aalayam arivom.

saravanan.
1.2K views
21 hours ago
#aalayam arivom. மதனகோபாலசுவாமி திருக்கோயில்,* *மூலவர் : மதனகோபாலசுவாமி.* *அம்மன்/தாயார் : பாமா, ருக்மணி.* *தல விருட்சம் : வாழை.* *ஆகமம்/பூஜை : வைகானஸ ஆகமம்.* *ஊர் : மதுரை - 625 001.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:40 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும்.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர்.* *பொது தகவல் : கோயிலில் நுழைந்தவுடன் இடதுபக்கம் அரசமரத்தடியில் முழுமுதற்கடவுளாக விநாயகர் அமர்ந்திருக்கிறார் மூலவர் மதனகோபால சுவாமி. வாழை தல விருட்சம், மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர்.* *மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர். நவநீதகிருஷ்ணன், சேனை முதல்வர், கருடாழ்வார், நம்மாழ்வார், உடையார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரை இத்தலத்தில் நாம் தரிசிக்கலாம். கருவறையை கடக்கும் வழியில் ராமர் தனிசன்னதியில் காட்சி தருகிறார்.* *மேலும் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹரி ஹர ஸர்ப்ப ராஜா, பஞ்ச முக ஆஞ்சநேயர் என ஒவ்வொருவரும் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கின்றனர். குழலூதும் கண்ணன், ராமானுஜர் சன்னதியும் உண்டு.* *பிரார்த்தனை : மேலும் இசையில் நாட்டம் உடையவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வதால் இசை மேதை ஆகலாம் என்றும், இத்திருத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.* *இங்குள்ள நாக தேவி, ஹரி ஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் ராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.* *நேர்த்திக்கடன் : சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.* *தலபெருமை : ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரை தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.* *தல வரலாறு : ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்து விட்டு சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் லிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவன், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவனின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததை கூறி இந்த உலகைகாக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம் சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவன் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது.* *சிவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் 'மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்" என்றார். மகாவிஷ்ணுவும் சிவனின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவனையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : இத்தக்கோயிலில் மாதம் தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவை நோன்பு சிறப்பானவை.* *சிறப்பம்சம் : மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர்.* *இருப்பிடம் : மதுரை நகரின் மத்திய பஸ் ஸ்டாண்டின் மிக அருகில் கோயில் உள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
550 views
1 days ago
#aalayam arivom. வரதராஜ பெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : வரதராஜ பெருமாள்.* *அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி பூதேவி.* *ஊர் : எஸ்.ஆர்.வி.நகர், திருப்பரங்குன்றம்,* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:00 மணி முதல் 10:30 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 98425 08447.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : கருப்பண்ண சுவாமி சங்கு சக்கரம், நாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.* *பொது தகவல் : இக்கோயில் மூலஸ்தானத்தில் மூன்றரைஅடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். முகப்பில் துவார பாலகர்கள், மூலவர் சன்னதி எதிரே கருடாழ்வார், வளாகத்தில் ஆஞ்சநேயர், தும்பிக்கையாழ்வார்(விநாயகர்), நவக்கிரகங்கள், நாகம்மாள், கருப்பணசுவாமி, விஷ்ணு துர்க்கை, வீரசின்னம்மாள், முத்தம்மாள் பேரட்டாள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர்.* *பிரார்த்தனை : திருமண தடைகள் நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, படிப்பில் மந்தமாக உள்ளவர்கள் சிறந்த கல்விச் செல்வம் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.* *நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு துளசிமாலை சார்த்தியும், காரியசித்தி பெற்றவர்கள் பெருமாளுக்கு வேஷ்டி, துண்டு, ஸ்ரீதேவி, பூதேவிக்கு சேலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.* *தலபெருமை : வளாகத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமி சங்கு சக்கரம், நாமத்துடன் அருள்பாலிக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் விஷ்ணு துர்க்கைக்கு அரளிமாலை, எலுமிச்சம்பழம் மாலை அணிவிப்பவர்களுக்கு, காரியத்தடைகள் நீங்கி வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துப்படி இங்கு சிறப்பு. கோயிலில் மூலவர்கள் கிடையாது. 27 அடி உயர கொடிமரம் உண்டு. மகாலட்சுமிதாயாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.* *தல வரலாறு : மருமகன் முருகன் திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகிலேயே மாமன் பெருமாளும் திருப்பரங்குன்றத்தில் தனி கோயிலில் அருளுகிறார்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : மாசி மாதம் மகா சிவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழிமாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடக்கிறது. பங்குனி உத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருக்கல்யாணம் விழா நடக்கும்.* * சிறப்பம்சம் : கருப்பண சுவாமி சங்கு சக்கரம், நாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.* *இருப்பிடம் : இக்கோயில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகரில் அமைந்துள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை, திருப்பரங்குன்றம்.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
631 views
3 days ago
#aalayam arivom. சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில்,* *மூலவர் : சந்தானகோபாலகிருஷ்ணன்.* *ஊர் : இரட்டை அக்ரஹாரம் சோழவந்தான்.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.* *+91 87546 11993.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : பெருமாள் ஆலயத்தில் நவகன்னியர் அருள்பாலிப்பது சிறப்பு.* *பொது தகவல் : அர்த்த மண்டபத்தில் மேய்கண்ட ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், கூந்தாழ்வார், நம்மாழ்வார் எழுந்தருளியுள்ளனர். கோயில் வளாக பின்புறம் கன்னிமார் தெய்வங்கள் வரமளிக்கின்றனர்.* *பிரார்த்தனை : வேண்டும் பக்தர்களுக்கு திருமணம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, உடல் ஆரோக்கியம், குடும்ப சுகம், வியாபார விருத்தி, சந்தனபாக்கியம் கிட்டும்.* *நேர்த்திக்கடன் : கன்னிமார்களை வேண்டி நெய்விளக்கேற்றி, சந்தனம் பன்னீர் பூ தெளித்தால் அனைத்து வளங்களும் பெறலாம்.* *தலபெருமை : இக்கோயிலில் மூலவர் சந்தானகோபாலகிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா தேவியருடன் அருள்பாலிக்கிறார்.* *தல வரலாறு : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இக்கோயில் பலரின் முயற்சியால் 2012ல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : வைகுண்டஏகாதசி, ஆவணியில் ராதாகிருஷ்ணன் திருக்கல்யாணம், பங்குனியில் சீதாதிருக்கல்யாணம், நவராத்திரி போன்ற விழாக்கள் நடக்கும்.* *சிறப்பம்சம் : பெருமாள் ஆலயத்தில் நவகன்னியர் அருள்பாலிப்பது சிறப்பு.* *இருப்பிடம் : சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் சந்தானகோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை, சோழவந்தான்.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
616 views
9 days ago
#aalayam arivom. ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : நாராயணன்.* *அம்மன்/தாயார் : ஜெனகைவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி.* *ஆகமம்/பூஜை : பாஞ்ராத்ரம்.* *புராண பெயர் : ஜனகையம்பதி.* *ஊர் : சோழவந்தான் - 625 214.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:00  மணி முதல் 11:00  மணி வரை, மாலை 4:00  மணி முதல் இரவு 8:00  மணி வரை திறந்திருக்கும்.* *+91-4543-258987, 94867 31155.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகன் தவம் இருந்ததற்கு நினைவுச் சின்னமாக விளங்கும் தலம்.* *பொது தகவல் : அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியில் வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம். அழகிய ஆஞ்சநேயர் தனி சன்னதியாக வீற்றிருக்கும் தலம். இங்கு ஆண்டாள் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.* *பிரார்த்தனை : கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியன இத்தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைகள் ஆகும்.விவசாய விளைச்சல் செழிக்க இத்தலத்தில் பலர் வேண்டிக் கொள்வர்.* *இத்தலத்து பெருமாளை வேண்டிக் கொண்டால் தொழில் வளம், கல்வி விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியன நிறைவேறுகின்றன.* *நேர்த்திக்கடன் : கோட்டை நெல் தருதல் இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த நேர்த்திகடனாகும். இத்தலத்து வரும் ஏராளமான பக்தர்கள் ஜெய வீர ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துகின்றனர். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தல், துளசிமாலை சாத்துதல், நெய் தீபம் ஏற்றுதல், மாலை சாற்றி வழிபடுதல் ஆகியனவும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு பக்தர்கள் செய்கின்றனர். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.* *தலபெருமை : இத்தலத்தின் மிகவும் விசேஷம் இங்கு அருள்பாலிக்கும் ஜெயவீர ஆஞ்சநேயர் ஆவார். அர்த்தமண்டபத்தின் வலதுபக்கம் தனி சன்னதியாக வீற்றிருக்கும் இவரை வணங்கினால் நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தருவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆஞ்சநேயரின் வால் பின்புறம் சுற்றி நூனியில் மணி கட்டியிருக்கும் அழகு பார்ப்பவரை மயங்க வைக்கும். இந்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு எந்த காரியத்தை தொட்டலும் ஜெயம் ஆகும் என்பதால் இவர் ஜெயவீர ஆஞ்சநேயர் என்ற பெயர் விளங்குகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை பெருமளவிலான பக்தர்கள் வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள்.* *பெரிய அளவிலான ராமன் சீதை லட்சுமணன் ஆகியோரது வார்ப்பு விக்ரகம் உள்ளது இக்கோயிலில், புராதன காலத்தில் இருந்தே இருக்கும் கோயில். வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் ஜனகையம்பதி என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள அழகிய கோயில் இங்குள்ள ராமனது விக்ரகம் மிக அழகிய வடிவில் மிக நேர்த்தியாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.* *தல வரலாறு : ஜனகனின் மகள் சீதையாக மகாலட்சுமியே பிறந்து பெருமை சேர்த்தாள். மகரிஷியான ஜனகனுக்கோ தம்மிடம் வளரும் இந்தக் குழந்தை யார் என்பதை உணரவே முடிந்தது. மகாலட்சுமியை எந்த மனிதனுக்கு மணம் முடிப்பது என்பது பெரிய பாரமாகவே இருந்தது. சாதாரணமான பெண்ணைப் பெற்றவனுக்கே மாப்பிள்ளை கிடைக்க பாடாய் பட வேண்டியிருக்க திருமகளுக்கு எப்படி மாப்பிள்ளை தேடுவது என்ற கவலையில் ஜனகன் துடித்தார்.* *இதற்காகவே நாராயணனே பிறப்பெடுத்து வந்து இந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் பாரம் நீங்குமே என்று கவலைப்பட்டு சோழவந்தானில் வந்து தவமிருந்தான். அதுவே இத்தலம் அமைய காரணமாக உள்ளது. ஸ்ரீமன் நாராயணனுக்கே மாப்பிள்ளையாக வேண்டி தவமிருந்த ஜனகனுக்கு நினைவுச் சின்னம் ஒன்று இருக்கிறது என்றால் அது சோழவந்தான் ஜனகை நாராயணன் கோயில்தான். ஜனகனின் தவப்பயனால் ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்து சீதையை கைபிடித்தார். இந்த பெரும் செயல் செய்த ஜனகனுக்கு நன்றி உணர்வோடு உள்ள கோயில்தான் இது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : சித்திரை - சித்ரா பவுர்ணமி - 3 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும, -ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தசாவதாரத்தில் 9 அவதாரங்கள் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். புஷ்ப பல்லக்கில் அலங்கரித்து சுவாமி வலம் பங்குனி பிரம்மோற்சவம் - 11 நாட்கள் ஸ்ரீ ராம நவமி, மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும் தினமும் சுவாமி பள்ளியறை புறப்பாடு நடக்கும். தைமாதப்பிறப்பு, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். நவராத்திரி, ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரத்தில் விசேஷமாக இருக்கும்.* *சிறப்பம்சம் : ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகன் தவம் இருந்ததற்கு நினைவுச் சின்னமாக விளங்கும் தலம்.* *இருப்பிடம் : மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ள சோழவந்தான் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : சோழவந்தான், மதுரை.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
624 views
10 days ago
#aalayam arivom. நீலமேகப் பெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : நீலமேகப் பெருமாள்.* *ஊர் : கச்சைகட்டி.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 5:00  மணி முதல் 9:00  மணி வரை, மாலை 4:00  மணி முதல் இரவு 9:00  மணி வரை திறந்திருக்கும்.* *+91 97893 17916.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.* *பிரார்த்தனை : கேட்ட வரம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.* *நேர்த்திக்கடன் : சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.* *தலபெருமை : இக்கோயில் கச்சைகட்டி, குட்லாடம்பட்டி, செம்மினிபட்டி, ராமையன்பட்டி, ஒட்டுப்பட்டி, மலப்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் உட்பட எட்டு கிராம மக்களுக்கு பாத்தியப்பட்டது. இக்கோயில் தற்போது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது.* *தல வரலாறு : மதுரையை குலசேகரப்பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்த காலத்தில், இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சேர, சோழ, பாண்டியர் காலத்திற்கு பின் கோயில்கள் முழுமையாக சிதிலமடைந்தன. பின், மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் காலத்தில் கச்சைகட்டியில் பூமியில் இருந்து கல் ஒன்று சிறிது... சிறிதாக... வளர்ந்துள்ளது அதை தோண்டி பார்க்கையில் நான்கு அடி உயரத்தில் பெருமாள் சிலை சுயம்புவாக தோன்றியது. அந்த இடத்தில் ராணி மங்கம்மாள் முயற்சியால் நீலமேகப்பெருமாள் கோயில் கட்டப்பட்டது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : ஆண்டு தோறும் சித்திரை முதல் நாள் திருவிழா நடக்கும். தவிர மாதம்தோறும் நடக்கும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருமாள் அருள்பாலிக்கிறார்.* *சிறப்பம்சம் : இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.* *இருப்பிடம் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : வாடிப்பட்டி.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
570 views
12 days ago
#aalayam arivom. நீலமேகப் பெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : நீலமேகப் பெருமாள்.* *ஊர் : கச்சைகட்டி.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 5:00  மணி முதல் 9:00  மணி வரை, மாலை 4:00  மணி முதல் இரவு 9:00  மணி வரை திறந்திருக்கும்.* *+91 97893 17916.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.* *பிரார்த்தனை : கேட்ட வரம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.* *நேர்த்திக்கடன் : சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.* *தலபெருமை : இக்கோயில் கச்சைகட்டி, குட்லாடம்பட்டி, செம்மினிபட்டி, ராமையன்பட்டி, ஒட்டுப்பட்டி, மலப்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் உட்பட எட்டு கிராம மக்களுக்கு பாத்தியப்பட்டது. இக்கோயில் தற்போது இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது.* *தல வரலாறு : மதுரையை குலசேகரப்பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்த காலத்தில், இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சேர, சோழ, பாண்டியர் காலத்திற்கு பின் கோயில்கள் முழுமையாக சிதிலமடைந்தன. பின், மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் காலத்தில் கச்சைகட்டியில் பூமியில் இருந்து கல் ஒன்று சிறிது... சிறிதாக... வளர்ந்துள்ளது அதை தோண்டி பார்க்கையில் நான்கு அடி உயரத்தில் பெருமாள் சிலை சுயம்புவாக தோன்றியது. அந்த இடத்தில் ராணி மங்கம்மாள் முயற்சியால் நீலமேகப்பெருமாள் கோயில் கட்டப்பட்டது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : ஆண்டு தோறும் சித்திரை முதல் நாள் திருவிழா நடக்கும். தவிர மாதம்தோறும் நடக்கும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் செய்யப்பட்டு பெருமாள் அருள்பாலிக்கிறார்.* *சிறப்பம்சம் : இங்குள்ள பெருமாள் நான்கு அடி உயரத்தில் சுயம்புவாக தோன்றியது.* *இருப்பிடம் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : வாடிப்பட்டி.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
625 views
12 days ago
#aalayam arivom. அபூர்வ தரிசனம்: ஆடு வாகனத்தில் அருள்பாலிக்கும் மோகனூர் துர்க்கை அம்மன்! 🚩 பொதுவாக ஆலயங்களில் துர்க்கை அம்மன் சிம்மம் (சிங்கம்) மீது அமர்ந்தோ அல்லது மகிஷாசுரனின் தலை மீது நின்ற கோலத்திலோ காட்சி தருவதையே நாம் பார்த்திருப்போம். ஆனால், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அமைந்துள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் (குமரீஸ்வரர்) திருக்கோயில் பிரகாரத்தில், ஆடினை (மேஷம்) வாகனமாகக் கொண்டு மிக அபூர்வமான திருக்கோலத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்! 🙏✨ 🌸 இத்தல துர்க்கையின் ஆன்மீகச் சிறப்புகள்: 🐐 அபூர்வ வடிவமைப்பு: தமிழ்நாட்டின் மிகச்சில திருத்தலங்களில் மட்டுமே காணப்படும் ஆடு வாகன துர்க்கை வடிவம் இதுவாகும். கொங்கு மண்டல பழமை வாய்ந்த கொற்றவை வழிபாட்டு மரபின் சான்றாகவும் இது திகழ்கிறது. 🔴 செவ்வாய் தோஷ நிவர்த்தி: ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசியின் குறியீடு ஆடு. செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையான துர்க்கை இங்கு ஆடு வாகனத்தில் வீற்றிருப்பதால், செவ்வாய் தோஷம், திருமணத் தடைகள் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. 🕯️ ராகு கால வழிபாடு: குறிப்பாக செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் (மாலை 3:00 - 4:30) இத்துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி, அரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட, குடும்பத்தில் உள்ள சகல தோஷங்களும், எதிரி பயமும் விலகும் என்பது நம்பிக்கை. ✨ மன அமைதி பெறவும், தொழில்/வியாபார தடைகள் நீங்கி வெற்றி பெறவும் மோகனூர் சென்று அசலதீபேஸ்வரரையும், அபூர்வ ஆடு வாகன துர்க்கையையும் தரிசித்து அருள் பெறுவோம்! 📍 அமைவிடம்: அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம் (காவிரி ஆற்றின் கரை). 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
saravanan.
660 views
16 days ago
#aalayam arivom. நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்,* *மூலவர் : நவநீத கிருஷ்ணன்.* *ஊர் : வடக்கு மாசி வீதி.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 8:30  மணி முதல் 11:00  மணி வரை, மாலை 5:00  மணி முதல் இரவு 7:00  மணி வரை திறந்திருக்கும்.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது. ஆசியாவிலேயே மிக நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோயிலின் புஷ்ப பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணன்.* *பொது தகவல் : இங்கு ஆஞ்சநேயர், ஹயக்ரீவர், காளியம்மன், பாமா ருக்மணியுடன் உற்சவர், நாகர் மற்றும் ராசி சக்கரம், யோக சக்கரம் போன்றவை அமைந்துள்ளது.* *பிரார்த்தனை : குழந்தை பாக்கியம் பெற பக்தர்கள் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.* *நேர்த்திக்கடன் : கிருஷ்ணனுக்கு கொலுசு அணிவித்து, கோயிலில் தொட்டில் கட்டி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.* *தலபெருமை : மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ள மாசி வீதிகளில், வடக்கு மாசி வீதியின் மையப் பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்குமுன் ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள், முழுக்க முழுக்க கல்கட்டுமானமாக கோயில் அமைந்திருப்பது சிறப்பு. மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் உள்ளதால், வடக்கு கிருஷ்ணன் கோயில் என்றும், ஆரம்ப காலத்தில் கம்பத்தின் அடியில் கிருஷ்ணன் வீற்றிருந்ததால் கம்பத்தடி கிருஷ்ணன் கோயில் என்றும் அழைக்கிறாõர்கள் பக்தர்கள் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை... எனப் போற்றுவாள் ஆண்டாள். இங்கே நம் தென்மதுரையில் இரண்டு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய கோலத்தில் அருள்கிறார் நவநீதகிருஷ்ணன் பாமா, ருக்மணி தேவியரும் உடனிருக்கிறார்கள். இவருக்கு ஒரு சிறப்பு உண்டு. குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று குழந்தைக்கு சோறூட்டுவதாக வேண்டிக்கொண்டு (அன்னப்ரசன்னம்) அங்கு செல்ல இயலாதவர்கள் இந்த நவநீதகிருஷ்ணன் சன்னிதியில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.* *அதுமட்டுமா? புத்திரதோஷம் உள்ளவர்கள் இந்தக் கிருஷ்ணனை மனதாரப் பிரார்த்தித்து, அவருக்கு கொலுசு அணிவிப்பதாகவும், கோயிலில் தொட்டில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் தினம் தினம் விசேஷம்தான் என்றாலும், கிருஷ்ண ஜெயந்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் முதல் நாள் கிருஷ்ணன் பிறப்பு உத்ஸவம். 2-ஆம் நாள் உறியடி வைபவம் அன்று தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது.* *ஆசியாவிலேயே மிக நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோயிலின் புஷ்ப பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணன்.* *தல வரலாறு : நவநீதம் என்றால் வெண்ணெய் என்று பொருள். வெண்ணெய்ப் பிரியன் என்பதால், கண்ணனை நவநீத கிருஷ்ணன் எனச் சிறப்பித்தார்கள் பெரியோர்கள். அதுமட்டுமா...? தன் மீதான பக்திப் பெருக்கில் ஊனும் உயிரும் உருகும் அடியவர்களுக்காக. தானும் வெண்ணெயாய் உருகும் பண்பினன் அல்லவா கண்ணன்! ஆகவே, அவனுக்கு நவநீத கிருஷ்ணன் எனும் பெயர் பொருத்தம்தான்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : கிருஷ்ணர் ஜெயந்தி.* *சிறப்பம்சம் : தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது. ஆசியாவிலேயே மிக நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோயிலின் புஷ்ப பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணன்.* *இருப்பிடம் : மதுரை வடக்குமாசி வீதியில் கோயில் அமைந்துள்ளது.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
771 views
20 days ago
#aalayam arivom. ராதா கிருஷ்ணர் திருக்கோயில்,* *மூலவர் : ராதா கிருஷ்ணர்.* *ஊர் : புது நத்தம் ரோடு, திருப்பாலை,* *மாவட்டம் : மதுரை- 625 014.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:00  மணி முதல் 11:00  மணி வரை, மாலை 5:00  மணி முதல் இரவு 3:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 452 2681079, 95850 46910.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : மார்கழி மாதத்தில் சூரிய ஒளி கருவறையை தரிசிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஒரு வைணவத்தலத்தில் துர்காவும், மதுரையின் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமியும் காட்சி தருவது மற்றொரு சிறப்பான அம்சம்.* *பொது தகவல் : ராஜகோபுரத்தை அடுத்து மகாமண்டபமும், அதில் கருவறையும் அமைந்துள்ளன. கோயிலை சுற்றி வரும் போது சக்கரத்தாழ்வார், நரசிம்மர், துர்கா, அனுமான், கருப்பண்ண சுவாமி சன்னதிகள் உள்ளன. இவர்கள் அனைவரையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம் ஒரே இடத்தில் கிட்டுகிறது.* *பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.* *நேர்த்திக்கடன் : சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.* *தலபெருமை : ஒரு வைணவத்தலத்தில் துர்காவும், மதுரையின் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமியும் காட்சி தருவது இன்னும் சிறப்பான அம்சம். கண்ணனுக்கு பாமா ருக்மணி என பல மனைவியர் இருந்தாலும் அவனையே உயிராகக் கொண்டு வாழ்ந்த ராதையை "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற அடிப்படையில் பிற தேவியரின் சிலைகள் எதுவும் இல்லாமல் இங்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராதைக்கு தமிழகத்தில் வேறு எங்கும் தனிக்கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் உண்டு. மார்கழி மாதத்தில் சூரிய ஒளி கருவறையை தரிசிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு.* *தல வரலாறு : ராதை கண்ணன் மீது கொண்ட காதலுக்கு அடையாளமாக பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதையை கேளுங்கள். ஒருசமயம் தன் கோபாலனைப் பற்றியசெய்தி ஒன்றுமே யசோதைக்கு தெரியாமல் போயிற்று. ""கோபாலன் எங்கே போய் விட்டான். அவனை நீண்ட நாட்களாக காணவில்லையே அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே! பசி தாங்க மாட்டானே! இப்போது பெரியவன் ஆகி விட்டான். வெண்ணெய் திருட இப்போது போவதில்லையே," என் வருந்திக் கொண்டிருந்தவளுக்கு ராதையின் நினைவு வந்தது. ராதாவிடம் கேட்டால் தெரிந்து விடும், இதற்குப் போய் கவலைப்பட்டோமே! அவளிடம் சொல்லாமல் இந்த மாயக்கண்ணன் எங்கும் போக மாட்டான். ராதையும் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள். கண்ணன் இல்லா விட்டால் ராதை இல்லை." எனக் கருதியவள் ராதையின் வீட்டிற்குச் சென்றாள்.* *"ராதா" கண்ணனைப் பற்றிய சேதி எதாவது உனக்கு தெரியுமா? அவனைக் காணவில்லை. எங்கே போனான்? உன்னிடம் சொன்னானா? பதைபதைப்புடன் கேட்டாள் யசோதா.* *அப்போது ராதை தெய்வீகப்பரவச நிலையில் ஆழ்ந்திருந்தாள். யசோதை கேட்டது அவள் காதில் விழவில்லை. யசோதை அவள் கண் விழிக்கட்டும் எனக் காத்திருந்தாள்.* *சிறிது நேரத்திற்கு பிறகு ராதைக்கு மெல்ல மெல்ல தெய்வீகப் பரவச நிலை கலைந்து உலக நினைவு திரும்பியது. தன் முன்னால் அமர்ந்திருந்த யசோதையைக் கண்டதும் அவள் முன் விழுந்து வணங்கினாள்.* *பிறகு தன்னைத்தேடி வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள் யசோதை "கண்ணனைக் காணவில்லை, அவன் எங்கே? என பரபரப்பாகக் கேட்டாள்.* *ராதா இதைக் கேட்டு எந்த பரபரப்பையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. ""அம்மா! கண்னை மூடிக் கொண்டு நம் கோபாலனின் உருவத்தை தியானியுங்கள். நீங்கள் அவனைக் காண்பீர்கள்," என்றாள்.* *யசோதா கண்களை மூடி தியானிக்க ஆரம்பித்தாள். உடனே தூய பக்தியும், தூய தெய்வீகப் பரவச நிலையுமே வடிவெடுத்தவளாகிய ராதை, தனது தெய்வீக சக்தியை யசோதையிடம் செலுத்தினாள். அதன் காரணமாக, மறுகணமே யசோதையால் கோபாலனைக் காண முடிந்தது.* *பிறகு யசோதை ராதையிடம், ''அம்மா! நான் கண்களை மூடிக் கொள்ளும் போதெல்லாம், என் அன்பிற்குரிய கோபாலனை நான் பார்க்கும்படியாக செய்ய வேண்டும்," என பிரார்த்தித்துக் கொண்டாள்.* *இந்த கதையின் மூலம் கண்ணனே நினைவாக இருந்தால், அவன் எப்போதுமே நம்முடன் இருப்பது போல தோன்றும் என்று தெரிய வருகிறது.* *இப்படி கண்ணனையே உயிராக, உடலாகக் கொண்ட ராதைக்கு மதுரையில் ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. துவாரகை கிருஷ்ணன் கோயில் கோபுரத்தைப் போல வடஇந்தியக் கலையின்படி அழகிய கோபுரம் கோயில் வாசலை அலங்கரிக்கிறது. கிருஷ்ணரும், ராதையும் பசுவின் முன்னால் நிற்பது போன்ற கருவறை பார்க்க கண்கோடி வேண்டும்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா: கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.* *சிறப்பம்சம் : மார்கழி மாதத்தில் சூரிய ஒளி கருவறையை தரிசிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு.* *இருப்பிடம் :  இந்தக் கோயில் மதுரை - நத்தம் ரோட்டில் உள்ள திருப்பாலையில் அமைந்துள்ளது. மதுரை மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் கலெக்டர் ஆபீஸ் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து திருப்பாலை வழியாகச் செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*
saravanan.
785 views
21 days ago
#aalayam arivom. யோக நரசிம்மர் திருக்கோயில்,* *மூலவர் : யோக நரசிம்மர்.* *அம்மன்/தாயார் : நரசிங்கவல்லி தாயார்.* *தீர்த்தம் : சக்கர தீர்த்தம்.* *ஊர் : யானைமலை ஒத்தக்கடை.* *மாவட்டம் : மதுரை.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 6:00  மணி முதல் 11:00  மணி வரை, மாலை 5:00  மணி முதல் இரவு 8:00  மணி வரை திறந்திருக்கும்.* *+91-98420 24866.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு :இது ஒரு குடவறைக்கோயில். நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயில்.* *பொது தகவல் : மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோயிலில் கொடி மரம் கிடையாது. ஏனெனில் கொடிமரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீள அகல அளவைப்பொறுத்தே அமையும். இத் தலத்தில் கருவறைக்குமேல் யானைமலை மிகவும் உயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என கூறப்படுகிறது.* *இரு ஒரு குடவறைக்கோயில். கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும் குடவறை அமைப்புகள் தான்.* *பிரார்த்தனை : நரசிம்மர் அவதாரம் எடுத்தது தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ கலாத்தில் தான். எனவே, அந்த நேரத்தில் இந்த யோகநரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரிபயம் இருக்காது. மரணபயம் நீங்கும்.* *தாயார் நரசிங்கவல்லியை இந்நேரத்தில் வேண்டினால் திருமணத் தடை நீங்கும். கோபக்கார கணவன் இங்கு வழிபட்டால், மனைவியை நெஞ்சில் தாங்கும் சாந்த சொரூபியாகிவிடுவார் என்பதெல்லாம் நம்பிக்கை.* *நேர்த்திக்கடன் : பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.* *தலபெருமை : நீங்கள் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை செய்திருப்பீர்கள் ஆனால், விஷ்ணு கோயிலான இங்கும் மிகச்சிறப்பாக பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.* *தல வரலாறு : ரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இங்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பிரகலாதனிடம் கேட்டுக் கொண்டனர். பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான். அப்போது. நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினர் தேவர்கள். உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் அவளை ஆலிங்கனம் செய்து யோகநரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசிப்பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை போலவே இங்கும் பவுர்ணமி கிரிவலம் சிறப்பு. சிவன் கோயில்களைப்போலவே இங்கும் பிரதோஷ வழிபாடு உண்டு. எனவே நரசிம்ம பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பு.* *சிறப்பம்சம் : இரு ஒரு குடவறைக்கோயில் நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயில்.* *இருப்பிடம் : மதுரை சென்னை ரோட்டில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து 8 கி.மீ., தொலைவில் யானைமலை ஒத்தக்கடை உள்ளது. இங்கிருந்து மினி பஸ்சில் மேற்கே 2 கி.மீ., சென்றால், கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை.* *அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை.* *தங்கும் வசதி : மதுரை.*