ShareChat
click to see wallet page
search
மோடியின் கடந்த வருகையின் போது, "... தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் திணிக்கப்பட்ட இந்தியை மாற்றிடுங்கள், இல்லையெனில், ஆதிக்க இந்தியை நாங்கள் அழித்திடுவோம்.." எனும் போராட்டத்தை மே17 நடத்தியது. அறிவித்ததை போல, இன்றைய மோடி வருகையின் போது மே17 தோழர்கள் இந்தியை அழித்தோம். சொன்னதைச் செய்தோம். இன்று 11-03-2026 முதல் மொழிப்போரில் ஈகியரான தாலமுத்துவின் நினைவுநாள். இந்த நாளில், மோடியின் வருகையை முன்னிட்டு போராட தொடங்கினோம். சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகக்ளை அழித்து முழக்கமிட்டோம். வெகுசன மக்கள் எங்களோடு இணைந்து முழக்கமிட்டார்கள். ஒரு தம்பதியினர் எங்களது போராட்ட பேனரை கையில் ஏந்திக் கொண்டனர். பயணிகளாக காத்திருந்தவர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர். மக்கள் மெளனமாக நின்று கவனிக்கவில்லை, எங்களுடன் கைகோர்த்தார்கள். மக்களின் புரட்சிகர மனநிலை குன்றவில்லை. போராட்டம் விரிவடையுமெனும் நம்பிக்கை பிறந்தது. இந்தி திணிப்பை தமிழர்கள் ரசிக்கவில்லை. இந்தி திணிப்பால் வேலைவாய்ப்பு பறிபோவதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். "..ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகள் இந்தி-ஆங்கிலத்தில் மட்டும் இருக்கின்றன..இதனால் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசு வேலைகளை ஆக்கிரமிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். வங்கிகள், ரயில்வே, இன்சூரன்ஸ், என்.எல்.சி, வருமானவரி, சுங்கவரி என அனைத்து இடங்களிலும் இந்தி பேசும் மாநிலத்தவர்களே அதிகம். பஞ்சாப், மராத்தியம், வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலத்தவர்களும் தேர்வாவதில்லை... ஆகவே இந்தி கற்றுக்கொண்டாலும், நமக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதை மோடி அரசு உறுதி செய்திருக்கிறது. இதனால் தான் சொல்கிறோம், இந்தி ஒழியட்டும், தமிழ் வெல்லட்டும்..." என முழக்கமிட்டு உரை நிகழ்த்திய போது வெகுமக்கள் கைதட்டினார்கள், ஆமோதித்தார்கள்... இந்த எழுச்சிகரமான போராட்டத்தில் சென்னை பார்க் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. போராட்டத்தில் பங்கெடுத்து தீவிரமாக போராடிய தோழர் சிவா திலீபன் ரயில் முன் சென்று தம்மையே கொடுக்க முயன்று, படுகாயமுற்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். போர்க்குணத்தோடு நடந்த இப்போராட்டம் குறித்து பெரும்பாலான முன்னணி ஊடகங்களில் கவனப்படுத்தும் செய்தியை காண இயலவில்லை. ஓரிரு வரி செய்திகளாக சில ஆளும்கட்சி ஆதரவு சேனல்கள் ட்வீட் போட்டிருந்தன. திராவிடம் -பெரியார் என பேசும் பெரும்பாலான ஊடகங்கள் வரி செய்தியாகக் கூட வெளியிடவில்லை. திடீர் பெரியாரிஸ்டு யூட்யூபர்களும் செய்தியாக்கவில்லை. போலி தமிழ்த்தேசியவாதிகள் பார்ப்பன கடப்பாரையை கெட்டியாக பிடித்துக்கொண்டு, இந்தி திணிப்பை கண்டுகொள்ளாமல் வாய்மூடி நிற்பது வழக்கமான விடயம் தான். அதிகாரத்தில் இல்லாத அமைப்புகள் கார்ப்பரேட் ஊடகத்தவரை நம்பி இயங்க இயலாது. பெரியாரிய, முற்போக்கு தமிழ்த்தேசிய தோழமைகள், சனநாயக ஆற்றல்கள் இதுபோன்ற போராட்ட செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென வேண்டுகிறேன். உங்களது சமூக வலைதளங்கள் வழியே இச்செய்திகள் மக்களை சென்று சேர உதவிடுங்கள். நமக்கு நாமே ஊடகமாக வேண்டும். சனாதன எதிர்ப்பு போரில், சமரசமற்று மே17 இயக்கம் களத்தில் நிற்கிறது. கைகோர்க்க வாருங்கள். #தமிழ்_வெல்க #இந்தி_ஒழிக #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #தமிழ்நாடு தமிழருக்கே! #📺வைரல் தகவல்🤩 #💪 மே17 இயக்கம்
🚨கற்றது அரசியல் ✌️ - ~'r | ಗatt PARK GHT: அச்கம் Loman Park தீபரவும் மே 17 இயக்கத்தின் இந்தி ஒழிப்பு தோழர் தருமுருகன் காந்த ~'r | ಗatt PARK GHT: அச்கம் Loman Park தீபரவும் மே 17 இயக்கத்தின் இந்தி ஒழிப்பு தோழர் தருமுருகன் காந்த - ShareChat