irav vanakkam

saravanan
869 views
13 days ago
◄•───✧ உ ✧───•► 🙏 ஶ்ரீ வாமன புராணம் 🙏 (Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam), #irav vanakkam பாகம்_09 நர நாராயணர்..!! பஹுருசன் என்ற பிராமணனுக்கும் அவள் மனைவி அகிம்சை ஆகியோருக்கும் ஹரீ, கிருஷ்ணன், நர நாராயணர்களென்று நான்கு புத்திரர்கள். சியவன மகரிஷி எதிரில் நைமிசாரணிய மகத்துவமும், சரசுவதி நதியில் நீராடவும் நைமிசாரணியத்துக்கு நர நாராயணர்கள் சென்று, அங்குத் தவம் செய்ய ஆரம்பித்தனர். பிரகலாதன் அவர்களை அணுகி தவம் செய்யும் உங்களுக்கு வில், அம்பு எதற்கு? நீங்கள் உண்மையில் தவம் செய்ய வந்தவர்களா? அல்லது போலியா? என்று கேட்டான். அப்போது நரன் சக்திக்கேற்ற பொருளை அருகில் வைத்திருப்பதில் தவறேதுமில்லை அல்லவா! என்றான். பிரகலாதன் கோபமடைந்து தருமநெறியில் ஒழுகும் நான் இங்கே இருக்கையில் பிராமணர்கள் வில், அம்பு கொள்வதோ? என்று கேட்டான். அதற்கு நரன் ஆம்! உலகில் எங்களை வெல்பவர் யாரும் இல்லை என்று கூற பிரகலாதன் எப்படியாவது நர, நாராயணர்களைத் தான் வெல்லப் போவதாகக் கூறித் தன் பரிவாரங்களைத் தூரத்தில் இருக்குமாறு பணித்தான். மேலும் தன் ராச்சியத்திற்குத் தன் பெரிய தந்தை இரணியாக்ஷனின் மகனான அந்தகாசுரனை அரசனாக்கித் தான் வில்லும், அம்பும் ஏந்தி நர, நாராயணர்களிடம் போர் தொடுத்தான். பல ஆண்டுகள் நிகழ்ந்த போரில் வெற்றி யார் பக்கம் என்று நிச்சயிக்க முடியாமல் இருக்கச் சிவபெருமானின் அறிவுரைப்படி பிரகலாதன் போரை நிறுத்தி நர நாராயணர்களைத் துதி செய்து தன் நகரம் ஏகினான். நர, நாராயணர்களின் தவத்தைக் கண்டு அச்சமுற்ற தேவேந்திரன் அதைக் கெடுக்க ரம்பையையும், மன்மதனையும் அனுப்பினான். அவர்கள் என்ன செய்தும் நரநாராயணர்களை ஒன்றும் செய்யவில்லை. அப்போது அவர்கள் தங்கள் தொடையைத் தேய்த்து ஓர் அப்சரசைத் தோற்றுவித்து அவளை இந்திரனுக்குப் பரிசாக அனுப்பினர். (தொடை-ஊரு). இவ்வாறு ஏற்பட்ட அவளுக்கு ஊர்வசி என்று பெயர். தொடரும்...✍ 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🙏 ஶ்ரீ, ராம ஜெயம் 🌷
saravanan
2.7K views
1 months ago
*🙏🌷(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam thangal avargalukkum irav vanakkam) #irav vanakkam ஸ்ரீஆஞ்சநேய கவசம்🌷...!* *பாடல்:17...!* ராமரக்ஷாம் படேத் யஸ்து ஹனுமத் கவசம் வினா அரண்யேருதிதம் தேன ஸ்தோத்ர பாடஞ்ச நிஷ்பலம் *விளக்கம்:* ராமரட்சை என்பதை ஹனுமத் கவசத்து டன் சேர்ந்து படிப்பதுதான் சிறந்தது. இது இல் லாமல் அதை மட்டும் படிப்பது அத்வானக் காட்டு அழுகை போல பலனில்லாது போகும். `அரண்யேருதிதம்' என்றால் அடர்ந்த காட்டின் நடுவே பிரலாபிப்பது. அதாவது பயன் தராத அரற்றல், அலம்பல். *மலரும்...* 🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧
saravanan
1.1K views
1 months ago
◄•───✧ உ ✧───•► 🙏(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam ஶ்ரீ வாமன புராணம் 🙏 பாகம்_05 சிவ, பார்வதி மக்கள்..!! ஒரு சமயம் சிவபெருமான் மோகம் அடைந்து, பார்வதியுடன் ஆனந்தமுடன் இருக்க உலகெங்கும் இருண்டது. மேலும் பிரம்மாவிடம் பெற்ற வரத்தின் படி பார்வதி கருநிறம் மாறி பொன்னிறமேனி அடைந்து சிவனிடம் வந்து சேர இருவரும் சுக போகத்தில் இருந்தனர். அப்போது இந்திரன், இந்நிலையில் பார்வதி பரமேச்வரர்களுக்குப் பிறக்கும் மகன் சொர்க்க ராச்சியத்தைக் கைப்பற்றுவான் என்றும், அதனைத் தடுக்க ஓர் உபாயம் தன் சகாக்களுடன் ஆலோசித்து அதன்படி உமா சங்கரர்களுடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவிக்க எண்ணிட, அக்கினியை அன்னப்பறவை வடிவில் செலுத்த, அவன் சிவனிருக்குமிடம் சென்று வெளியில் தேவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர் என்றான். சிவன் வெளிவர தேவர்கள், தாங்கள் மோகத்தை விடாவிடில் உலகம் தலைகீழ் ஆகிவிடும் என்றனர். அப்படியானால் தன் வீர்யத்தை யார் சுமப்பர்! என்று சிவனார் கூற, அதற்கு அக்கினி முன்வந்தான். அதுவே கார்த்திகேயன் ஜனன காரணம் ஆயிற்று. இதனால் கோபமடைந்த பார்வதி தேவர்களில் யாருக்கும் அவரவர் மனைவியரிடம் கரு ஏற்படாமலிருக்கச் சபித்தாள். ஒரு சமயம் பார்வதி மணமிகு குளியல் மாவினால் ஒரு பொம்மை செய்து அதை அணைத்துக் கொள்ள மார்பில் பால் சுறந்தது. உடனே அந்தக் குழந்தைக்குப் பிராண பிரதிஷ்டை செய்தாள். அக்குழந்தையை சிவனிடம் அர்ப்பணிக்க எண்ணி அவனை வாயிலில் காவல் இருக்குமாறு கூறி நீராடச் சென்றாள். அப்போது அங்கு வந்த பரமனை அச்சிறுவன் தடுத்து நிறுத்த, அவர் அவன் தலையை வெட்டி வீழ்த்தினார். ஸ்நானம் முடிந்து வந்த பார்வதி அதுகண்டு மிகவும் துயருற்றாள். நடந்ததை அறிந்த சிவன், பிரமனை அழைத்து ஒரு தலையைக் கொண்டு வருமாறு ஆணையிட, அவன் செல்கையில் ஐராவதத்தின் புத்திரனைக் கண்டு அதன் தலையை வெட்ட, ஒரு தந்தம் போரின் இடையில் ஒடிந்து போக அத்தலையைக் கொண்டு வர அதனைப் பொருத்தி பரமன் பாலகனை உயிர்ப்பித்தார். அவனே கஜானனன் என்னும் யானை முக கணபதி. பார்வதியிடம் நாயகன் இன்றியே இவன் தோன்றியதால் விநாயகன் என்பது இவன் பெயர் என்றும் யாரொருவர் இவனைப் பூசித்தாலும் அவர்களுடைய விக்கினம் தீரும். எனவே இவன் விக்கின விநாயகன் ஆவான் என்றார். தொடரும்...✍ 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🙏 ஶ்ரீ ராம ஜெயம் 🌷