Arab Tamil Daily
3K views 4 months ago
#BreakingNews || குவைத்தில் காலையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர் ராமநாதபுரத்தை சேர்நதவர்: குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பாத்திமா ஹயாத் இன்று(30/03/26) திங்கட்கிழமை அதிகாலையில் வெளியிட்டுள்ள செய்தியில் ஈரான் நடத்திய தாக்குதலில் மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் பகிர்வு சேவைகளை வழங்கும் ஒரு கட்டிடம் பலத்த சேதமடைந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலாளி உயிரிழந்ததாகவும், மேலும் அந்தக் கட்டிடம் கடுமையாக சேதமடைந்தன எனவும் மற்றும் பெரும் அளவிலான பொருள் சேதத்திற்கு உள்ளானதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த இந்தியர் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் பெயர் சந்தானச் செல்வம்(37) எனவும், இவர் ராமநாதபுரம் மாவட்டம், முத்துக்குளத்தூர் அடுத்த தேரிருவேலி பகுதியை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. குவைத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈரான் நடத்தி வருகின்றன தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். இது குவைத்திலுள்ள இந்திய சமூகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
34 shares

More like this