◄•───✧ உ ✧───•►
🙏(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam ஶ்ரீ வாமன புராணம் 🙏
பாகம்_05
சிவ, பார்வதி மக்கள்..!!
ஒரு சமயம் சிவபெருமான் மோகம் அடைந்து, பார்வதியுடன் ஆனந்தமுடன் இருக்க உலகெங்கும் இருண்டது.
மேலும் பிரம்மாவிடம் பெற்ற வரத்தின் படி பார்வதி கருநிறம் மாறி பொன்னிறமேனி அடைந்து சிவனிடம் வந்து சேர இருவரும் சுக போகத்தில் இருந்தனர்.
அப்போது இந்திரன், இந்நிலையில் பார்வதி பரமேச்வரர்களுக்குப் பிறக்கும் மகன் சொர்க்க ராச்சியத்தைக் கைப்பற்றுவான் என்றும், அதனைத் தடுக்க ஓர் உபாயம் தன் சகாக்களுடன் ஆலோசித்து அதன்படி உமா சங்கரர்களுடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவிக்க எண்ணிட, அக்கினியை அன்னப்பறவை வடிவில் செலுத்த, அவன் சிவனிருக்குமிடம் சென்று வெளியில் தேவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர் என்றான்.
சிவன் வெளிவர தேவர்கள், தாங்கள் மோகத்தை விடாவிடில் உலகம் தலைகீழ் ஆகிவிடும் என்றனர்.
அப்படியானால் தன் வீர்யத்தை யார் சுமப்பர்! என்று சிவனார் கூற, அதற்கு அக்கினி முன்வந்தான். அதுவே கார்த்திகேயன் ஜனன காரணம் ஆயிற்று.
இதனால் கோபமடைந்த பார்வதி தேவர்களில் யாருக்கும் அவரவர் மனைவியரிடம் கரு ஏற்படாமலிருக்கச் சபித்தாள்.
ஒரு சமயம் பார்வதி மணமிகு குளியல் மாவினால் ஒரு பொம்மை செய்து அதை அணைத்துக் கொள்ள மார்பில் பால் சுறந்தது. உடனே அந்தக் குழந்தைக்குப் பிராண பிரதிஷ்டை செய்தாள்.
அக்குழந்தையை சிவனிடம் அர்ப்பணிக்க எண்ணி அவனை வாயிலில் காவல் இருக்குமாறு கூறி நீராடச் சென்றாள்.
அப்போது அங்கு வந்த பரமனை அச்சிறுவன் தடுத்து நிறுத்த, அவர் அவன் தலையை வெட்டி வீழ்த்தினார்.
ஸ்நானம் முடிந்து வந்த பார்வதி அதுகண்டு மிகவும் துயருற்றாள்.
நடந்ததை அறிந்த சிவன், பிரமனை அழைத்து ஒரு தலையைக் கொண்டு வருமாறு ஆணையிட,
அவன் செல்கையில் ஐராவதத்தின் புத்திரனைக் கண்டு அதன் தலையை வெட்ட, ஒரு தந்தம் போரின் இடையில் ஒடிந்து போக அத்தலையைக் கொண்டு வர அதனைப் பொருத்தி பரமன் பாலகனை உயிர்ப்பித்தார். அவனே கஜானனன் என்னும் யானை முக கணபதி.
பார்வதியிடம் நாயகன் இன்றியே இவன் தோன்றியதால் விநாயகன் என்பது இவன் பெயர் என்றும் யாரொருவர் இவனைப் பூசித்தாலும் அவர்களுடைய விக்கினம் தீரும். எனவே இவன் விக்கின விநாயகன் ஆவான் என்றார்.
தொடரும்...✍
🌹 வாழ்க வளமுடன் 🌹
🪐 வாழ்க வையகம் 🪐
🙏 ஶ்ரீ ராம ஜெயம் 🌷


