Arab Tamil Daily
625 views 4 months ago
#BreakingNews || குவைத் விமான நிலையத்தை குறிவைத்து இன்று புதன்கிழமை சற்றுமுன் மீண்டும் பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: குவைத் சர்வதேச விமான நிலையமானது இன்று(01/04/26) புதன்கிழமை சற்றுமுன் மீண்டும் ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஆளில்லா(ட்ரோன்) விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்போது(அதிகாலை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல், குவைத் ஏவியேஷன் ஃபியூலிங் கம்பெனியின்(KAFCO) கீழ் இயங்கும் எரிபொருள் தொட்டிகளைக் குறிவைத்தது என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி கூறினார். இந்தத் தாக்குதலால் பெரும் தீ விபத்தும், தொட்டிகளுக்குக் கணிசமான சேதமும் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். அவசரக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன என்றும், ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இந்தத் தாக்குதலால் பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். கூடுதல் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதல் தொடங்கிய பிறகு குவைத் விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இதுவாகும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
11 shares

More like this