செ.சாா்லஸ் செபஸ்டின்
562 views • 1 days ago
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் இணைந்து செபிப்போம்,*
*ஆண்டவரே இயேசுவே, என் புகழிடமானவரே! உம்மை துதிக்கின்றேன். இன்னலினின்று என்னை விடுவித்தவரே! நன்றியோடே உம்மை புகழ்ந்து, என் வாயார பாடுகின்றேன். எனக்கு அறிவு புகட்டி என்னை வழிநடத்துபவரே, உமக்கு நன்றி கூறுகின்றேன்.*
*உம்மை சந்தித்த இளைஞன் முகவாட்டத்துடன் சென்றான்; காரணம், உமது கட்டளையை நிறைவேற்ற இயலாத அளவில், அவன் உலகின் செல்வத்தின் மீது ஆசை வைத்திருந்தான் என்று, இன்றைய இறைவார்த்தையில் வெளிப்படையாக எனக்கு அறிவுரை தருபவரே. என் வாழ்நாட்களில் பல தடவைகளில், உலக மோகங்களை விட்டு உம்மை பின் செல்ல இயலாத, பலவீன பிள்ளையாக இருக்கின்றேன். இயேசுவே! உமது நாமத்திற்காய் என் ஆசையை விட்டுவிடவும், உமது நாமத்திற்காய் என் சிற்றின்பங்களை விட்டு, உம்மை தேடியோடி வரும் பிள்ளையாக என்னை மாற்றும். இயேசுவே! நீரே என் தலைவர்! உம்மை அன்றி வேறு செல்வம் எனக்கு இங்கில்லை என்பதை மனதில் இருத்தவும்; விண்ணகத்தில் அழியாத செல்வம் சேர்க்கவும்; உமது ஞானத்தால் ஒளி தந்து என்னை வழி நடத்துங்கப்பா.*
*ஆண்டவரே இயேசுவே! இன்றைய நாளில் என்னை, அமைதியான நீர் நிலைகளுக்களுக்கு அழைத்து செல்லும்; செல்வம் என்ற முட்செடிகள் என் ஆன்மீக வாழ்வை பாதிக்காமல் இருக்க, உமது அருள் தாருமப்பா. நல்ல நிலத்தில் வீழ்ந்த விதையைப் போல, நூறு மடங்காய் பயன் தரும் பிள்ளையாக என்னை உருமாற்ற வேண்டும் என்று, இயேசுவின் தூய நாமத்தால் செபிக்கின்றேன். ஆமென்.*
*நன்றி - தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம்.✍🏼🌹*
16 shares