iyarkkay maruthuvam.

saravanan.
666 views
21 days ago
#iyarkkay maruthuvam. தரும் நட்சத்திரப் பூ பிரியாணி, குருமா போன்ற ஸ்பெஷல் உணவு தயாரிப்பின்போது சேர்க்கப்படும் மசாலா சேர்மானங்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. இதனை Star Anise என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வாசனையுடன் சுவை கூட்ட மட்டும்தான் இந்த அன்னாசிப்பூ பயன்படுகிறதா அல்லது ஏதேனும் மருத்துவ காரணிகள் இருக்கிறதா . ‘‘நம்முடைய சமையலில் தாளிப்பு என்கிற முறை தொன்று தொட்டு காலமாக நாம் கடைபிடித்து வருகிறோம். இதற்காகவே அஞ்சறைப்பெட்டி என்கிற மருத்துவ குணமுடைய ஒன்றை ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் பார்க்கலாம். அதில் கடுகு, வெந்தயம், சீரகம், மஞ்சள், மிளகு, உளுந்து, பெருஞ்சீரகம், உளுந்தம்பருப்பு அதோடு அன்னாசிப்பூ என்கிற ஒரு உணவுப்பொருளையும் பயன்படுத்தி வருகிறோம். இது பெரும்பாலும் மசாலா உணவு தயாரிப்பில் மட்டும் பயன்படுத்துகிறோம். இந்த அன்னாசிப்பூ என்பது மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. அன்னாசிப்பூ மிகவும் எளிதில் கிடைக்கக் கூடியது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின்- ஏ வைட்டமின்-சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இது நட்சத்திர வடிவம் கொண்ட ஒரு மசாலா பொருள். இது தெற்கு சீனாவில் உருவானது. இது பெரும்பாலும் இந்திய மற்றும் சீன சமையல் முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஜீரணத்திற்காகவும், உணவு வாசனைக்காகவும் சேர்க்கப்படுகிறது. அன்னாசிப்பூவில் கலோரிகள் குறைவு. எனவே, உடல் பருமன் உடையவர்கள் அவர்களுக்கு உணவு தயாரிக்கும்போது இதை அதிகளவு சேர்க்கலாம். இது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது ஜீரண கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலை தீர்க்கிறது. ரத்த செல்களின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. தோல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இது தீர்வாக அமைகிறது. அன்னாசிப்பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வு, தலைமுடி வறட்சி, சரும நோய்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக, இதன் எண்ணெயில் Onithol என்கிற முக்கியமான மூலக்கூறு உள்ளது. இதை உடலில் தசைப்பிடிப்புகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தசைப் பிடிப்புகள் நீங்கும். முகப்பருக்கள் தொந்தரவுகள் இருந்தால் அன்னாச்சிப் பூவை பொடியாக்கி, தேன் கலந்து முகத்தில் பூசினால் உடனடியாக குணமடையும். பெண்கள் தங்களுடைய கூந்தலை பராமரிப்பதற்கு இதன் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தலாம். அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர் ரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்து. வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கும்போது அவர்கள் துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள். அதிகமான உணவு எடுத்துக் கொண்டவர்கள் ஜீரணமாகாமல் சிரமப்படுவதுண்டு. அவர்கள் தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய ரசாயனம் கலந்த பானங்களைப் பயன்படுத்தாமல் அன்னாசிப்பூவினை பொடி செய்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடியாக அஜீரண கோளாறு நீங்கி நிம்மதியாக உணர்வார்கள். மேலும் இது வயிற்றில் ஏற்படக்கூடிய வாயுத்தொல்லையை நீக்குகிறது. படபடப்பு உள்ளவர்கள் அன்னாசிப் பூவினை பயன்படுத்துவது நல்லது. படபடப்பை நீக்க அன்னாசிப்பூ தீர்வாக அமையும். அதுபோல வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு இயல்பாக மன அழுத்தம் இருக்கும். அவர்களும் அதிலிருந்து விடுபட அன்னாசிப்பூவினை பயன்படுத்துவது நல்லது.’’ எப்படி பயன்படுத்தலாம்? ‘‘அன்னாசிப்பூவினை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராகத் தயாரித்து அருந்துவதால் நல்ல செரிமானத்திற்கு உதவி செய்கிறது, மந்தத் தன்மையை போக்குகிறது, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு உடனடி நிவாரணியாக இருக்கிறது. அன்னாசிப்பூ + இஞ்சி + ஜீரகம் சேர்ந்த தேநீர் செய்து குடித்தால் ஜீரண மண்டலத்தை பலப்படுத்துவதுடன் ஜீரணம் தொடர்பான மற்ற கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப்பூவோடு சீரகம், மிளகு, தேன் கலந்து தேநீர் செய்து பயன்படுத்தும்போது சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும். நுரையீரலுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஆஸ்துமா போன்றவற்றை சரி செய்யலாம். ஈரலை பற்றிய வைரஸ் நோய்களுக்கு மருந்தாக அன்னாசிப்பூ இருக்கிறது!’’ பெண்களின்_நலன்_விரும்பி! அன்னாசிப்பூவை பெண்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது பெண்களுடைய மாதவிடாய்க்கு காரணமாக இருக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன்கள் சுரப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப்பிடிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அன்னாசிப்பூவை பால் கொடுக்கும் தாய்மார்கள் பாலில் தேன் கலந்து அன்னாசிப்பூ பவுடரை கலந்து குடித்தால்உடனடி நிவாரணம் கிடைக்கும். 🟨🟨🟨👇🟥🟥🟥 *இயற்கை மருத்துவம்* 🟨🟨🟨👆🟥🟥🟥
saravanan.
920 views
23 days ago
#Om MURUGAA 🙏Om murugan status 🕉#🦚🦚💞💕💞🦚🦚# #iyarkkay maruthuvam. நோய்களைத் தீர்க்கும் முருங்கை வேர், பட்டை... முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் குணம் கிடைக்கும். சந்தனம், தேற்றான்கொட்டை, பூமிச் சர்க்கரைக் கிழங்கு, பூனைக்காலி விதை மற்றும் முருங்கை வேர்ப்பட்டை சம அளவு எடுத்துத் தேங்காய்ப்பால் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த கலவையோடு சர்க்கரை சேர்த்து 12 நாள்கள் குடித்து வந்தால் உடல்சூடு தணியும். இளம் முருங்கை வேரை நிழலில் உலர்த்திப் பொடித்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும். முருங்கைப் பட்டை, மூக்கிரட்டை வேர், ஊமத்தை இலை, பூண்டு சம அளவு எடுத்து அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்று போட்டால் வீக்கம் கரையும். வலி குறையும். மூட்டு தொடர்பான வாய்வு நோயும் குணமாகும்... *அன்புடன் உங்கள்* *மணித்தேவன்* 🟨🟨🟨💐🟥🟥🟥
saravanan.
759 views
25 days ago
#iyarkkay maruthuvam. இல்லாமல் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் மருந்து ஒன்றினை பார்ப்போமா.... நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு செலவே இல்லாமல் மூன்று மூலப்பொருட்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம். வெந்தயம் - 250 கிராம், ஓமம் - 100 கிராம், கருஞ்சீரகம் - 50 கிராம். மேலே உள்ள மூன்று பொருட்களை சுத்தம் செய்து தனித்தனியாக வறுத்து தூள் செய்து கலவையை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இக்கலவையை ஒரு டீஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக்கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ☆ நன்மைகள்: 1) நம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக் கழிவுகள் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு நீக்கப்படுகிறது. 2) ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. இதயம் சீராக இயங்க உதவுகிறது. 3) சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும் தோளில் மினுமினுப்பும் சுறுசுறுப்பும் உண்டாகிறது. 4) எலும்புகள் உறுதி அடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலிமை அடைகிறது. கண்பார்வை, நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. 5) மலச்சிக்கல் நீங்குகிறது. நினைவாற்றல் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகளை நீக்குகிறது. 6) நீரிழிவுநோய் பராமரிக்கப்படுகிறது. இந்த கலவையை இரண்டு, மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது..... 🟨🟨🟨👆🟥🟥🟥
saravanan.
664 views
25 days ago
#iyarkkay maruthuvam. சொடக்கு தக்காளி — ஒரு சிறிய பழம், ஆனால் அற்புதமான மருத்துவ சக்தி! 🌿 எல்லோருக்கும் இந்த சொடக்கு தக்காளி செடி பிடிக்கும். ஆனால் இதன் மருத்துவ சக்தி எவ்வளவு வியப்பூட்டும் என்பது பெரும்பாலோருக்கே தெரியாது. இந்தப் பழம் குமிழ் போன்ற மென்மையான மேல் தோலுக்குள் மறைந்து இருக்கும். அதனால்தான் இதை “கேப் கூஸ்பெர்ரி (Cape Gooseberry)” என்றும் அழைக்கின்றனர். --- 🌿 இயற்கையின் பொக்கிஷம் — உடலுக்கு தரும் நன்மைகள்: 💨 நுரையீரல் பிரச்சனைகள் (Asthma, Cough) நீங்க உதவும். 💧 சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இயங்க உதவுகிறது. 🩸 இதில் உள்ள இரும்புச் சத்து, அனீமியா, சோர்வு, மற்றும் அறிவுத்திறன் குறைபாடுகள் சரியாகவும் செய்கிறது. 🎯 அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் — இது கட்டிகளைக் கரைக்கும் இயற்கை ஆற்றல் கொண்டது! --- 💎 உலகம் இதன் மதிப்பை உணர்ந்துவிட்டது! வெளிநாடுகளில் இந்தச் சொடக்கு தக்காளி 100 கிராமுக்கு ₹30,000 மதிப்பில் விற்கப்படுகிறது! நம்ம நாட்டில் இது இலவசமாக செடியாக வளரும் — ஆனால் அதன் மதிப்பை நாம் அறியவில்லை. --- 🌱 இன்றே இதை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்திடுங்கள்! உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் உடலுக்கும் இது ஒரு இயற்கை மருந்தே! --- 🟨🟨🟨👇🟥🟥🟥 🌿 நம்ம நாட்டின் செடி, நம்ம உடலுக்கான சக்தி. 🟨🟨🟨👆🟥🟥🟥
saravanan.
789 views
25 days ago
#iyarkkay maruthuvam. மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ இருக்கிறோம். அது கடுக்காய்! கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம். 1. கண் பார்வைக் கோளாறுகள் 2. காது கேளாமை 3. சுவையின்மை 4. பித்த நோய்கள் 5. வாய்ப்புண் 6. நாக்குப்புண் 7. மூக்குப்புண் 8. தொண்டைப்புண் 9. இரைப்பைப்புண் 10. குடற்புண் 11. ஆசனப்புண் 12. அக்கி, தேமல், படை 13. பிற தோல் நோய்கள் 14. உடல் உஷ்ணம் 15. வெள்ளைப்படுதல் 16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண் 17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு 18. சதையடைப்பு, நீரடைப்பு 19. பாத எரிச்சல், மூல எரிச்சல் 20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி 21. ரத்தபேதி 22. சர்க்கரை நோய், இதய நோய் 23. மூட்டு வலி, உடல் பலவீனம் 24. உடல் பருமன் 25. ரத்தக் கோளாறுகள் 26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவ த்தில் மட்டுமே உண்டு. இது ரொம்ப எளிமைதானுங்க. நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, மேற்கண்ட 26 நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட்டு, பிணி இல்லா பெருவாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள். 🟨🟨🟨👆🟥🟥🟥