#🙏🙏💥💥om namachivaaya💥💥🙏🙏 திருப்பதிகம்🌷...!
*🌷நான்காம் திருமுறை 11 வது திருப்பதிகம்🌷...!*
*🌷அருளிச்செய்தவர்: திருநாவுக்கரசு சுவாமிகள்...🌷*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
பாடல் 1
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே.
*விளக்கம்:*
புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும்.
*தொடரும்...*
🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨


