S.ANTHONY✝️YESUMARY
1K views • 2 days ago
பரலோக மாதா நவநாள்*
நாள்-4
செப்பனியா 3:14
*"மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி".*
*சிந்தனை:*
புனித ஜான் தமசீன் அன்னை மரியாளின் விண்ணேற்பினைக் குறித்து மிக ஆழமாகக் கற்பித்து வந்தார். அன்னை மரியாள் விண்ணேற்பிற்கு தகுதியானவர் என்பதைக் குறித்துப் பேசினார். அன்னை மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்த பின்பும் கன்னிமகிமை கெடாமல் இருந்ததென்பது அவரது மண்ணுல வாழ்வு முடிந்த பின்னரும் அவர் உடல் அழியாது விண்ணேறிச் செல்ல ஓர் மிகச்சிறந்த காரணி என்று சுட்டிக்காட்டினார். ஆண்டவர் இயேசுவை தனது மார்பில் சுமந்து பாலூட்டிய அன்னை மரியாள் ஆண்டவருடைய திவ்ய நற்கருணைப்பேழையில் உறையத் தகுதியானவரே! தந்தைக் கடவுளே தனக்கெனத் தெரிந்துகொண்ட அன்னை மரியாள் ஆண்டவரின் திருக்கோவிலில் உறைந்திடத் தகுதியானவரே! தனது வயிற்றில் இறைமகன் கருவாக உருவெடுப்பின் தன் வாழ்நாள் முழுவதும் இன்னலைச் சந்திக்க நேரிடும் என்று அறிந்தும் தனது உள்ளத்தினை ஓர் வாள் ஊடுருவிப் பாயும் என்று அறிந்த பின்னரும் தப்பி ஓடாமல் ஆம் என்று அடிபணிந்து ஆண்டவரைக் கருவில் சுமந்து பெற்றெடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்து சிலுவையில் பலியாகும்போது உடனிருந்து அந்த வாளை தன் உள்ளத்தில் ஏற்ற அன்னை மரியாள் ஆண்டவரை இறுதிநாள்வரை முகமுகமாய் தரிசித்து அவரது வலப்புறம் நிற்கத் தகுதியான பட்டத்து அரசியே! கடவுளின் தாயாக விளங்கும் ஆண்டவளாம் அன்னை மரியாளை அனைத்து உயிர்களுக்கும் தாயாக ஆண்டவரே கொடுத்தார். இத்தகைய அன்னை மரியாள் ஆண்டவனின் அடிமையாக கடவுளின் அன்னையாக அனைவராலும் போற்றப்பட அவர் விண்ணகம் ஏறிச் செல்ல முற்றிலும் தகுதியானவரே என்று புனிதர் ஆழமாகக் கூறுகிறார்.
*செபம்:*
தூய கன்னித் தாயே! கடவுளால் தனக்கெனத் தெரிந்து கொள்ளப்பட்டவளே! சம்மணசுக்களால் திருச்சங்கீதங்கள் முழங்க மனுவுருவான உம் திருமகனை எந்நாளும் முகமுகமாய் தரிசிக்க உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டவரே! உம்மோடும் வானதூதர்களோடும் புனிதர்களோடும் இணைந்து மூவொரு கடவுளை முகமுகமாய் தரிசித்து புகழினைப் பாடி ஆராதித்து நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்க எங்களுக்காக இறைவனை மன்றாடும். ஆமென்.
*பொது நவநாள் செபம்:*
மகா மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்துக்கு எழுந்தருளின பரிசுத்த தேவமாதாவே! நீர் சரீரத்தோடு வான மண்டலங்களைக் கிழித்தேறின மகிமை ,உமது சுகிர்தங்களுக்கு ஏற்ற வெகுமானந்தானே/அதேனெனில், மண்ணால் உண்டாக்கப்பட்ட சரீரம் மண்ணாய்ப் போக வேண்டுமென்று ஆதாம் செய்த பாவத்துக்கு ஆக்கினையாகக் கட்டளையிருந்தாலும், உம்மிடத்தில் அப்படிப்பட்ட பாவத்தின் அடையாள முதலாய் காணாததினால் அதற்குள்ள ஆக்கினையும் காணவில்லையே / அதனால் ஆண்டவர் தாம் மரித்தோரிடத்தில் நின்று எழுந்தருளினது போல உம்மையும் உயிரோடு எழுந்திருக்கப் பண்ணினார். தம்முடைய சரீரம் அழியாமல் இருக்கப் பண்ணித் தம்முடைய திருத்தேகம் வரப்பிரசாதங்களினால் அலங்கரிக்கப்பட்டது போல அவ்வலங்காரத்தை உமது சரீரத்துக்கும் கொடுத்தார்.
கடைசியாய் அவர் தாமே சரீரத்தோடு வானத்துக்கு ஏறினது போல, உம்மையும் அந்தப்படி ஆத்ம சரீரத்தோடு ஏறப் பண்ணினாரே! நீர் பரலோகத்துக்கு ஏறினபோது சந்திரன் உம்முடைய பாதத்தைத் தாங்க / சூரியன் உம்முடைய உடலில் போர்வையாய் படிய / தாரகைக் கணங்கள் உமது சிரசில் மகுடமாய் விளங்க /தூதர்கள் ஸ்துதியங்கள் பாட / பர மண்டலத்தில் சேர்ந்த உடனே /பிதா, சுதன் , பரிசுத்த ஆவியாரால் நித்திய பரலோக ராஜேஸ்வரியாக முடிசூட்டப்பட்டீரே
ஆ! இவ்வித வெகுமான மகிமையோடு பரலோகத்துக்கு எழுந்தருளிய உம்மைக் கண்ட அடியேன் இன்று தானே உம்மோடே பறந்து வரத்தக்க ஆசையோடு இருக்கிறேன் . ஆனாலும் இந்த மண் சரீரபாரத்தோடு இப்படிப்பட்ட நன்மை பெற நான் பாத்திரமாகாதபடியால் இன்று உம்மோடு என்னுடைய நினைவைப் பரலோகத்துக்கு உயர்த்தி , இவ்வுலகத்தை மறந்து நடக்கப் பண்ணியருளும் . அப்படியே சாகுந்தனையும் உம்முடைய சலுகையால் நான் நடந்து உமக்குப் பணி செய்து என்னாத்துமம் பரலோகத்தில் சேர்ந்து எக்காலமும் உம்மைக் கண்டு ஸ்துதித்து மோட்ச ஆனந்தம் அனுபவிக்கும்படி கிருபை பண்ணியருளும்
*ஆமென்* .
தேவ பிதாவின் குமாரத்தியுமாய், சுதனின் தாயாருமாய்,
பரிசுத்த ஆவியின் நேச பத்தினியுமாய் இருக்கிற சுகிர்த அலங்காரியே,, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
15 likes
10 shares