ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி விடுத்துள்ள எச்சரிக்கையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இன்னும் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து போர் புரியத் தங்கள் நாடு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
எதிரிகள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்குத் தங்கள் தாக்குதல் இருக்கும் என்றும், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் ஈரானை முடக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அராக்சி, இந்தப் போரைத் தங்கள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே முடிவுக்குக் கொண்டு வருவோம் என உறுதிபடக் கூறியுள்ளார்.
ஈரானின் இந்த நீண்ட காலப் போர் வியூகம் அமெரிக்காவின் ராணுவ வலிமையையும் பொருளாதாரத்தையும் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், உலக அளவில் கச்சா எண்ணெய் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கு முயன்றாலும், ஈரான் பணிந்து போகத் தயாராக இல்லை என்பதே தற்போதைய சூழலாக உள்ளது. #iran & us war / ஈரான் & அமெரிக்க போர் #📰ஏப்ரல் 2 ட்ரெண்டிங் நியூஸ் 📱


