ma sha allah #

SHEIK 🌺KSN🌺
2.8K views
9 hours ago
"உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; " உயர்ந்த கை என்பது தர்மம் கொடுப்பதாகும், தாழ்ந்த கை என்பது யாசகம் கேட்பதாகும்" நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: [ஸஹீஹ் புகாரி 1429] படைப்புகள் மீது சார்ந்திருப்பது இணைவைப்பின் ஒரு வகை. உதவி, ரிஸ்க், பாதுகாப்பு எல்லாம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. மனிதர்கள் வெறும் காரணங்கள் தான். கண்ணியமான வாழ்க்கை மற்றவர்களிடம் கையேந்தும், யாசிக்கும் நிலைக்கு அல்லாஹ் நம்மை ஆளாக்க வேண்டாம் என்ற பிரார்த்தனை தான். "அல்லாஹ் ஒருவனே போதுமானவன், அவனையே சார்ந்திருப்போருக்கு" [சூரா அல்-அன்ஃபால் 8:64] "எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன்" [சூரா அத்-தலாக் 65:3] துஆவை நாம் கேட்பதோடு, ஹலாலான முயற்சியும் செய்ய வேண்டும். ஏனென்றால் நபி ஸல் கூறினார்கள்: "முதலில் ஒட்டகத்தை கட்டிப்போடு, பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை" [திர்மிதி 2517] அல்லாஹ் நம் அனைவரையும் அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் தேவையாக்காமல் கண்ணியமாக வாழச் செய்வானாக.ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.9K views
4 days ago
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(புகாரி: 7405) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.5K views
6 days ago
“நான் புன்னகைக்கிறேன், ஏனெனில் என் இதயத்தின் ஒவ்வொரு துஆவையும் அல்லாஹ் கேட்கின்றான் என்று நம்புகிறேன்.” #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
4.5K views
11 days ago
"ஒருவரை அளவுக்கு மீறி புகழ்வது அகந்தையை உருவாக்கும், உண்மையை மறைக்கும், தவறான வழிக்குக் கொண்டு செல்லும்." இங்கு “மண்ணை எறியுங்கள்” என்பது நேரடியாக மண்ணை எறிவதை அல்லாமல், அதிகப்படியான புகழ்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
9K views
11 days ago
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டும் விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய செயல்களின் பலன்களை இங்கேயே நாம் முழுமையாக வழங்கிவிடுவோம். அவர்களுக்கு இங்கு பலன் வழங்குவதில் குறை செய்யப்படாது. ஆனால், அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. அவர்கள் செய்தவை அங்கு அடியோடு அழிந்துவிடும்; அவர்கள் செய்துகொண்டிருந்தவை வீணாகிவிடும்.. (அல்குர்ஆன்: 11:15,16) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
7.8K views
11 days ago
தஜ்ஜாலின் (பொய்யன்) தீமையிலிருந்து பாதுகாக்க, சூரத்துல் கஹ்ஃப்பின் முதல் பத்து வசனங்களை அல்லது கடைசி பத்து வசனங்கள் மனப்பாடம் செய்யும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரலி) முஸ்லிம் 809 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
11.6K views
11 days ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய எண்ணம் மறுமையை நோக்கி இருக்கிறதோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் போதுமென்ற நிலையை உருவாக்கிவிடுவான். அவருடைய காரியங்களை ஒன்றுகூடச் செய்வான். உலகம் சரணடைந்து அவருக்கு ஓடிவரும். யாருடைய எண்ணம், உலகத்தை நாடி இருக்கிறதோ அவருடைய கண்ணுக்கு முன் ஏழ்மையை கொண்டு வருவான். அவருடைய காரியங்களை சிதறடித்து விடுவான் உலகத்தில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அளவு மட்டும் வரும். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) (திர்மிதி: 2465) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.8K views
15 days ago
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு, கை ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே (உண்மையான) முஹாஜிர் (புலம்பெயர்ந்தவர்) ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (புகாரி: 10) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
14.1K views
21 days ago
உறுதியான நம்பிக்கை எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் கண்டு இறைநம்பிக்கையாளர்கள் பயப்படவில்லை. மாறாக, அத்தகைய நெருக்கடியான சூழல் அவர்களின் நம்பிக்கையை (ஈமான்) இன்னும் அதிகரித்தது. "எதிரிகளாகிய அந்த மக்கள் உங்களுக்கெதிராகத் திரண்டுவிட்டார்கள், எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று மக்களில் சிலர் அவர்களிடம் கூறியபோது, அது கேட்டு அவர்களுக்கு ஈமான் இறைநம்பிக்கை இன்னும் அதிகமானது. மேலும், "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன்; அவனே சிறந்த பொறுப்பேற்பவன்" என்றும் அவர்கள் கூறினார்கள். [அல்குர்ஆன் 3:173] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️