ShareChat
click to see wallet page
search
உரிமைக்காகக் கூவத்தில் இறங்கிய அப்பாவி ஊழியர்களை சிறையில் தள்ளுவதா? – தமிழக அரசின் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்! தமிழகத்தின் இருளாக மாறி வரும் மின்சார வாரியத்தில், பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தங்களின் உழைப்பைச் சிந்தி, மக்களின் வீடுகளுக்கு ஒளி பாய்ச்சும் ஒப்பந்த ஊழியர்கள், இன்று தங்களின் வாழ்வாதாரத்திற்காகக் கூவம் ஆற்றில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தமிழகத்திற்கே நேர்ந்த அவமானமாகும். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் குற்றவாளிகளைப் போலச் சித்தரிக்கும் திமுக அரசின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பேரிடர் காலங்களிலும், கடும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, உயிரைப் பணையம் வைத்து மின் கம்பங்களில் ஏறிச் சீரமைக்கும் இந்தப் பணியாளர்களை 'முன்னணி வீரர்கள்' என்று புகழ்ந்த இதே அரசு, இன்று அவர்கள் போராடினால் மட்டும் காவல்துறை மூலம் ஒடுக்குவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு ஜனநாயக நாட்டில் போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் கூவம் ஆற்றில் இறங்கி, தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் அவர்கள் போராடுகிறார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு மனவேதனையில் இருந்திருப்பார்கள் என்பதை இந்த அரசு எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டது. வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக, அதிகாரத்திற்கு வந்த பிறகு உழைக்கும் வர்க்கத்தைச் சிறுமைப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அடித்தட்டுத் தொழிலாளர்களின் போராட்டங்களையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நினைப்பது 'திராவிட மாடல்' ஆட்சியின் தோல்வியையே காட்டுகிறது. கோரிக்கைகளைச் செவிமடுத்துக் கேட்கத் துணிவில்லாத அரசு, வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தி அவர்களின் போராட்டக் குரலை நசுக்கப் பார்க்கிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். திரும்பிய திசையெல்லாம் போராட்டம்! திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது! ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ ##தமிழகமக்களும்_தவெகவும்🤌🏻 #✨💗TVKForTN 💗✨
#TVK Vijay - 1 1 - ShareChat