எனக்கு புத்தி தெரிந்த சிறு வயதில் எங்கள் தலைமுறையினருக்கு எங்கள் கிராமத்தைச் சார்ந்த ஒரு நபர்கள் கூட அம்பேத்கரை பற்றியோ அல்லது அவருடைய சிந்தனைகளையோ கூட எங்களுக்கு ஒரு துளியும் சொல்லவில்லை. ஏன் அவரின் பிறந்த நாளை கூட கொண்டாடியது இல்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை! ஆனால் என் உடன் பிறந்த அண்ணன் சரவணன் மற்ற நபர்களை போல கடந்து போகவில்லை அம்பேத்கரிய சிந்தனைகளை மட்டும் அல்லாமல் அவருடைய பிறந்த நாளை 2002- 2003 ஆம் ஆண்டுகளிலேயே அதாவது அவனுடைய கல்லூரி காலத்தில் எங்கள் ஊரில் பரப்பச் செய்ததில் அவருடைய பங்கு மகத்தானது.இன்றும் அதை நினைத்து பார்க்கிறேன் அந்த ஞாபகம்😊 இன்றும் உள்ளது.அப்பொழுது எனக்கு சிறு வயது.காந்தி நேருவை போல அம்பேத்கரும் ஒரு சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர் அவ்வளவுதான் என் புரிதல் இருந்தது.ஆனால் அவர் ஒரு மகத்தான தலைவர் என்பது பின்புதான் தெரிந்தது.என் அண்ணன் சரவணனுக்கு இந்த சட்டக் கருத்தரங்கு உரையாடலை சமர்ப்பிக்கிறேன்.🙏🏻🙏🏻🙏🏻 #அம்பேத்கர் பிறந்தநாள் #அரசியல் #சட்டம்


