ShareChat
click to see wallet page
search
திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கபடும் என்று அறிவித்தது.பின்னர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த போது மகளிர் உரிமைத் தொகையை வழங்க கையெழுத்திட்டார்.அதன் அடிப்படையில்,மகளிருக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 1.30 கோடிக்கு அதிமான பெண்கள் பயனடைந்துள்ளனர்.தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை முன்மாதியாக கொண்டு புதுச்சேரி அரசும் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வந்தது. மகளிர் உரிமைத் தொகையை உயர்த்திய புதுச்சேரி அரசு இந்த நிலையில், அண்மையில், புதுச்சேரி அரசு மகளிர் உரிமைத் தொகையை ரூ1000 லிருந்து 2500ரூயாக உயர்த்து உத்தவிட்டு அரசானையை வெளியிட்டுள்ளது. இதனால் புதுச்சேரி பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக 17.50 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இந்த நிலையில்,சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரவுள்ள நிலையில்,பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத் திமுக அரசு கையில் எடுத்துள்ளது.அதாவது, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் அல்லது 2,000 ரூபாயாக உயர்த்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக அரசின் அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பு சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையில், குலவிளக்கு திட்டத்தி கீழ் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்றும்,ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இது மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த நிலையில், திமுக அரசும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட் இதுதொடர்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், மகளிர் உரிமைத் தொகையை தற்போது வழங்கப்படும் ரூ.1000-ஐ உயர்த்தி வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.இது பெண்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது #கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - 6 on' 104 010583  र५००  லதர் ` Lnmus  a LL IXXY மகளிர் உரிமைத் தொகை  இனிரூ1000 இல்ல. பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு! 6 on' 104 010583  र५००  லதர் ` Lnmus  a LL IXXY மகளிர் உரிமைத் தொகை  இனிரூ1000 இல்ல. பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு! - ShareChat