திருநீற்றுச் சுவடு
559 views • 1 days ago
#கந்த சஷ்டி விரதம் 🕉️ #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் சஷ்டி தரிசனம்*
*பராபவ ~ ஆவணி ~ 01 ~ {18/08/2026}*
*செவ்வாய்க்கிழமை
*இன்று ~ ஷஷ்டி விரதம் .*
இன்று ஆவணி மாத
வளர்பிறை சஷ்டி
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி விரதம், முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
சஷ்டி என்பது ஸ்கந்த சஷ்டி, சுப்பிரமணிய சஷ்டி, கந்த சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் முருகனை வழிபடுவது தொழில் வளர்ச்சி, வியாபார முன்னேற்றம், கடன் சுமை குறைதல் மற்றும் வாழ்வில் தடை கள் அகலுதல் ஆகியவற்றுக்கு சிறந்த பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது.
சஷ்டி விரதம் தொழில் தடைகளை அகற்றும்
முருகன் “வெற்றி” கடவுள் எனப் போற்றப்படுகிறார். வள்ளி, தெய்வானை இருவருடனும் இருக்கின்ற சுப்ரமணிய சுவாமி யை சஷ்டி நாட்களில் பூஜை செய்தால் வாழ்வில் தடைகள் கரையும். தொழிலில் ஏற்படும் இடையூறுகள், போட்டியாளர்களின் பிரச்சனைகள், வியாபாரத்தில் நஷ்டம் போன்றவை குறைந்து, செல்வ வளமும், நிலையான முன்னேற்றமும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
சஷ்டி விரதத்தில் வழிபடும் முறை:
காலை நேரம் விரதம் தொடங்கவும். சுத்தமாக நீராடி, வெள்ளை அல்லது குங்குமப்பூ நிற உடை அணிந்து கொள்ளவும். முருகன் படத்தை நன்கு சுத்தம் செய்து சந்தனம், ஜவ்வாது கலந்து தடவி, குங்குமம் வைக்கவும். அவருடைய வேல் வைத்திருந்தால் அதற்கும் இது போல் செய்யவும்.
முருகனுக்கு செம்பருத்தி, கந்தள், பூவாம்பூ போன்ற சிவப்பு நிற மலர்கள் சாற்றி அலங்காரம் செய்யவும். பால், பனங்கருப்பட்டி, மிளகு வெற்றிலை, பால் பாயசம், கடலை பருப்பு, கொண்ட சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
பின்னர் ஆறுமுகனுக்கு ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். பின் கீழ் வரும் முருகனு டைய இந்த சக்தி வாய்ந்த மந்திரத் தை 108 முறை சொல்லலாம்.
முருகன் மந்திரம் :
“ஓம் சரவணபவாய நம:”
அது மட்டுமல்லாமல் கந்த சஷ்டி கவசம், சுப்பிரமணிய சுப்ரபாதம், வேல்மாறல் ஆகியவற்றை பக்தியுடன் பாராயணம் செய்யவும். முருகன் பற்றிய புராண கதை களையும் நீங்கள் படிக்கலாம். இவ்வாறு நாம் படிக்கும் பொழுது, தெய்வத்தினுடைய அருள் கிடைப்பதாக ஐதீகம். விரதம் மேற்கொள்பவர்கள் முடிந்தவரை பழம், பால், நீர் ஆகிய எளிய உணவுகளை எடுத்துக் கொள்ள லாம். காலை முதல் விரதம் இருந்து மாலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து பின் விரதத்தை முடிக்க லாம். இது பொதுவான வழிபாடு முறையாகும்.
தொழில் முன்னேற்றத்திற்கான சிறப்பு வழிபாடு:
முருகனின் வேலுக்கு சிவப்பு குங்குமப்பூ பூசி ஆராதிக்கவும். தொழில் அல்லது வியாபாரத்தில் பயன்படுத்தும் கணக்கு புத்தகம், விசை, ஒப்பந்தக் கடிதம் போன்ற வற்றை முருகன் பாதத்தில் இந்த நாளில் வைத்து பூஜை செய்து வணங்கி பின்னர் பயன்படுத்தவும்.
“ஓம் வேலாயுதாய நம:” எனும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.
ஆவணி மாத வளர்பிறை சஷ்டியில் பக்தியுடன் முருகனை இப்படி விரதம் இருந்து வழிபட்டால் தொழிலில் வரும் இடையூறுகள் நீங்கி வெற்றி பாதை திறக்கும். முருகனின் அருளால் தடைகள் அகன்று, செல்வ வளம் பெருகி, தொழில் வாழ்வு உயர்ச்சி அடையும்.
முருகா என்ற மூன்றெழுத்து சொல்லே மிகப்பெரிய மந்திரமாகவும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சொல்லும்பொழுது அதற்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
முருகனை வழிபாடு செய்வதன் மூலம் மும்மூர்த்திகளையும் வழிபாடு செய்வதற்குரிய பலனை பெற முடியும் என்று புராணங்கள் கூறுகின்றன.
அப்படிப்பட்ட முருக பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக தான் சஷ்டி திதி திகழ்கிறது. வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டியில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.
*இறைவன் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்.*
16 shares