளார். திருமணத் தடை மற்றும் சூனியம் கே.ஆர். விஜயா வேலாயுதம் என்ற ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, அவரது குடும்பத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் கேஆர் விஜயா திருமணம் செய்துகொண்டால் தங்களுக்கு வரும் வருமானம் நின்றுவிடும் என்ற பயம்தான்.. இதனால் அவருக்கு திருமணம் நடக்கக்கூடாது என்று பல சூனியங்கள் வைக்கப்பட்டன.. கேஆர் விஜயா பற்றின தவறான வதந்திகள் பரப்பப்பட்டன.. அதுமட்டுமல்ல, குழந்தை பிறந்த அன்றே, அவரது கணவர் இறந்துவிட்டதாகவும் அவரது உறவினர்களே பெரிய வதந்தியை கிளப்பிவிட்டனர்... இது அவரை மனதளவில் நிலைகுலையச் செய்துவிட்டது.. தாய்-தந்தையே எதிரியான சோகம் அதேபோல நடிகை காஞ்சனாவின் கதை இன்னும் வேதனையானது. இவர் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் தனது பெற்றோரிடமே இழந்துவிட்டார்.. காஞ்சனா ஆரம்பத்தில் ஒரு விமானப் பணிப்பெண்ணாக இருந்தார். ஒரு விமானியை அவர் தீவிரமாக காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்தனர். ஆனால், கே.ஆர். விஜயாவைப் போலவே, காஞ்சனாவும் சம்பாதித்து தரும் 'பொன்முட்டை இடும் வாத்து' என்பதால், அவரது அப்பா இந்தத் திருமணத்தை விரும்பவில்லை. காஞ்சனா வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருந்த சமயம் பார்த்து, அவரது காதலனை அழைத்து மிரட்டி துரத்திவிட்டார். இதனால் அந்த காதலர், மனமுடைந்து வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார். தானம் தந்த சொத்து ஆனால் காஞ்சனாவின் அப்பாவோ, மகளிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி, அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். தனது சொந்த பெற்றோரே தன்னை ஏமாற்றியதை அறிந்த காஞ்சனா, பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். பிறகு நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தனது சொத்துக்களை மீட்டு, அவற்றை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தானமாக வழங்கினார். அதற்கு பிறகு உலக வாழ்க்கையைத் துறந்து, ஆன்மீகப் பாதையில் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார்" என்றெல்லாம் தெரிவித்து வருகிறார் #📰டிசம்பர்-30 முக்கிய செய்திகள் #சினிமா🎤தகவல்