mobile cover

ல.செந்தில் ராஜ்
1.1K views
13 days ago
"மிகப்பெரிய வெற்றி"-இனி 30 நாள் ரீசார்ஜ்; ராகவ் சத்தா எம்.பி.யின் நாடாளுமன்ற பேச்சின் மூலம் மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுரை..! தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 28 நாள் ரீசார்ஜ் குறித்து கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா கவலை எழுப்பினார். இந்த முறை நுகர்வோர் மீது நியாயமற்ற சுமையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் வாதிட்டார். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் 28 நாள் ரீசார்ஜ் சுழற்சி மற்றும் பயனர்களின் திட்டங்கள் காலாவதியானவுடன் அவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். ராஜ்யசபாவில் தான் பேசிய பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்ட சாத்தா, “இன்று நாடாளுமன்றத்தில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வாடிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் கொள்ளை” எனத் தாம் விவரித்த பிரச்சினையை எழுப்பியதாக சமூக வலைத்தளத்தில் கூறினார். “உங்கள் ரீசார்ஜ் தீர்ந்துவிட்டால் அவுட்கோயிங் அழைப்புகளை தடுப்பது நியாயமானது, ஆனால் இன்கமிங் அழைப்புகளைத் தடுப்பது மிக கொடுமையானது. ரீசார்ஜ் காலாவதியானவுடன், உங்களை யாராலும் தொடர்புகொள்ளவும் முடியாது, OTP போன்ற அத்தியாவசிய செய்திகளும் உங்கள் தொலைபேசியை வந்தடையாது. அவசர சூழ்நிலைகளில், அந்த நபர் உதவியற்றவராக ஆகிவிடுகிறார்,” என்று அவர் தனது X-பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். பரவலாகப் பயன்படுத்தப்படும் 28 நாள் ரீசார்ஜ் சுழற்சியை "ஒரு மோசடி" என்று சாத்தா விமர்சித்தார். “இந்த 28 நாள் ரீசார்ஜ் திட்டம் ஒரு மோசடி. ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன, ஆனால் நீங்கள் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும் (28 நாட்கள் x 13 முறை = 364 நாட்கள்),” என்று அவர் கூறினார். ரீசார்ஜ் செல்லுபடியாகும் காலம் 30 அல்லது 31 நாட்கள் கொண்ட மாதங்களைப் போல இருக்க வேண்டும் என்றும், தற்போதைய முறை பயனர்களை ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரீசார்ஜ் செய்ய கட்டாயப்படுத்துகிறது என்றும் அவர் மேலும் கூறினார். "இன்றைய காலகட்டத்தில், மொபைல் என்பது ஆடம்பரப் பொருள் அல்ல, அது சாமானிய குடிமக்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டது," என்று கூறிய சாத்தா, நுகர்வோரிடம் நேர்மையான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை வலியுறுத்தினார். ராகவ் சத்தா எம்.பி யின் இந்த நாடாளுமன்ற பேச்சின் மூலம் தற்போது மொபைல் சேவை நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களை 30 நாளைக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. . இதைத் தொடர்ந்து, விரைவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாள் செல்லுபடியாகும் திட்டங்கள் அமலுக்கு கொண்டு வர இருக்கின்றன. கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் மனதில் இருந்த கவலையை தீர்த்து வைத்த ராகவ் சத்தா எம்.பிக்கு நன்றிகள்.. இது பற்றிய உங்க கருத்து என்ன? #mobile #mobile recharge
-ishu
890 views
20 days ago
Cash on delivery 🚚 Full kit box🎁 Emi option 2days battery 🔋 capacity Interested whatsapp 7418580696 #mobile #💰Best Shop #🤑Limited Stocks #📦New Products #🛍 Shop
-ishu
1.1K views
20 days ago
Cash on delivery available Emi option available Interested whatsapp: 7418580696 #🛍 Shop #📦New Products #🤑Limited Stocks #💰Best Shop #mobile 4GB ram|64GB rom 32MP rear cemara 8MP front cemara 6.88inch 120HZ HD display 5200MAh Battery Offer prize limited stock😳