வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 விலையில்லா எரிவாயு உருளைகள் மற்றும் திருமணத்தின் போது ஒரு சவரன் தங்கம் போன்ற வாக்குறுதிகளை அவர் வழங்கினார்.
தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்த அவர், மாநில பட்ஜெட்டில் 30 சதவீதம் "ஸ்டாலின் சார் வரி" என்ற பெயரில் ஊழலுக்கே செல்வதாகவும், இந்த ஊழலை ஒழித்தாலே மக்களுக்குத் தேவையான நிதியை வழங்க முடியும் என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
இவ்விழாவில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து வழக்கு குறித்து முதல்முறையாக விஜய் மனம் திறந்து பேசினார். தனது குடும்பப் பிரச்சினைகளால் தொண்டர்கள் கவலைப்படுவதைக் கண்டு தனக்கு வருத்தம் ஏற்படுவதாகவும், ஆனால் அந்தப் பிரச்சினைகள் எதற்கும் தான் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
"தனிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், நாம் அனைவரும் இணைந்து மக்களின் பிரச்சினைகளை மட்டும் கவனிப்போம்" என்று தொண்டர்களுக்கு தைரியம் கூறினார்.
விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள சூழலில், விஜய்பேசய இந்த உருக்கமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #விஜய் - சங்கீதா ஸ்பெஷல்


