aalayam arivom.

saravanan.
522 views
10 hours ago
#aalayam arivom. அரங்கநாதர் திருக்கோயில்,* *மூலவர் : அரங்கநாதர்* *உற்சவர் : வெங்கடேசப்பெருமாள்.* *அம்மன்/தாயார் : ரங்கநாயகி* *தல விருட்சம் : காரைமரம்.* *தீர்த்தம் : பிரம்ம. கருட மற்றும் அஷ்டதீர்த்தம்.* *ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்.* *ஊர் : காரமடை-641 104.* *தாலுகா : மேட்டுப்பாளையம்,* *மாவட்டம் : கோயம்புத்தூர்.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.* *+91-4254-272 318, 273 018.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!* *தல சிறப்பு : மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது.* *பொது தகவல் : கோயில் முன்மண்டபத்தில் ருக்மிணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலர் காட்சி தருகிறார் இவருடன் நம்மாழ்வார். ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோரும் உள்ளனர். பிரகாரத்தில் சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர். நாகர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளது. சுவாமி கோஷ்டத்தில் உள்ள வேணுகோபால், ராமர் மற்றும் கோபிகைப்பெண் சிலைகள் காணவேண்டியவை.* *பிரார்த்தனை : குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க, செல்வம் பெருக ரங்கநாதரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.* *நேர்த்திக்கடன் : வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு அதிகளவில் பாலபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். கோயிலுக்கு பசு காணிக்கையாக செலுத்தும் வழக்கம் இருக்கிறது.* *தலபெருமை : மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது. ராமானுஜர், கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் தலத்திற்கு சென்றபோது இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். திருப்பதியில் மலையப்பசுவாமி (வெங்கடாஜலபதி) மலையிலும், அலர்மேலுமங்கைத்தாயார் அடிவாரத்திலும் காட்சி தருகின்றனர். ஆனால் இத்தலத்தில் சுவாமி கீழேயும், அருகிலுள்ள மலையில் ரங்கநாயகித்தாயாரும் காட்சி தருகின்றனர். இவளை. "பெட்டத்தம்மன்' என்று அழைக்கிறார்கள் சுவாமி, இந்த தாயாரையே திருக்கல்யாணம் செய்து கொள்வதாக ஐதீகம் மாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் இக்கோயிலில் இருந்து அர்ச்சகர் மலைக்கோயிலுக்குச் சென்று, கும்பத்தில் தாயாரை ஆவாஹனம் செய்து (எழுந்தருளச்செய்து] கோயிலுக்கு கொண்டு வருகிறார். அப்போது பெருமாள் சன்னதியில் இறந்து ராமபாணத்தை வெளியில் கொண்டு சென்று தாயாரை வரவேற்கும் வைபவம் நடக்கிறது. அதன்பின் கலசத்தை மூலஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் அதிகாலையில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது.* *ராமபாண ஆசிர்வாதம் : கோயில்களில் பெரும்பாலும் உற்சவமூர்த்தி, மூலவருக்கு அருகில்தான் காட்சி தருவார் விழாக்காலங்களில் மட்டும் இவர் வெளியில் சென்று புறப்பாடாகி மீண்டும் சன்னதிக்கு திரும்புவார். ஆனால், இக்கோயிலில் உற்சவர் மூலஸ்தானத்திற்கு செல்வது கிடையாது. இவர் எப்போதும் சன்னதி முன்மண்டபத்தில்தான் காட்சி தருகிறார். இத்தலத்தில் சுயம்புவாக தோன்றிய ரங்கநாதர், சிறிய மூர்த்தியாக இருக்கிறார். இவருக்கான உற்சவர், பெரிய சிலை வடிவில் இருக்கிறார். எனவே இவரை மூலஸ்தானத்தில் வைத்தால், மூலவரை தரிசிக்க முடியாது என்பதன் அடிப்படையில் முன்மண்டபத்திலேயே வைத்திருக்கின்றனர். பெருமாள் கோயில்களில் பிரதானமாக கருதப்படுவது சடாரி சேவை. இந்த சடாரியில் திருமாவின் திருப்பாதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் இதை பக்தர்களின் தலையில் வைத்து ஆசிர்வதிப்பர். இங்கு மூலவர் சன்னதியில், சடாரி வைக்கப்படுவதில்லை. மாறாக, ராமபாணத்தால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. இந்த ராம பாணத்திற்குள் திருமாலின் பிரதான ஆயுதமான சக்கரம் ஆதிசேஷன் வடிவம் இருப்பதாக சொல்கிறார்கள். உற்சவரிடம் மட்டுமே சடாரி ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. ஆயுதபூஜையன்று ஒருநாள் மட்டும் இந்த ராமபாணத்திற்கு பூஜை செய்யப்படுவது மற்றொரு விசேஷம்.* *கவாள சேவை : மாசி பிரம்மோற்ஸவத்தின்போது மகம் நட்சத்திரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். தேர் நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தேன். பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகிய பொருட்கள் கலந்த பிரசாதத்தை வைத்துக்கொண்டு, ரங்கன் வருகிறான். கோவிந்தன் வருகிறான், எனச்சொல்லி ஒருவருக்கொருவர் கொடுக்கிறார்கள். இதனை, "கவாள சேவை" என்கிறார்கள். அப்போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர் விடும் "தண்ணீர் சேவை' கையில் பந்தம் ஏந்திக்கொண்டு சுவாமியை வணங்கும் பந்த சேவை என்னும் சேவைகளும் நடக்கிறது. சுவாமி சுயம்புவாக இருந்ததை கண்டறிந்தபோது இந்த வைபவங்கள் செய்யப்பட்டதன்அடிப்படையில் தற்போதும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. அமாவாசை தோறும்காலையில் சுவாமிக்கு பாலபிஷேகம் நடக்கிறது. சுவாமி சன்னதி இடப்புறம் உள்ள ஆஞ்சநேயர், சுவாமியை பார்த்து காட்சி தருகிறார். இந்த ஆஞ்சநேயர் சிலை, பெரிய சதுரக்கல்லில் வித்தியாசமாக வடிக்கப்பட்டிருக்கிறது.* *தல வரலாறு : ஒருசமயம் கருடாழ்வாருக்கு திருமால், மகாலட்சுமியின் திருமணக்கோலம் காண வேண்டுமென ஆசை எழுந்தது. அதனை சுவாமியிடம் தெரிவித்தார். அவர் விருப்பத் திற்காக சுவாமி, பூலோகத்தில் இத்தலத்தில் திருமணக்கோலம் காட்டியருளினார் அவருக்கு காட்சி தந்த சுவாமி, இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். பிற்காலத்தில் இப்பகுதி காரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இப்பகுதியில் வசித்த இடையன் ஒருவன் பசுக்கள் மேய்த்து, வந்தான். அதில் ஒரு பசு மட்டும் தொடர்ந்து பால் சுரக்காமல் இருக்கவே. அதனை கண்காணித்தான். ஓரிடத்தில் காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது பால் சொரிந்ததைக் கண்டான். அப்புதரை அவன் வெட்டியபோது, ரத்தம் பீறிட்டது. தகவல் தெரிந்த மக்கள் இங்கு வந்தபோது அசரீரி தோன்றி, சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிருந்ததை உணர்த்தியது. அதன்பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : மாசியில் பிரம்மோற்ஸவம், ராமானுஜர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி. நவராத்திரி.* *சிறப்பம்சம் : மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது.* *இருப்பிடம் : கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 30 கி.மீ. தூரத்தில் காரமடை உள்ளது. பஸ் ஸ்டாப்பில் இருந்து கோயிலுக்கு நடந்தே செல்லலாம்.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : காரமடை மேட்டுப்பாளையம்.* *அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்.* *தங்கும் வசதி : கோயம்புத்தூர்.*
saravanan.
626 views
23 hours ago
#aalayam arivom. ஸ்ரீராமர் கோயில்,* *மூலவர் : ராமர்.* *உற்சவர் : ராமர்.* *அம்மன்/தாயார் : வீரமாட்சி அம்மன்.* *தீர்த்தம் : கிணறு.* *புராண பெயர் : உடையாம்பாளையம்.* *ஊர் : உடையாம்பாளையம்.* *மாவட்டம் : கோயம்புத்தூர் 641028.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை: 6.30 மணி முதல் 8 மணி வரை மாலை 6 மணி முதல் 3 மணி வரை.* *+91 97881 43191.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!* *தல சிறப்பு : உடையாம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட முதல் ராமர் கோயில் என்ற சிறப்பு பெற்றது. இப்பகுதியில் உள்ள மற்ற கோயில்களில் விழா துவங்குவதற்கு முன் இங்கிருந்துதான் உத்தரவு கேட்டு விழாவை துவங்குகின்றனர்.* *பொது தகவல் : மூலவராக ஸ்ரீ ராமர்-லட்சுமணன்-சீதா பிராட்டியார் அருள்பாலிக்கின்றனர். தும்பிக்கை ஆழ்வார். ராமானுஜர், வீரமாட்சி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாவிக்கின்றனர். ராமபிரான் முன்பு அஞ்சநேயர் அருள்புரிகிறார்.* *பிரார்த்தனை : தொழில் வளர்ச்சி, திருமண தடை குழந்தை பாக்கியம். உடல் நலன் உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.* *நேர்த்திக்கடன் : அங்கவஸ்திரம், புடவை சாத்துதல், பிரசாதம் வழங்குதல், மாலை சாத்துதல், உழவார பணி மேற்கொள்ளுதல் போன்றவை மூலம் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.* *தல வரலாறு : நாயக்கர் ஆட்சி காலத்தில் சேர நாடு (இன்றைய கேரளம்) நோக்கி படை எடுத்து சென்ற போது தென் மாவட்டத்திலிருந்து அமைத்து வரப்பட்டு, நொய்யல் ஆற்றங்கரையில் வெள்ளலுார் பகுதியில் குடியமர்த்தப்பட்ட தேவர் சமுதாய மக்கள் இவர்கள் இவர்கள் போர் வீரர்கள் மற்றும் அரசவை உறுப்பினர்களாக பணிபுரிந்துள்ளனர். ஆற்றங்கரை வட்டிய பகுதியில் வெத்திலை வியாபாரம் செய்ததால் இவர்கள் வெத்தலை கொடி தேவர் என அழைக்கப்பட்டனர். வெள்லுாரிலிருந்து தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்த இவர்கள் உடையாம்பாளையம் பகுதியில் குடியேறிய அங்கு கட்டப்பட்ட கோயில் இது பொதுவாகவே தேவர் சமூதாய மக்கள் என்றால் வீரமும், வேகமும் கொண்டவர்கள் என்ற சொல்லுக்கு நேர்மறையானவர்கள். அதாவது, சாப்பாட்டில் கூட அசைவம் இல்லை. சைவம் மட்டும்தான் ராம பிரானை தங்கள் முன்னோர்கள் வழிபட்டதால், அதை தொடர்ந்து இவர்களும் வழிபட்டு வருகின்றனர். சாந்த குணமுடை இவர்கள் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் ஒட்டு கட்டிடத்தில் அமைத்த கோயில்தான் இன்று உப சன்னதிகளாக தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், அஞ்சநேயர், வீரமாட்சி அமைக்கப்பட்டு, 2006ம் ஆண்டு பெரிய கோயிலாக இப்பகுதியில் உருவெடுத்துள்ளது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : புணர்பூச நட்சத்திரத்தில் ராமருக்கு அபிேஷகம், ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தில் அபிேஷகம், ராமனுஜருக்கு திருவாதிரை நட்தரத்தில் அபிேஷகம், ராம நவமி விழா வார சனிக்கிழமைகள், புரட்டாசி மாத சனிக்கிழமைகள், ஏகாதேசி, அம்மனுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகள். அம்மாவாசை, பொளர்ணமி, விநாயகருக்கு பிரதோசம், சதுர்த்தி உள்பட பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.* *இருப்பிடம் : சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து உடையாம்பாளையத்திற்கு குறிபிட்ட நேரத்தில் பஸ் வசதி உண்டு. திருச்சி ரோட்டிலிருந்து சவுரிபாளையம் மார்க்கமாக மினி பஸ், ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கலாம். அவிநாசி ரோடு நவ இந்தியா பிரிவிலிருந்தும் இதே போல பயணிக்கலாம்.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : கோவை* *அருகிலுள்ள விமான நிலையம் : கோவை* *தங்கும் வசதி : கோயம்புத்தூர்.*
saravanan.
605 views
3 days ago
#aalayam arivom. கல்யாணவரதராஜர் திருக்கோயில்,* *மூலவர் : கல்யாணவரதராஜர்.* *அம்மன்/தாயார் : வேதவல்லி.* *தல விருட்சம் : வில்வம்.* *தீர்த்தம் : அமராவதி தீர்த்தம்.* *ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்.* *புராண பெயர் : சங்கரராம நல்லூர்.* *ஊர் : கொழுமம் -642204.* *மாவட்டம் : கோயம்புத்தூர்.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.* *+91-4252-278644, 93451-96814.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!* *தல சிறப்பு : இத்தலத்தில் தாயாருக்கு வில்வத்தால் பூஜை செய்யப்படுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.* *பொது தகவல் : கோயில் வளாகத்திற்கு வெளியே கொடிமரம் உள்ளது. பெரியாழ்வார். விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகியோர் முன்மண்டபத்தில் உள்ளனர். மூலவரின் விமானம் ஏகதளம் எனப்படுகிறது.* *பிரார்த்தனை : நின்ற கோலத்தில் உள்ள கல்யாண வரதராஜரை வணங்கினால் திருமணத்தடைகள் நீங்கி, நல்ல இல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை சனி தோஷம் நீங்கவும், புத்திரப்பேறு கிடைக்கவும் வேண்டலாம்.* *நேர்த்திக்கடன் : சுவாமிக்கும் தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்கிறார்கள்.* *தலபெருமை : அமராவதி நதியின் தென்கரையில் சுற்றிலும் பசுமையுடன் அமைந்துள்ள இத்தலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜர் திருமணக்கோலத்திலும், அவருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் தாயாரும் அருளுகின்றனர். முன் புறம் கருடாழ்வார் இருக்கிறார். சுவாமியின் பாதமும் உள்ளது.* *வீர ஆஞ்சநேயர் : கோயில் முகப்பில் உள்ள மண்டபத்தின் தூணில் இருக்கும் வீரஆஞ்சநேயர், வாயுமூலையை பார்த்தபடி வரதராஜரை நோக்கி உள்ளார். இதன்மூலம் தன் தந்தைக்கும், நாராயணனுக்கும் ஒரே நேரத்தில் மரியாதை தருவதை இங்கு காணமுடிகிறது. இவரது திருவுருவத்திற்கு மேலே சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. வியாச முனிவர். இவரை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றுள்ளார்.* *தல வரலாறு : இப்பகுதியை சோழமன்னன் ஒருவன் ஆட்சி செய்தபோது, நாட்டில் மழை வளம் பொய்த்து, நீர்நிலைகள் வற்றியது. இதனால், மக்கள் பஞ்சத்தில் வாடினர். நாட்டில் குறைவிலாது மழை பெய்து, மக்கள் வாழ்வில் சிறக்க அருளும்படி மன்னர், மகாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொண்டார் அவருக்கு காட்சிதந்த விஷ்ணு, மழைவளம் அருளினார். நாடு செழித்தது. மக்களுக்கு அருளிய மகாவிஷ்ணுவிற்கு மன்னர் இவ்விடத்தில் கோயில் கட்டினார்.* *வில்வ இலை பூஜை : இத்தலத்திற்கு அருகில் சிவாலயம் ஒன்று உள்ளது.சைவம், வைணவத்தை இணைக்கும் விதமாக இவ்விரு ஆலயங்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் இவ்வூர் முன்பு சிவனின் திருப்பெயரான "சங்கரன்', பெருமாளின் திருநாமமான 'ராமன்' என்ற பெயர்களை இணைத்து "சங்கரராமநல்லூர்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சைவ, வைணவ இணைப்புத்தலமென்பதால் சுவாமிக்கு வலப்புறம் அமர்ந்த கோலத்தில் உள்ள வேதவல்லி தாயாருக்கு வில்வஇலைகளைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகிறது.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : சித்திரைப்பிறப்பு சித்ராபவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழியில் பிரம்மோற்ஸவம்.* *சிறப்பம்சம் : இத்தலத்தில் தாயாருக்கு வில்வத்தால் பூஜை செய்யப்படுகிறது.* *இருப்பிடம் : கோவையிலிருந்து 87 கி.மீ பழநியிலிருந்து 20 கி மீ. உடுமலையிலிருந்து 18 கி.மீ தூரத்திலுள்ள இவ்வூருக்கு உடுமலைப் பேட்டை, பழநியிலிருந்து பஸ்கள் செல்கின்றன.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : உடுமலைப்பேட்டை.* *அருகிலுள்ள விமான நிலையம் : கோவை.* *தங்கும் வசதி : கோயம்புத்தூர்.*
saravanan.
2.6K views
5 days ago
#aalayam arivom. வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்,* *மூலவர் : வெங்கடேசப் பெருமாள்.* *அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி.* *தீர்த்தம் : புஷ்கரணி.* *ஆகமம்/பூஜை : பாஞ்சாத்தர ஆகம முறைப்படி 2 கால பூஜைகள்.* *ஊர் : பரமேஸ்வரன் பாளையம்.* *தொண்டாமுத்தூர்,* *மாவட்டம் : கோயம்புத்தூர்.* *மாநிலம் : தமிழ்நாடு.* *காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!* *தல சிறப்பு : ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்திலும் அக்டோபர் மாத இரண்டாவது வாரத்திலும் காலையில் சூரிய ஒளிக்கதிர் கருவறையில் எழுந்தருளி இருக்கும் மூலவர் மீது விழும் அற்புத காட்சி- சூரிய பகவானே தன் ஒளிக்கதிர்களால் கொங்கு திருப்பதி பெருமாளைத் தொழுவதாக தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. இக்கோயிலை உருவாக்கிய சிற்பிகள் வாணியல் சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்ததை உறுதி செய்கின்றது.* *பொது தகவல் : கருவறை வெளிச் சுவற்றில் பல்வேறு கால கட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுக்கள், மீன் சின்னங்கள் யாளி, மற்றும் பெரிய மீன் ஒன்று பாதி யானையை விழுங்கும் காட்சி என புடைப்புச் சிற்பங்களாக அழகுற வடிக்கப்பட்டுள்ளன.* *அர்த்த மண்டபத்துக்கு முன் புதியதாக அமைக்கப்பட்டுள்ள முன் மண்டபம் உள்ளது. அர்த்த மண்டப வாயிலில் ஜெய விஜயன் கம்பீரமாக காவல் புரிகின்றனர். தெற்குப் பகுதியில் ராமனுஜர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் ஒன்றாக சேவை சாதிக்கும் சன்னிதி உள்ளது. வடக்குப்பகுதியில் நில வறை உள்ளது. அந்நியர் படையெடுப்பின் போது இறைத் திருமேனிகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட அறை இது மகா மண்டபத்தின் வெளியே கருட மண்டபத்தில் கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில், அற்புத கலையம்சத்துடன் பெருமாளை நோக்கி கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். கருட மண்டபத்தை அடுத்து புதியதாக தாமிர தகடுகள் வேயப்பட்ட நுணுக்கமான கலையம்சத்துடன் வடிக்கப்பட்ட கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது.* *கோயிலின் வடகிழக்குப் பகுதிகள் ஆஞ்சநேயருக்கென விமானத்துடன் கூடிய தனி சன்னதி உள்ளது. முன்புறம் விலாசமான மண்டபம் எழிலுடன் காட்சியளிக்கிறது. கருவறையில் அஞ்சநேயர் நின்ற கோலத்தில் இனகரம் குவித்து சேவை சாதிக்கின்றார் வெளிச் சுற்று மதிலின் வடக்குப் பக்கம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளைக் கொண்ட சொர்க்க வாசல் அமைந்துள்ளது. மண்டபத்தின் தொன்மை குன்றாமல் சீரமைக்கப்பட்டுள்ளது சிறப்பு இம்மண்டபத்தில் ஆமையும், நாகமும் புடைப்புச் சிற்பங்களாக வடித்திருப்பதைக் காணலாம். ஆதியில் ராஜகோபுரத்துடன் இருந்த நுழைவு வாயில் சிதைந்து விட்ட காரணத்தால் தற்போது ஒரு சிறிய முகப்பு மண்டபத்துடன் நிறுவியுள்ளனர். கோயிலுக்கு வெளியே சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருந்த புஷ்கரணி தற்போது சிதைந்து முற்றிலுமாக அழிந்து விட்டது.* *பிரார்த்தனை : கிரக தோஷங்களினால் ஏற்படும் திருமணத்தடை குழந்தையின்மை, புத்திரதோஷம், கடன் தொல்லைகள், மனநலக் குறைபாடு, உடல்நலக் குறைபாடு மற்றும் குடும்ப ஒற்றுமைக்கு சிறந்த பரிகார தலமாகும்.* *நேர்த்திக்கடன் : சனிக்கிழமைகளில் நெய்விளக்கேற்றி பெருமாளை சேவித்து வேண்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கின்றன.* *தலபெருமை : ஸ்ரீரங்கம் கோயிலைப் போலவே தென்கலை சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. மூர்த்தி தலம் தீர்த்தப் பெருமைகளைக் கொண்டது. இத்தலம் ஒரு ஒப்பற்ற பரிகாரத்தலமாக விளங்குகின்றது. ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் அத்தகைய தோஷத்திற்கு தன்னிகரற்ற தலமாகும்.* *கோயிலில் நுழைந்தவுடன் புராதனமான இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை நன்கு உணர முடிகிறது. சிதைந்த நிலையில் இருந்த போது கூட திவ்யசக்தியில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை. காரணம் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகா சக்தி வாய்ந்த எந்திரங்கள் தாம். வெங்கடேசப் பெருமானின் திவ்ய பார்வை நம்மீது பட்டால், எத்தகைய துன்பத்திலிருந்தும் தோஷங்களிலிருந்தும் விடுபட்டு வளமோடு வாழலாம் என்பது திண்ணம் திருவடிகளைக் காட்டிடும் பாங்கு என பெருமாளைக் காண கண்கோடி வேண்டும். மேலும் பெருமாள் பூமியை நோக்கும் பார்வை உடையவராக இருப்பது பெருஞ் சிறப்பு. பூமி சம்பந்தமாகத் தொழில் செய்வோர் இவரைச் சேவித்தால் மென்மேலும் வளர்ச்சியடைய உறுதுணையாக விளங்குகிறார்.* *தல வரலாறு : பண்டைய காலத்தில் கொங்கு நாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஆறை நாடும் ஒன்று தற்போதுள்ள அவினாசி மற்றும் கோவை பகுதிகள் ஆறை நாட்டில் அடங்கும். கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகே, காஞ்சி மாநதி எனும் நொய்யல் ஆற்றின் வடகரையில் தொண்டாமுத்தூர் உள்ளது. அவ்வூரின் அருகே உள்ள பரமேஸ்வரன் பாளையத்தில் மிக புராதனமான வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.* *மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில் பெருமாள் முடியில் பெருமாள் கோயிலும் அடிவாரத்தில் இக்கோயிலும் அமைந்துள்ளது. இத்தலம் 1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழ் பெற்று விளங்கியதை கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறியப்படுகின்றது. கி.பி. 800 க்கு பின் கங்க மன்னர்கள் சோழர்கள் வென்று கொங்கு நாட்டைக் கைப் பற்றிய போது இக்கோயிலையும் சோழ மண்டலத்துடன் இணைத்துக் கொண்டனர். கி.பி. 1004 முதல் 1045 வரை சூரிய சந்திர கிரணங்களால் ஏற்படும் தோஷ நிவர்த்திக்காக இத்தலம் பிரசித்தி பெற்றிருந்ததை கலிமூர்க்க விக்ரமன் -1 எனும் மன்னன் காலத்து கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 1265 முதல் 1285 வரை கொங்கு நாட்டை ஆண்ட பிரசித்தி பெற்ற மன்னன் வீரபாண்டியன் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு திருப்பணியும் சிறப்பாக நடைபெற்றன.* *பின்னர் 1350 வரை கேரள நாட்டின் சிற்றரசர்களான வீர நாராயணன், கோகண்டன் ரவி, வீரகேரளன் ஆகியோர் மேலும் திருப்பணிகள் செய்த விபரம் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. விஜய நகரத்தை ஆண்ட விஸ்வநாத நாயக்க மன்னரது மனைவியின் ஆசைப்படி கோவிலைச் சீரமைத்து தங்கத்தினாலும், வெள்ளியினாலும் கலசங்களும் கவசங்களும் பதித்து, கொங்கு நாட்டிலேயே இந்தக் கோயிலுக்கு இணையான கோயில் ஏதும் இல்லை என எண்ணும்படி செய்து அழியாப் புகழ் பெற்றான். இத் திருக்கோயிலின் மதிற்சுவர் விஜய நகர பாணியில் கோட்டை மதிற்சுவர் போல் கட்டி இருந்தனர். மதிற்சுவற்றில் 108 திவ்ய தேசங்களை குறிக்கும் வகையில் 108 விளக்கு மாடங்களை அமைத்திருந்தனர். இக் கோயிலின் பிரமாண்டத்தை அதன் மதிற்சுவற்றையும், திருக்குளத்தின் பரப்பரளவையும், கோயிலின் முன் உள்ள விஸ்தாரமான நிலப்பரப்பையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம். வைணவ கோயில்கள் என்றாலே புஷ்கரணி, ராஜகோபுரம், விமானம், கருட மண்டபம், கோட்டை போன்ற அம்சம் மற்றும் விலாசமான பிரகாரம் இருக்க வேண்டும் என ஆகம சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்றன.* *கொங்கு சோழர்கள் கொங்கு பாண்டியர்கள், கொங்கு சேரர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் இந்த அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஒப்பற்ற கோயில் இது. இவ்வாறு சிறப்புடன் விளங்கிய இத் தலம் இயற்கை சீற்றங்களாலும், அந்நிய படையெடுப்புக்களாலும் சிதைந்து நலிவுற்றது. கி.பி. 1300-1400 வருட கால கட்டத்தில் முகமதியர்களின் படையெடுப்பால் மூன்றுமுறை இக் கோயில் சூறையாடப்பட்டது. அதன்பின் ஹொய்சாள மன்னன் வீரவல்லாளன் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. அன்னியர்களால் சீர்குலைந்திருந்த இத்தலத்தை பார்வையிட்ட மைசூரை ஆண்ட நவாப் ஹைகர் ஆன இந்து-இஸ்லாமியர்களின் சகோரத்துவத்தை பேணிக்காக்கும் வகையில் இக்கோயிலுக்கு 32 ஏக்கர் பூமியை கொடையாக வழங்கியுள்ளார். கோவிலைப் பராமரிக்க அர்ச்சகர் ஒருவரை நியமித்து, அவர் வாழ்க்கை நடத்தவும் கோவிலைப் பராமரிக்கவும் நிலத்தின் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார். இத்தனை சிறப்புக்களோடு விளங்கிய இத்தலம் நாளடைவில் சிதிலமடைந்து பல ஆண்டுகள் கவனிப்பாரற்று கிடந்தது. யாரும் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.* *இந்நிலையில் குமுதம் ஜோதிடம் ஆசிரியர் (ஏ.எம்.ஆர்) மற்றும் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களுக்கு கோயிலைப் பற்றிய நிலை தெரிவிக்கப்பட்டது. இருவரும் நேரில் வந்து பார்வையிட்டு, திருப்பணிகளைத் தொடங்க பெருமுயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக 27.12 2012 அன்று திருப்பணி தொடங்கப்பட்டது. ஏராளமான அன்பர்கள் தாமாகவே முன் வந்து பணமாகவும், செங்கல், சிமெண்ட் மற்றும் மணல் போன்ற பொருட்களை வழங்கி உதவியதன் பலனாக கோயில் அற்புத வடிவில் உருப்பெற்றது. திருப்பணி செய்யும்போது கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தை உள்ள நிலையிலேயே மாற்றாமல் சீர்செய்துள்ளனர். கோபுரம் (விமானம்) அதிகமாக சிதைந்து இருந்ததால் விமானத்தை மட்டும் அகற்றி விட்டு புதியதாக அமைக்கப்பட்டது. கருவறையில் 1200 ஆண்டுகள் புராதனமான அதே வெங்கடேசப் பெருமாள் முகத்தில் புன்னகை தவழ ஸ்ரீதேவி, பூதேவியுடன் சங்கு சக்கரதாரியாக நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.* *தகவல் : வி.பி.ஆலாலசுந்தரம்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : இக்கோயிலில் சித்திரை முதல் நாள், ஆனித்திருமஞ்சனம் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனி மற்றும் அனைத்து சனிக்கிழமைகள், நவராத்திரி, தீபம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பு அலங்கார ஆராதனைகளுடன் நடைபெறுகின்றன. சனிக்கிழமைகளிலும் முக்கிய விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு உண்டு.* *சிறப்பம்சம் : ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்திலும் அக்டோபர் மாத இரண்டாவது வாரத்திலும் காலையில் சூரிய ஒளிக்கதிர் கருவறையில் எழுந்தருளி இருக்கும் மூலவர் மீது விழும் அற்புத காட்சி- சூரிய பகவானே தன் ஒளிக்கதிர்களால் கொங்கு திருப்பதி பெருமாளைத் தொழுவதாக தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. இக்கோயிலை உருவாக்கிய சிற்பிகள் வாணியல் சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்ததை உறுதி செய்கின்றது.* *இருப்பிடம் : கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது. காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து தடம் எண் 21 ஏ. 21 பி, 21 சி, 58, 58 ஏ மூலம் கோயிலை அடையலாம் தூரம்: சுமார் 17 கி.மீ.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்.* *அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்.* *தங்கும் வசதி : கோயம்புத்தூர்.*
saravanan.
599 views
8 days ago
#aalayam arivom. Ganapathy temple* *_ஆசியாவிலேயே பிரம்மாண்டமான விநாயகர் கோவில் எங்குள்ளது தெரியுமா?_* * 🛕🛕🛕பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் விநாயகருக்கு என்று உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஆலயம், அதுவும் ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆலயம் எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கோவிலின் அற்புதங்கள் பற்றி தெரிந்தால், இங்கு நிச்சயம் செல்லாம் இருக்க முடியாது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று விநாயகப் பெருமானை தரிசனம் செய்து, அவரது அருளை பெற்று வாருங்கள். வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சைவ, வைணவ ஆலயங்களில் எதையும் எடுத்துக் கொண்டாலும், முதலில் வழிபடப்படுவது முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் தான். எந்த நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன் "பிள்ளையார் சுழி" போடும் அந்த ஆன்மீக மரபு, காலங்களாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், விநாயகருக்கென தனியே அமைந்த ஆலயங்கள் பல இருந்தாலும், அவற்றில் அரிதான திருக்கோலம், அபூர்வ வரலாறு, பிரம்மாண்ட கட்டிட அமைப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்துக் கொண்ட ஒரு தலம் இருக்கிறது. அது தான் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். தாமிரபரணி கரையில் விநாயகர் ஆலயம் : புனிதமான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம், சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. 80 மீட்டர் நீளம் 40 மீட்டர் அகலம் 5 நிலை ராஜகோபுரம் 3 பிரகாரங்கள் 8 மண்டபங்கள் என்று விரிந்த பரப்பில் அமைந்துள்ளதால், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் ஆலயங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. "மணி" ஒலித்த அதிசய மரபு : இந்த ஊரின் பெயர் "மணிமூர்த்தீஸ்வரம்" என வந்ததற்கும் ஒரு அழகான வரலாறு உள்ளது. ஒருகாலத்தில், நெல்லையப்பர் கோயில் ஆலயத்தில் பூஜை நடக்கும் போது அங்குள்ள பெரிய மணி ஒலிக்கும். அந்த ஓசையை கேட்டவுடன், இங்கும் மணி அடித்து விநாயகரை வழிபடும் மரபு இருந்தது. அந்த "மணி ஒலி வழிபாடு" காரணமாக "மூர்த்தீஸ்வரம்" - "மணிமூர்த்தீஸ்வரம்" என்று பெயர் மாறியது. அந்த நாளிலிருந்து இங்கு உள்ள விநாயகர் "மூர்த்தி விநாயகர்" என்றும் அழைக்கப்படுகிறார். உச்சிஷ்ட கணபதி - அரிய திருக்கோலம் : விநாயகரின் 32 வடிவங்களில் எட்டாவது வடிவம் தான் உச்சிஷ்ட கணபதி. இங்கு அவர் ஒரு மிக அரிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனது தேவியான ஸ்ரீ வல்லபையை இடது தொடையில் அமர வைத்தபடி, 6 கைகள் உடன் கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை ஒரு கையால் தேவியை அணைத்தபடி இந்த திருக்கோலம் இணைவு, செழிப்பு, குடும்ப அமைதி ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது சூரியன் தரிசிக்கும் அற்புதம் : ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1, 2, 3 தேதிகளில் காலை நேரத்தில் சூரிய பகவானின் கதிர்கள் நேராக விநாயகரைத் தொட்டு வழிபடும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. அந்த நேரத்தில் விநாயகர் தங்கம் போல ஜொலிப்பார். இந்த தரிசனம் கிடைத்தால் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் ஒளி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை வேண்டுதல் நிறைவேறும் தலம் : இந்த ஆலயத்தில் வழிபட்டால் புத்திரபேறு கிடைக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை வளரும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்று பக்தர்கள் அனுபவமாக பகிர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 10 நாட்கள் பெரிய திருவிழா நடைபெறும். இந்த காலத்தில் உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால் செல்வம், வளம், வெற்றி அனைத்தும் சேரும் என்று நம்பப்படுகிறது. 🍁🍁🍁
saravanan
551 views
14 days ago
#aalayam arivom. உ ✧───•► 🙏 ஆலயம் அறிவோம் 🙏 திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தில்லைவிளாகம் அருள்மிகு வீரகோதண்டராமர் ஆலயம். மூலவர் : வீரகோதண்டராமர் உற்சவர் : வீர கோதண்டராம ஸ்வாமி அம்மன்/தாயார் : சீதை தல விருட்சம் : தில்லைமரம் தீர்த்தம் : ரமபூஷ்கரனி பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : தில்லைவிளாகம் மாவட்டம் : திருவாரூர் மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: இராம நவமி, சித்திரை அட்சய திருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உள்ளிட்ட திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. தல சிறப்பு: இடதுகை மார்போடு அணைத்து தன் வலக்கையால் வாய் பொத்தி நிற்கும் அனுமனின் (சுமார் 4 அடி உயரம்) சிலை வேறு எங்கும் காணாத சிறப்பு. திறக்கும் நேரம்: காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு வீரகோதண்டராமர் திருக்கோயில்,தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி அருகே,திருவாரூர் மாவட்டம். போன்: +91 80568-56894 பொது தகவல்: சீதைக்கு முன் சற்று இடப்புறமாக ஆஞ்சநேயர் சிலையும் அதற்கு முன்னால் ஆஞ்சநேயருடைய உற்சவ சிலையும் உள்ளன. லட்சுமணனுக்கு சற்று முன்னால் சீதை, ராமர், லட்சுமணர் ஆகியோர்களுக்கான உற்சவர் சிலைகள் இருக்கின்றன. மற்றும் ஒரு மேடையில் செல்வர், சக்கரத்தாழ்வார், கண்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகியோரது திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு சன்னதி, நுழைவு வாயில் கோபுரம், ஆர்.சி.மணிமண்டபம், பலி பீடம், கொடிமரம், மகா மண்டபம், கருடாழ்வார் ராமரை மேற்கு பக்கம் பார்த்த வண்ணமும், இடபக்கம் விக்னேஷ்வரர் சங்கராதியும், வலது பக்கம் பத்மநதி, நாகராஜரும் உள்ளே பிரகார மண்படம், துவார பாலகர்கள் ஜெயவீரன் வலது பக்கமும், விக்னேஷ்வரர் இடது பக்கமும் அமைத்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் பின் பக்கம் ராமர் கண்டெடுக்கப்பட்ட குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாமல் உள்ளது. குளத்தின் அருகில் பெரிய அளவில் ஆலமரம் உள்ளது. இந்திய அளவில் இடம் பெற்ற கோவில் என்பதால் வட நாட்டினர் இந்தியில் வரைபடம் அமைத்து கோவில் இடம் பெற்றதை வட்ட மிட்டு காட்டியுள்ளனர். பிரார்த்தனை: திருமணம் பாக்கியம் கிடைக்க, மன சஞ்சலம் நீங்க, கோர்ட் விவகாரம் தீர, புத்திர பாக்கியம் கிடைக்க, நவகிரக தோஷ பீடைகள் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். நேர்த்திக்கடன்: ஆஞ்ச நேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சாத்தி வழிபாடு செய்தால் காரியம்கை கூடும். புத்திபாக்கியம் வேண்டுபவர்கள் சந்தான கோபாலனை கையில் எடுத்து சென்றால் புத்திபாக்கியம் ஜெயமாகும். தலபெருமை: தில்லைவிளாகத்தில் உள்ள இந்தக் கோயிலின் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. கொடிமரம், கருடாழ்வார் சன்னதியைச் சுற்றிலும் ஒரு பரந்த வெளிச்சுற்று அல்லது பிராகாரம் தென்படும். முன்னால் ஒரு மண்டபம் உள்ளது. அதில் சன்னதிக்குச் செல்லும் வாயிலுக்கு இருபுறமும் அபூர்வமான சிலைகள் பிறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இடப்புறம் சங்க நிதியும் வலப்புறம் பதும நிதியும் காணப்படுகின்றனர். சங்கநிதி கையில் சங்கும் அதேபோன்று பதும நிதியின் கையில் தாமரையும் காட்சியளிக்கின்றன. கருவறையில் கற்சிலைகளே கிடையாது. இடமிருந்து வலமாக சீதை, ஸ்ரீராமர், லக்குவணன் ஆகியோர் விக்கிரகங்கள் பஞ்சலோகத்தால் ஆனவை. சீதைக்கு முன் சற்று இடப்புறமாக ஆஞ்சநேயர் சிலையும் அதற்கு முன்னால் ஆஞ்சநேயருடைய உத்ஸவ சிலையும் உள்ளன. லக்குவணனுக்கு சற்று முன்னால் சீதை, ஸ்ரீராமர், லக்குவனார் ஆகியோர்களுக்கான உத்ஸவர் சிலைகள் இருக்கின்றன. மற்றும் ஒரு மேடையில் செல்வர், சக்கரத்தாழ்வார், கண்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகியோரது திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ராமர் சிலை சுமார் 4 அடி உயரம் இருக்கும். இவ்வளவு பெரிய பஞ்சலோக சிலையைக் காண்பதரிது. வலக் கையில் அம்பும் இடக்கையில் வில்லுமாக வெகு கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் ஸ்ரீராமபிரான். ஆகவே வீரகோதண்டராம சுவாமி என்ற திருப்பெயரைப் பெற்றிருக்கிறார். ராவணனை வென்று சீதையை மீட்ட பின் அயோத்திக்குத் திரும்பும்போது இங்கே ஸ்ரீராமபிரான் சற்று அமர்ந்ததாகப் புராண வழிச்செய்தி உண்டு. சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையி டுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார். கால்சிறப்பு:வலது காலில் பச்சை நரம்பும், இடது காலில் தேமல் மச்சம் மற்றும் வடுக்களும், தாயார் கட்டிய ரக்ஷாபந்தனமும் உள்ளது. தல வரலாறு: கி.பி. 1862-ஆம் ஆண்டில் வேலுத்தேவர் என்பவர் ஸ்ரீராமர் மடம் ஒன்று கட்டவேண்டுமென்று கனவில் தோன்றியதைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் குளம் வெட்டும்போது சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் பல தெரிந்தன. இன்னும் ஆழமாக தோண்டியதும் செங்கல் கட்டடம் ஒன்று அங்கே புதைந்து இருக்கிறது என்பது தெரியவந்தது. அதே ஆண்டு கார்த்திகை மாதம் 12-ஆம் நாள் புதன்கிழமை அன்று பதினான்கு அழகான பஞ்சலோக விக்கிரகங்கள் அவ்விடத்தில் கிடைத்தன. அப்படிக் கிடைத்தவை சுமார் ஐந்தடி, நாலரை அடி, நாலடி உயரமுள்ள ஸ்ரீராமர், இலக்குவனார், சீதாபிராட்டியார், அனுமான் மற்றும் (அதே போல் இரண்டரை அடி, இரண்டேகால் அடி உயரமுள்ள ஸ்ரீராமர், இளையபெருமாள், சீதாபிராட்டியார், அனுமான் 1913-ல் புதிதாக உத்ஸவத்துக்காகச் செய்து வைக்கப்பட்டது) செல்வர், சக்கரத்தாழ்வார், ருக்மணி - சத்யபாமாவுடன் கூடிய கண்ணன், சந்தானகிருஷ்ணன் ஆகியவை ஆகும். உடனே வேலுத்தேவர் அங்கு ஒரு குடிசை போட்டு உயரமான ஸ்ரீராமர், லட்சுமணன், சீதை, அனுமான் ஆகியோரை மூல விக்கிரகங்களாகவும், உயரம் குறைந்த இவர்களது திருமேனிகளுடன் இதர உலோகத் திருமேனிகளை உத்ஸவ மூர்த்திகளாகவும் வைத்து வழிபட தொடங்கினார். 14 ஆண்டுகள் வனவாசம் பூர்த்தியாகி அயோத்திக்குத் திரும்பும்போது பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் ஸ்ரீராமர் தங்கியிருந்ததாக வால்மீகி ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆக இந்த தில்லைவிளாகம் பரத்வாஜ முனிவர் வாழ்ந்த இடமாக நாம் அறியமுடிகிறது. இங்கிருந்து பரதனுக்கு என்ன செய்தி தெரிவிக்க வேண்டுமென்று ஆஞ்சநேயர் கைகட்டி வாய் பொத்தி குருவிடம் சிஷ்யன் இருப்பதைப் போல பவ்யமாக நின்று அனுமன் காட்சி அளிப்பது இந்த தில்லைவிளாகத்தில் மட்டுமே காண முடியும். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இடதுகை மார்போடு அணைத்து தன் வலக்கையால் வாய் பொத்தி நிற்கும் அனுமனின் (சுமார் 4 அடி உயரம்) சிலை வேறு எங்கும் காணாத சிறப்பு. அமைவிடம்: மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் பாதையில் உள்ள தில்லைவிளாகம் புகைவண்டி நிலையத்தில் இறங்கி சுமார் 2 கி.மீ. தொலைவு தெற்கே சென்றால் இந்தத் திருக்கோயிலை அடையலாம். அருகிலுள்ள ரயில் நிலையம்: திருவாரூர் அருகிலுள்ள விமான நிலையம்: சென்னை தங்கும் வசதி: திருவாரூர் 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🙏 ஶ்ரீ ராம ஜெயம் 🌷
saravanan
547 views
16 days ago
#aalayam arivom. உ ✧───•► 🙏 ஆலயம் அறிவோம் 🙏 திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு பண்டிதக்குடி அருள்மிகு வாலிபுரீஸ்வரர் ஆலயம். மூலவர் : வாலிபுரீஸ்வரர் அம்மன்/தாயார் : வாலாம்பிகை பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் : பண்டிதக்குடி மாவட்டம் : திருவாரூர் மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரவழிபாடு முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன. தல சிறப்பு: இங்கு வாலிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் மணி 8 வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு வாலிபுரீஸ்வரர் திருக்கோயில்,வாலிக்கோட்டை, பண்டிதக்குடி, திருவாரூர். பொது தகவல்: விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்கு தரிசனம் தருகின்றனர். பிரார்த்தனை: பக்தர்கள் இங்குள்ள வாலாம்பிகையை வந்து வேண்டிச் சென்றால், திருமண தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்! நேர்த்திக்கடன்: வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் வாலாம்பிகை மற்றும் சமேத வாலிபுரீஸ்வரருக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. தலபெருமை: வாலாம்பிகை அவளும் கருணையே உருவானவள். இங்கு வந்து வேண்டிச் சென்றால், திருமண தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்! விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்கு தரிசனம் தருகின்றனர். குறிப்பாக, வாலிக்கும் இங்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. வாலி மற்றும் வாலாம்பிகை சமேத வாலிபுரீஸ்வரருக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால்.. சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. தல வரலாறு: வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், சிறந்த சிவபக்தனுமாகிய ராவணனைத் தன் வாலால் கட்டிப்போட்ட வல்லமை கொண்டவன், வாலி. இந்தச் செயலால்தான், அவனுக்கு வாலி எனும் பெயர் அமைந்ததாகவும் சொல்வார்கள். வாலியும் சிவ பக்தர்தான்! சதாசர்வ காலமும் சிவநாமத்தையே உச்சரித்து வந்தான் வாலி. பல தலங்களுக்குச் சென்று, இதுவரை நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைப் பெருக்கித் தருவாயாக! என்று மனமுருக வேண்டினான். எதிரிகள் என்று எவரும் எனக்குத் தேவையில்லை. எதிரிகளுடன் சண்டை போடுகிற மனநிலையும் எனக்கில்லை. ஒருவேளை, எனக்கு எதிரிகள் இருப்பதுதான் இந்தப் பிறவியின் நோக்கம் என்றால், என்னுடன் நேருக்கு நேர் மோதும் எனது எதிரிகளின் பலத்தில் பாதி எனக்கு வந்துவிடும்படி அருள்புரியுங்கள் ஸ்வாமி! என தலங்கள் தலங்களாகச் சென்று, தவம் புரிந்து வேண்டிக்கொண்டான். தீவிர சிவபக்தனான வாலி, தினமும் லிங்கத் திருமேனியை நீராட்டுவதற்காக, அந்த வனத்தில் அழகிய திருக்குளம் ஒன்றை அமைத்தான். தினமும் அந்த நீரை எடுத்து வந்து, சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தான். வில்வம் பறித்து அர்ச்சித்து வழிபட்டான். பிறகு, ஸ்வாமிக்கு எதிரே அமர்ந்து கொண்டு, கண்கள் மூடி, கடும் தவத்தில் மூழ்கினான். பக்தனின் தவத்துக்கு மகிழாமலா இருப்பார், சிவனார்?! வாலியின் பக்தியில் குளிர்ந்துபோன சிவபெருமான், திருக்காட்சி தந்தருளினார். அவன் கேட்ட வரத்தையும் தந்து வாழ்த்தினார். வாலி வழிபட்ட தலங்கள், அவனுக்கு சிவபெருமான் தரிசனம் தந்த தலங்கள் எனப் பல உண்டு. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகிலும் வாலி வழிபட்ட தலம் உண்டு என்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு வாலிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. அமைவிடம்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பண்டிதக்குடி. இங்கிருந்து திருராமேஸ்வரம் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வா. கோட்டை. பண்டிதக்குடி வரை அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. வா.கோட்டைக்கு ஆட்டோ வசதி உண்டு. அருகிலுள்ள ரயில் நிலையம்: மன்னார்குடி அருகிலுள்ள விமான நிலையம்: திருச்சி, சென்னை தங்கும் வசதி: திருவாரூர் 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🔥சிவ சிவ 🌙 🙏 ஓம் சிவய நம ஓம் 🌷
saravanan
3.3K views
18 days ago
#aalayam arivom. உ ✧───•► 🙏 ஆலயம் அறிவோம் 🙏 திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு அச்சுதமங்கலம் அருள்மிகு தர்மேஸ்வரர் ஆலயம். மூலவர்:தர்மேஸ்வரர் அம்மன்/தாயார்:தர்மபத்தினி பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்:அச்சுதமங்கலம் மாவட்டம்:திருவாரூர் மாநிலம்:தமிழ்நாடு திருவிழா: மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை தல சிறப்பு: பொதுவாக சிவனுக்கு இடப்புறம் உள்ள ஆவுடையார் இங்கு வலது புறம் இருப்பது சிறப்பு. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில்அச்சுதமங்கலம், திருவாரூர். பிரார்த்தனை: பக்தர்கள் தாங்கள் இழந்தவற்றை மீண்டும் பெற இங்குள்ள மூலவரை வணங்கிச் செல்கின்றனர். நேர்த்திக்கடன்: சுவாமிக்கும் அம்மனுக்கும் வில்வ இலையால் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். தலபெருமை: அர்ஜுனன் அம்பு விட்டு உண்டாக்கிய திருக்குளம் இன்றைக்கும் உள்ளது. இந்தக் குளம் பற்றி அறிந்த பக்தர்கள் இங்கு ஒரு சிவாலயத்தை எழுப்பினர். இங்கு வந்து வணங்கினால் தாங்கள் இழந்த அனைத்தையும் மறுபடியும் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அர்ஜுனன் உருவாக்கிய குளம் அமைந்துள்ள தலம், அர்ஜுனன்மங்கலம் என்றே வழங்கப்பட்டு, தற்போது அச்சுதமங்கலம் என்றாகி விட்டது. மூத்தவரான தருமர் தலைமையில் பாண்டவ சகோதரர்கள் வழிபட்ட சிவனாருக்கு, தர்மேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்தது. அம்பாளின் திருநாமம் தர்மபத்தினி. தல வரலாறு: அரச வாழ்க்கையை விடுத்து, அனைத்தையும் இழந்து சகோதரர்கள் மற்றும் மனைவியுடன் நாட்டை விட்டு காட்டில் தஞ்சம் புகுந்தார் தர்மர். எதை இழந்தால் என்ன.. மனதுள் நம்பிக்கையையும் இறைபக்தியையும் மட்டும் கொண்டு தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு செல்லும் வழிகளில் உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை தரிசித்துக் கொண்டே சென்றனர். அவ்வாறே நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். காவிரி பாயும் தேசத்துக்கு வந்தவர்கள், பல தலங்களில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார்கள். அதன்பின் ஓரிடத்திற்கு வந்து அந்த சூழலைக் கண்டு தியானம் செய்ய ஏற்ற இடம் என்றெண்ணினர். ஆனால் இங்கு நீராடுவதற்கு குளமோ, ஆறோ இல்லையே. என்ன செய்வது என வருந்தினாள் திரௌபதி. உடனே அர்ஜுனன் தனது அம்பறாத்தூணியில் இருந்து ஓர் அம்பை எடுத்தான். கண்கள் மூடி, ஒரு கணம் சிவனாரையும், கிருஷ்ணரையும் மனதாரப் பிரார்த்தித்தான். பிறகு பூமியை நோக்கி சீறிப்பாய்ந்து பூமியில் குத்திட்டு நின்றது. அதிலிருந்து சிறிது சிறிதாக நீர் கசிய ஆரம்பித்தது. ஒரு குளத்தின் அளவுக்கு அங்கே தண்ணீர் நிரம்பியது. அனைவரும் குளத்தில் இறங்கி நீராடி சிவலிங்கத் திருமேனிக்கு வில்வங்கள் பறித்து பூஜை செய்தார்கள். சிறிது காலத்திற்கு பிறகு கௌரவர்களுடன் போரிட்டு வென்று, இழந்த செல்வத்தையும் கைப்பற்றினார்கள். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக சிவனுக்கு இடப்புறம் உள்ள ஆவுடையார் இங்கு வலது புறம் இருப்பது சிறப்பு. அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது அச்சுதமங்கலம். திருவாரூர்-திருவீழிமிழலை செல்லும் வழியில், திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். ஸ்ரீவாஞ்சியத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலும், திருவீழிமிழலை 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம்: திருவாரூர் அருகிலுள்ள விமான நிலையம்: திருச்சி தங்கும் வசதி: திருவாரூர் 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🔥சிவ சிவ 🌙 🙏 ஓம் சிவய நம ஓம் 🌷
saravanan
587 views
19 days ago
உ ✧───•► 🙏 ஆலயம் அறிவோம் 🙏 திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு திருவாரூர் அருள்மிகு ராஜதுர்க்கை ஆலயம். மூலவர்:ராஜதுர்க்கை பழமை:500 வருடங்களுக்குள் ஊர்:திருவாரூர் மாவட்டம்:திருவாரூர் மாநிலம்:தமிழ்நாடு திருவிழா: ஆடிவெள்ளி தல சிறப்பு: இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மணி 12.30 வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு ராஜதுர்க்கை திருக்கோயில் திருமஞ்சன வீதிதிருவாரூர் மாவட்டம். பொது தகவல்: பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, மகம் நட்சத்திரக்காரர்கள்; ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அனைவருக்கும் யோகாதிபதியாக விளங்குகிறாள் இந்த ராஜ துர்க்கை. பிரார்த்தனை: அனைத்து யோகங்களும் விரைவிலேயே கிடைக்க, தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடை நீங்க இங்குள்ள துர்கையை வழிபட்டுச் செல்கின்றனர். நேர்த்திக்கடன்: இந்த நட்சத்திர, ராசிகளில் பிறந்தவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து, சிவப்பு மலரினால் மாலை அணிவித்து புடவை சாற்றி, பசு வெண்ணெயால் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். தலபெருமை: பொதுவாக ஆலயங்களில், துர்க்கையை வடக்கு பிராகார கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஆனால் இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருளாட்சி புரிகிறாள். சங்கு, சக்கரம், கத்தி, சூலம் ஆகியவற்றை நான்கு கரங்களில் ஏந்தி, தலையில் சந்திர கலையை தரித்தவண்ணம் சாந்த சொரூபிணியாகக் காட்சி தரும் ராஜதுர்க்கையின் ஆற்றல் அளவிடற்கரியது. ராமபிரான் இலங்கைக்கு ராவணனை வதம் செய்யப் புறப்படும் முன் இவ்வன்னையை பக்தியோடும், பாசத்தோடும் வழிபட்டுச் சென்று அவனை வெற்றி கொண்டதாக மகாகவி காளிதாசர் எழுதிய ரகுவம்ச காவியத்தின் மூலம் அறிய முடிகிறது. தல வரலாறு: சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாகவும்; இச்சை, கிரியை, ஞானம் ஆகிய மூன்று சக்திகள் ஒருங்கே அமையப் பெற்ற சக்தியாகவும்; வேதம் ஆகமம், புராணம் ஆகியவற்றில் வெற்றி என்ற நாமத்திற்கு பொருளுடையவளாகவும் விளங்குபவள் ஜெய துர்க்கா. இப்படி எங்கும் எதிலும் எந்நிலையிலும் வெற்றியைத் தரக்கூடிய ஜெயதுர்க்கா தேவியானவள், ராஜதுர்க்கை என்ற திருநாமத்துடன் இங்கு அருள்பாலிக்கிறாள். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. அமைவிடம்: திருவாரூரில் திருமஞ்சன வீதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம்: திருவாரூர் அருகிலுள்ள விமான நிலையம்: சென்னை, திருச்சி தங்கும் வசதி: திருவாரூர் 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🙏 ஓம் சிவசக்தி ஓம் 🌷 #aalayam arivom.
saravanan
1.7K views
21 days ago
#aalayam arivom. உ ✧───•► 🙏 ஆலயம் அறிவோம் 🙏 திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு வேளுக்குடி அருள்மிகு ருத்ர கோடீஸ்வரர் ஆலயம். மூலவர் : ருத்ரகோடீஸ்வரர் அம்மன்/தாயார் : கோமளாம்பிகை பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் : வேளுக்குடி மாவட்டம் : திருவாரூர் மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: பிரதோஷம், சனிப்பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு: இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்திக்கு அருகில் சனகாதி முனிவர்களுக்கு பதிலாக சாண்டில்ய முனிவர் அமர்ந்திருப்பது தலத்தின் சிறப்பு. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில்வேளுக்குடி, திருவாரூர் மாவட்டம். பொது தகவல்: இங்கு விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்கை ஆகிய அனைவரும் அற்புதத் திருமேனியராக அருள்பாலிக்கின்றனர். வசிஷ்டர், சாண்டில்ய முனிவர், நந்திதேவர், இந்திரன் மற்றும் நவக்கிரகங்கள் வழிபட்டு வரம் பெற்ற புண்ணிய தலம் இது. பிரார்த்தனை: மூலவர் மேற்கு நோக்கிய நிலையில், மயானத்தைப் பார்த்தபடி காட்சி தருவதால், இங்கு வந்து ஐந்து பிரதோஷங்களில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், மனச் சஞ்சலங்கள் நீங்கும்; மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்; தீராத கடனும் தீரும்; குடும்பத்தில் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். நேர்த்திக்கடன்: சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். தலபெருமை: கோயிலையும் அமைத்து, ஊரையும் உருவாக்கிக் கொடுத்த மன்னன், இந்த ஊரில் சதாசர்வ காலமும் வேதகோஷம் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும்; வேள்விகளும் யாகங்களும் அடிக்கடி நடக்கட்டும் எனும் நோக்கத்தில், சோழ தேசத்தின் அந்தணர்கள் சிலருக்கு இந்த ஊரை எழுதிக் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் வழங்கினான். வேதங்களுக்கு யாகங்களுக்கும் பெயர் பெற்று விளங்கிய வேள்விக்குடி, காலப்போக்கில் வேளுக்குடி என மருவியது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான நிலங்களையும், ஆடு - மாடுகளையும் அள்ளித் தந்திருக்கின்றனர், மன்னர் பெருமக்கள். இரண்டாம் குலோத்துங்க சோழன், நெடுங்காலமாகத் தொழு நோயால் தவித்து வந்தான். வேள்விக்குடிக்குச் சென்று, தீர்த்தக் குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்; குணம் பெறுவாய் ! என அசரீரி முழங்க... அதன்படி, இங்கு வந்து, குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்ய... தொழு நோய் நீங்கப் பெற்றான் என்கிறது கல்வெட்டு ஒன்று. தல வரலாறு: தாங்கிக்கொள்ளவே முடியவில்லை வசிஷ்டரால் ! அடடா... எத்தனைப் பெரிய தவறு செய்துவிட்டோம் ! என்று கண்கலங்கினார். ஸ்ரீராமரின் திருமணத்துக்கு மிகக் கவனமாகப் பார்த்துத்தானே முகூர்த்தத் தேதி குறித்துக் கொடுத்தோம். ஆனாலும், இப்படி ஆகிவிட்டதே... ! என்று தவித்து மருகினார். முனிவர் பெருமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, இது உங்களின் தவறல்ல. நீங்கள் சரியாகத்தான் தேதியும் நேரமும் குறித்துக் கொடுத்தீர்கள். ஆனால், எந்நேரமும் தர்ப்பைப் புல்லை வாயில் வைத்திருக்கிற சக்ரவாகப் பறவை, தாங்கள் அருளிய அட்சரத்தைப் பிழையாக உச்சரித்ததால் வந்த குழப்பம் இது. ஆகவே, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள் ? சக்ரவாகப் பறவை செய்த தவற்றுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் ? எனச் சொல்லி ஆறுதல்படுத்தினர். ஆனால் அவரது மனம், சமாதானம் ஆகவே இல்லை. பறவையே செய்திருந்தாலும், என் மீதுதான் தவறு. என்னுடைய தவத்தில்தான் ஏதோ கோளாறு என்று சஞ்சலப்பட்ட வசிஷ்டர், அப்படியே சேத்திராடனம் புறப்பட்டார். வழியெங்கும் வனங்கள்; அழகிய தலங்கள். ஒவ்வொரு தலமாகச் சென்று, அங்கே சில காலம் தங்கியிருந்து, இறைவனை நினைத்து, தவத்தில் ஈடுபட்டார். இப்படியாக வந்த வசிஷ்டர், நெல்லி வனம் சூழ்ந்த பகுதிக்கு வந்ததார். அங்கிருந்து கிளம்ப யத்தனிக்கும்போது, இன்றைக்குச் சனிக்கிழமை. பிரதோஷமும்கூட ! சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம். ஆகவே, இங்கு இந்த வனத்தில் ருத்ர ஜபம் செய்து, பிரதோஷ பூஜை செய்வாயாக என அசரீரி ஒலித்தது. ஆடிப் போனார் வசிஷ்டர். என்ன பாக்கியம்... என்ன பாக்கியம் ! என்று கண்கள் மூடி, சிவனாரைத் தொழுதார். அந்த நெல்லி வனத்தில் திருக்குளம் ஒன்று இருந்தது. அதில் நீராடினார். கரைக்கு வந்தவர், கோடி முறை ருத்ர ஜபம் செய்வது எனத் தீர்மானித்து, ஜபத்தில் இறங்கினார். வேள்வியில் ஈடுபட்டார். சனிக்கிழமையும் பிரதோஷமும் கூடிய வேளையில் மனமுருக சிவனாரைப் பிரார்த்தனை செய்ததன் பலனாக, மனதில் இருந்த சஞ்சலங்கள் யாவும் மறைந்தன. மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் வேள்வியையும், கோடி முறை ருத்ர ஜபத்தையும் சொல்லி நிறைவு செய்த வசிஷ்டருக்கு, அங்கே திருக்காட்சி தந்தருளினார் சிவபெருமான். பின்னாளில், இந்தத் தலத்தைப் பற்றியும், வசிஷ்டர் இங்கே வழிபட்டார் என்பதையும் அறிந்த மன்னன், இங்கே கோயில் எழுப்பினான். கோடி முறை ருத்ர ஜபம் செய்த தலம் என்பதால், இங்கே குடிகொண்டிருக்கிற சிவனாருக்கு ருத்ரகோடீஸ்வரர் என்று திருநாமம் சூட்டப்பட்டது. அதேபோல் வசிஷ்டர் வேள்வி செய்த தலம் என்பதால் இந்த ஊருக்கு வேள்விக்குடி எனும் பெயர் வந்தது. சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்திக்கு அருகில் சனகாதி முனிவர்களுக்கு பதிலாக சாண்டில்ய முனிவர் அமர்ந்திருப்பது தலத்தின் சிறப்பு. அமைவிடம்: திருவாரூர்-மன்னார்குடி சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 12 கி.மீ., தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து 16 கி.மீ., தொலைவிலும் உள்ளது வேளுக்குடி. அருகிலுள்ள ரயில் நிலையம்: கும்பகோணம் அருகிலுள்ள விமான நிலையம்: திருச்சி, சென்னை தங்கும் வசதி: திருவாரூர் 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🔥சிவ சிவ 🌙 🙏 ஓம் சிவய நம ஓம் 🌷