ShareChat
click to see wallet page
search
*"வாழ்க்கை இங்கு சில நேரங்களில் இப்படி தான் சோதிக்கும்* " மாலை சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அந்த ஒளியுடன் சேர்ந்து ஒரு இளைஞனின் நம்பிக்கையும் மங்கிக் கொண்டிருந்தது. அவன் கையில் ஒரு மடித்த காகிதம்… அது ஒரு வேலை இழப்பு கடிதம். அவன் அந்த வேலைக்காக மட்டும் வேலை செய்யவில்லை. அவன் குடும்பத்தின் நம்பிக்கைக்காக வேலை செய்தான். அம்மாவின் சிகிச்சைக்காக வேலை செய்தான். அவன் கனவுகளுக்காக வேலை செய்தான். “இந்த வேலையை நம்பி தான் வாழ்ந்தேன்… இப்போ என்ன செய்ய?” அவன் குரல் மெதுவாக இருந்தது. ஆனால் அவன் வலி மிகவும் ஆழமாக இருந்தது. அதே வேளையில் அங்கு ஒரு முதியவர் இந்த இளைஞனை பார்த்தவாறு அவன் அருகே வந்தார். அவன் அருகே வந்து தம்பி ஏன் இது சோகமாக இருப்பது போல் தெரிகிறது என்று கேட்கிறார். அதற்கு அந்த இளைஞன் அந்த முதியவரை பார்த்து கூறினார் நான் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தேன் என்று எதிர்பாராத விதமாக அந்த வேலையை வீட்டு என்னை நீக்கி விட்டார்கள். நான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்னை நம்பி தான் என் குடும்பம் இருக்கிறது இப்பொழுது திடீரென்று வேலை இல்லை என்பதால் எப்படி நான் வீட்டுக்கு செல்வது என்று தெரியவில்லை அதுதான் குழப்பமாக இருக்கிறது என்று இந்த கடற்கரையில் வந்து அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் அந்த இளைஞனை பார்த்து தம்பி இது கடினமான நேரம் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று வேலை இழப்பு இருக்கும்போது மனம் சற்று தடுமாறும் என்னதான் ஆறுதல் கூறினாலும் மனம் குழப்பம் அடையும். ஆனால் இது நிரந்தரம் அல்ல தற்காலிகம். சற்று வீட்டிற்கு சென்று ஓய்வெடு பின்பு நாளை காலையில் உன் மனது அமைதியில் இருக்கும் அப்பொழுது நீ சிந்தனையில் என்ன செய்யலாம் என்று சிந்தித்தால் தெளிவான முடிவு கிடைக்கும். இப்போது உனக்கு பயம் குழப்பம் மற்றும் என்ன செய்வதென்று குழப்பமான மனநிலையில் எது சிந்தித்தாலும் அது சரியான தீர்வாகாது. உனக்கு வேலை தான் போய்விட்டது இன்னும் வயது இருக்கிறது வாய்ப்பு இருக்கிறது அதனால் துவண்டு விடாதே. ஒரு கதவை மூடினால் உனக்கு வேறொரு கதவு திறக்கும் அதை நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும். அந்த முதியவர் அந்த இளைஞனிடம் இவ்வாறு கூறிவிட்டு “தம்பி… உன் கையில் இருந்தது வேலைதான். உன் உள்ளத்தில் இருக்கிறது திறமை.” “அது போதுமா?” — இளைஞன் almost கோபமாக கேட்டான். முதியவர் மெதுவாக சிரித்தார். “ஒரு வேலை போனால் வாழ்க்கை போய் விடாது. வாழ்க்கை நமக்கு சொல்றது — ‘நீ இன்னும் பெரியதுக்கு தயாராகு’ என்று.” “நான் பயப்படுறேன்…” “பயம் இருக்கும் இடத்தில்தான் புதிய தொடக்கம் இருக்கும். நீ இழந்தது உனது சம்பளம் மட்டுமே… விழுந்தது உன் வாழ்க்கை இல்லை.” இப்போது நான் எது கூறினாலும் சற்று கோபமாக தான் இருக்கும் ஆனால் நான் உனது வயதைக் கடந்து வந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் குழப்பத்தோடும் பயத்தோடும் எதையும் சிந்திக்க கூடாது அப்படி சிந்தித்தால் தவறாகத்தான் முடியும். எழுந்து வீட்டிற்கு செல் சற்று ஓய்வு எடு காலையில் எழுந்திரு அப்போது உன் மனம் சற்று தெளிவாக இருக்கும். அந்த வார்த்தைகள் அவன் மனதை உடைக்க வில்லை…... உருவாக்க ஆரம்பித்தது. அவன் மெதுவாக எழுந்தான். கையில் இருந்த கடிதத்தை மடித்து வைத்தான். அந்தப் பெரியவரை பார்த்து நான் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கூறுவது தான் சரி சற்று நான் பயம் மற்றும் குழப்பத்தில் தான் இருந்தேன். உங்கள் ஆறுதலுக்கு நன்றி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினால் புதிய பாதையை நோக்கி..... அது தோல்வி அல்ல — ஒரு புதிய பாதையின் தொடக்கம். 🔥 முடிவு வரி: “வேலை போகலாம்… ஆனால் உன் மதிப்பு போகாது. நம்பிக்கை இருக்கிற வரை வாழ்க்கை முடிவடையாது.” #life motivasion..🤏😎 #life motivational quotes #life motivational #Motivational life #வாழ்க்கை தத்துவங்கள்.
life motivasion..🤏😎 - ShareChat