Arunachalam
600 views • 1 days ago
தொகுதி மறுவரையறையை எதிர்த்து தென் மாநில முதல்வர்களைக் கூட்டி எதிர்ப்புத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் முதல்வராக இருந்த ஸ்டாலின் அவர்களே சட்ட முன்வடிவை தீவைத்துக் கொளுத்தினார். தமிழ்நாடு முழுக்க கருப்புக் கொடி ஏற்ற வைத்தார்.
திமுக பற்றவைத்த நெருப்பு ஒன்றிய பா.ஜ.க . அரசை அப்போதைக்குப் பின்வாங்க வைத்தது. திமுக அரசு அமைத்த ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த நீதிபதி குரியன் குழு கொடுத்த முதல்கட்ட அறிக்கையில் தொகுதி மறுவரையறைக்குத் தனிப் பகுதியே ஒதுக்கியிருக்கிறது. மாநில உரிமைப் பறிப்புக்கு எதிராக ஒன்றிய அரசை எதிர்த்துத் திமுக நடத்திய போராட்டங்களையெல்லாம் கடைசி வரை கொச்சைப்படுத்தியது த.வெ.க.
ஆளுநருக்கு எதிராக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி 75 ஆண்டு கால குடியரசு வரலாற்றில் மாபெரும் சனநாயகத் தடையை அகற்றியது.
நிதிப் பகிர்வில் பாகுபாட்ட்டை எதிர்த்து தில்லியில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர் கலந்துகொண்டார். 16 வது நிதிக்குழுவில் மாநிலங்களுக்கு 50% நிதியினைப் பகிர வேண்டும் என நிதிக்குழுவின் தலைவரைச் சந்தித்து திமுக சார்பில் ஆவணங்களை அளித்தனர். ஒட்டுமொத்த மாநிலங்களில் திமுக மட்டுமே 16 வது நிக்குழுவில் அக்கறையான பரிந்திரைகளை வழங்கியிருக்கிறது என நிதிக்கழுவின் தலைவர் பனகாரியாவே பாராட்டினார்.
நூறுநாள் வேலைத்திட்ட உரிமையைப் பறிப்பதை எதிர்த்து திமுக அரசௌ சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானத்தை இயற்றியது.
எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆளுங்கட்சியாக மாறிய போதும் த.வெ.க அரசு மாநில உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு கண்டனத் தீர்மானம் கூட இயற்றவில்லை. பல்கலைக்கழக துணைவேந்தர் பணியமர்த்தச் சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் ஆளுநரின் விருப்பிற்கேற்ப யூஜிசி பிரதிநிதியைக் குழுவில் சேர்ப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
நேற்று நிறைவேற்றப்பட்ட நிதிப் பகிர்வு தீர்மானம் கூட ஒப்புக்கு நிறைவளற்றப்பட்ட தீர்மானம் அதில் கண்டனம் என்றோ , பா.ஜ.க அரசு என்றோ வரிகள் கூட இல்லை.
காவிரி நீர்ச்சிக்கலில் த.வெ.க அரசின் தான்தோன்றித்தனமான முடிவின் காரணமாக கர்நாடகா அரசு தமிழ்நாட்டை ஏய்க்க நினைக்கிறது. கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்தி பெற்ற உரிமைகளை காங்கிரசின் தன்னலத்திற்கேற்ப அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் தனிக்கொடி தூக்க நினைத்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பலியிட்டு வருகிறது.
த.வெ.க ஒன்றைத் தெளிவாக செய்கிறது. ஒன்றிய பா.ஜ.க அரசை பக்கத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக ஆட்சி அதிகார நலன்களுக்காக இந்தியா கூட்டணியில் சேராமல் தனியாக இருந்து வருகிறது.
இந்தியா கூட்டணியில் இணைந்தால் பா.ஜ.கவை பகைக்க நேர்ந்துவிடும் என்பதால் தனியாக மாநிலத்தில் ஒரு கூட்டணி என திசைதிருப்ப முயன்றது. அதிலும் சிபிஎம் , சிபிஐ போன்ற கட்சிகள் சேராததால் அந்தக் கூட்டணி ஏமாற்று முயற்சியும் தோல்வி கண்டது.
காவிரி உரிமை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக்கூடாது என்பதற்காக தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.
திமுகவை தனிமைப்படுத்தி எப்படியாவது தமிழ்நாட்டில் பா.ஜ.க வின் இசைவை ஏற்ற பொம்மை அரசை அமைக்க நினைக்கும் பாஜகவின் திட்டத்திற்கு ஒத்தூதும் வகையில் செயல்படும் காங்கிரசின் முதுகில் குத்தும் நடவடிக்கையால் மட்டுமல்ல பிரவீன் சக்கரவர்த்தி போன்ற திரைமறைவு சங் கூட்டாளிகளை வைத்து மாநில உரிமையை அடகுவைக்க நினைப்பவர்களோடு எப்படி ஓரணியில் நிற்க முடியும்.
காங்கிரசை பொறுத்தவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வு , குறைவு என்பது வெறும் எண்கள் சார்ந்தது. ஆனால் திமுக போன்ற மாநில கட்சிகளுக்குத் தமிழ்நாட்டின் உரிமைக் குரல் சார்ந்தது.
தன்னுடைய தவறுகளை மறைக்க எல்லாவற்றையுமே திசைதிருப்பு அரசியலின் மூலம் வென்றுவிடலாம் என த.வெ.க தப்புக் கணக்குப்போட்டு வருகிறது. இந்தத் திசைதிருப்பும் அரசியல் வெகுநாளைக்கு நீடிக்காது #👨மோடி அரசாங்கம்
18 likes
19 shares