ShareChat
click to see wallet page
search
#sinthanay thulirgal போன பாதையில் செல்ல மனிதர்கள் விரும்புகின்றனர். உயர விரும்பினால் அறிவு காட்டும் பாதையைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க வளமுடன் என வாழ்த்தும் போதும் நம்மைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும். பகை உணர்வுடன் யாராலும் வாழ்த்த முடியாது. வாழ்த்தப் பழகினால் மனதில் பகைமை நிற்காது. எந்த சூழ்நிலையிலும் கோபம் வராமல் யார் இருக்கிறாரோ அவர் ஞானம் அடைந்து விட்டார் என அர்த்தம். எல்லா உயிரும் கடவுளின் வடிவமே என்று கருதிச் செய்யும் ஒவ்வொரு செயலும் அன்பின் செயலே. மனத்தை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும். ஆசையை அடியோடு ஒழிக்க வேண்டாம்; அதை சீர்படுத்தினால் போதும். தீர்க்க முடியாத பிரச்னை என ஏதுமில்லை; தீர்க்கும் வழியை அறிவது தான் எல்லோருக்கும் பிரச்னை. அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வு. திறமையின்மை, அச்சம் இரண்டும் கவலையை பெருக்கும் கருவிகள்.. 😊😊😊
sinthanay thulirgal - ShareChat