⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
2K views • 21 days ago
🔱காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில்....
✅சித்திரையில் நான்கு செவ்வாய் கிழமைகள் வந்தால் இரண்டாம் செவ்வாயன்று பூச்சொரிதல் நடைபெறும். 5 செவ்வாய் கிழமைகள் வந்தால் மூன்றாம் செவ்வாயன்று பூச்சொரிதல் நடைபெறும்.
✅மக்கள் பெரிய தாம்பாளங்களில் அம்மனை மூடும் அளவிற்கு பூக்களை காணிக்கையாக செலுத்துவார்கள்.
✅அன்று முழுவதும் மலர்க்குவியலிலேயே அம்மன் இருப்பாள். ஆடி மாதங்களில் சிறப்பான வழிபாடுகள் நவராத்திரி பங்குனி தாராபிஷேகம் போன்ற வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
✅ஆதிசங்கரர் சக்கரத்தை இங்கு பிரதிஷ்டை செய்ததால் இக்கோவில் செல்லும்போது ஆகர்ஷண சக்தியை நன்கு நாம் உணரமுடியும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வழிபட்டு நலனைப் பெறுகின்றனர். சரும வியாதிகளையும் இந்த அம்மன் குணப்படுத்துகிறார்.
✅விவசாயம் தொழில் அபிவிருத்திக்கும் இங்கு வழிபடுகின்றனர். துர்க்கையின் அம்சமாக இவள் விளங்குவதால் கல்வி, வீரம் செல்வம் போன்றவற்றைத் தரக்கூடியதாக இந்த அம்மன் திகழ்கிறாள். காரைக்குடியில் காவல் தெய்வமாகவும் போற்றப்படுகிறாள். #god
20 shares