ShareChat
click to see wallet page
search
#நல்லதே பேசு நல்லதே நினை மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசலில் பராஅத் இரவு விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 3.2.2026 அன்று இரவு 10 மணி முதல் 1 மணி வரை இறைவனுக்கு வழிபாடுகள் மேற்கொள்ளும் வகையில் புனித மிகுந்த பராஅத் இரவு விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் திண்டிவனம் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்தப் பிரச்சார சொற்பொழிவு கூட்டத்திற்கு மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஹ. முஹம்மது ஜாவிது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேராசிரியரும் அத்திக்கடை பள்ளிவாசல் இமாமுமான எம். ஷாஹுல் ஹமீது வாஹிதி அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இதேபோன்று பராஅத் இரவு சொற்பொழிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் இறுதியில், நகரத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் இமாம்கள், இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒன்றிணைந்து, செஞ்சி சாலையில் அமைந்துள்ள (ஈத்கா) மைதானத்தின் அடக்கஸ்தலத்திற்கு சென்று இறந்த முஸ்லிம்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சி மிகுந்த இறைபக்தி மற்றும் ஒற்றுமை உணர்வுடன் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
நல்லதே பேசு நல்லதே நினை - ShareChat