#🕉️🔱சர்வம் சிவா மாயம்🔱 . 🟨. 🕉️🟨
*சர்வம் சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
*✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶*
🟨🦚. 🟨. 🦚🟨
காட்டேரி அம்மன்,
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வழிபடப்படும் பழமையான கிராம காவல் தெய்வம். கட்டேறு / காட்டேரி என்ற சொல் காடு, எல்லை, காவல் என்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.
காட்டேரி அம்மன் பயமுறுத்தும் தெய்வம் அல்ல;
எல்லை மீறினால் எச்சரிக்கும் காவல் சக்தி.”
இயற்கையை மதிக்க, ஊர் ஒழுக்கத்தை காக்க,
பலவீனர்களை பாதுகாக்க, உருவான கிராம வழிபாடு தான் கட்டேரி அம்மன்.
“தெய்வம் பார்க்கிறது” என்ற நம்பிக்கை மூலம்...
சமூக கட்டுப்பாடு , ஒழுங்கு, இயற்கைக்கு மரியாதை,
ஊர் ஒற்றுமை நிலைக்க இந்த பயம் கலந்த பக்தி நல்வழிபடுத்துகிறது !
மக்கள் வழக்கே பிரதானம் பூஜை முறை. கருவாடு, கறி சாதம் , முட்டை, கோழி ,ஆடு போன்றவையே காட்டேரிக்கு இஷ்ட படையல். சில ஊர்களில் பன்றியும் பலியிடுவார்கள். கிராம குலதெய்வ ஆலயங்களில் காட்டேரி ஓர் உப தெய்வமாக தனி சன்னதி கொண்டிருப்பாள். சிலருக்கு காட்டேரியே குலத் தெய்வமாக விளங்குகிறாள்.
இரவு நேரங்களில் அலறல் , கனவுத் தொல்லை, பேய் பிடிப்பு போன்ற துயரில் இருந்து நீங்க காட்டேரிக்கு வேண்டிக்கொண்டு ,பூசாரிடம் விபூதி வாங்கி பூசும் பழக்கம் கிராமங்களில் உண்டு. தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும், குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் உடல்நலக் கோளாறுகளை நீக்கவும் காட்டேரி அம்மனை வழிபடுவது வழக்கமாக உள்ளது.
தமிழகம், இலங்கை மட்டுமல்லாது, பழங்காலத்தில் புலம்பெயர்ந்த பூர்வீக தமிழர்கள் ...குடியேறிய நாடுகளில் (திரினிடாட், கயானா, ஜமைக்கா, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா) இன்றளவும் காட்டேரி வழிபாட்டை தொடர்ந்து வருகிறார்கள் என அறிய முடிகிறது.
ஹரி ஓம் மஹா காளி
🟨🕉️. 🟨. 🕉️🟨
*சர்வம் சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
*✶⊷⊷❍ 𝑴K ❍⊶⊷✶*
🟨🦚. 🟨. 🦚🟨


