#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய சாரலை உடைய திருவீங்கோய் மலை இறைவர் வேதங்களை இனிய இசையோடு பாடுபவர். வளைவுகளோடு கூடிய மென்மையான கூந்தலையுடைய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு, கலைகள் குறைந்த வெண்மையான பிறையும் கங்கையும் விளங்கும் குளிர்ந்த மென்மையான சடைகள் தாழ, பறை குழல் இவற்றோடு காலிற் கட்டிய கழலும் ஆரவாரிக்கப் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டுள் எரியேந்தி ஆடுபவராவார். -- திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - முதல் திருமுறை. தலம் : திருஈங்கோய்மலை. பண் - தக்கேசி.
12 shares

More like this