RamaswamyAnnamali
846 views 2 days ago
#🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #🙏🏼ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்📖 #🦚 பகவான் கிருஷ்ணரின் போதனைகள் 🪷 #🦚 பகவான் கிருஷ்ணரின் போதனைகள் 🪷 ஜெயந்தி என்பது கிருஷ்ணரின் பிறப்பை போற்றி கொண்டாடும் ஒரு அற்புதமான திருநாளாகும். நாம் தர்மத்தின் வழியில் நடந்தால் நம்மை காப்பதற்காக பகவான் கிருஷ்ணர் மீண்டும் அவதாரம் எடுத்து வருவார். பக்தியுடனும் தூய அன்புடனும் வழிபடும் பக்தர்களின் குறைகளை ஏதாவது ஒரு வடிவில் வந்து தீர்ப்பார் என்பதை உணர்த்துவதற்காகவே ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்து வழிபட முடியாவிட்டாலும் 5 முக்கியமான விஷயங்களை செய்தாலே கிருஷ்ணரின் அருளை பெற முடியும். மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். புராணங்களின் படி, பகவான் கிருஷ்ணர், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில், நள்ளிரவு நேரத்தில் மதுராவில் உள்ள சிறையில் அவதாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. அதனால் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் மாலை நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் 04ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மாலை 6 மணிக்கு பிறகு கிருஷ்ணரை வழிபட வேண்டும். நிஷித கால பூஜை நேரமான இரவு 11.57 முதல் அதிகாலை 12.43 வரையிலான நேரத்தில் கிருஷ்ணரை வழிபடுவதும் மிகவும் விசேஷமானதாகும். கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டின் போது 5 முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக செய்வதால் கிருஷ்ணரின் அருளை பெற முடியும். இந்த நாளில் விரதம் இருக்க முடியா விட்டாலும், இந்த 5 விஷயங்களை மறக்காமல் செய்வது சிறப்பு. கிருஷ்ண ஜெயந்தி அன்று மறக்காமல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் : 1. கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாளான செப்டம்பர் 03ம் தேதியான வியாழக்கிழமை அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கிருஷ்ணரின் படம் அல்லது சிலையை துடைத்து சுத்தமாக வைக்க வேண்டும். 2. கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலையில் பச்சரிசி மாவு கரைசலால் வீட்டு வாசலில் இருந்து, பூஜை அறை வரை சின்னஞ்சிறு குழந்தையின் பாதம் போன்று "கிருஷ்ணர் பாதம்" கோலம் வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே நமது வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பதாக ஐதீகம். 3. மஞ்சள் நிற மலர்கள் அல்லது எந்த மலர் கிடைக்கிறதோ அவற்றைக் கொண்டு கிருஷ்ணரை அலங்காரம் செய்ய வேண்டும். அவற்றுடன் கட்டாயமாக இரண்டு துளசி இலைகளைச் சாற்றி வழிபட வேண்டும். கிருஷ்ணரின் படம் அல்லது சிலைக்கு முன்பாக நெய் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். 4. கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், அவல் பாயாசம் அல்லது பால் சோறு ஆகியவற்றை கிருஷ்ணருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். வரலட்சுமி நோன்பிற்கு கலசத்தில் பயன்படுத்திய அரிசியை கொண்டு நெய்யாமல் செய்யப்பட்ட முறுக்கு, சீடை போன்ற பலகாரங்களையும் நெய் கலந்து செய்து படைக்கலாம். பூஜை முடிந்ததும் பிரசாதத்தை முதலில் ஏதாவது சிறு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். இதனால் கிருஷ்ணரே நேரில் வந்து உண்பதாக ஐதீகம். 5. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திரம், ஸ்ரீ கிருஷ்ண சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கை, கிருஷ்ண லீலைகள் குறித்த கதைகளை இந்த நாளில் கேட்பதும், படிப்பதும் மிகவும் சிறப்பான பலன்களை தரும். யாரெல்லாம் விரதம் இருக்கலாம்? கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை வரம் வேண்டி வெகு காலமாக காத்திருப்பவர்கள் சந்தான கோபால கிருஷ்ணரை மனதார வேண்டி, உபவாசமாக விரதம் இருக்கலாம். மற்றவர்கள் முழு உபவாசமாக இருந்து விரதம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த நாளில் சாத்வீக உணவுகளை சாப்பிட்டு, மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் குழந்தை கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து, அவரது மனம் மகிழும் படி பூஜைகள் செய்து வழிபாடு செய்திட வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும்.
8 shares

More like this