சித்தா ஆயுர்வேதா பாரம்பரிய சித்தர் மருத்துவம்

Dr.Ganapathi - siddha doctor
940 views
1 days ago
இன்றைய மூலிகை சேகரிப்பு *#ஆடாதொடை* *#இருமல்*, *#காய்ச்சல்*, *#வயிறு_நோய்*, *#ஐயநோய்*, *#குழந்தைகளின்_சளி*, *#இருமலுக்கு* சிறந்த மருந்து. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
518 views
4 days ago
இன்றைய மருந்து தயாரிப்பு *#பொன்னாங்கண்ணி_நெய்* பொன்னாங்கண்ணி புளியாரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றின் சாறு மற்றும் செவ்விளநீர் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நெய் *#பித்தவெட்டை*, *#பித்தவாயு*, *#நீர்எரிச்சல்*, *#நீர்ச்சுருக்கு* மயக்கம் பித்தம் வாந்தி அரோசகம் தீரும் உடல் வலுக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
1.3K views
11 days ago
*#சிறுநீரகங்கள்* சிறுநீரகங்கள் என்பது உடலின் இயற்கை வடிகட்டி மட்டுமல்ல, உயிரை பாதுகாக்கும் அமைதியான காவலர்களாகும். எப்படி ஒரு நீர் வடிகட்டி (Water purifier) தண்ணீரில் உள்ள கழிவுகளை நீக்கி தூய்மையான தண்ணீரை வழங்குகிறதோ, அதேபோல் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வடிகட்டி, உடலை சுத்தமாக வைத்திருக்கின்றன. அப்படி பட்ட இந்த சிறுநீரகங்களை நாம் கவனிக்காமல் விட்டால், அதன் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். சிறுநீரகங்கள் உடலின் இரத்தத்தை சுத்தப்படுத்தும் முக்கிய உறுப்புகள். இவை சரியாக செயல்படாமல் போனால், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் வெளியேறாமல் இரத்தத்திலேயே சேரத் தொடங்கும். இதனால் உடல் முழுவதும் மெதுவாக பாதிப்பு ஏற்படும். சிறுநீரகங்கள் பலவீனமாகும் போது முதலில் உடலில் சோர்வு, உடல் வீக்கம், கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், உணவு விருப்பம் குறைவு, வாந்தி உணர்வு, மற்றும் சிறுநீர் அளவில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றும். சில நேரங்களில் சிறுநீரில் இரத்தம், நுரை போன்றவை கூட காணப்படலாம். இது சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்பதற்கான முக்கிய அறிகுறிகளாகும். இந்த நிலை நீண்ட காலம் கவனிக்கப்படாமல் விட்டால், Creatinine மற்றும் Urea போன்ற கழிவு பொருட்கள் இரத்தத்தில் அதிகரிக்கும். இதனால் சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற Dialysis என்ற செயற்கை சிகிச்சை தேவைப்படலாம். Dialysis என்பது இயற்கையான சிறுநீரகத்தின் பணியை இயந்திரம் மூலம் செய்வது ஆகும். சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்தால், Kidney transplant போன்ற பெரிய சிகிச்சை தேவைப்படக்கூடும். இது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பெரிய சவாலாக இருக்கும். ஆகவே, சிறுநீரகங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவு பழக்கம், தேவையற்ற மருந்துகளை தவிர்ப்பது, மற்றும் உடல்நலத்தை நியமமாக பரிசோதிப்பது ஆகியவை சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும். சுருக்கமாக கூறினால், சிறுநீரகங்களை கவனிக்காமல் விட்டால் உடலில் நச்சுக்கள் சேர்ந்து, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, Dialysis அல்லது Kidney transplant போன்ற கடினமான சிகிச்சைகள் தேவைப்படும் நிலை ஏற்படலாம். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
628 views
13 days ago
இன்றைய மருந்து தயாரிப்பு *#முத்துபற்பம்* வெள்ளெருக்கன் சமூலம் - இரண்டாவது புடம் வெள்ளெருக்கன் சமூலம் செக்கில் ஆட்டி சாறு எடுத்து ஏற்கனவே புடமிட்ட முத்துவை மீண்டும் வெள்ளெருக்கன் சாறு விட்டு 72 மணி நேரம் கல்வத்தில் அரைத்து வில்லை தட்டி காய வைத்து புடமிடும் பணி இது *#சுவாசகாசம்* (*#இரைப்பு*), *#இருமல்* *#குடல்புண்* *#கொரோனா* பாதிப்பால் ஆக்சிஜன் குறைபாடுகளை களைவதற்கும் ஈளை நோய்களைப் போக்குவதுடன் கடவுளின் குழந்தைகளாகக் கருதப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கு நரம்புகளை வலுப்படுத்தி அவர்களின் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. வயதானோருக்குக் கண் விழிகளில் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாகக் குறைத்து பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது. *#காசம்* *#சிலேத்துமம்_96* ஆகியவையும் இதனால் குணமாகும். 1. கள்ளிக் கொழுந்து சாறுடன் தேன் கலந்து பற்பத்தை உண்ண வாதத்தை பற்றி வரப்பட்ட *#பிடிப்பு*, கைகால் குத்து, *#உலைச்சல்*, *#நீர்க்கோவை* போல் வயி்ற்றில் கட்டிக் கொண்டு மிகவும் வலித்தல் ஆகியவைகள் தீரும். 2. குளிர்ந்த தண்ணீருடன் ( அரை பலம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண *#சத்தி* *#விக்கல்* *#பெரும்பாடு* *#வல்லைக்கட்டி* *#மகோதரம்* *#பாரிசவாதத்தொடர்ச்சி* *#வெப்பவாயு* *#மேகக்குட்டம்* ஆகியவைகள் தீரும். 3. பசுவின் தயிர் ( அரை பலம் (அ) 7 ½ கிராம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண நீர்க்கோர்வை *#பாரிசசன்னி* *#பெருவயிரு* *#இராசபரு* ஆகியவை தீரும். 4. பசுவினெய் 1 வராகன் எடை தேன் 1 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண *#உன்மத்தசோகை* *#பெரும்பாடு* *#பைத்தியவாதம்* *#பெருவயிரு* *#பித்தமூலம்* *#மயக்கபாண்டு* *#நீரிழிவு* *#சேத்துமசுரம்* *#பிரமியம்* ஆகியவைகள் தீரும். 5. பசுவின் பால் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#இரத்தநீரிழிவு*, *#உற்பாதபெருங்கழிச்சல்*, *#உற்பாதசக்தி*, *#வெப்பானிலம்* ஆகியவை தீரும். 6. பனங்கள் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#தேமல்* *#பாண்டு* ஆகியவைகள் தீரும். 7. வெந்நீர் அரை பலம், தேன் 3 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண #அத்திபயோதர சிலந்தி, #எலும்புருக்கி பரு, #பாரிச வெப்ப பெரும்பாடு, #முகப்பரு, #வாய்ப்பூட்டு சன்னிப்பரு, #மேகவெட்கை, #பெருங் கழிச்சல் ஆகியவை தீரும். 8. தேன் ஒரு வராகன் எடை இதில் பற்பத்தை மேற்கண்டபடி கலந்துண்ண *#மூத்திக்கிரிச்சரம்* *#நீரருகல்* *#மேல்மூச்சுமுட்டல்* *#விக்கல்* *#நீர்க்கட்டு* *#நீரொழுக்கு* *#நீரெரிவு* *#நீர்பீனிசம்* *#மதுமேகம்* *#யோனிப்புற்று* *#லிங்கப்புற்று* *#கிரந்திபுண்* *#வாதமூலம்* ஆகியவைகள் தீரும். 9. திராட்சைப் பழரசம் அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#வலியுடன்கூடியஅண்டவாதம்* *#வலியில்லாதஅண்டவாதம்* என்னும் இருவகை அண்ட வாதங்கள் *#கால்வீக்கம்* *#கால்இசிவு* *#பாரிசவாதம்* ஆகியவை தீரும். 10.கைம்மாறு வெற்றிலைச் சாறு ஒன்னெகால் வராகன் எடை தேன் ஒன்னெகால் வராகன் எடை ஆகிய இரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#இருமல்* *#தாகம்* ஆகியவை தீரும். 11.பன்னீர் அரைப்பலம் தேன் இரண்டு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பித்தசன்னிபாதம் நேத்திரபடலிகை நேத்திரவாயு பாரிசாந்தகாரம் மாலைக்கண் பித்தகுன்மம் ஆகியவைகள் தீரும். 12. பசுவின் வெண்ணெய் அரைபலம் தேன் இரண்டு விராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மாரிக்காலத்தில் கால்களெல்லாம் மரத்தைப்போல் திமிரடைந்து அசைக்க இயலாமல் இருப்பதும் எப்போது வலித்துக்கொண்டு உப்புசமும் பெருவயிரும் உடம்பெங்குந் தேள் கொட்டினது போன்ற கடுகடுப்பும் எரிச்சலும் விக்கலும் பிரமையும் உண்டாக்கத் தக்கதுமான இருவகை நோய்களும் தீரும். 13. சீனிச்சர்க்கரை ஒரு வராகன் எடை ( 3 அரை கிராம் ) தேன் ஒரு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#கரப்பான்* *#சிலந்தி* *#செவ்வாப்பி* உடல் எல்லாம் மொத்தையாக கட்டிக் கொண்டு அசைக்க வொட்டாத வேதனையும் திமிரையுங் கொடுத்து அத்துடன் கோடைக் கொப்புளம் *#தேமல்* ஆகிய இவைகளை உண்டாக்கும். வாதத்தைப்பற்றிய நோய்களும் முதலில் உற்பாதக் காய்ச்சலும் குளிருங்கண்டு அத்துடன் வாந்தி விக்கல் இருமல் ஆகிய இவைகள் தோன்றி உடல் முழுவதும் சங்கம்பழத்தைப் போன்ற *#கொப்புளங்கள்* *#பருக்கள்* *#கட்டிகள்* ஆகியவை புறப்பட்டு வலியைக் கொடுக்கும். பித்தத்தைப் பற்றிய நோய்களும் வயிற்றெரிவு உடல்பருத்தல் வேதனை வீக்கம் ஆகிய இவைகளை உண்டாக்கி அவற்றுடன் *#ஒக்காளம்* *#விக்கல்* ஆகியவைகளை வரச்செய்து எருவாயைச் சேர்ந்த இரண்டு பக்கங்களிலும் புட்டங்களிலும் பருக்கள் கட்டிகள் ஆகியவைகளை வரப்பண்ணி அங்குள்ள சதைகளை வெடிக்க செய்கின்ற சேத்துமத்தை பற்றிய நோய்களும் தீரும். 14. குளிர்ந்த நீர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பாதத்தில் *#இரணங்கண்டுதிமிருண்டாதல்* *#அக்கினிமந்தப்படுதல்* ஆகிய இக்குணங்களுடைய *#வாதக்களவுரணம்* தீரும். 15. களாச் சமூலச்சாறு 2 வராகன் எடை தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பல்லடியில் அதிக ரணங்கொண்டு மிக வேதனை தோன்றுதல் கக்கலும் அதிக பசியும் தாகமும் உண்டாதல் ஆகிய இக்குணங்களுடைய *#பித்தக்கசிவுரணம்* தீரும். 16. மூங்கில் கிழங்குச்சாறு 2 வராகன் எடை தேன் 5 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மூக்குத் தண்டில் அதிக இரணங்கண்டு வெகு உபத்திரவத்தை கொடுத்தல் ஒரு வேளை அதிக பசியையும் மறுவேளை அக்கினி மந்தத்தையும் உண்டாக்குதல் என்னுமிங் குணங்களையுடைய *#சேத்துமக்களவுரணம்* என்னும் நோய்கள் தீரும். 17. விளாவிலைச்சாறு அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி உண்ண *#கண்டத்தில்இரணங்காணல்* வாயில் சுவையின்மையாக உமிழ்நீரை உண்டாக்கும் ஆகிய குணங்களுடைய *#வாதமோகைணம்* தீரும். 18. முந்திரிகைப் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#நெற்றியில்இரணங்கண்டு* சதா எரிச்சலையும் பசி தாகத்தையும் உண்டாக்குதல் என்னும் குணத்தையுடைய *#பித்தமோகைரணம்* தீரும். 19.நாணற் கற்கண்டு 2 வராகன் எடை ( 7 கிராம் ) தேன் 2 வராகன் எடை ( 7 கிராம் ) இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி கலந்துண்ண முழங்காலில் இரணங்கண்டு வலியுடன் பசிதாகம் இல்லாதிருத்தல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமமோகைரணம்* தீரும். 20. வாழை சமூலச்சாறு 1 பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண இடுப்பைச் சுற்றிலும் வட்டமான ரணங்கண்டு உணர்ச்சியின்றி பசி இல்லாதிருத்தல் என்னும் குணத்தையுடைய *#வாதநகைரணம்* தீரும். 21. சம்பு நாவல் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண கை விரல்களின் அடியில் ரணங்கண்டு தோலுரிந்து எரிச்சலும் நமைச்சலும் உண்டாகி பசியும் மயக்கமும் காணுதல் என்னும் குணத்தையுடைய *#பித்தநகைரணம்* தீரும். 22. பசுவின் தயிர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி அளவோடு பற்பத்தைக் கலந்துண்ண அடிவயிற்றில் புண் கண்டு அதிக நீரேற்றங்கொண்டு பசி தாகமின்றி வெள்ளைப் பூண்டின் வாசனையுடைய ஏப்பத்தை உண்டாக்குதல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமநகைரணம்* தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்ய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
1.2K views
1 months ago
நமசிவய ந ம சி வ ய= 51 தமிழில் மெய் எழுத்துகள் 18 அதில் எட்டாம் எழுத்து ந் பத்தாம் எழுத்து ம் மூன்றாம் எழுத்து ச் பதினான்காம் எழுத்து வ் பதினொன்றாம் எழுத்து ய் 8+10+3+14+11=46 மெய் என்றால் உடல் நமது உடலில் இந்த ஐந்து எழுத்தும் ஐந்து இடத்தில் உடல் எழுத்தாய் விளங்கி நிற்க அதற்கு உயிர்ப்பு கூட்ட உயிர் எழுத்தாக அ+அ+இ+அ+அ என்ற அட்சரத்தைக் கூட்டி ந ம சி வ ய என்ற மந்திரம் உருப்பெற்றது மேற் சொன்ன எண்ணிக்கையில் உயிர்எழுத்து ஒன்று கூட்ட அதாவது 8+1=9 10+1=11 3+1=4 14+1=15 11+1=12 ஆகக் கூட்ட 9+11+4+15+12=51 என்று வரும். இதில் ஓம் என்பது மூலமந்திரம் ஆகவே அது மூலாதாரத்தோடு தொடர்புள்ளது. இந்த ஐந்தெழுத்தும் மூலத்தின் துணையின்றி வேலை செய்யாது. ஓம் தாய் எழுத்து மற்றவை சேய் எழுத்து (தாய் எழுந்து போனால் குட்டிகள் தானே போகும்) ஓம்நமசிவய இது் மூலாதாரம் தொடங்கி அடுத்த ஐந்து சக்கரங்களையும் இயக்கும் ஆகவே ஆறு ஆதாரங்களை இப்படி சூட்சமமாக சொல்லி வைத்தனர்... 51 அட்சரம் 5+1=6 6 ஆதாரங்கள். ஓமென்ற ஆதாரம் ஆறுக்குள்ளே உண்டப்பா நூற்றியெட்டு வர்மம் தானே! - அகத்தியர் பாடல் - திருமந்திர ரகசிய குறிப்புகளில் இருந்து.... சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3, வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்