திருநீற்றுச் சுவடு
590 views • 5 days ago
#🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️தோஷ பரிகாரங்கள் as received*
வாஸ்து தோஷம் நீங்க எளிய வழி முறை
ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் முயற்சி செய்து தங்கள் வாழ்வில் ஒரே ஒரு வீடு கட்டுவார்கள்.
குடும்பத்தில் கஷ்டம் வரும்போது, 'உங்கள் வீட்டில் வாஸ்து குற்றம்' என்று சொல்லி மற்றவர்கள் பயமுறுத்துவார்கள்.
எனவே, வீடு கட்டியபிறகு கஷ்டம் என்று வரும்போது, உங்கள் வீட்டில் வாஸ்துக் குற்றம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து உங்கள் கஷ்டத்திலிருந்து மீளலாம்.
இந்தப் பரிகாரத்தை பெளர்ணமியன்று செய்ய வேண்டும்.
வாஸ்துக் குற்றம் இருக்கும் என்று நினைக்கின்ற உங்கள் வீட்டுத் தலைவாசல் நிலையின் நீளம்,
அகலத்தை அளந்து கொள்ளுங்கள். அந்த அளவிற்கு அறுகம்புல் மாலையை பூ விற்பவர்களிடம் பேரம் பேசாமல் கேட்டு வாங்கி உங்கள் வீட்டு நிலையில் மாட்டுங்கள்.
அதேபோல மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருக்க, நிலை அளவுக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.
நிலையில் சூட்டப்பட்ட அறுகம்புல் மாலையையும் மகாலட்சுமிக்காகச் சூட்டப்பட்ட வெற்றிலை மாலையையும் மறுநாள் காலையில் கழற்றி மூன்றுபடி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் போடுங்கள்.
அறுகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலையில் பட்ட தண்ணீரை உங்கள் வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள். வீட்டின் வெளிப்புறத்திலும் தெளியுங்கள்.
பிறகு, அறுகம்புல் மாலையையும் வெற்றிலை மாலையையும் ஒரு வெள்ளைத் துணியில் (சலவை செய்யப்பட்ட) முடித்து கண்மாய் அல்லது ஆற்றில் போட்டுவிட்டு வாருங்கள்.
வாஸ்து தோஷம் விலகிவிடும். இவ்வாறு செய்த 90-ஆவது நாளில் உங்கள் வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள். செல்வ நிலை உயரும். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
கஷ்ட ஜீவனம் மறைந்துவிடும். வாஸ்து தோஷம் என்ற காரணத்திற்காக உங்கள் வீட்டை இடித்துக் கட்ட வேண்டியதில்லை; விற்பனை செய்ய வேண்டியதும் இல்லை. #📅பஞ்சாங்கம்✨
12 shares