S.ANTHONY✝️YESUMARY
13K views 8 hours ago
*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *15.08.2026 (சனி)* *⚜️மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்⚜️* *🌿🌹1.தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,* அன்னை மரியாளை, மனிதகுல மீட்புத் திட்டத்திற்கு பயன்படுத்தி நம் அனைவருக்கும் அவரை எக்காலத்துக்கும் அன்னையாகத் தந்த நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,* இறைவார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் எத்துணை உறுதியாய் இருக்கவேண்டும் என்பதைப் புனித கன்னி மரியாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். நம் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு நாளில் நாமும் நமது அன்னையைப் போல இறைவார்த்தையைக் கடைபிடிப்பதில் உறுதியுடன் திகழ வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,* இந்திய தேசத்தின் 80-வது சுதந்திர நாளில் நாட்டு ஒற்றுமைக்காகவும், தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்படவும், நாட்டின் பொருளாதார நிலை உயரவும், உண்மையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,* இந்த வாரம் முழுவதும் நம்மைத் தூய ஆவியின் துணைகொண்டு வழி நடத்திய நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,* நாளை ஞாயிறுக் கிழமை முழுத் திருப்பலியில் நாம் ஆண்டவரின் திருவுடலை பெற தகுதிபெறும் பொருட்டு நம்மையே நாம் முழுமையாகத் தாயாரித்துக் கொள்ள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
111 likes
1 comment 141 shares

More like this