#மதிய வணக்கம் #ரெங்கா! #renga-vamba! ஹேராம் ஒரு மீள்பார்வை: கமலின் ஹே ராம் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயம் கண்ணில் படுகிறது.
சமீபத்தில் பார்த்த போது, End Credits-ல் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களின் பெயர்களை போடும் போது,
“அபர்ணாவை கற்பழித்தவர் – 1”
“அபர்ணாவை கற்பழித்தவர் – 2”
என வரிசையாக நான்கு பெயர்களை குறிப்பிட்டுள்ளதை கவனித்தேன்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
கமல் என்றால் பெரும்பாலான பிராமணர்களுக்கு அவரின் religious & political stand காரணமாக பிடிப்பதில்லை.
இருப்பினும், தன் சமுதாயத்தை இவர் பல படங்களில் உயர்த்தித்தான் காட்டியிருக்கிறார்.
வசுந்தராதாஸை பெண் பார்க்க வரும் சமயத்தில்,
ஒரு பையன் வயலினை வேகமாக வாசிக்க ஆரம்பிப்பான். கிரீஷ் கர்னாட் மென்மையாக அதட்டுவார்.
அவன் அனைவருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு பின்னர் ஆரம்பிப்பான்.
பிராமணர்கள் காந்திக்கு எதிரானவர்கள் என்ற கருத்து உண்டு.
ஆனால் அதில் ஹேமாமாலினி, “தேசப்பிதா உண்ணாவிரதம் இருந்தால் நாட்டுக்கு நல்லது, சுதந்திரம் கிடைக்கும்” என பேசுவார்.
உண்மையில் காந்திக்கு பல பிராமண பக்தர்கள் இருந்தனர். அவர் கேட்டதும் நகைகளை கழற்றி தந்தனர்.
வசுந்தராதாஸ் வீட்டில் My Experiments with Truth — மகாத்மா காந்தியின் சுயசரிதை இருக்கும்.
கலையில் ஈடுபாடு உள்ளவர்கள். வசுந்தராதாஸ் பாடும் போது “ஹை பிச்சில் சுருதி போகும்” என அனைவரும் காதை பொத்த, அதை அழகாக பாடி கெத்தாக திரும்பிப் பார்ப்பார்.
இப்படி தான் சார்ந்த சமுதாயத்தின் பெருமைகளை நாசூக்காக காட்டியது கமலின் சாமர்த்தியம்.
அதற்கு பிறகு, கமலின் ரொமான்ஸ் என்றாலே உதட்டை கடிப்பது, "டிண்கு" வை கடிப்பது என கேலியாக பேசுவது எல்லாம் அவரின் political stand காரணமாக வரும் கடுப்பு தவிர ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
ஒரு ரொமான்ஸ் சீன்:
வசுந்தராதாஸ் கேட்பார்.
முதல் மனைவி இழப்பின் கோபத்திலே இருக்கும் கமலிடம் ,
“Can I be your Saki?”
என்றதும் கமல் முகத்தில் சிறிய சிரிப்பு தோன்றும்.
“சிரிச்சேள்” என்பார். மீண்டும் சிரிக்க, “Second time” என்பார்.
இதோ ஹாட்ரிக் — முத்தமில்லாத, கட்டிக்கொள்ளாத விரசமில்லாத ரொமான்ஸ்.
முக்கிய விஷயம், நாதுராம் கோட்சே செயலிலும் கூட அவன் தரப்பில் ஒரு நியாயம் உண்டு என துணிச்சலாக காட்டியது கமலின் சாதனை. இந்திய திரையுலகிலே யாரும் செய்யாதது.
ஜின்னாவின் “எதிர்ப்பு தினம்” எப்படி வன்முறையாக உருவானது என்பதை அதில் காட்டியிருப்பார்.
நூறு பக்கங்களுக்கு ஹே ராம் படம் பற்றி எழுதலாம்.
மொத்தத்தில், இந்த படம் எடுக்கும் போது இது ‘பெயில்யர்’ தான் என்பதை கமல் உணர்ந்தே இருந்திருப்பார். ஆனால் வருங்காலம் பார்த்து பிரமிக்கும் காவியமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கும்.
இந்த தாதா சாகேப் பால்கே போன்ற விருதுகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். மத்திய அரசு பிட்டு படத்தில் நடித்தவருக்கும் கூட அதை கொடுத்து மகிழலாம்.
ஆனால் இந்தியாவில் எந்த மொழியிலும் எந்த உச்ச நடிகரும் கமலை கண்டால் ஒரு பிரமிப்பு பார்வை வீசுவார்கள்.
இதே கமலஹாசன் தான் தனது அரசியல் மேடையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்று கோபம் போங்க பேசினார்.
#KamalHaasan #HeyRam #கமல்ஹாசன் ஹிட்ஸ் Credit: வலைதள பதிவு இருந்து


