கமல்ஹாசன் ஹிட்ஸ்

💕குறும்புக்காரன்🐬
1.1K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#மதிய வணக்கம் #ரெங்கா! #renga-vamba! ஹேராம் ஒரு மீள்பார்வை: கமலின் ஹே ராம் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயம் கண்ணில் படுகிறது. சமீபத்தில் பார்த்த போது, End Credits-ல் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களின் பெயர்களை போடும் போது, “அபர்ணாவை கற்பழித்தவர் – 1” “அபர்ணாவை கற்பழித்தவர் – 2” என வரிசையாக நான்கு பெயர்களை குறிப்பிட்டுள்ளதை கவனித்தேன். இது ஒருபுறம் இருக்கட்டும். கமல் என்றால் பெரும்பாலான பிராமணர்களுக்கு அவரின் religious & political stand காரணமாக பிடிப்பதில்லை. இருப்பினும், தன் சமுதாயத்தை இவர் பல படங்களில் உயர்த்தித்தான் காட்டியிருக்கிறார். வசுந்தராதாஸை பெண் பார்க்க வரும் சமயத்தில், ஒரு பையன் வயலினை வேகமாக வாசிக்க ஆரம்பிப்பான். கிரீஷ் கர்னாட் மென்மையாக அதட்டுவார். அவன் அனைவருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு பின்னர் ஆரம்பிப்பான். பிராமணர்கள் காந்திக்கு எதிரானவர்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அதில் ஹேமாமாலினி, “தேசப்பிதா உண்ணாவிரதம் இருந்தால் நாட்டுக்கு நல்லது, சுதந்திரம் கிடைக்கும்” என பேசுவார். உண்மையில் காந்திக்கு பல பிராமண பக்தர்கள் இருந்தனர். அவர் கேட்டதும் நகைகளை கழற்றி தந்தனர். வசுந்தராதாஸ் வீட்டில் My Experiments with Truth — மகாத்மா காந்தியின் சுயசரிதை இருக்கும். கலையில் ஈடுபாடு உள்ளவர்கள். வசுந்தராதாஸ் பாடும் போது “ஹை பிச்சில் சுருதி போகும்” என அனைவரும் காதை பொத்த, அதை அழகாக பாடி கெத்தாக திரும்பிப் பார்ப்பார். இப்படி தான் சார்ந்த சமுதாயத்தின் பெருமைகளை நாசூக்காக காட்டியது கமலின் சாமர்த்தியம். அதற்கு பிறகு, கமலின் ரொமான்ஸ் என்றாலே உதட்டை கடிப்பது, "டிண்கு" வை கடிப்பது என கேலியாக பேசுவது எல்லாம் அவரின் political stand காரணமாக வரும் கடுப்பு தவிர ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஒரு ரொமான்ஸ் சீன்: வசுந்தராதாஸ் கேட்பார். முதல் மனைவி இழப்பின் கோபத்திலே இருக்கும் கமலிடம் , “Can I be your Saki?” என்றதும் கமல் முகத்தில் சிறிய சிரிப்பு தோன்றும். “சிரிச்சேள்” என்பார். மீண்டும் சிரிக்க, “Second time” என்பார். இதோ ஹாட்ரிக் — முத்தமில்லாத, கட்டிக்கொள்ளாத விரசமில்லாத ரொமான்ஸ். முக்கிய விஷயம், நாதுராம் கோட்சே செயலிலும் கூட அவன் தரப்பில் ஒரு நியாயம் உண்டு என துணிச்சலாக காட்டியது கமலின் சாதனை. இந்திய திரையுலகிலே யாரும் செய்யாதது. ஜின்னாவின் “எதிர்ப்பு தினம்” எப்படி வன்முறையாக உருவானது என்பதை அதில் காட்டியிருப்பார். நூறு பக்கங்களுக்கு ஹே ராம் படம் பற்றி எழுதலாம். மொத்தத்தில், இந்த படம் எடுக்கும் போது இது ‘பெயில்யர்’ தான் என்பதை கமல் உணர்ந்தே இருந்திருப்பார். ஆனால் வருங்காலம் பார்த்து பிரமிக்கும் காவியமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கும். இந்த தாதா சாகேப் பால்கே போன்ற விருதுகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். மத்திய அரசு பிட்டு படத்தில் நடித்தவருக்கும் கூட அதை கொடுத்து மகிழலாம். ஆனால் இந்தியாவில் எந்த மொழியிலும் எந்த உச்ச நடிகரும் கமலை கண்டால் ஒரு பிரமிப்பு பார்வை வீசுவார்கள். இதே கமலஹாசன் தான் தனது அரசியல் மேடையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்று கோபம் போங்க பேசினார். #KamalHaasan #HeyRam #கமல்ஹாசன் ஹிட்ஸ் Credit: வலைதள பதிவு இருந்து
💕குறும்புக்காரன்🐬
738 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கமல்ஹாசன் ஹிட்ஸ்.இந்திரன் சந்திரன் படமெல்லாம் ஒரு most underrated movie ன்னே சொல்லலாம். இது ஓடிச்சா ஓடலயான்னுல்லாம் சரியா தெரியல. எனக்கு தெரிஞ்சு தெலுங்குல இருந்து டப்பிங் பண்ணதால சரியான முறைல ரசிகர்களை போயி சேரலுதான் நினைக்குறேன். ஆனா இப்ப கூட ஒண்ணும் குறைஞ்சு போகல இதுவரை பார்க்கலன்னா Amazon Prime ல இருக்கு miss பண்ணாம பாருங்க ரொம்ப பிடிக்கும் அப்டி ஒரு கமல் நடிப்பு. மக்களையோ தன் குடும்பத்தையோ பற்றி துளியும் கவலைப்படாத சபலப்புத்தி உள்ள மேயர் ரோல் கமல்ஹாசனுக்கு. அந்த காலக்கட்டத்துலயே அரசியல் போக்கிரித்தனங்களை புட்டு புட்டு வைக்குற சீன்ஸ் எல்லாமே. என்ன பெரிய KalamKaval மம்மூட்டி.மனுசன் கமல் அப்பவே வில்லன் மற்றும் playboy ரோல சும்மா புகுந்து வெளாடிருப்பாப்புல. அவரை மக்கள் கிட்ட தோலுருச்சி காட்டுவேன்னு சுத்தி திறியுற பத்திரிக்கையாளரா இளமையான விஜயசாந்தி அட அட அட கொள்ளை அழகு. ஊனமுற்ற மனைவியா வர்ர ஶ்ரீவித்யா, நாகேஷ், சரண்ராஜ்னு ஒட்டு மொத்தமா எல்லாருமே அப்டி ஒரு நடிப்பு. படத்தோட ஹைலைட்டே கிரேஸி மோகனோ வசனங்கள்தான் பொதுவாவே கமலோட படங்கள் டெக்னாலஜியாகட்டும் புது ட்ரெண்டிங் ஆகட்டும் எதை எடுத்தாலுமே குறைஞ்சது பத்து இருபது வருசத்துக்கு அப்புறம் ஹிட்டாக போற கான்செப்ட்டுகளுக்கு முன்னோடியா அச்சாரமா இருக்கும் அந்த வகையில் இப்ப trending ல இருக்குற Black Comedy Movies களுக்கு ஆகச்சிறந்த முன்னோடின்னா இந்த படமும் படத்தோட வசனங்களும். அதுல ஒண்ணு கலவரத்துல அடிபட்டவங்கள வச்சிருக்குற ஆஸ்பத்திரிக்கு மேயர் கமல் விசிட் போக, ஒரு பக்கம் சரிஞ்சு படுத்திருக்குற கர்ப்பிணி பொண்ண பார்த்து என்னமா அடிச்சிருக்கான் வயிறு இப்டி வீங்கிருக்குங்குற டயலாக் டெலிவரில்லாம் கமலுக்கும் கிரேஸி மோகனுக்குமேயான chemistry யின் உச்சக்கட்டம்னே சொல்லலாம். படம் முழுக்க அரசியல், காமெடி, பாசத்துக்கு பாசம், வில்லத்தனம்னு மக்கள் ரசிக்க விரும்புற ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் ஒட்டு மொத்தமா குவிஞ்சு கிடக்குது. dark comedy விரும்பிகள் மற்றும் கமலை வேறு ஒரு பரிணாமத்தில் பார்க்க விரும்புவோம் நேரம் கிடைச்சா கண்டிப்பா miss பண்ணாம பாருங்க entertainment guaranteed 👌 #indiranchandiran #moviereview #KamalHaasan #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் ஹிட்ஸ் . ஒரு வலைத்தளங்களில் பதிவு இருந்து.
💕குறும்புக்காரன்🐬
1.2K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#மதிய வணக்கம் கமல்ஹாசன் பற்றி ஒரு சுவாரஸ்ய முன்னோட்டம் கோவணத்துடன் நடித்த முதல் கதாநாயகன் நிறைய வெளிநாட்டு தொழில் நுட்பங்கள் புகுத்தியவர் நிறைய பாடல்கள் சொந்த குரலில் பாடியவர் . சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே இழந்தவர் எனக்கு தெரிந்து பன்ச் டயலாக் பேசாதவர் மிகவும் ரியலிஸ்டாக படம் எடுத்தவர் 5 வயதில் நடித்ததற்கு பிளைமவுத் கார் சம்பளமாக கேட்டவர் இன்றளவும் வரி ஏய்ப்பு இல்லாமல் ஒழுக்கமாக வரி கட்டுபவர் சமுதாயத்தின் நிறைய குறைகளை பளிச்சென்று திரையில் சொல்லியவர் இன்னும் நிறைய சொல்லலாம் சில காட்சிகளில் புல்லரித்துவிடும். வேட்டையாடு விளையாடு படத்தில் நிஜமாலுமே முதுகில் ஒரு அடி விழுந்து அப்படியே தடுமாறுவார் பாட்டே இல்லாத கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஒரு சிறந்த மைல் கல் என்றால் குணா ஒரு காவியம். டைட்டானிக் ரோஸ் ஜாக்குக்கு முன்னமே தமிழில் வந்த இறந்த பின்னரும் இறவா காதல். ***மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல *** அதையெல்லாம் தாண்டி சொந்த வாழ்க்கையில் ஆயிரம் இருந்தாலும் வரேன் வரேன்னு பூச்சாண்டி காமிச்சுட்டு வராம போனவங்கள்லாம் வெக்கம் படுறாப்போல சொன்ன சொல் மாறாம அரசியலில் குதிச்சார். வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம். முதலில் பார்வையாளனாக இல்லாமல் போட்டியில் பங்கு பெறுபவனாக இரு என்று உணர்ந்து உணர்த்தியவர் #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் ஹிட்ஸ். Credit & Source: Mass Entry queen FB பதிவு தரவுகளில் இருந்து,
💕குறும்புக்காரன்🐬
852 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் ஹிட்ஸ் #ஹே_ராம்' சில சுவாரஸ்யங்கள் முதலில் இப்படத்துக்கு `சத்திய சோதனை' என்றே பெயரிட நினைத்திருக்கிறார் கமல். பிறகுதான், காந்தி உதிர்த்த கடைசி வார்த்தைகள் என்று சொல்லப்படும் `ஹே ராம்' டைட்டிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 26 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் `ஹே ராம்.' இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ... முதலில் இப்படத்துக்கு `சத்திய சோதனை' என்றே பெயரிட நினைத்திருக்கிறார் கமல். பிறகுதான், காந்தி உதிர்த்த கடைசி வார்த்தைகள் என்று சொல்லப்படும் `ஹே ராம்' டைட்டிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று வரை, மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லபட்ட சம்பவத்தை, திரையில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒரே இந்தியத் திரைப்படம் `ஹே ராம்' மட்டுமே. காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, `ஹே ராம்' மறுதிரையிடல் செய்யப்பட்டது. அதில் பேசிய கமல், "நான் யாருடைய பக்தனும் அல்ல. ஆனால், காந்தியடிகளின் ஒளிவட்டத்துக்குப் பின்னால் சென்று பார்க்க வேன்டுமென்கிற ஆசை உண்டு. நேரு, காந்தி இருவரும் பேசிக்கொள்ளும் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம், அங்கு அவர்களின் அருகில் நான் இருந்திருக்கக் கூடாதா என ஏங்கியிருக்கிறேன்" என்றார். படம் வெளியான சமயத்தில் வெகுஜன ரசிகர்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனாலும், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனந்த விகடன் விமர்சனத்தில், உச்ச மதிப்பெண்களில் ஒன்றான 60 மதிப்பெண்கள் பெற்றது. யூடியூபில் பதிவேறியிருந்த இதன் பைரேட்டட் வெர்ஷன் 925k பார்வைகளைக் கடந்திருந்தது. கமலின் முன்னாள் மனைவி சரிகா, ஆடை வடிவமைப்பு செய்ய, ஸ்ருதிஹாசன் தன் அம்மாவுக்கு உதவியாளராகவும் சிறு கதாபாத்திரத்தில் நடிகையாகவும் பணிபுரிய, அக்‌ஷரா ஹாசனும் கலை இயக்குநர் சாபு சிரில்க்கு உதவியாளராக வேலை செய்தார். சரிகா, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதும் வென்றார். இப்படி மொத்தக் குடும்பமும் `ஹே ராம்' படத்துக்காக உழைத்திருந்தது. ஒரே நேரத்தில் தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவானது `ஹே ராம்.' ஷாருக்கான் தொடங்கி படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்கள் சொந்தக் குரலில் பேசி நடித்திருந்தார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், சம்பளம் ஏதும் பெறாமல் நடித்துக்கொடுத்தார். ஶ்ரீராம் அப்யன்கராக நடிக்க பிரபல இந்தி நடிகர் மோகன் கோகலேதான் ஒப்பந்தமாகியிருந்தார். அவர் படப்பிடிப்புகாக சென்னை வந்த இடத்தில் மாரடைப்பால் மறைய, அதுல் குல்கர்னி ஒப்பந்தமானார். அவரே குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதும் வென்றார். படத்தில் வல்லபபாய் படேலின் மகளாக முதன்முதலில் திரையில் தோன்றியிருப்பார் ஸ்ருதி ஹாசன். படத்தின் இறுதியில் காந்தியின் கொள்ளுப்பேரனாக வருபவர் உண்மையிலேயே காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி. அபர்னாவைக் கொல்லும் அல்டாஃப் டைலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷதாப் கான் `விக்ரம்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த அம்ஜத் கானின் மகன். பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்கும் படத்தில் நடித்திருக்கிறார். பின்னர், அது படத்திலிருந்து நீக்கபட்டுவிட்டது. `ஹே ராம்' படத்தின் பாடல்கள் பலருக்கும் ஃபேவரைட். முதலில் இப்படத்துக்கு இசையமைத்தது வயலின் கலைஞரான எல்.சுப்ரமணியம். ஆஸ்கருக்காக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் விருதுக்கு நாமினேட்டான `சலாம் பாம்பே' எனும் இந்திப் படத்துக்கு இசையமைத்தவர். பிறகு, எல்.சுப்ரமணியத்துக்கும் கமலுக்கும் இடையே சம்பள ரீதியாகக் கருத்து வேறுபாடு ஏற்படவே, இளையராஜாவை அணுகினார் கமல். படத்துக்காக ரீரிக்கார்டிங்கை ஹங்கேரியின் பூடாபெஸ்ட் சிம்பனியைக் கொண்டு அமைத்திருப்பார் இளையராஜா. வெளிநாட்டு இசைக்குழுவினரைக் கொண்டு இவ்வாறு ரிக்கார்டிங் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் `ஹே ராம்'தான். படத்தில் வரும் `இசையில் தொடங்குதம்மா’ பாடலுக்கு இளையராஜாதான் முதலில் ஐடியா கொடுத்திருக்கிறார். கமல் அதில் பெரிதாய் ஆர்வம் காட்டாமல்போக, வற்புறுத்தி அப்பாடலை இணைத்திருக்கிறார் இளையராஜா. காந்தியைக் கொல்ல முயலும் சாகேத் ராம் கதாபாத்திரத்தின் மனநிலையை முழுதாக உள்வாங்கிக்கொள்ள காந்தியைக் கொல்வதற்கு முன் டெல்லியில் கோட்சே தங்கிய ரேடிசன் புளூ மெரினா ஹோட்டலில் (முந்தைய ஹோட்டல் மெரினா) தங்கினாராம் கமல். படத்தில் நாதுராம் கோட்சே அணிந்திருந்த ஆடை, அதன் வண்ணம் முதற்கொண்டு அத்தனை டீடெயிலிங் காட்டியிருப்பார்கள். மகாத்மா காந்தியில் தொடங்கி அகழ்வாராய்ச்சியாளர் மார்டிமர் வீலர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுராவர்தி வரை, அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கு உருவ ஒற்றுமைக் கொண்ட நடிகர்களை நடிக்க செய்திருப்பார் கமல். நேரடி நடவடிக்கை நாள், நவகாளிப் படுகொலைகள், காந்தி படுகொலை என உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களை, திரைக்கதையில் நேர்த்தியாகக் கோத்திருப்பார். ராம், அபர்ணா, மைதிலி மற்றும் பியானோ... 2019-ல் `ஹே ராம்' அனுபவம் எப்படி இருக்கிறது? ராம், அபர்ணா, மைதிலி மற்றும் பியானோ... 2019-ல் `ஹே ராம்' அனுபவம் எப்படி இருக்கிறது? `ஹே ராம்' தெலுங்கு வெர்ஷனுக்காகக் கமலுக்கு டப்பிங் செய்தவர் பாடகர் மனோ. ஆனால், அம்மொழியில் இன்னும் வெளியாகவில்லை. கூடவே ஆங்கிலத்தில் `the confessions of assassin’ என்ற பெயரில் வெளியிட 2004-ல் வேலையைத் தொடங்கினார்கள். ஆனால், அதுவும் நடக்காமல் போனது. படத்தில், ஓவியர் ஆதிமூலம் வரைந்த காந்தியின் ஓவியம், சாகேத்தின் கைவினைக் கூடத்தில் மாட்டியிருக்கும். உண்மையில், படத்தில் கதை நிகழும் ஆண்டுகளுக்குப் பிந்தைய ஆண்டான 1969-ல்தான் அந்த ஓவியம் வரையப்பட்டது. _ சினிமா விகடன். நன்றி : வலைதள பதிவு இருந்து .
💕குறும்புக்காரன்🐬
1.3K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
#கமல்ஹாசன் ஹிட்ஸ் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஸ்ரீலங்கா நாட்டில் 1095 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியது. இயக்கம் ஐ. வி. சசி தயாரிப்பு ஆர். சி. பிரகாஷ் வசனம் ஹாசன் பிரதர்ஸ் (கமல்ஹாசன், சந்திரஹாசன்) இசை இளையராஜா நடிகர்கள் கமல்ஹாசன் - குரு / அசோக் ஸ்ரீதேவி - சுஜாதா ஆர். முத்துராமன் - ரகு, அசோக்கின் தந்தை (தமிழ் மொழியில்) கைகால சத்தியநாராயணனா (தெலுங்கு மொழியில்) எம். என். நம்பியார் - கொள்ளையர்களின் தலைவன் (தமிழ் மொழியில்) எம். பிரபாகர் ரெட்டி (தெலுங்கு மொழியில்) மேஜர் சுந்தரராஜன் - காவல்துறை ஆணையர், சுஜாதாவின் உறவினர் (தமிழ் மொழியில்) காந்தாராவ் (தெலுங்கு மொழியில்) பண்டரிபாய் - சுஜாதாவின் தாயார் எஸ். வி. ராமதாஸ் - சுஜாதாவின் தந்தை பூர்ணம் விஸ்வநாதன் - ரகுவின் தந்தை வெண்ணிற ஆடை நிர்மலா - பார்வதி, ரகுவின் மனைவி அசோக்கின் அம்மா. ஒய். ஜி. மகேந்திரன் - மகேஷ், அசோக்கின் நண்பர். ஜெயமாலினி - மகேஷின் காதலி மோகன் பாபு - ரமேஷ் ஏ. ஈ. மனோகரன் - அடியாட்கள் வி. கோபாலகிருஷ்ணன் - காவல்துறை ஆய்வாளர் ஐ.எஸ்.ஆர்.(ஐ.எஸ்.ராமச்சந்திரன்) டி. கே. எஸ். நடராஜன் பாடல்கள் இளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு அருணாசலம் அவர்களால் அனைத்து பாடல் வரிகள் எழுதப்பட்டது. எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் 1 ஆடுங்கள் பாடுங்கள் ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 2 பறந்தாலும் விடமாட்டேன் ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கண்ணதாசன் 3 பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கண்ணதாசன் 4 எந்தன் கண்ணில் ... எஸ். ஜானகி கண்ணதாசன் 5 மாமனுக்கு பரமக்குடி ... எஸ். ஜானகி கங்கை அமரன் 6 நான் வணங்குகிறேன் ... எஸ். ஜானகி பஞ்சு. #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba!
💕குறும்புக்காரன்🐬
1K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
பெங்களூருவில் வெள்ளி விழா கொண்டாடிய கமலின் 8 திரைப்படங்கள் சாதனைகள் பலவிதம். அதில் ஒன்று வெளி மாநிலங்களில் வெற்றிக்கொடி நாட்டுவது. சிவாஜி, கமல், ரஜினி என பலரது படங்கள் வெளிமாநிலங்களிலும் வெள்ளி விழா கொண்டாடியுள்ளன. அதில் கமலின் சாதனை தனித்துவமானது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் கமல் நடித்த எட்டு திரைப்படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியுள்ளன. அதாவது பெங்களூருவில் 25 வாரங்கள் கமலின் எட்டு திரைப்படங்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. 1. மரோசரித்திரா (1978 தெலுங்கு) பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், சரிகா, மாதவி நடித்த மரோசரித்ரா திரைப்படம் 1978 இல் வெளியானது. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தமிழ்நாடு கர்நாடகா இரு மாநிலங்களிலும் தெலுங்கிலே வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. சென்னையில் 500 தினங்களுக்கு மேல் சபையர் திரையரங்கில் ஓடிய திரைப்படம், பெங்களூரு கல்பனா திரையரங்கில் 693 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த சாதனையை இதுவரை எந்த தமிழ் நடிகராலும் முறியடிக்க முடியவில்லை. 2. சிகப்பு ரோஜாக்கள் (1978 தமிழ்) அதே 1978 தமிழில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்யராஜ் கதை, திரைக்கதையில் பாரதிராஜா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் கமலுடன் ஸ்ரீதேவி நடித்திருந்தார். வித்தியாசமான கதையாம்சத்துடன் வந்த இந்தத் திரைப்படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடி வெற்றியை பதிவு செய்தது. 3. சனம் தேரி கசம் (1982 இந்தி) 1982ல் கமல் நடிப்பில் ஹிந்தியில் வெளியான திரைப்படம் சனம் தேதி கசம். நரேந்திர பேடி இயக்கத்தில் கமலுடன் ரீனாராய் நடித்திருந்தார். ஆர் டி பர்மன் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இந்தப் படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. 4. சாகர சங்கமம் (1983 தெலுங்கு) கமல் நடிப்புக்கு உதாரணமாக திகழும் படங்களில் ஒன்று சலங்கை ஒலி. கே. விஸ்வநாத் தெலுங்கில் சாகர சங்கமும் என்ற பெயரில் எடுத்தத் திரைப்படத்தின் தமிழ் மொழி மாற்றம் சலங்கை ஒலி. 1983இல் கமல், ஜெயப்ரதா நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளியான சாகர சங்கமம் திரைப்படம் கர்நாடகா பொங்களூருவில் தெலுங்கில் வெளியாகி 175 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது 5. சுவாதி முத்யம் (1986 தெலுங்கு) கே விஸ்வநாத் இயக்கத்தில் கமல் ராதிகா நடிப்பில் 1986இல் சுவாதி முத்யம் திரைப்படம் தெலுங்கில் வெளியானது. இந்தத் திரைப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியிடப்பட்டது. சுவாதி முத்யம் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படாமல் தெலுங்கில் பெங்களூருவில் வெளியாகி 175 தினங்களை கடந்து ஓடி வெள்ளி விழா கண்டது. 6. நாயகன் (1987 தமிழ்) கமலின் பெஞ்ச் மார்க் திரைப்படமான நாயகன் 1987இல் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சரண்யா, ஜனகராஜ், நிழல்கள் ரவி பிரதான வேடங்களில் நடித்த இந்தத் திரைப்படம் தமிழிலேயே கர்நாடகாவில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெங்களூருவில் இந்தத் திரைப்படம் 175 தினங்களைக் கடந்து சாதனை படைத்தது. 7. புஷ்பக விமானம் (1987 தெலுங்கு) 1987 சசிங்கீதம் சீனிவாச ராவ் கன்னடத்தில் புஷ்பக விமான திரைப்படத்தை இயக்கினார். கமல் அமலா நடித்த இந்தத் திரைப்படம் வசனங்கள் இல்லாமல் உருவானது. மௌன பட காலத்திற்குப் பிறகு வசனமே இல்லாமல் உருவான இந்தியாவின் முதல் திரைப்படமாக அது அமைந்தது. நடிப்புக்கு சவாலாக அமைந்த இந்தத் திரைப்படம் கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா கேரளா தமிழகம் வடமாநிலங்கள் என இந்தியா முழுக்க வெளியானது. கர்நாடகா பெங்களூருவில் இந்த் திரைப்படம் 175 தினங்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. 8. அபூர்வ சகோதரர்கள் (1989 தமிழ்) கமலின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமான அபூர்வ சகோதரர்கள் சந்தான பாரதி இயக்கத்தில் கிரேசி மோகன் வசனத்தில் 1989 வெளியானது. கமல் இதில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதில் குள்ள அப்புவாக நடித்த வேடம் இந்திய அளவில் பேசப்பட்டது. இந்தத் திரைப்படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடியது. ஒரு நடிகரின் படம் பிற மாநிலத்தில் வெள்ளி விழா காண்பதே அரிது. கமலின் எட்டு திரைப்படங்கள் கர்நாடகாவின் பெங்களூருவில் வெள்ளி விழா கண்டுள்ளன. இது வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லாத சிறப்பாகும். #மதிய வணக்கம் #கமல்ஹாசன் ஹிட்ஸ் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #ரெங்கா! #renga-vamba! .
💕குறும்புக்காரன்🐬
1.2K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
44 years of #வாழ்வே_மாயம் 26, ஜனவரி. 1982 கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ - கங்கை அமரன் இசையில் பாட்டெல்லாம் ஹிட்டு! இந்து தமிழ் திசை நாளிதழ். 26_01_2020 எத்தனை வருடங்கள் கடந்தாலும், சில படங்கள் தலைமுறை கடந்தும் மக்களால் மறக்கமுடியாத படங்களாக அமைந்துவிடும். அது குடும்பப் படமாக இருக்கலாம். ஆக்‌ஷன் படமாக இருக்கலாம். மாயாஜாலப் படமாக இருக்கலாம். காதலை உணர்த்தும் படமாகவும் இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படியொரு காதல் உணர்வை தியாகம் கலந்து உணர்வுபூர்வமாகச் சொன்னதில் இன்றைக்கும் தனியிடம் பிடித்து, தனித்துவமாகத் திகழ்கிறது ‘வாழ்வே மாயம்’. ரீமேக் படங்களின் ஹீரோ என்று போற்றப்படுபவர் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி. இவரின் மூலம் ஏராளமான வேறு மாநிலப் படங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. அந்தப் படங்களை தமிழுக்குத் தகுந்தது போல் கொடுப்பதில் அசகாயசூரர் இவர். அந்தக் காலத்திலேயே சிவாஜியை வைத்து பல ரீமேக் படங்கள் எடுத்து ஹிட்டடித்திருக்கிறார். அதேபோ, ரஜினியை வைத்து இவர் எடுத்த ‘பில்லா’, ‘தீ’, ‘விடுதலை’ முதலான படங்கள் ரீமேக் படங்கள்தான். கமலை வைத்தும் ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார் கே.பாலாஜி. இதில் முக்கியமான படம்... காலத்தால் அழியாத படம்... காதல் காவியம் என்று போற்றப்பட்ட படம்... ‘வாழ்வே மாயம்’. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். படம் முடிந்து ரசிகர்கள் கனத்த இதயத்துடன் எழுந்து வந்தார்கள். ராஜாவாக கமல். தேவியாக ஸ்ரீதேவி. ராதாவாக ஸ்ரீப்ரியா. பேபியாக மனோரமா. அண்ணனாக ஜெய்சங்கர். அவரின் நண்பராக பிரதாப். டாக்டராக கே.பாலாஜி. மிகக்குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு காதல் காவியமே படைத்திருப்பார்கள். கமல், ஸ்ரீதேவியின் அழகும் நடிப்பும் கனக்கச்சிதம். அப்படியொரு பாந்தமான ஜோடி என்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீப்ரியாவின் நடிப்பு மிரட்டல். அவரின் பாடி லாங்வேஜும் வசன உச்சரிப்பும் மிகத்தெளிவான பெண் என்பதைக் காட்டும் வகையில் இருந்தன. மனோரமாவின் நடிப்பு வழக்கம்போல் மனதைத் தொட்டது. அம்பிகாவும் மிகச்சிறிய கதாபாத்திரத்தில், ஆனால் மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்திருப்பார். தாசரி நாராயணராவின் கதைக்கு ஏ.எல்.நாராயணன் வசனம். மனிதர், பல இடங்களில் புகுந்து விளையாடியிருப்பார், தன் பேனாவால்! வழக்கமாகவே அழகனான கமல், இந்தப் படத்தில் பேரழகனாகக் காட்சி தருவார். பின்னாளில், இவர் கேன்ஸரால் உருக்குலைந்து அழகு மறைந்து போவதைக் காட்டவேண்டும் என்பதற்காகவே அப்படியொரு அழகில், முன்பாதியில் வந்தாரோ என்னவோ! ‘தேவி ஸ்ரீதேவி’, ‘ஏ ராதாவே’, ‘நீலவான ஓடையில்’, ‘மழைக்கால மேகம்’, ‘வந்தனம்’, ‘வாழ்வே மாயம்’ என்று எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. இன்றைக்கும் இரவு வேளையில் தமிழ் இசை ரசிகர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கின்றன. அப்போதெல்ல்லாம், இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பார்த்து, இளையராஜாதான் இசை என்று பந்தயம் கட்டியவர்களெல்லாம் உண்டு. ஆனால் படத்துக்கு இசை கங்கை அமரன். அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் கங்கை அமரன். ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘சட்டம்’, ஒருவிடுகதை ஒருதொடர்கதை’ போல் இந்தப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து வெற்றிபெற்றன. பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர் கங்கை அமரன், இசையமைப்பாளர் கங்கை அமரன் என அவரின் பல முகங்களில், பல திறமைகளில்... இசையமைப்பாளர் என கொடி நாட்டிய படம் என ‘வாழ்வே மாயம்’ அமைந்தது. ‘வாழ்வே மாயம்’ திரைப்படமும் ஏ,பி.சி என மூன்று சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1982ம் ஆண்டு வெளியானது ‘வாழ்வே மாயம்’. கே.பாலாஜியின் திருமண நாள் ஜனவரி 26. இந்தநாளில், தன் படங்களை ரிலீஸ் செய்வது அவர் வழக்கம். ‘வாழ்வே மாயம்’ படமும் ஜனவரி 26ம் தேதிதான் வெளியானது. அவர் படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு வரும் ராஜா, ராதா பெயர்கள், இந்தப் படத்தில் கமலுக்கு ராஜா என்றும் ஸ்ரீப்ரியாவுக்கு ராதா என்றும் சூட்டப்பட்டிருக்கும். படம் வெளியாகி, 44 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் ‘நீலவான ஓடையில்’ நீந்திக்கொண்டே இருக்கிறது வெண்ணிலா. #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #கமல்ஹாசன் ஹிட்ஸ் #ரெங்கா! #renga-vamba! புன்னகை மன்னன் FB இருந்து .
💕குறும்புக்காரன்🐬
666 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! மகாநதி ஒரு மீள்பார்வை. மகாநதி பற்றி சந்தான பாரதி என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம், `மகாநதி'. இந்தப் படத்தை இயக்கும்போது, பல இடங்களில் கண்ணீர் விட்டிருக்கேன். படம் ரிலீஸாகி எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதேசமயம், பொண்ணுங்களைப் பெத்த சிலர் திட்டவும் செஞ்சாங்க. முக்கியமா, என் அண்ணனே என்னைத் திட்டுனார். `ஏண்டா இப்படி எடுத்த'னு... இந்த நெகிழ்வுக்கும், மகிழ்வுக்கும் காரணம் என் நண்பர் கமல்தான். அவரால்தான் இந்தப் படம் சாத்தியமாச்சு.'' - `மகாநதி' படம் வெளியாகி 31 ஆண்டுகள் கடந்துவிட்டது. அந்த நாள்களை நெகிழ்வோடு நம்மிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறார், படத்தின் இயக்குநர் சந்தானபாரதி. `` `மகாநதி' படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் கமல் சார். இந்தப் படம் உருவாக முக்கியமான காரணமும், அவர்தான். எழுத்தாளர் ரா.கி.ரெங்கராஜன், கமல், நான் மூணு பேரும் சேர்ந்து ஒரு ஃபேமிலி டிராமா படம் எடுக்கலாம்னுதான் பல கதைகளைப் பேசிக்கிட்டு இருந்தோம். வெளிநாட்டுப் படப்பிடிப்பை முடிச்சுத் திரும்பிய கமல் சார், இந்தப் படத்தோட கருவைச் சொன்னார். எங்க எல்லோருக்குமே அது ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே, உட்கார்ந்து பேசி, இந்தப் படத்தோட கதையை முழுமையாக்கினோம். படத்தை நான்தான் இயக்கணும்னு கமல் சார் உறுதியா இருந்தார். அந்தச் சமயத்துல ரொம்ப பிஸியா இருந்த சுகன்யாவைப் படத்தின் ஹீரோயினா கமிட் பண்ணோம். அவங்ககூட `சின்ன மாப்பிள்ளை' படத்துல நானும் நடிச்சிருப்பேன். அதனால, `மகாநதி'யில அவங்க நடிக்கணும்னு விருப்பப்பட்டுக் கேட்டேன்; அவங்களும் அழகா நடிச்சுக் கொடுத்தாங்க. படத்தோட வில்லனா கொச்சின் ஹனிபா நடிச்சார். `குணா' படத்துலேயே அவர் நடிக்க வேண்டியது. கால்ஷீட் பிரச்னை. முடியாம போயிருந்தது. அது இந்தப் படம் மூலமா நிறைவேறுச்சு. படத்துல வர்ற கமல் சாரோட பொண்ணு கேரக்டருக்கான ரொம்ப மெனக்கெட்டோம். சின்ன வயசுப் பொண்ணா மகாநதி ஷோபனா நடிச்சிருப்பாங்க. அதுக்கு அப்புறம் வயதுக்கு வந்த பெண்ணா, நடிகை சங்கீதா நடிச்சிருந்தாங்க. இதுல ஷோபனாவை நாங்க முதலில் ஒரு ஸ்கூல பார்த்தோம். அவங்க ரொம்ப அழகாகப் பாடவும் செஞ்சாங்க. அதனால, இளையராஜா அவருடைய இசையில் படத்துல வரக்கூடிய `ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்' பாடலைப் பாடவெச்சார். இந்தப் படத்துக்குப் பிறகு அவங்க ரொம்ப ஃபேமஸ் ஆகிட்டாங்க. கமல் தன் பொண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கிற காட்சியைக் கொல்கத்தாவுல இருக்கிற ஒரு ரெட்லைட் ஏரியாவுல ஷூட் பண்ணினோம. கமல் கதறி அழும் காட்சியைப் பார்க்கிறப்போ, நானே கண் கலங்கிட்டேன். ரொம்ப தத்ரூபமா நடிச்சார். இப்போவும் இந்தக் காட்சியை டிவியில பார்க்கிறப்போ எமோஷனல் ஆகுற ஆடியன்ஸ் அதிகம். ஆனா, இந்தக் காட்சியை ஷூட் பண்றப்போ, எங்களுக்குப் பெரிய பிரச்னை வந்துச்சு. கமலோட பொண்ணு கேரக்டர்ல நடிச்ச சங்கீதா தீடிர்னு இந்தக் காட்சியில நடிக்கப் பிடிக்காம ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரல. அதனால, அங்கே இருந்த ஒரு பொண்ணை இந்தக் காட்சியில நடிக்க வெச்சோம். படத்தோட பெயர் `மகாநதி'க்கு ஏத்த மாதிரி, படத்துல எல்லா கேரக்டருக்கும் கிருஷ்ணா, யமுனா, காவேரினு நதிகள் பெயரை வெச்சோம். படத்தோட ரீ-ரெக்கார்டிங் அப்போ இளையராஜா சார் ரொம்பவே கலங்கிட்டார். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைச்சப்போ, எங்க `மகாநதி' டீம் ரொம்ப சந்தோஷப்பட்டோம். இதெல்லாத்தையும் சாத்தியமாக்குனது, கமல் சார்தான். நானும், கமலும் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஒரே டுடோரியல்ல படிச்சோம். அவர் ஹீரோவா நடிச்சுக்கிட்டு இருந்தப்போ, நான் காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தேன். காலேஜ் முடிஞ்சு, இயக்குநர் ஶ்ரீதர்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அந்த நேரத்துல ஶ்ரீதர் சார் படத்துல கமல் சார் ஹீரோவா கமிட் ஆனார். அப்போ, `நம்ம நண்பனா இருந்தாலும், எப்படி அவரை அணுகிப் பேசுறது'னு ஸ்பாட்ல எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. அதனால, ஷுட்டிங் ஸ்பாட்ல கமலைத் தவிர்த்தேன். ஒரு பிரேக் டைம்ல, `டேய் நில்லுடா'னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா, கமல் சார்தான். `என்கிட்ட நல்ல நண்பனா பேசு'னு அதட்டுனார். அப்படித்தான் எங்க நட்பு. இப்போவரைக்கும் நல்லபடியா தொடருது. பிறகு அவர் தயாரிப்புல உருவான எல்லாப் படத்திலும் நானும் வொர்க் பண்ணியிருக்கேன். அவர் எப்பவும் நல்ல இருக்கணும்.'' நெகிழ்வாகத் தொடங்கி, நெகிழ்வாகவே முடிக்கிறார், சந்தானபாரதி. #கமல்ஹாசன் ஹிட்ஸ் நன்றி: காளிமுத்து ராஜ் வலைதள பதிவு
💕குறும்புக்காரன்🐬
2.1K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
#இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் ஹிட்ஸ் #விருமாண்டி_விருமாண்டி #பேர_சொல்லவே_வாய்_வரல #21_ஆம்_வருடத்தில்_விருமாண்டி இந்த படத்தை டைரக்ஷன் செய்ய முதலில் தெம்பு வேண்டும்.அதுவும் தன் சொந்த செலவில் படம் எடுக்க நம்பிக்கை வேண்டும்.அந்த இரண்டும் இவரிடம் இருந்ததால் தான் #இன்றுவரை_இவர்_மட்டுமே #உலகநாயகன் சினிமாவில் வந்தவர் கோடி சென்றவர் கோடி சினிமா துறையில் இன்றில்லை நேற்றில்லை சினிமா துறை இருக்கும் வரை இவர் பெயர் நிலைத்திருக்கும். அவ்வளவு தொழில்நுட்பங்களை சினிமா துறையில் புகுத்தியுள்ளார். விருமாண்டி படத்திற்கு முதலில் வைத்த பெயர் சண்டியர். அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் இந்த படத்திற்கு பெயர் மாற்றச் சொல்லி வற்புறுத்தியதால் சண்டியர் என்ற பெயரை விருமாண்டி என்று மாற்றியமைத்தார். அந்தப் படத்திலேயே இதை நக்கலாக சொல்லி இருப்பார். பாலசிங்கம் அவர்கள் சண்டியரே சண்டியரே என்று கூப்பிட தலைவர் அம்மா ஆசையாய் வச்ச பேரு விருமாண்டி இருக்கையிலே என்ன சண்டியர் என்று கூப்பிடுற என்று கேட்க அதற்கு அவர் உனக்கு ஊர் வச்ச பெயர் சண்டியர் தானே என்று சொல்லுவார். #விருமாண்டி_என்பது_அடங்காத #காளை_அது_என்றும்_அப்படித்தான் இந்தப்படத்தில் வரும் பெயர்களும் வித்தியாசமாக அமைந்திருக்கும். விருமாண்டி, அன்னலட்சுமி, கொத்தாளத் தேவர் ,ஏஞ்சலா காத்தமுத்து, நல்லம நாயக்கர். இத்திரைப்படத்தில் அனைத்து கேரக்டர்களும் பேசப்படும் கேரக்டராகவே அமைந்திருக்கும். இந்த படத்தை முதல் தடவை பார்க்கும் போது சற்று புரியாததாகவே தோன்றும்.படத்தை நன்றாக கவனித்தால் கதை புரிய ஆரம்பிக்கும். கொத்தாளத் தேவர் சொல்லும் ஒரு கதை. பின்பு விருமாண்டி சொல்லும் ஒரு கதை. முதலில் விருமாண்டி நமக்கு கெட்டவனாக தோன்றினால் அடுத்து விருமாண்டி சொல்லும்போது முழுமையாக நமக்கு புரியும். #வேற_லெவல்_திரைப்படம் ஜெயிலில் கொத்தாளத் தேவரை பேட்டி எடுக்கும்போது அதான் விருமாண்டி விருமாண்டி பாத்தீங்களா அவன் பேரை சொல்ல வாயை வரல என்று சொல்லி ஆரம்பிக்கும் போதும். விருமாண்டி பேட்டி எடுக்கும்போது நீங்கள் போடும் உள்பாடி சைஸ் என்னவென்று கேட்கும் போதும் படம் என்னடா இப்படி எடுத்து இருக்காங்க வேற லெவல் என்று அப்போதே புரிய ஆரம்பிக்கும். #விருமாண்டி_கதை_சொல்ல #ஆரம்பிக்கும்_போது_தறிகெட்ட_ஒரு_காளை_மாடு_எப்படி_சிக்கி #சீரழிந்தது_விழுந்து_எழுந்து #அனைவரையும்_சிதைத்தது_என்பது_நமக்கு_புரியும் சிங்கப்பூர் மச்சான் ஆக காளையை அடக்கும் விருமாண்டி பின்பு அன்னலட்சுமியை தன் காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து ஊரை விட்டுப் போகும் அந்தக் காட்சி பின்பு அன்னலட்சுமியை கொத்தாளத் தேவர் அழைத்து வந்து சாக அடிக்கும் அந்த காட்சி எல்லாம் ஈரக் குலையை நடுங்க வைக்கும். நல்லமா நாயகனார் பஞ்சாயத்து காட்சி எல்லாம் வேற லெவல் அங்கு விருமாண்டி வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு பேசும் பேச்சுக்கள் எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும் என்ன பேசுகிறார் என்றே நாம் காதில் கேட்க முடியாத அளவிற்கு கைதட்டல் விசில் பறக்கும். அப்பாத்தா செத்து குழிதோண்டி அந்த குழியில் ஊற்று தண்ணீர் கிளம்பும்போது விருமாண்டி அதை முகத்தில் பூசிக்கொண்டு பேசும் வசனங்கள் எல்லாம் சொல்ல வார்த்தைகள் இல்லை. அதைப்போல் #நம்ம_வீட்ல_ஏது_மாமா_பெருமனுஷங்க என்று சொல்லும் அந்த காட்சி எல்லாம் தலைவர் வேற லெவல். கூட்டிக் கொடுக்கிறதுனா என்ன தெரியுமா என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அந்த பாங்கு தலைவரைத் தவிர வேறு எவரால் பேச முடியும். இங்கு வாயும் பேசும் அருவாளும் பேசும் என்று சும்மா வசனம் வைக்கவில்லை ஒவ்வொரு வெட்டும் வேற லெவல் அதிலும் ஒரு கத்தியால் வெட்டி விட்டு இன்னொரு கத்தி எடுத்து வெட்டுவார் பாருங்க #தலைவா_என்_உலகநாயகா #எங்கப்பா_இவ்வளவு_வித்தைய #கத்துக்கிட்ட இந்தப் படத்தை நான் எழுத வேண்டுமென்றால் என் பதிவுகள் கண்டிப்பாக ஒரு 15 பதிவுகள் தேவைப்படும். ஏனென்றால் ஒவ்வொரு வரியாக அனுபவித்து எழுதலாம் ஒரு காட்சியையும் ரசித்து ரசித்து எழுதலாம். அதற்கு நேரமின்மை காரணமாக மனதில் இருக்கும் அந்த காட்சிகளை மட்டும் நான் உங்களுக்காக எழுதி இருக்கின்றேன். படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் திரு‌இளையராஜா அவர்களின் இசை. படத்தின் டைட்டில் மியூசிக் வித்தியாசமாக இருக்கும். படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும். உன்னைவிட சாங் வேற லெவல். படத்தில் வரும் சின்ன சின்ன பாடல்களும் கலக்கல். படத்தில் எவ்வளவு பேர் நடித்திருந்தாலும், எவ்வளவு இனிமையான பாடல்கள் அமைந்திருந்தாலும் கடைசியில் படம் விட்டு வெளியே வரும்போது நம் ஒவ்வொருவரின் மனதிலும் விருமாண்டியே முழுமையாக ஆட்கொண்டிருப்பார்...... #விருமாண்டி. Thanks & credited goes to john peter FB தரவு