#வாழும் வாழ்க்கை ஒரு முறைதான்
வாழும் நாட்களில் மகிழ்ச்சியையும் மன அமைதியையும்
தேடுங்கள்!
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள் ஒருபோதும் தீர்ந்து விடப்போவதில்லை
நாளைய வாழ்க்கையை வாழ்ந்து விட இன்றைய நாளை
ஏன் வாழாமல் வீணாக்குகிறீர்கள்?
அழகாக இல்லை என வருத்தப்படாதீர்கள்
உங்கள் தகுதி உயரும் போது நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்
சில நேரம் கோபம் தவறான வாளை எடுத்து சரியானவர்களை வீழ்த்தி விடுகிறது
கடவுள் வரம் எல்லாம் தர மாட்டார்; சந்தர்ப்பம் தான் தருவார்!
அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் உங்க கையில் தான் உள்ளது
வெற்றிக்கான நிச்சய வழி எதுவெனில் தோல்வி அடைந்த பிறகும்.இன்னும் ஒரு தடவை முழு அளவில்
முயற்சி செய்வது!
நீந்த முடியாத மீன்களைக் கடல் கரை ஒதுக்கி விடும்
அதுபோல் உழைக்காத மனிதனை சமூகம் ஒதுக்கி விடும்
எழுந்திருப்பதை பத்து நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பிக்கும்!
உங்களின் அத்தனை பொய்களையும் ஏற்றுக் கொள்பவர்கள் ஏமாளி அல்ல!
அவர்கள் உங்களை இழக்க விரும்பாமல் கூட சகித்துக் கொண்டு இருக்கலாம்!
அடிபடும் போது தான் நிதானம் வருகிறது
வாகனத்திலும் சரி,வாழ்க்கையிலும் சரி
உங்களிடம் என்ன இருக்கிறதோ அதற்காக நன்றியுடன்
இருங்கள்
ஏனெனில்
பலர் அது கூட இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்