ShareChat
click to see wallet page
search
டைட்டில் வின்னர்: விஜய் சேதுபதி தாெகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 9 போட்டி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதாக இருக்கிறது. இதில், வலுவான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ஒரு சிலரை எதிர்பார்த்த வேலையில், அவர்கள் பாதியிலேயே கழன்று கொண்டனர். ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய பின்பு பாதியில் வைல்ட் கார்ட் மூலம் வந்த திவ்யா கணேஷ் டைட்டிலை வென்றிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் தொடங்கிய 28வது நாளில், வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த திவ்யா, தன் ஆட்டத்தை அடிதடியாக ஆரம்பித்தார். இருப்பினும், நாட்கள் செல்ல செல்ல இவருடைய குரல் கொஞ்சம் கேட்காமல் போனது. டிக்கெட் டு ஃபினாலே கார் டாஸ்க்தான், அனைவருடைய கேமையும் புரட்டிப்போட்டதாக இருந்தது. இதில், சான்ட்ராவை பார்வதியும் கம்ருதினும் ப்ளான் போட்டு கீழே தள்ள, அவருக்கு பேனிக் அட்டாக் வந்தது. அப்போது சான்ட்ராவிற்கான நின்று அனைத்து போட்டியாளர்களும் பேசினர். அதில் குறிப்பாக திவ்யா பேசியது, பலருக்கும் பிடித்திருந்தது. சான்ட்ரா காரை விட்டு வெளியே சென்ற பிறகு, திவ்யா பார்வதியையும் கம்ருதீனையும் செம கேள்வி கேட்டார். இது, அவருக்கு நிறைய வாக்குகளை பெற உதவி செய்தது. இறுதிப்போட்டியின் ஷூட்டிங் தற்போது நடந்து முடிந்திருக்கும் சமயத்தில், திவ்யாதான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், எபிசோட் ஒளிபரப்பானால்தான் உண்மை என்ன என்பது தெரியும். நிலைமை இப்படியிருக்க, டைட்டில் வின்னருக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை என்ன என்பதையும், ரன்னராக இருப்பவர்களுக்கு கிடைக்கப்போகும் பரிசுகளையும் இங்கு பார்ப்போம். வின்னருக்கு கிடைப்பது என்ன? பிக்பாஸில் டைட்டில் வெல்பவர்களுக்கு, கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். கூடவே, அவர்கள் பிக்பாஸ் வீட்டில் 105 நாட்களுக்கும் மேலாக இருந்ததற்கான சம்பளம், விலை மதிப்பு மிக்க காார், இதனுடன் சேர்த்து பிக்பாஸ் கோப்பை, பிற ஸ்பான்ஸர்களின் கிஃப்ட் ஹேம்பர்கள் மற்றும் தொகைகள் பரிசாக வழங்கப்படும். ரன்னருக்கு என்ன கிடைக்கும்? டைட்டில் வின்னருக்கு அடுத்தபடியாக, 2ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரன்னர்-அப் பட்டம் வழங்கப்படும். இந்த பட்டத்தை, 9வது சீசனில் சீரியல் நடிகரும், விஜேவுமான சபரிநாதன் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக டைட்டில் வின்னருக்கு மட்டும்தான் ரூ.50 லட்சம் பரிசு கிடைக்கும். ஆனால், ரன்னர் அப் பட்டம் வென்றவர்களுக்கு அப்படி ஒன்றும் கிடைக்காது. அந்த வகையில் இந்த சீசனிற்கும், சபரி இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கான தொகை மற்றும் பிற ஸ்பான்ஸர்களின் கிஃப்ட் ஹேம்பர்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மார்கெட்டிங்கை வைத்து ஜெயித்தாரா? திவ்யா, டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து, பல பேர் அவர் PR வைத்து வெற்றி பெற்றிருப்பதாக கூறி வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 7ல் அர்ச்சனா வென்ற போதும், இதே குற்றச்சாட்டுகள்தான் அவர் மீதும் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது பெண் வெற்றியாளர்: பிக்பாஸ் சீசன்களில், முதல்முறையாக கோப்பையை வென்ற பெண் போட்டியாளர் ரித்விகா. இவர், 2வது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார். அடுத்ததாக அர்ச்சனா, சீசன் 7ல் டைட்டிலை தட்டிச்சென்றார். இப்போது மூன்றாவது முறையாக திவ்யா கணேஷ் பெண் வெற்றியாளர் ஆகியிருக்கிறார். #👁️BB9: டைட்டில் வின்னர்🏆 #பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்
👁️BB9: டைட்டில் வின்னர்🏆 - 1OL0 91 பிக்பாஸ் 9 : டைட்டில் வின்னர் திவ்யாவுக்கு ரூ.50 லட்சம்! ரன்னருக்கு ஒன்னுமே 6u606uuI? 1OL0 91 பிக்பாஸ் 9 : டைட்டில் வின்னர் திவ்யாவுக்கு ரூ.50 லட்சம்! ரன்னருக்கு ஒன்னுமே 6u606uuI? - ShareChat