நவராத்ரி பூஜை

RamaswamyAnnamali
1.5K views
6 months ago
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #நவராத்ரி ஸ்பெஷல் #நவராத்ரி பூஜை நாள் - வாக்கில் வல்லமை தருவாள் வாணி!*🌹 காசிக்கு அருகே உள்ள மாகிஷ்மதி நகரில் மண்டனமிஸ்ரர் என்ற ஒரு பண்டிதர் இருந்தார். அவர் கல்வியில் கரை கண்டவர் என்று புகழப்பட்டவர். அவரை யாராலுமே வாதிட்டு வெல்ல முடியாது என்ற பெருமை கொண்டிருந்தார். குமரிலபட்டர் என்ற துறவி, தன்னுடைய ஆயுள் முடியும் கட்டத்தில், தன் மீது பெரிதும் அக்கறை கொண்டிருந்த ஆதிசங்கரரிடம், மண்டனமிஸ்ரரை வாதத்தால் வீழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். இதன் மூலம், சங்கரரின் ஞானம் உலகெங்கும் பரவ வேண்டும் என்பதில் குமரிலபட்டர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். அதன்படி மாகிஷ்மதி நகரடைந்து மண்டலமிஸ்ரரை சந்தித்து தான் அவருடன் வாதிட வந்திருப்பதாகத் தெரிவித்தார் சங்கரர். அவரும் சம்மதித்தார். மண்டனமிஸ்ரரின் மனைவி சரஸவாணி நடுவராகப் பொறுப்பேற்றார். போட்டியாளர் இருவரும் மாலை அணிந்து கொள்வது என்றும் யாருடைய மாலை வாடுகிறதோ அவர் தோற்றவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதோடு மண்டனமிஸ்ரர் தோற்றாரானால் அவர் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொள்ள வேண்டும்; அதேபோல சங்கரர் தோற்றால் அவர் துறவறம் துறந்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும் என்று விதி செய்யப்பட்டது. போட்டி ஆரம்பித்தது. சில மணி நேரத்திலேயே மண்டனமிஸ்ரர் திணறினார். தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் உடலில் உஷ்ணம் அதிகரிக்க, அவர் சூடியிருந்த மாலை வாடியது. அதைக் கண்டு திடுக்கிட்ட சரஸவாணி, ‘என் கணவரும் நானும் ஒன்றே. அதனால் என்னையும் வாதத்தில் வென்றால்தான் நீங்கள் வெற்றியாளராவீர்கள்,‘ என்று சங்கரரிடம் புது நிபந்தனையைச் சொன்னாள். அதற்கு சம்மதித்தார் சங்கரர். வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், இதிகாசம், புராணம், கணிதம், ஜோதிடம் என்று பல துறைகளில் கேள்விகளும் பதில்களும் முட்டி மோதின... ஒன்றல்ல, இரண்டல்ல 15 நாட்களுக்கு நீண்டது போட்டி. இத்தருணத்தில் தன்னிடம் வாதிடுவது சரஸவாணி அல்ல, அந்த சரஸ்வதியேதான் என்று ஊகித்துக் கொண்டார் சங்கரர். ஒரு கட்டத்தில் துறவியிடம் கேட்கக்கூடாத இல்லறம் பற்றிய கேள்வி ஒன்றை முன்வைத்தாள் சரஸவாணி. சங்கரர் தயங்கினார். அவரால் இல்லறத்தில் ஈடுபடாமலேயே மிகச்சரியாக சிந்தித்து பதில் அளிக்க முடியும். ஆனால் பிறர் தன்னுடைய துறவறத்தை சந்தேகப்படுவர் என்பதை உணர்ந்தார். அதனால் தனக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுத்தால் அறிந்து வந்து பதிலளிப்பதாகச் சொன்னார். அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. சரஸவாணி சம்மதிக்க, சங்கரர் தன் சீடர்களுடன் கானகம் சென்றார். அங்கே அமருகன் என்ற மன்னனின் சடலம் கிடப்பதைப் பார்த்து அந்த உடலில் கூடுவிட்டு கூடு பாயும் உத்தியால் உட்புகுந்தார் சங்கரர். அரண்மனைக்குச் சென்றார். அமருகனோ பெண் பித்தன், கேளிக்கைகளும், விருந்தும்தான் அவனுடைய வாடிக்கை. ஆனால் சங்கரரால் அப்படி இருக்க முடியவில்லை. தன் ஆன்மாவின் தூய்மைக்கு பாதிப்பில்லாமல் நடந்து கொண்டார். மன்னரின் இந்த ‘மாற்றம்‘ அனைவரையும் திகைக்க வைத்தது. சில நாட்களுக்குப் பிறகு இதில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த ராஜ பிரமுகர்கள், காட்டில் சங்கரர் உடல் கிடப்பதைக் கண்டு அவருடைய கூடுவிட்டு கூடு பாய்ந்த உத்தியைத் தெரிந்து கொண்டார்கள். ஆகவே ‘புதுப்பிக்கப்பட்ட‘ மன்னனால் நாடு செழிக்கும் என்று கருதிய ராஜ பிரதானிகள், சங்கரரின் உடலுக்குத் தீ வைத்தனர். இதைப் பார்த்துப் பதறிய சீடர்கள் ஓடோடிச் சென்று சங்கரரிடம் விவரம் சொல்ல, அவர் பளிச்சென்று மீண்டும் கூடு மாறித் தன் உடலில் புகுந்தார். பிறகு தன் இல்லற அனுபவத்தை சரஸவாணியின் கேள்விக்கான பதிலாகச் சொல்ல, அவள் அதை ஏற்றுக் கொண்டு தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். மண்டனமிஸ்ரர் துறவு கொள்ள, அவள் அவரைக் கண்ணீருடன் பிரிந்து, பிரம்மலோகம் சென்றடைந்தாள். இவ்வாறு கல்வியின் மேன்மையைத் தன் பக்தர்கள் மூலமாக நிலைநிறுத்திய சரஸ்வதி தேவியை இன்று மூன்றாவது நாளாக நாம் போற்றி மகிழ்கிறோம். இன்று, அம்பிகை சரஸ்வதியை தாமரை, மரிக்கொழுந்து, துளசி மற்றும் வெள்ளை மலர்களால் அர்ச்சிக்கலாம். பாரதியாரின் சரஸ்வதி துதியைப் பாடி மகிழலாம். சர்க்கரைப் பொங்கல், உளுந்துவடை, வேர்க்கடலை சுண்டல் தயாரித்து நிவேதனம் செய்யலாம். இன்று பாட புத்தகங்கள், தொழிற் கருவிகள், வியாபாரக் கணக்கு நோட்டுகள் ஆகியவற்றை சரஸ்வதி முன் சமர்ப்பித்து இதுவரை நாம் பெற்ற மேன்மைக்கு நன்றி தெரிவிக்கலாம்; இனி தொடர்ந்து அவள் அருள் வேண்டி மனமுருக பிரார்த்திக்கலாம். இந்த ஸ்லோகத்தையும் சொல்லலாம்: பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் ஸுக்லவர்ணாம் மநோரமாம் ஆதித்ய மண்டலே லீநாம் ப்ரமாமி ஹரிப்ரியாம் பொதுப்பொருள்: தாமரை மலர்மீது வீற்றருளி குண்டலினி சக்தியாகத் திகழ்பவளே, சரஸ்வதி தேவியே நமஸ்காரம். வெண்ணிறமாய் ஒளிவீசும் அழகுடன் விளங்கும் அன்னையே, நமஸ்காரம். சூரிய மண்டலத்தின் நடுவே நாயகமாய் துலங்கும் ஹரிக்குப் பிரியமான சரஸ்வதி தேவியே நமஸ்காரம். கலைவாணியை வழிபட்டு, அறிவாற்றலில் சிறந்து கல்வி, கலை, தொழிலில் மேன்மையடைவோம்.🌹
RamaswamyAnnamali
1.1K views
6 months ago
#நவராத்ரி ஸ்பெஷல் #நவராத்ரி பூஜை #🙏ஆன்மீகம் பெரிய கோயில் *தசரா விழாவை முன்னிட்டு*பரதநாட்டியம் இசை நிகழ்ச்சி *கொட்டும் மழையில்*
RamaswamyAnnamali
848 views
6 months ago
#நவராத்ரி பூஜை #நவராத்ரி ஸ்பெஷல் *நவராத்திரி* *ஆறாம் நாள்* *உயர்வு தரும் ஆறாம் நாளான* *இந்திராணி பூஜை* *அம்மன் வடிவம்* : இந்திராணி *பூஜையின் நோக்கம்* : தூம்பர லோசன வதம் புரிதல். *இந்திராணி வடிவம்* : இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள். மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள். வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள். சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள். உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள். தென்னாட்டில் ஆறாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஜ்வாலா துர்க்கை. பண்டாசுரன் என்ற அசுரனுடன் போர் புரிந்த போது எதிரிகள் அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை அக்னி ஜூவாலையுடன் கூடிய மிகப்பெரியதொரு நெருப்பு வட்டத்தை அமைத்தாள். நெருப்பு வட்டமானது தனது படைகளை காக்கும் பொருட்டு தீப்பிழம்பாக நின்றாள். இதனால் துர்கா தேவி ஜ்வாலா துர்கா என்று அழைக்கப்படுகிறாள். *அன்னைக்கு சாற்ற* *வேண்டிய* *மாலை :* செம்பருத்தி *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *இலை* : சந்தன இலை *அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்* : ஆரஞ்சு நிறம் *அன்னையின் அலங்காரம்* : பிறைசூடிய சண்டிகா தேவி அலங்காரம் *அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய* *மலர்கள்* : சிவப்பு நிற மலர்கள். *கோலம்* : பருப்பு மாவு கொண்ட தேவிநாம கோலம் போட வேண்டும். *நைவேத்தியம் :* தேங்காய் சாதம் *குமாரி பூஜையில் உள்ள* *குழந்தையின் வயது* : 7 வயது *குமாரி பூஜையால் உண்டாகும்* *பலன்கள்* : செல்வ செழிப்பு உண்டாகும். *பாட வேண்டிய* *ராகம்* : நீலாம்பரி *பயன்படுத்த வேண்டிய* *இசைக்கருவி* : பேரி *குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்* : வடகம் *பலன்கள் :* மனக்கவலைகள் நீங்கும், பொருட்சேர்க்கை உண்டாகும். 🙏 🪷🙏
RamaswamyAnnamali
765 views
6 months ago
#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் #நவராத்ரி பூஜை *நவராத்திரி* *ஐந்தாம் நாள்* சௌபாக்கியம் அருளும் ஐந்தாம் நாளான வைஷ்ணவி பூஜை *அம்மன் வடிவம்* : வைஷ்ணவி. *பூஜையின் நோக்கம்* : தூத சம்வாதம். *வைஷ்ணவி வடிவம்* : கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள். கருட வாகனம் கொண்டவள். தீய சக்திகளை அழிக்க வல்லவள். செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள். தென்நாட்டில் ஐந்தாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சபரி துர்க்கை. அர்ச்சுனனுக்கு பாசுபதம் அளிக்க வேட்டுவ உருவம் தரித்து சென்ற சிவபெருமானுடன் அவருக்கு துணைவியாக சென்ற அம்பிகையின் தோற்றம். சபரி என்றால் வேட்டுவக் குலப்பெண் என்று பொருள். வேட்டுவச்சியாக அம்பிகை தரித்த கோலமே சபரி துர்க்கை ஆகும். வனத்தில் வசித்து ஞானத்தை அருளக்கூடியவள். பாவங்களைப் போக்கி அருளை அளிக்கக்கூடியவள். *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *மாலை* : பாரிஜாதம். *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *இலை* : விபூதி பச்சை. *அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்* : பச்சை நிறம். *அன்னையின் அலங்காரம்* : சுகாசனத்தில் காளி துர்க்கை அலங்காரம். *அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய* *மலர்கள் :* மல்லிகை மற்றும் முல்லை மலர்கள். *கோலம் :* கடலை மாவு கொண்டு பறவை கோலம் போட வேண்டும். *நெய்வேத்தியம் :* தயிர் சாதம். *குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது* : 6 வயது. *குமாரி பூஜையினால் உண்டாகும்* *பலன்கள் :* கவலைகள் அகலும். *பாட வேண்டிய ராகம்* : பந்துவராளி. *பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி* : ஜல்லரி. *குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்* : அப்பளம். *பலன்கள்* : சகல சௌபாக்கியமும் கிடைக்கும். 🙏🪷🙏
RamaswamyAnnamali
5.1K views
6 months ago
#நவராத்ரி ஸ்பெஷல் #நவராத்ரி பூஜை #பத்திஸ்டேட்ஸ் *புரட்டாசி மாதம் 10ம் நாள் 26-செப்டம்பர்-25, ப்ருகு வாரம் வெள்ளிக்கிழமை* *நவராத்திரி ஐந்தாம் நாள்* *அன்று* புனிதமாக அம்பிகையை வைஷ்ணவி மற்றும் ஸ்கந்தமாதா அலங்காரத்தில் போற்றி வழிபடுவோம் வாரீர் அன்னம், கிளி போன்ற பறவை வகை கோலம் வரைந்து அம்பிகையை வழிபட வேண்டும். மலர் மனோரஞ்சிதம் பாரிஜாதம் மலர் மாலைகள் சாற்றி திருநீற்றுப் பச்சை இலையும் கொண்டு அர்ச்சனை செய்து, . நைவேத்தியமாக தயிர்சாதமும், பூம்பருப்பு சுண்டல் கடலை பருப்பு சுண்டல் மாதுளை பழம் படைத்து வழிபட வேண்டும். . இந்த நாளில் அம்பிகைக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். நவதுர்க்கை வழிபாட்டில் நவராத்திரியின் 5 ஆம் நாளுக்கு தேவியின் ஸ்கந்த மாதா ரூபத்தில் வழிபடவேண்டும் வைஷ்ணவி தேவி சங்கு, சக்கரம், கதை, வில் பொற்கரங்களில் ஏந்தியவளே . கருடன் வாகனத்தில் அமர்ந்து விஷ்ணு ஸ்வரூபமாக அபூர்வ தரிசனம் தருபவளே துன்பங்கள் நீங்கி, குறைவில்லா செல்வத்தோடு பேரின்ப மோக்ஷம் கிடைத்திடுமே "ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி, தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்" என்று மந்திரம் சொல்லி தியானித்து பணிந்திடுவோம் ஸ்கந்தமாதா பக்தி செய்த தேவர் துயர் தீர்த்திடவே பரமனை வேண்டிடச் செய்தவளே சிவனின் தீப்பொறி ஆறையும் ஆற்றினில் ஒன்றாய்ச் சேர்த்திட்ட தாயவளே அன்புடன் அணைத்து அறுமுகனையொரு முருகனாய்க் கொண்ட உமையவளே வீணரை வென்றிட சேயினைப் பணித்து வேலினைத் தந்திட்ட சக்தி துர்க்கையளே! ஸ்கந்தமாதா வெனச் சிம்மத்திலமர்ந்து குமரனை ஆறுமுகனை மடியினில் கொண்டவளே மேல் வலக்கையினில் குமரனைக் கொண்டு மேலிடக்கையினால் அருள்பவளே மற்றிரு கைகளில் மலரினைத் தாங்கியே அருள்தரும் சதுர்புஜத்தாளே நவநாயகியரில் ஐந்தாம் நாளின்று ஸ்கந்தமாதாவின் தாள் பணிந்திடுவோம் 🪷🪷🪷
RamaswamyAnnamali
1.7K views
6 months ago
#நவராத்ரி பூஜை #பத்திஸ்டேட்ஸ் #நவராத்ரி ஸ்பெஷல் பிரம்மம்* 🌹 நவராத்திரி போன்ற பண்டிகைகள் மாபெரும் தத்துவத்தின் பின்புலம் கொண்டவை. ஒட்டுமொத்த லௌகீக வாழ்வினுக்கு மத்தியில் நம்மை தேடலில் ஈடுபடுத்துபவை. ‘‘ஏன் எல்லாத்தையும் பொம்மை பொம்மையா வச்சு கும்பிடறாங்க’’ என்று கேள்வியில் தொடங்கி அனைத்தும் சக்தியின் அம்சமே…. எங்கு காணினும் சக்தியடா…. என்று சுய அனுபூதியில் முடிவடைய வேண்டும். அதெப்படி இந்த பொம்மையை வைத்து சுய அனுபூதியில் நிற்பது என்று கேள்வி வரும். அப்போது எதிரே இருப்பது பொம்மையல்ல எங்கும் இருக்கும் சக்தியை என்னால் காண இயலாத அறியாமையில் இருக்கின்றேன். அதனால், இதோ இந்த விக்கிரகத்திலும் அவளே உறைகின்றாள் என்கிற பாவனையோடு என் மனதை அந்த விக்கிரக ஆராதனையில் ஈடுபடுத்துகின்றேன் என்கிற தெளிவு முக்கியம். இவ்வாறு தொடங்குவதற்குப் பெயரே உபாசனை என்பதாகும். பிறகு… தான் வழிபடப்போகும் துர்க்கையோ, லட்சுமியோ, காளியோ, சரஸ்வதிக்கோ உரிய மந்திரங்களை இன்னும் சொல்லப் போனால் பீஜம் என்றழைக்கப்படும் விதைக்குள் ஒளிந்துள்ள ஆலமரத்தின் சக்தியை பொதித்து வைக்கப்பட்டிருக்கும் மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நிலத்தில் ஊன்றிய விதை முளைத்து வருவதுபோன்று மந்திரத்தினுள் பொதித்து வைக்கப்பட்ட சக்தியானது மனதிலிருந்து வெளிப்படத் தொடங்கும். அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. இப்போது அந்த உருவமும் மந்திரமும் நம் மனதின் பக்தி என்கிற அன்பும் இணைந்து குழைந்து அந்த வழிபடு மூர்த்தியோடு ஒடுங்கத் தொடங்கும்.ஒடுக்கம் கொள்ளும் மனம் தன்னுள் குவியும். இதுவரையிலும் வெளியிலே அலைந்த மனமானது, நுகர்வு வெறி கொண்டு பார்ப்பதையெல்லாம் அனுபவிக்க வேண்டுமென்றும், எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டுமென்று ஒரு தெளிவற்ற அறிவோடு திரிந்த குதிரை இப்போது விவேகம் கொள்ளத் தொடங்கும். அதன் முதல் அறிகுறியாக சித்த ஏகாக்கிரகம் எனும் மாபெரும் மனஒருமை வந்துவிடும். அதுவே நன்கு நிலைத்து தியானமாக மலரும். அப்போது நவராத்திரி கொலுவில் வைக்கப்படும் பொம்மை பொம்மையாக இராது சக்தியின் திரட்சியாக உள்ளும் புறமும் நிறைந்த பிரம்மமாக எங்கும் நிறைந்திருக்கும். 🌹